September 25, 2019

பரம்பொருள்-பதிவு-66


            பரம்பொருள்-பதிவு-66

"கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
கடவுள் சக்தியானது
சுற்றிக் கொண்டே
இருப்பதால்
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
சக்தி வட்டமானது
உருவாக்கப்படுகிறது "

"கோயிலுக்குள்
உருவாக்கப்படும் இந்த
சக்தி வட்டமானது
கோயிலுக்கு வரும்
பக்தர்களுடைய
தேவையை
பூர்த்தி செய்யும்
வேலையை
செய்வதோடு
மட்டுமல்லாமல் ;
வெளியில் உள்ள
எந்த ஒரு எதிர்ப்பு
சக்தியையும் கோயிலுக்கு
உள்ளே விடாமல்
தடுத்து நிறுத்தும்
மிகப்பெரிய
வேலையையும் செய்து
கொண்டிருக்கின்றன ;"

சடவாயு :

"குழந்தையை
கருப்பையிலிருந்து
வெளியே தள்ளும்
வாயுவிற்கு சடவாயு
என்று பெயர்"

"சடவாயு ஒவ்வொரு
மனிதனுக்கும் மாறுபட்ட
தன்மையைக்
கொண்டதாக இருக்கும் ;
மனிதன்
போகும் இடங்கள் ;
தொட்ட இடங்கள் ;
ஆகிய அனைத்திலும்
சடவாயுவானது உண்டு ;
இறக்கும் வரை இந்த
சடவாயுவானது
கூடவே இருக்கும் ;
பிணம் அழுகிய
பின்பு தான் இந்த
சடவாயுவானது
வெளியேறும் ;"

"மனிதர்களால்
சடவாயுவை
உணர்ந்து கொள்ள
முடியாது; - ஆனால்
நாய், நரி, ஓநாய்,
ஆகியவற்றால்
சடவாயுவை உணர்ந்து
கொள்ள முடியும் ;
நாய் மோப்பம்
பிடிப்பது
மனிதர்களுடைய
சடவாயுவைத் தான் ;"

"மனிதனுடைய
நகம், முடி, எச்சில்,
வியர்வை
ஆகியவற்றில்
மனிதனுடைய
சடவாயு இருக்கும் ;
ஒருவரிடம் இருக்கும்
சடவாயு நிரம்பியுள்ள
பொருட்களைப்
பயன்படுத்தித் தான்
ஏவல், பில்லிசூன்யம்
ஆகியவை ஒருவருக்கு
செய்யப்படுகிறது ;
நாம் யாருடைய
சடவாயுவைப்
பயன்படுத்தி
ஒருவரை பாதிக்கும்
வகையில் செயலைச்
செய்தோமோ?
அந்த சடவாயுவை
உடைய மனிதனை
மட்டுமே செய்யப்பட்ட
கெடுதலானது
பாதிப்பை உண்டாக்கும் ;"

"நாய் மூத்திரம்
பெய்து குறிப்பிட்ட
தூரத்தைக் கொண்ட
ஒரு எல்லையை
உருவாக்கும் ;
அந்த எல்லைக்குள்
யாராவது வந்தால்
சடவாயுவை
மோப்பம் பிடித்து
ஓடிப்போய் குலைக்கும் ;
அதாவது தன்னுடைய
எல்லைக்கு உட்பட்ட
சக்திக்குள்
எந்தவிதமான
எதிர்ப்பு சக்தியையும்
நாய் உள்ளே விடாது ;"

"அதைப்போலத்தான்
கோயிலுக்குள்
உருவாக்கப்படும்
சக்தி வட்டமானது
வெளியில் உள்ள
எந்த ஒரு எதிர்ப்பு
சக்தியையும் ;
கோயிலுக்கு உள்ளே
விடாமல் தடுத்து
நிறுத்துகிறது ;'"

"உலகம் முழுவதும்
உள்ள இந்துமதக்
கோயில்களில்
நடைபெறும்
மூன்று முக்கியமான
வேலைகளில்
கோயிலுக்குள்
சக்தியை
உற்பத்தி செய்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதையும் ;

"கோயிலுக்குள்
சக்தியை
குவித்து வைத்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதையும் ;
தெரிந்து கொண்டோம்; "

"கோயிலுக்குள்
சக்தியை
பரிமாற்றம் செய்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டாமா?"

"அதற்கு முன்…………………?"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 25-09-2019
//////////////////////////////////////////////////////////

September 24, 2019

பரம்பொருள்-பதிவு-65


            பரம்பொருள்-பதிவு-65

“இந்துமதக் கோயிலில்
கர்ப்பக்கிரகத்தில்
மேற்கில் அமர்ந்து
கிழக்கு நோக்கி
பார்த்துக் கொண்டிருக்கும்
கடவுள் சிலையிலிருந்து
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
கிழக்கில் இருக்கும்
தலைமை பலிபீடத்தில்
மோதுகிறது.”

"கிழக்கில்
இருக்கும்
தலைமை பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தெற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"தெற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தென்மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"தென்மேற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"மேற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
வடமேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை அது
செல்லும் திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது"

"வடமேற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
வடக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"வடக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
வடகிழக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை அது
செல்லும் திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது. "

"வடகிழக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
கிழக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"கிழக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தென்கிழக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை அது
செல்லும் திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது."

"தென்கிழக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தெற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"தெற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தென்மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை
அது செல்லும்
திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது
ஏற்கனவே,
தெற்கில்
இருக்கும் பலிபீடம்
தலைமை பலிபீடம்
தன் மீது மோதச் செய்த
கடவுள் சக்தியை
தென்மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்ததால்
தெற்கில்
இருக்கும் பலிபீடம்
கடவுள் சக்தியை
திருப்பிவிடும்
வேலையையும்,
நேராக செலுத்தும்
வேலையையும் செய்கிறது"

"இவ்வாறு
கர்ப்பக் கிரகத்தில் இருக்கும்
கடவுள் சிலையின்
மூலமாக உற்பத்தி
செய்யப்பட்டு
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
மூன்று வெவ்வெறு
விதமான தன்மைகளைக்
கொண்ட 9-பலிபீடங்களால்
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
கடவுள் சக்தியானது
சுற்றிக் கொண்டே
வரும்படிச் செய்யப்படுகிறது;

"இதனால்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
வட்ட வடிவில் ஒரு சக்தி
வட்டத்தை உருவாக்குகிறது;
இதனால் கடவுள் சக்தியானது
கோயிலுக்குள் ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் குவித்து
வைக்கப்படுகிறது "

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------24-09-2019
//////////////////////////////////////////////////////////

September 21, 2019

பரம்பொருள்-பதிவு-64


            பரம்பொருள்-பதிவு-64

“நேராக ஓடிக்
கொண்டிருக்கும்
ஆற்று நீரை அதன்
திசையிலிருந்து
திருப்பி எந்த
திசையில் ஓடச்
செய்ய வைக்க
வேண்டுமோ
அந்த திசையில்
திருப்பி ஓடச்
செய்ய வைக்கலாம்”

“நமக்கு எந்த திசையில்
ஆற்றுநீரை திருப்பி
ஓடச் செய்ய
வைக்க வேண்டுமோ?
அந்த திசைக்கு திருப்பி
ஆற்று நீரை ஓடச்
செய்ய வைக்கலாம். “

“உதாரணத்திற்கு
கிழக்கு நோக்கி
ஓடிக் கொண்டிருக்கும்
ஆற்று நீரை
தெற்கு திசை நோக்கி
திருப்பி ஓடச்
செய்ய வைக்க
தெற்கு திசையில்
செல்லும் வகையில்
அணையைக் கட்டினால்
கிழக்கு நோக்கி
ஓடிக் கொண்டிருக்கும்
ஆறானது
தெற்கு திசை நோக்கி
திரும்பி ஓடும்,”

“இந்நிகழ்வு
கண்ணிற்கு தெரியும்படி
இயங்கிக்
கொண்டிருக்கும்
சக்தியை  ;
கண்ணிற்கு தெரியும்
இயக்கமற்ற
பொருளைக் கொண்டு
திருப்புவது ஆகும் ;
இது மிகவும்
எளிதான ஒன்று “

“ஆனால் இந்துமதக்
கோயில்களில்
கண்ணிற்கு தெரியாத
இயங்கிக் கொண்டிருக்கும்
கடவுள் சக்தியை ;
கண்ணிற்கு தெரியும்
பலிபீடம் என்ற
இயக்கமற்ற
பொருளைக் கொண்டு
தடுப்பதும் ;அதனை
திருப்பி விடுவதும்
அவ்வளவு
எளிதான காரியமல்ல;”

“இந்துமதக்
கோயிலின்
கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும் கடவுள்
சிலையின் மூலமாக
உற்பத்தி செய்யப்பட்டு
இயங்கிக்
கொண்டிருக்கும்
கடவுள் சக்தியானது
கர்ப்பக்கிரகத்தை விட்டு
வெளிக்கிளம்பி
நேர் எதிராக
கிழக்கு திசையில்
இருக்கும்
பலிபீடத்தின் மீது
சென்று மோதுகிறது “

“கிழக்கு திசையில்
இருக்கும்
பலிபீடம் தன் மீது
மோதிய
கடவுள் சக்தியை
தெற்கு திசையில்
இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடுகிறது”

“கர்ப்பக் கிரகத்திலிருந்து
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
அதிகமான
அழுத்தத்துடனும்;
அளவிடற்கரிய
வேகத்துடனும்;
முழுமையான
சக்தியுடனும்;
நேர் எதிராக
கிழக்கு திசையில்
இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதும் போது
கிழக்கு திசையில்
இருக்கும் பலிபீடம்
கடவுள் சக்தியை
தடுத்து நிறுத்தி
தெற்கு நோக்கி
திருப்பக்கூடிய
மிகப்பெரிய
பணியைச் செய்வதால்
கர்ப்பக் கிரகத்திற்கு
நேர் எதிராக
கிழக்கில் இருக்கும்
பலிபீடம்
தலைமை பலிபீடமாக
கருதப்படுகிறது”

“கர்ப்பக் கிரகத்திலிருந்து
தொடர்ந்து
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
நந்தியைத் தாண்டி
தொடர்ந்து பலிபீடத்தின்
மீது மோதுவதால்
கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும்
கடவுள் சக்தியில்
உள்ள தன்மைகள்
அனைத்தும்.
நந்திக்குள் முழுமையாக
நிறைந்திருக்கும்”

“பக்தர்கள் தங்கள்
வேண்டுகோளை
நந்தியின் காதுகளில்
சொல்வது என்பது
கர்ப்பக்கிரகத்தில்
இருக்கும்
கடவுள் சிலையில்
இருக்கும்
கடவுளிடம்
சொல்வதற்குச் சமம்”

“கர்ப்பக் கிரகத்திற்கு
நேர் எதிராக
கிழக்கில் இருக்கும்
தலைமை பலிபீடம்
கர்ப்பக் கிரகத்திலிருந்து
வெளிப்பட்டுக்
கிளம்பி வரும்
கடவுள் சக்தியை
தடுப்பதும்
தெற்கு திசை நோக்கி
திருப்பி விடுவதும்
ஆகிய இரண்டு
மிகப்பெரிய பணிகளைச்
செய்து கொண்டிருக்கிறது”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------21-09-2019
//////////////////////////////////////////////////////////