September 21, 2019

பரம்பொருள்-பதிவு-64


            பரம்பொருள்-பதிவு-64

“நேராக ஓடிக்
கொண்டிருக்கும்
ஆற்று நீரை அதன்
திசையிலிருந்து
திருப்பி எந்த
திசையில் ஓடச்
செய்ய வைக்க
வேண்டுமோ
அந்த திசையில்
திருப்பி ஓடச்
செய்ய வைக்கலாம்”

“நமக்கு எந்த திசையில்
ஆற்றுநீரை திருப்பி
ஓடச் செய்ய
வைக்க வேண்டுமோ?
அந்த திசைக்கு திருப்பி
ஆற்று நீரை ஓடச்
செய்ய வைக்கலாம். “

“உதாரணத்திற்கு
கிழக்கு நோக்கி
ஓடிக் கொண்டிருக்கும்
ஆற்று நீரை
தெற்கு திசை நோக்கி
திருப்பி ஓடச்
செய்ய வைக்க
தெற்கு திசையில்
செல்லும் வகையில்
அணையைக் கட்டினால்
கிழக்கு நோக்கி
ஓடிக் கொண்டிருக்கும்
ஆறானது
தெற்கு திசை நோக்கி
திரும்பி ஓடும்,”

“இந்நிகழ்வு
கண்ணிற்கு தெரியும்படி
இயங்கிக்
கொண்டிருக்கும்
சக்தியை  ;
கண்ணிற்கு தெரியும்
இயக்கமற்ற
பொருளைக் கொண்டு
திருப்புவது ஆகும் ;
இது மிகவும்
எளிதான ஒன்று “

“ஆனால் இந்துமதக்
கோயில்களில்
கண்ணிற்கு தெரியாத
இயங்கிக் கொண்டிருக்கும்
கடவுள் சக்தியை ;
கண்ணிற்கு தெரியும்
பலிபீடம் என்ற
இயக்கமற்ற
பொருளைக் கொண்டு
தடுப்பதும் ;அதனை
திருப்பி விடுவதும்
அவ்வளவு
எளிதான காரியமல்ல;”

“இந்துமதக்
கோயிலின்
கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும் கடவுள்
சிலையின் மூலமாக
உற்பத்தி செய்யப்பட்டு
இயங்கிக்
கொண்டிருக்கும்
கடவுள் சக்தியானது
கர்ப்பக்கிரகத்தை விட்டு
வெளிக்கிளம்பி
நேர் எதிராக
கிழக்கு திசையில்
இருக்கும்
பலிபீடத்தின் மீது
சென்று மோதுகிறது “

“கிழக்கு திசையில்
இருக்கும்
பலிபீடம் தன் மீது
மோதிய
கடவுள் சக்தியை
தெற்கு திசையில்
இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடுகிறது”

“கர்ப்பக் கிரகத்திலிருந்து
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
அதிகமான
அழுத்தத்துடனும்;
அளவிடற்கரிய
வேகத்துடனும்;
முழுமையான
சக்தியுடனும்;
நேர் எதிராக
கிழக்கு திசையில்
இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதும் போது
கிழக்கு திசையில்
இருக்கும் பலிபீடம்
கடவுள் சக்தியை
தடுத்து நிறுத்தி
தெற்கு நோக்கி
திருப்பக்கூடிய
மிகப்பெரிய
பணியைச் செய்வதால்
கர்ப்பக் கிரகத்திற்கு
நேர் எதிராக
கிழக்கில் இருக்கும்
பலிபீடம்
தலைமை பலிபீடமாக
கருதப்படுகிறது”

“கர்ப்பக் கிரகத்திலிருந்து
தொடர்ந்து
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
நந்தியைத் தாண்டி
தொடர்ந்து பலிபீடத்தின்
மீது மோதுவதால்
கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும்
கடவுள் சக்தியில்
உள்ள தன்மைகள்
அனைத்தும்.
நந்திக்குள் முழுமையாக
நிறைந்திருக்கும்”

“பக்தர்கள் தங்கள்
வேண்டுகோளை
நந்தியின் காதுகளில்
சொல்வது என்பது
கர்ப்பக்கிரகத்தில்
இருக்கும்
கடவுள் சிலையில்
இருக்கும்
கடவுளிடம்
சொல்வதற்குச் சமம்”

“கர்ப்பக் கிரகத்திற்கு
நேர் எதிராக
கிழக்கில் இருக்கும்
தலைமை பலிபீடம்
கர்ப்பக் கிரகத்திலிருந்து
வெளிப்பட்டுக்
கிளம்பி வரும்
கடவுள் சக்தியை
தடுப்பதும்
தெற்கு திசை நோக்கி
திருப்பி விடுவதும்
ஆகிய இரண்டு
மிகப்பெரிய பணிகளைச்
செய்து கொண்டிருக்கிறது”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------21-09-2019
//////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment