October 16, 2018

திருக்குறள்-பதிவு-35


                       திருக்குறள்-பதிவு-35

“””””சினமென்னும்
சேர்ந்தாரைக் கொல்லி
இனமென்னும்
ஏமப் புனையைச்
சுடும்””””

மனிதன் மூன்று
விஷயங்களைத் தன்னுள்
கொண்டு இயங்கிக்
கொண்டு இருக்கிறான்

ஒன்று  : எண்ணம்
இரண்டு : சொல்
மூன்று  : செயல்

சினம் என்பது
எழும்போது
அறிவானது வெளியே
சென்று விடுகிறது
இதனால்
எது நல்லது
எது கெட்டது
என்பதை ஆராய்ந்து
எண்ணிப் பார்த்து
முடிவெடுக்க முடியாத
காரணத்தினால்
மனிதன்
சொல்லக்கூடிய
சொல்லும்,
செய்யக்கூடிய
செயலும்
தவறாகவே முடிந்து
விடுகிறது.

உலகில் நடைபெறும்
குற்றங்களில்
பெரும்பாலும்
சினம் உள்ளே
எழும்போது
அறிவு வெளியே
சென்று விடுவதால்
தான் ஏற்படுகிறது

சினம் என்பது
எழுந்து இயங்க
ஆரம்பித்தவுடன்
நாம் என்ன
பேசுகிறோம்
நாம் என்ன
செயல் செய்கிறோம்
என்பது நமக்கே
தெரியாமல் போய்
விடுகிறது.

தவறான வார்த்தைகளை
பிறர் மனம்
புண்படும்படி
பேசுவோம்
செய்யும் செயல்களைக்
கூடத் தவறாகத்
தான் செய்வோம்
பிறர் ஏற்றுக்
கொள்ளாத்தகாத
செயல்களைத்
தான் செய்வோம்

முதல் நபர்
இரண்டாம் நபரிடம்
பேசிக்
கொண்டிருக்கும்போதே
பேச்சு முற்றி
வாக்குவாதம் நடந்து
சண்டையாகி விடுகிறது
இதனால் முதல் நபர்
சினம் கொண்டு
இரண்டாம் நபரை
கத்தியால் குத்திய
காரணத்தினால்
இரண்டாம் நபர்
அந்த இடத்திலேயே
இறந்து விடுகிறார்
முதல் நபர்
கொலைகாரர் என்ற
பட்டத்துடன்
தண்டனை பெற்று
வருகிறார்.

சினத்தால்
முதல் நபர் செய்த
தப்பால் கிடைத்த
தண்டணையால்
முதல் நபர் மட்டும்
கஷ்டப்படவில்லை
அவருடைய
குடும்பமும் சேர்ந்தே
கஷ்டப்படுகிறது
அதாவது
கொலைகாரன் மனைவி
கொலைகாரன்
பிள்ளைகள் என்று
அவர்களை
அவமானப்படுத்தி
அவர்களை
இச்சமுதாயத்தில் வாழ
முடியாத அளவிற்கு
மன வேதனையை
உண்டாக்குகிறது
இச்சமுதாயம்

கொலை செய்தவரை
பார்த்து இப்படி
தப்பு செய்துவிட்டீர்களே
என்று கேட்டால்
அறிவில்லாமல்
செய்து விட்டேன்
என்று அவர் சொல்வார்
அதாவது சினம்
என்பது எழுந்தபோது
அங்கே அறிவு
வெளியே சென்று
விட்டது என்பது
அதற்குப் பொருள்.

சினம் என்பது
எழும்போது
அறிவு என்பது
வெளியே சென்று
விடுகிறது
நாம் குற்றம் செய்து
குற்றவாளியாகி
தண்டிக்கப்படுகிறோம்
நாம் மட்டும்
கெட்டப் பெயர்
வாங்கிக் கொண்டு
கஷ்டப்படப்பட
மாட்டோம்
நம்முடைய குடும்பமும்
சேர்ந்தே கஷ்டப்படும்
என்பதை நினைவில்
கொண்டு
மனிதன் சினம்
எழும்போது அது
எழாத வண்ணம்
பார்த்துக் கொள்ள
வேண்டும்
என்பதைத் தான்
“””சினமென்னும்
சேர்ந்தாரைக் கொல்லி
இனமென்னும்
ஏமப் புனையைச்
சுடும்””””
என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

--------- இன்னும் வரும்
---------- 16-10-2018
/////////////////////////////////////////////