December 30, 2011

உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-சிறப்புகள்-பதிவு-1





          உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-சிறப்புகள்-பதிவு-1

                      “”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                                                      ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””;

அரிய கலைகளில் விளங்கிக் கொள்ள முடியாத சூட்சுமமாகவும்,
காணக் கிடைக்காத பொக்கிஷங்களில் மதிப்பிட முடியாதததாகவும்,
ஆன்மீகவாதிகளால் மறைக்கப்பட்ட வெற்றியின் திறவுகோலாகவும்,
ஆன்மீக கோயிலுக்கு கருவறையாகவும் ,
ஞானத் தேடலின் நுழைவு வாயிலாகவும்,
பஞ்ச பட்சி சாஸ்திரம் இருக்கிறது .


மிகச் சிறந்த , மிக அரிய கலையாகக் கருதப்படும் பஞ்ச பட்சி சாஸ்திரம் உலக மக்களிடையே அறியப் படாத ஒரு கலையாகவே இருந்து வருகிறது .

பஞ்ச பட்சி சாஸ்திரத்தை கோடியில் ஒருவர்  மட்டுமே சரியாகக் கணிக்கத் தெரிந்தவராகவும் , அதன் சூட்சும ரகசியங்களை அறிந்தவராகவும் , அதனைப் பிழையில்லாமல் பயன்படுத்தத் தெரிந்தவராகவும் , அதன் பலன்களை அடைந்தவராகவும் இருப்பர்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறியாது கணிதம் , சோதிடம் முதலிய பல சாஸ்திரத்தில் வல்லவராக இருந்தாலும் முகூர்த்த தினம், நல்ல நேரம் ஆகியவைகளை சரியாக கணிக்க முடியாது .

ஆனால் எந்த வித சாஸ்திரத்தில் பயிற்சியும் இன்றி பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் வல்லவர்கள் முகூர்த்த தினம் ,நல்ல நேரம் போன்றவைகளை சரியாக கணிக்க முடியும் என்பது உண்மை .
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சரியாக கணித்து செய்யப்படும் எந்த வேலையும் தோல்வியில் முடியாது 100 சதவீதம் வெற்றியாகத் தான் முடியும் .

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்பை உரோமரிஷி கீழ்க் கண்டவாறு சொல்கிறார் .


பாடல் -1
          ””””போகுமே அஷ்டகன்மம் இதற்கீடல்ல
                                      பொல்லாங்கு கருத்தொழிலும் இதற்கீடல்ல
               ஆகுமே சல்லியங்கள் ஒட்டியங்கள்
                                     அணுகாது தொட்டியத்தில் அவர்க்கெல்லாந்தான்
              சாகுமே மந்திபறம் கெணங்கள்பூதம்
                                     சண்டாள பிசாசுமுதல் ஐயன்துற்கை
             வேகுமே பட்சிவித்தை கண்டபோதே
                                   மேலான வித்தையென்று மெச்சினாரே”””””””
                                   ------உரோமரிஷி-----பஞ்ச பட்சி சாஸ்திரம்-----
           “””””போகுமே அஷ்டகன்மம் இதற்கீடல்ல”””””
முதலில் அஷ்ட கன்மங்கள் எவை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் .
அஷ்ட கன்மங்கள் எனப்படுபவை ,
              1 .வசியம்                   5 ஆகர்ஷணம்
              2 மோகனம்              6 மாரணம்
              3 ஸ்தம்பனம்          7 வித்வேஷணம்
              4 உச்சாடணம்         8 பேதனம்
ஆகியவை ஆகும் .

மந்திரம் , யந்திரம், தந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி பெறப்படும் மேலே சொல்லப் பட்ட அஷ்டகன்மங்களும் பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்கு இணை கிடையாது .



    “”””””””””””பொல்லாங்கு கருத்தொழிலும் இதற்கீடல்ல
       ஆகுமே சல்லியங்கள் ஒட்டியங்கள்
                       அணுகாது தொட்டியத்தில் அவர்க்கெல்லாந்தான்”””””
நம்மேல் பகை கொண்டவர்கள் , நம் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள், நம்மை அழிக்க நினைப்பவர்கள் பயன்படுத்தும் நம்மேல் பிரயோகிக்கும் தவறான முறைகள் , தவறான செயல்கள், தவறான தொழில்கள்

என்று சொல்லப் படக்கூடிய ஏவல் ,பில்லி சூனியம் மட்டுமில்லாமல் சல்லியம் , ஒட்டியம் ,தொட்டியம் இவையெல்லாம் பஞ்ச பட்சி சாஸ்திரம் கற்று தன் வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி கண்டவனை அணுக முடியாது , ஒன்றும் செய்யாது , ஒன்றும் செய்யவும் முடியாது .



             “””””””சாகுமே மந்திபறம் கெணங்கள் பூதம்
                                         சண்டாள பிசாசுமுதல் ஐயன்துற்கை
                        வேகுமே பட்சிவித்தை கண்டபோதே
                                          மேலான வித்தையென்று மெச்சினாரே”””””””
 நம்மேல் பகை கொண்டவர்கள் , நம் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள், நம்மை அழிக்க நினைப்பவர்கள், பூதங்கள் ,ஆவிகள் ,பிசாசு ,பேய் முதல் எல்லாவிதமான தீய சக்திகளையும் ,
நமக்கு எதிராக பயன்படுத்தினாலோ ,
நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தினாலோ ,
நம்முடைய முன்னேற்றத்தை தடுக்க நினைத்து பயன்படுத்தினாலோ,
அல்லது
மேலே சொல்லப்பட்ட தீய சக்திகளால் பாதிப்பு அடையக் கூடிய நிலை நம் வாழ்க்கையில் ஏற்பட்டாலோ ,
பஞ்ச பட்சி சாஸ்திரம் கற்றவனை நெருங்கிய அளவிலேயே வெந்து போகும், எரிந்து சாம்பலாகிப் போகும்.


இத்தகைய சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறிந்து அதனை வாழ்க்கையில் முறைப்படி பயன்படுத்தி வாழ்க்கையில் அதன் இன்பத்தை அனுபவித்தவர்கள் ,
அதன் பலன்கள் ,சக்திகள் ,மகிமைகள் ஆகியவற்றை உணர்ந்தவர்கள் ,
அதன் சூட்சும ரகசியங்களை அறிந்து சுவைத்தவர்கள் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை விட உயர்வான ஒரு சாஸ்திரம் கிடையாது. அதற்கு இணையானது இந்த உலகத்தில் எதுவும் கிடையாது என்று போற்றிப் புகழ்வார்கள்
என்று பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்பை உரோமரிஷி கூறுகிறார்.



பாடல் - 2
            “”””மெச்சினார்  பதினெண்பேர்  சித்தரெல்லாம்
                                     வெகுகோடி ரிஷிகளெல்லாம் மெச்சினார்கள்
                 கொச்சினார்  உலகத்தில் அனந்தங்கோடி
                                    கூர்மையுள்ள மணமுள்ளோர்  காணவேணும்
                பட்சியென்ற தொழிலைத்தான் பார்த்தபேர்க்கு
                                   பகையில்லை யொருநாளும் பகைத்தோரில்லை
              லட்சியென்றஆயுதம் மனதடக்கஞ் செய்தால்
                                  மற்றைவித்தைநிமித்தில் வரும்பார்  நவிலுவேனே”””””””
                                             ----------உரோமரிஷி---பஞ்ச பட்சி சாஸ்திரம்------
            “”””மெச்சினார்  பதினெண்பேர்  சித்தரெல்லாம்
                                    வெகுகோடி ரிஷிகளெல்லாம் மெச்சினார்கள்””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து 18 சித்தர்கள் போற்றி புகழ்ந்தார்கள் .
கோடிக்கணக்கான ரிஷிகளும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் மகிமையை அறிந்து போற்றி புகழ்ந்தார்கள் .



   “”””””கொச்சினார்  உலகத்தில் அனந்தங்கோடி
                             கூர்மையுள்ள மணமுள்ளோர்  காணவேணும்”””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்பை,  அதன் மகிமையை ,உணர்ந்த சித்தர்களும், ரிஷிகளும்
இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்  கோடி கணக்கில் உள்ள மக்களில் ,

கூர்மையான உயர்வான மனத்தை கொண்டவர்கள் ,
அறிவாற்றலில் சிறந்த நிலை அடைந்தவர்கள் ,
இளகிய மனம் கொண்டவர்கள்,
மற்றவர்  துன்பம் கண்டு வருத்தப்படுபவர்கள்,
மற்றவர்களை கெடுக்க நினைக்காதவர்கள் ,
நல்ல பழக்க பழக்கங்களைத் தன்னகத்தே கொண்டவர்கள் ,
எந்தவிதமான தீய குணங்களும் இல்லாதவர்கள்,

போன்ற சிறப்புகளைப் பெற்றவர்களுடைய வாழ்க்கை இன்பமாகவும் , துன்பம் அற்றதாகவும் , கவலைகள் நீங்கியதாகவும் , வாழ்க்கையில் தோல்விகளைக் களைந்து வெற்றிகளைப் பெற்று இன்பங்களைப் பெற்று வாழ்வதற்காகவும்,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை வார்த்தைகளில் எழுதியும் சூட்சும ரகசியங்களை குரு சீடர் -- பரம்பரை மூலமாக மறைத்தும் வைத்தும் இருக்கின்றனர்.



”””””பட்சியென்ற தொழிலைத்தான் பார்த்தபேர்க்கு
                    பகையில்லை யொருநாளும் பகைத்தோரில்லை”””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முறைப்படி கற்று அதன் சூட்சும ரகிசயங்களை அறிந்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை தன் வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் ,
அதன் இன்பங்களைச் சுவைத்தவர்கள்  ,
போன்ற சிறப்புகளைப் பெற்றவர்களுக்கு எதிரிகள் என்று யாரும் இருக்க முடியாது .
அப்படி எதிரிகள் உருவானால் இந்த உலகத்தில் அவர்கள் உயிரோடு இருக்க முடியாது .



””””லட்சியென்றஆயுதம் மனதடக்கஞ் செய்தால்
               மற்றைவித்தைநிமித்தில் வரும்பார்  நவிலுவேனே”””””””
பஞ்ச இந்திரியங்களை தன் வசப்படுத்துவதன் மூலம் தன் மனதை அறிந்து, தன் வழி செயல்படுத்தும் முறையை உணர்ந்து வைத்துக்கொண்டு, தன் வாழ்க்கையில் கடைபிடித்து செயல்படுத்துபவர்,

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து  ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் நன்மைகளை அறிந்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சக்திகளை புரிந்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டு  ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறிந்த சரியான குருவைத் தேடிப்பிடித்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அத்தகைய குருவிடம் முறைப்படி பயின்று ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை வாழ்க்கையில் முறையாக பயன்படுத்தி வெற்றி கண்டவர்களுக்கு ,
உலகில் உள்ள மற்ற வித்தைகள் அதாவது உலகில் எவ்வளவு வித்தைகள் உண்டோ அவ்வளவு வித்தைகளும் நிமிடத்தில் அவருக்கு வசமாகி விடும் என்கிறார்  உரோமரிஷி .

இதிலிருந்து பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம் .
    
                                                                                                                                     
                   “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”




December 28, 2011

தச அவதாரம்




தச அவதாரம்

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை எனப்படுபவர் சார்லஸ் டார்வின்.

உயிரினங்கள் நீரினில் உருவாகி பல்வேறு மாற்றங்களை அடைந்து மனிதன் என்ற நிலையை அடைந்நதது என்பது டார்வினின் கோட்பாடு.

டார்வினின் கோட்பாடு வெளிவருவதற்கு முன்பே பல நுhற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய இலக்கியங்களில் பரிணாமக் கோட்பாடு பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.

அந்த விவரங்கள் பக்தி இலக்கியங்களில் காணப் படுவதால் பக்தியாக மட்டுமே, மத ரீதியாக மட்டுமே, பார்க்கப் பட்டு விட்டதால் அதில் உள்ள உண்மைத்தன்மை இந்த உலகத்திற்கு தெரிய முடியாமல் போய் விட்டது.



டார்வினின் பரிணாமக் கோட்பாடு இந்திய இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது  என்பதைப் பற்றிப் பாரப்போம்.

திருமாலின் அவதாரங்கள் பத்து எனக் குறிப்பிடப்படுகின்றன்.
அவை ,

             
                           1. மச்ச அவதாரம்
                  2. கூர்ம அவதாரம்
                  3. வராக அவதாரம்
                  4. நரசிம்ம அவதாரம்
                  5. வாமன அவதாரம்
                  6. பரசுராம அவதாரம்
                  7. ராம அவதாரம்
                  8. பலராம அவதாரம்
                  9. கிருஷ்ண அவதாரம்
                  10. கல்கி அவதாரம்



1. மச்ச அவதாரம் :
(மச்சம் என்றால் மீன்)
மீன் நீரினில் வசிக்கும் உயிரினம் .

பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது  என்பதைக் குறிப்பதே மச்ச அவதாரம் ஆகும்.




2. கூர்ம அவதாரம்  :
(கூர்மம் என்றால் ஆமை)
ஆமை நீரிலும் வாழும் நிலத்திலும் வாழக் கூடிய ஒரு உயிரினம் .

நீரில் வாழ்ந்த உயிரினங்கள நீரானது வற்றிப் போன காலங்களில் நிலத்திலும் வாழ்வதற்குரிய மாற்றங்களை உடல் அமைப்பில் பெற்று காலப்போக்கில் நீரிலும் , நிலத்திலும் வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெறுகிறது.

தகவமைப்பு என்பது குறிப்பிட்ட ஒரு சூழலுக்கு ஒத்துப்போகும் வண்ணம் மாற்றிக் கொள்ளுதல்.

பரிணாம வளர்ச்சியில் நீரில் வாழ்ந்த உயிரினங்கள் கால மாற்றத்திற்கு தகுந்த படி நீரிலும் , நிலத்திலும் வாழ்வதற்கரிய உடல் அமைப்பைப் பெற்றன என்பதைக் குறிப்பதே கூர்ம அவதாரம்.  




3. வராக அவதாரம்  :
(வராகம் என்றால் பன்றி)
நீரிலும் , நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்கள் நீரானது வற்றிப் போன காலங்களில நிலத்தில் மட்டுமே வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெறுகிறது.

பன்றி நிலத்தில் வாழும் ஒரு உயிரினம். ஆனால் அது நீரில் வாழ்ந்த அதன் பதிவுகள் கலையாத காரணத்தினால் அதன் பதிவுகளின் துhண்டுதலினால் அடிக்கடி போய் சாக்கடையில் போய் படுத்து கொள்கிறது.

பரிணாம வளர்ச்சியில் நீரிலும் , நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்கள் நிலத்தில் மட்டுமே வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெற்றன என்பதைக் குறிப்பதே வராக அவதாரம் ஆகும்.




4. நரசிம்ம அவதாரம்:
நரன் என்றால் மனிதன் சிம்மம் என்றால் சிங்கம். நரசிம்மம் என்றால் மனிதனும், சிங்கமும் சேர்ந்தது என்று பொருள்.

சிங்க தலையும், மனித உடலும் சேர்ந்தது தான் நரசிம்மம். பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதன் வரும்போது விலங்கின் உடலும், மனிதன் உடலும் சேர்ந்து தான் இருந்தது.

அதைக் குறிப்பிடுவதே சிங்க தலையும்,  மனித உடலும் ஆகும்.

 நாளடைவில் தான் முழு மனிதன் உடல் உருவானது.

பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதனாக மாற்றம் அடையும் போது விலங்கும், மனிதனும் சேர்ந்த நிலை தான் இருந்தது என்பதைக் குறிப்பதே நரசிம்ம அவதாரம்.




5. வாமன அவதாரம் :
வாமன அவதாரம் மூன்று அடி அளவு தான் உடையது.

பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதனாக அதாவது முழுமையான மனிதனாக மாற்றம் அடையும் போது முதன் முதலில் குள்ளமாக மூன்றடிக்குள் தான் இருந்தான் என்பதைக் குறிப்பதே வாமன அவதாரம்.




6. பரசுராம அவதாரம் :
மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக காட்டு மரங்களை வெட்டியும்,

 தன் பசியை தீர்த்துக் கொள்வதற்காக காட்டு விலங்குகளை வேட்டையாடியும் காட்டில் உயிர் வாழ்ந்தான்


பரிணாம வளர்ச்சியில் காட்டில் வாழ்ந்த மனிதன் காட்டில் உயிர் வாழ்வதற்கும்,

தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கும்,

ஏற்ற விதத்தில் கையில் கோடாரி வைத்திருந்த மனிதனாக பரசுராம அவதாரத்தை உருவகப் படுத்தி வைத்திருக்கிறார்கள் .




7. ராம அவதாரம் :
காட்டில் வாழ்ந்த மனிதன் நாட்டில் தனக்கென்று ஒரு இராச்சியத்தை உருவாக்கிக் கொண்டு, அரசாட்சி செய்தான்.

நாட்டில் வாழ்ந்த மனிதன் தன் பதிவின் காரணமாக பதிவின் பாதிப்பு காரணமாக  காட்டில் சுற்றி திரிந்தான்

நாட்டில் இருந்த ராமர் சீதையை தேடி காட்டில் அலைந்தது இதன் அடிப்படையில் தான்.

பரிணாம வளர்ச்சியில் காட்டுக்குள் வாழ்ந்த மனிதன் நாட்டில் வந்து வாழ்ந்ததைக் குறிப்பதே ராம அவதாரம் ஆகும்.




8. பலராம அவதாரம் :
நாட்டில் வாழ்ந்த மனிதன் தன் பசியின் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தான் பலராமர் விவசாயம் செய்வதற்கு ஏற்ற விதத்தில் கலப்பையை கையில் வைத்திருக்கிறார்.

பரிணாம வளர்ச்சியில் நாட்டில் வாழ்ந்த மனிதன் விவசாயம் செய்து வாழ்ந்தான் என்பதைக் குறிப்பதே பலராமர் தன் தோளில் சுமக்கும் கலப்பை ஆகும். இதுவே பலராமர் அவதாரம் ஆகும்.




9. கிருஷ்ண அவதாரம் :
கிருஷ்ண அவதாரம் என்பது அறிவு முதிர்ச்சியடைந்த நிலை ஆகும்

தீமைகள் பெருகி விட்ட நிலையில் தான் வாழ பிறரையும் அழிக்கலாம் என்ற நிலை உருவாகி இருந்த நிலையில், அந்த நிலையை மாற்ற எத்தகைய நிலையை பின்பற்றலாம் என்பதைக் குறிக்கிறது.

பரிணாம வளர்ச்சியில் மனிதனின் சிந்திக்கும் திறன் எத்தகைய வழிகளில் செயல்படுகிறது என்பதைக் குறிப்பதே கிருஷ்ண அவதாரம் ஆகும்.




10. கல்கி அவதாரம் :
பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் சூரிய குடும்பத்தில் வேறு ஏதேனும் கிரகத்தில் வாழ முடியுமா என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறான்

குதிரையில் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் குதிரையின் பின்னங்கால்கள் இரண்டும் தரையிலும் முன்னங் கால்கள் இரண்டும்

பூமியில் படாமல் மேல் நோக்கி துhக்கி இருப்பதைப் பார்க்கலாம் இது மனிதன் வேறு கிரகத்தில் சென்று வசிக்க இடம் தேடுவதைக் குறிக்கிறது.

பரிணாம வளர்ச்சியில் மனிதன் பூமியில் இருந்து வேறு கிரகத்திற்கு சென்று வசிக்க இடம் தேடுவதைக் குறிக்கிறது.





டார்வின் சொல்லும் பரிணாமக் கோட்பாட்டை நம் இலக்கியங்கள் முன்பே சொல்லி இருக்கின்ற.

 மதம் பக்தி நீக்கி பார்த்தால் ஆழ்ந்த அறிவியல் அறிவு நம் முன்னோர்களுக்கு எப்படி இருந்ததை என்பதையும், அதை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கு இல்லை என்பதையும் குறிக்கிறது .