February 06, 2012

இயேசு கிறிஸ்து-அகத்தியர்-வாழாமலுலகம்- பதிவு-6




            இயேசு கிறிஸ்து-அகத்தியர்-பதிவு-6
      
                               “”பதிவு ஆறை விரித்துச் சொல்ல
                                                               ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
கடவுள் நிலை உணராமல் ,
கடவுள் நிலை உணர்ந்தது போல் ,
காட்டிக் கொள்ளும்
கயமைத்தனம் கொண்ட ,
கசடர்களைப் பற்றி ,
இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார் :

வசனம்-1:

அப்பொழுது : இதோ ,கிறிஸ்து இங்கே இருக்கிறார்,  அதோ, அங்கேயிருக்கிறார்  என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.
                                                                மாற்கு-13:21

                             பிரபஞ்ச விதிப்படி
                             உண்மை – பொய் ,
                             இன்பம் – துன்பம் ,
                             நல்லது – கெட்டது ,
                             உயர்ந்தவர்  - தாழ்ந்தவர் ,
என்ற இரு வேறுபட்ட எதிர்  நிலைகள் எப்பொழுதும் , என்றென்றும் , எந்த கால கட்டத்திலும் இருந்து கொண்டே இருக்கும் .

நெல்லுக்கு இடையில் , பயிர்களுக்கு இடையில் , களை எவ்வாறு தேவையற்று முளைக்குமோ அதைப் போல ,
உண்மை நிலை உணர்ந்தவர்கள் ,
ஆண்டவனை அறிந்தவர்கள் ,
இயேசுவை பின்பற்றுபவர்கள் ,
மத்தியில்
ஆண்டவனை உணராதவர்கள் ,
ஆண்டவனை உணர்ந்தது போல் நடிப்பவர்கள் ,
இயேசுவை நேரில் பார்த்தது போல் , அவரிடம் ஆசி பெற்றது போல் , அவர் வழி நடப்பது போல் பேசுபவர்கள் உண்டு .

அவர்களை , அத்தகைய தவறான முறையில் செயல்படுபவர்களை , சரியான முறையில் அடையாளம் கண்டு ,
சமுதாயத்தில் இருந்து களை எடுக்கவில்லை எனில் உண்மை உணர்ந்தவர்களுக்கும் தவறான பெயர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது .

அத்தகைய போலி வேடதாரிகள் ,
ஆண்டவனை நேரில் பார்த்தது போல பேசுவார்கள் ,
ஆண்டவனை தங்கள் மனம் குளிரும் அளவுக்கு தரிசனம் செய்தது போல பேசுவார்கள் ,
ஆண்டவனை நேரில் தரிசித்து ஆசி பெற்றது போல் பேசுவார்கள் ,
அவர்கள் இதோ இயேசு அங்கே இருக்கிறார்  பாருங்கள் ,
இதோ இங்கே இருக்கிறார்  பாருங்கள் ,
ஆண்டவனை தரிசனம் பண்ணுங்கள் என்பார்கள் ,
அங்கே இருக்கிறார்  உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா என்பார்கள் ,
மாயாஜால வார்த்தைகளை பேசுவார்கள் ,
உங்கள் அறியாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பேசுவார்கள் ,
உங்கள் மனதை தங்களுக்கு அடிமையாக வைத்துக் கொண்டு பேசுவார்கள் ,
உங்கள் அறிவை மழுங்க வைத்து விட்டு பேசுவார்கள் ,
அவர்கள் சிந்தனையை செயல்படாமல் வைத்து விட்டு பேசுவார்கள் ,
உங்கள் புத்தியை அழித்து விட்டு பேசுவார்கள் ,
உங்கள் நெஞ்சை அடிமைப் படுத்தி விட்டு பேசுவார்கள் ,

அத்தகைய போலி வேடதாரிகளின்
புரட்டு வார்த்தைகளை ,
புளுகு மூட்டைகளை ,
நம்பாது இருங்கள் , நம்பாதீர்கள் என்கிறார்  இயேசு .



வசனம்-2:

ஏனெனில் , கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத் தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
 
                                                                மாற்கு-13:22

இதற்கெல்லாம் மேலாக ஒரு படி மேலே போய்,
தான் தான் இந்த உலகத்தை ரட்சிக்க வந்த இயேசு என்றும் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வார்கள் ,
தங்களையே கடவுளாக உருவகப் படுத்திக் கொள்வார்கள் ,
அடையாளம் காட்டிக் கொள்வார்கள் ,
கடவுளின் பெயரையே இழிவு படுத்துவார்கள் ,

மேலும் தீர்க்க தரிசனம் உரைக்கிறேன் என்று உண்மையை உணராமல் ,
ஆண்டவர்  யார்  என்ற உண்மையில் தெளிவு பெறாமல் ,
இயேசுவை புரிந்து கொள்ளாமல் ,
இயேசுவை உணர்ந்து கொள்ளாமல் ,
கள்ளத் தீர்க்க தரிசிகளும் ,
திருட்டுத்தனம் கொண்ட ,
பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட ,
தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற சுய நலம் கொண்ட ,
குடும்ப சுகங்களை மட்டுமே நினைவில் கொண்ட ,
சுய நலத்தை மட்டுமே தன்னுள் கொண்ட ,
கள்ளத் தீர்க்கதரிசிகள் பலபேர்  உருவாகி
வருவார்கள் .

அவர்களால் உண்மையாகவே
இந்த சமுதாயத்திற்கு பாடுபடும் ,
இந்த மக்களுக்காக பாடுபடும் ,
பொது நலம் கொண்ட ,
இரக்கத் தன்மை கொண்ட ,
அன்பு நெஞ்சத்தை தன்னுள் கொண்ட ,
கருணை செயல்கள் கொண்ட ,

உண்மையான தீர்க்கதரிசிகளுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் ,
உண்மையான தீர்க்கதரிசிகளுக்கு அவமானத்தை உண்டாக்கும் வகையில் செயல்படுவார்கள் .

ஆண்டவனைப் பற்றி அறிந்து அவர்  சொன்ன பாதையைப் பின்பற்றி ,
செல்லும் உண்மை கிறித்தவர்களையும் ,
தெளிவாக உண்மை உணர்ந்தவர்களையும் ,
விளக்கமாக நியாயம் தெரிந்தவர்களையும் ,
இன்பம் துன்பம் இரண்டின் வேறுபாடு அறிந்தவர்களையும் ,
அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்படக் கூடியவர்களையும் ,
பரந்த மனப்பான்மை கொண்டவர்களையும் ,
அறிவில் தெளிவு பெற்றவர்களையும் ,
வசனத்தில் விளக்கம் பெற்றவர்களையும் ,
ஆண்டவன் அருளைப் பெற்றவர்களையும் ,
ஆண்டவன் அருளால் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் ,
ஆண்டவனுக்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அளித்துக் கொண்டிருப்பவர்களையும் ,
கூட விட்டு வைக்காமல் ,

அவர்கள் மனம் மாறும்படி ,
செயல்கள் பல செய்து காட்டி ,
தாங்கள் தான் உண்மையான தீர்க்கதரிசிகள் என்று உண்மையான கிறித்தவர்களே நம்பும் படி ,
வஞ்சிக்கத்தக்க வார்த்தைகளைப் பேசி மாயாஜால வேலைகளைச் செய்து காட்டி ,
தந்திர செயல்கள் பலவற்றை நிகழ்த்திக் காட்டி ,

ஆண்டவனிடம் உண்மையாக இருப்பவர்களையும் ,
ஆண்டவனை விசுவாசிக்கிறவர்களையும் ,
ஏமாற்றும் விதமாக பலவிதமான அற்புதங்களை செய்து காட்டுவார்கள் ,



வசனம்-3:

நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள் ; இதோ , எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
 
                                                                மாற்கு-13:23

அத்தகைய தன்மைகள் கொண்டவர்களை ,
நயவஞ்சக பிசாசுகளை ,
தவறான எண்ணம் கொண்டவர்களை ,
சுயநல விரும்பிகளை நம்பாதீர்கள்.
அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் .
தவறான வழியைப் பின்பற்றி செல்லாதீர்கள் .
உண்மை நிலை உணர்ந்து அதன் வழி செல்லுங்கள் .
நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் ,
உங்கள் வாழ்க்கை தவறான பாதையில் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் ,
தவறான ஆட்கள் பின் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் ,
இதையெல்லாம் நான் உங்களுக்கு முன் கூட்டியே சொல்லுகிறேன் என்கிறார் இயேசு .



அகத்தியர் :
           “””””வாழாம லுலகம்விட்டு வேடம் பூண்டு
                                       வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
                  தாழ்வான குடிதோறு மிரப்பான் மட்டை
                                      தவமறியா சண்டாளர்  முழுமா டப்பா
                  பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
                                     பதறாத வயிற்றுக்கா மயங்கி டாதே
                  கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
                                      கலங்காதே யுடலுயிரென் றுரைத் திடாதே””””””
                                                       --அகத்தியர்----அகத்தியர்  ஞானம்-16--------

        “””””வாழாம லுலகம்விட்டு வேடம் பூண்டு
                                      வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்”””””
இந்த உலகத்தில் வாழும் வழி அறியாமல் ,
பிழைக்க வழி தெரியாமல் ,
தொழில் செய்யும் திறன் இல்லாமல் ,
சம்பாதிக்கும் அறிவு இல்லாமல் ,
வேலை செய்யும் திராணி இல்லாமல் ,
பணம் சம்பாதிக்கும் வழி தெரியாமல் ,

தன் வாழ்க்கையை ஓட்டுவதற்காகவும் ,
துன்பத்தை நீக்கி இன்பத்தை பெறுவதற்காகவும் ,
மகிழ்ச்சி கடலில் திளைப்பதற்காகவும் ,

உண்மையாக வேலை செய்து உழைத்து வாழாமல் ,
தன் வயிற்றுப் பசியின் தேவையை தீர்த்துக் கொள்வதற்காகவும் ,
வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் ,

உண்மையை உணர்ந்ததாகவும் ,
ஆண்டவனை அறிந்ததாகவும் ,
சத்தியத்தை தெரிந்ததாகவும் ,
தங்களை காட்டிக் கொண்டு
போலியாக சாமியார்  வேடம் போட்டுக் கொண்டு ,
வார்த்தைகளால் ஜாலம் காட்டி ,
மக்களை மயக்கும் விதத்தில் பேசிக் கொண்டு ,
போலி சாமியார்கள் உருவாகி உலாவுவார்கள் .



            “”””””தாழ்வான குடிதோறு மிரப்பான் மட்டை”””””
தாழ்வான குடிதோறும் இருப்பான் என்றால் ,
உண்மை நிலை உணராதவர்கள் ,
உண்மை நிலையை அறிய வேண்டும் என்று நினைக்காதவர்கள் ,
உண்மை நிலையை அடைய வேண்டும் என்று முயற்சி செய்யாதவர்கள்,
உண்மை நிலை எப்படி இருக்கும் என்று தெரியாதவர்கள் ,
உண்மை நிலையைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் ,
பொய்யை உண்மை என்று நம்புபவர்கள் ,
பொய்மைக்கு சிம்மாசனம் கொடுப்பவர்கள் ,
பொய்மைக்கு கிரீடம் சூட்டுபவர்கள் ,
அறியாமைச் சகதியில் புரள்பவர்கள் ,
அறிவற்ற சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் ,
ஆகியோர்  இருக்கும் சமுதாயத்தில் எல்லாம் இத்தகைய போலி சாமியார்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை , ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்கிறார் அகத்தியர் .



“”””””தவமறியா சண்டாளர்  முழுமா டப்பா”””””
நான் யார்  என்றும் ,
தன்னை படைத்தவன் யார்  என்றும்,
இந்த உலகத்தை கட்டி காப்பவன் யார்  என்றும் ,
கடவுளின் உண்மை தன்மை அறியாத சண்டாளர்கள் ,
இத்தகைய போலி சாமியார்களை முழு மாடு என்கிறார்  அகத்தியர்.

மாட்டை இழிவு படுத்துவதற்காக அப்படி சொல்லவில்லை அகத்தியர் . எந்த உயிரையும் தாழ்வாக நினைப்பவர்கள் இல்லை சித்தர்கள் .
அவர்  ஏன் போலி சாமியார்களை முழு மாடு என்று சொல்கிறார்  என்று பார்ப்போம் .
மனிதன் என்ற தன்மையை விட்டு கீழே இறங்கி ,
விலங்குக்குரிய தன்மையைப் பெற்று ,
அதன் தன்மைகளைப் பெற்று ,
விலங்குகள் போல் செயல்பட்டு ,
கண்ட இடத்தில் தின்று ,
கண்ட இடத்தில் கழித்து விட்டு ,
கண்ட இடத்தில் சுற்றித் திரியும் விலங்குகளைப் போன்ற ,
செயல்களையும் அறிவையும்  பெற்றவர்கள் போலி சாமியார்கள் என்கிறார் அகத்தியர் .



            “””””பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
                                     பதறாத வயிற்றுக்கா மயங்கி டாதே”””””
போலி சாமியார்களின் கபட வார்த்தைகளைக் கேட்டு ,
அவர்  சொல்படி பின்பற்றி ,
அவர்  வழி நடக்காதே!

தன் வயிற்றுப் பசி தீர்ந்து விடும்
தன் வறுமை நீங்கி விடும்
தன் வாழ்க்கை செழித்து விடும்
அவர்களை ,
அந்த போலி சாமியார்களை பின்பற்றினால் நடந்து விடும்
என்ற தவறான எண்ணம் கொண்டு மயங்கி விட வேண்டாம் .
பசியின் தேவையை தீர்ப்பதற்காக ,
தவறான மனிதர்களிடம்
போலி சாமியார்களிடம்
மாட்டிக் கொள்ள வேண்டாம் என்கிறார் அகத்தியர்.



      “””””கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
                                 கலங்காதே யுடலுயிரென் றுரைத் திடாதே””””””
போலி சாமியார்களின் தவறான பேச்சுக்களை ,
கருத்தாழம் இல்லாத வார்த்தைகளை ,
உண்மை உணராத சொற்களை ,
தொடர்ந்து கேட்டு கேட்டு மனம் கலங்காதே ,
அதாவது மனதை கலங்க வைத்து விடாதே ,
மனதை குழப்பத்தில் ஆழ்த்தி விடாதே ,
வழி மாறிப் போய் விடாதே ,
தவறான வழியைப் பின்பற்றாதே ,
பாதை மாறிப் போய் விடாதே ,

அவர்  பேச்சைக் கேட்டு
உடலுக்கும் , உயிருக்கும் உள்ள வேறுபாட்டை உணராமல் ,
ஸ்துhல உடலுக்கும் , சூக்கும உடலுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல் ,
உடலும் , உயிரும் ஒன்று என்று நினைத்துக் கொண்டு அலையாதே ,

உடலை உயிர்  என்று சொல்லி ,
மனம் அற்ற மூடரைப் போல ,
அறிவற்ற நிலையை அடையாதீர்கள் .

போலி சாமியார்களின் தவறான வார்த்தைகளைக் கண்டு ,
தவறான வழிகளைப் பின்பற்றி செல்லாதீர்கள் என்கிறார்  அகத்தியர்.



இயேசு கிறிஸ்து - அகத்தியர்:
இயேசு , கள்ளத் தீர்க்கதரிசிகளை நம்ப வேண்டாம் என்றார்.

அவ்வாறே ,
அகத்தியரும் , போலி சாமியார்களை நம்ப வேண்டாம் என்கிறார்.

                        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                             போற்றினேன் பதிவுஆறு  ந்தான்முற்றே “”