August 31, 2014

இயேசுகிறிஸ்து-சிவவாக்கியர்- உருத்தரித்த-பதிவு-69




இயேசுகிறிஸ்து-சிவவாக்கியர்- உருத்தரித்த-                      பதிவு-69

“””பதிவு அறுபத்துஒன்பதை விரித்துச் சொல்ல
                        ஈசர்பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””””

இயேசு கிறிஸ்து:
“இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.”
------மத்தேயு - 14 : 22

“அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.”
------மத்தேயு - 14 : 23

“அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.”
------மத்தேயு - 14 : 24

“இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.”
------மத்தேயு - 14 : 25

“அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.”
------மத்தேயு - 14 : 26

“உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள் என்றார்.”
------மத்தேயு - 14 : 27

“பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.”
------மத்தேயு - 14 : 28

“அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான்.”
------மத்தேயு - 14 : 29
“காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்.”
------மத்தேயு - 14 : 30

“உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து : அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.”
------மத்தேயு - 14 : 31

“அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.”
------மத்தேயு - 14 : 32

“அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர்
தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.”
------மத்தேயு - 14 : 33

“பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில்
சேர்ந்தார்கள்.”
------மத்தேயு - 14 : 34
நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும்
அது ஒன்றை வெளிப்படுத்தும்
அந்த ஒன்று இரண்டு தன்மைகளைத் தன்னுள் கொண்டிருக்கும்
அது எந்த செயலாக இருந்தாலும்,
எப்போது செய்த செயலாக இருந்தாலும்,
எந்த காலத்தில் செய்யப்பட்ட செயலாக இருந்தாலும்,
எந்த நேரத்தில் செய்த செயலாக இருந்தாலும்,
எந்த செயலைச் செய்தாலும்,
அது ஒன்றை வெளிப்படுத்தும்
அந்த ஒன்று இரண்டு தன்மைகளைத் தன்னுள் கொண்டிருக்கும்.

நாம் எந்த செயலைச் செய்தாலும்
அந்த செயல் ஒரு விளைவை உண்டாக்கும்
அந்த விளைவு இரண்டு தன்மைகளைத் தன்னுள் கொண்டிருக்கும்
அது பாவமாக இருக்கலாம் அல்லது
புண்ணியமாக இருக்கலாம்.

அதாவது
நாம் எந்த செயலைச் செய்தாலும்
அந்த செயலுக்குரிய விளைவு
பாவமாகவோ அல்லது
புண்ணியமாகவோ இருக்கும்
பாவத்திற்குரிய செயலைச் செய்தால்
பாவத்திற்குரிய விளைவு
பாவமாக இருக்கும் என்றோ
புண்ணியத்திற்குரிய செயலைச் செய்தால்
புண்ணியத்திற்குரிய விளைவு
புண்ணியமாக இருக்கும் என்றோ
நாம் நினைத்தல் கூடாது
அவ்வாறு நினைத்தல் தவறு.

பாவத்திற்குரிய விளைவு பாவமாகவோ
புண்ணியத்திற்குரிய விளைவு புண்ணியமாகவோ
இருக்கும் என்பதே தவறு.

பாவத்திற்குரிய விளைவு புண்ணியமாகவோ
புண்ணியத்திற்குரிய விளைவு பாவமாகவோ
இருக்கும் .

செயலுக்குரிய விளைவு பாவமா அல்லது புண்ணியமா என்பதை
செயலால் தீர்மானிக்க முடியாது
செய்யப்படும் ஒரு செயல்
பாவமா அல்லது புண்ணியமா
என்பதை தீர்மானிக்காது
ஒரு செயலை வைத்து பாவம் புண்ணியம் தீர்மானிக்கப்படுவதில்லை
ஒரு செயல் நடைபெறும் விதத்தினைப் பொறுத்து,
ஒரு செயல் நடைபெறும் தன்மையைப் பொறுத்து,
ஒரு செயலில் கருத்தினைப் பொறுத்து,
ஒரு செயலில் மறைந்துள்ள உண்மையைப் பொறுத்து,
ஒரு செயலினால் ஏற்படக்கூடிய விளைவு
பாவமா அல்லது
புண்ணியமா
என்று தீர்மானிக்கப்படுகிறது

ஒரு செயலினால் உண்டாகும் விளைவானது
பாவமா அல்லது
புண்ணியமா என்பதை
செயலினுள் மறைந்திருக்கும் கருத்தே தீர்மானிக்கும்
என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நிகழ்வு -1 :
புண்ணியத்தை செய்யக்கூடிய
செயலால் ஏற்படக்கூடிய விளைவு
புண்ணியமாக இருக்கலாம்
   (அல்லது)
புண்ணியத்தை செய்யக்கூடிய
செயலால் ஏற்படக்கூடிய விளைவு
பாவமாக இருக்கலாம்.
புண்ணியமான செயலில்
                   உண்மை சொன்னால்-----------புண்ணியம்
                   பொய் சொன்னால்  ------------பாவம்


நிகழ்வு -2 :
பாவத்தை செய்யக்கூடிய செயலால்
ஏற்படக்கூடிய விளைவு
பாவமாக இருக்கலாம்
    (அல்லது)
பாவத்தை செய்யக்கூடிய செயலால்
ஏற்படக்கூடிய விளைவு
புண்ணியமாக இருக்கலாம்
பாவமான செயலில்
                   உண்மை சொன்னால்------------பாவம்
                   பொய் சொன்னால்  -------------புண்ணியம்

செயலுக்குள் மறைந்திருக்கும் கருத்தே
பாவமா அல்லது
புண்ணியமா
என்பதைத் தீர்மானிக்கிறது.

நிகழ்வு-1 - விளக்கம்
ஒரு நல்லவன்
ஒரு கெட்டவனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறான்;
கெட்டவனைக் கொல்ல வேண்டும்
என்று துரத்திக் கொண்டு ஓடுகிறான் ;
இந்த நிகழ்ச்சியில் கெட்டவனைக்
கொல்வது என்பது புண்ணியமான
செயலாகக் கருதப்படுகிறது.
இது ஒரு புண்ணியமான செயலாக இருக்கலாம்
என்று எடுத்துக் கொள்ளலாம்.

பல குடும்பங்களை அழித்தவன்,
பல குடும்பங்களை அழியக் காரணமானவன்,
தொடர்ந்து பல குடும்பங்கள்
அழியக் காரணமாக இருந்து கொண்டிருப்பவன்,
அத்தகைய கெட்டவனை
ஒரு நல்லவன் அழிக்க ஓடுகிறான்
கொலை செய்ய ஓடுகிறான்.
கெட்டவன் ஓடி ஒளிந்து கொண்டான்
கெட்டவன் ஒளிந்து கொண்ட இடம்
நமக்கு தெரியும் என்று
வைத்துக் கொள்வோம்.

ஒரு நலலவன் கெட்டவனை கொல்ல துரத்தி ஓடும்போது
நாம் எதிர்ப்பட்டால் அந்த கெட்டவன்
எங்கே மறைந்திருக்கிறான் என்று
நம்மைக் கேட்கும் போது
புண்ணியமான இந்த செயலில்
நாம் சொல்லும் பதிலைப் பொறுத்து
பாவமும் புண்ணியமும் தீர்மானிக்கப்படுகிறது.

நல்லவன் கெட்டவனைத் துரத்திக் கொண்டு ஓடும்போது
கெட்டவன் மறைந்திருக்கும் இடம் நமக்குத் தெரியும்போது
கெட்டவன் எங்கே மறைந்திருக்கிறான் என்று
நல்லவன் நம்மைக் கேட்கும் போது
ஒரு உயிரைக் கொல்வது பாவம் என்று கருதி
எனக்குத் தெரியாது
என்று சொன்னால்
அவன் தப்பித்து வந்து இன்னும்
பல உயிர்களை கொல்வான்;
பல குடும்பங்களை அழிப்பான்;
பலர் நிம்மதியை கெடுப்பான்;

ஒரு புண்ணியமான செயலில்
பொய் என்ற
பாவத்தை செய்வதால்
பாவம் கிடைக்கிறது.

அதே செயலில் கெட்டவன்
இங்கு மறைந்திருக்கிறான் என்று
உண்மையைச் சொல்வதன் மூலம்
பல குடும்பங்கள் காப்பாற்றப் படுகிறது.

ஒரு நல்லவன்
கெட்டவனை அழிப்பதன் மூலம்
நன்மை நடக்கிறது.
உயிரைக் கொல்வது இங்கே
புண்ணிய செயலாக கருதப்படுகிறது

கெட்ட உயிரைக் கொல்லும்
இந்த புண்ணிய செயலில்,
ஓர் உயிரைக் கொல்வதற்கு காரணமான உண்மை
இங்கே புண்ணியமாகக் கருதப்படுகிறது ;
ஓர் உயிரைக் கொல்வதைத் தடுக்கும் பொய்
இங்கே பாவமாகக் கருதப்படுகிறது ;
புண்ணியமான செயலில்
                   உண்மை சொன்னால்-----------புண்ணியம்
                   பொய் சொன்னால்  ------------பாவம்


நிகழ்வு - 2 விளக்கம்
ஒரு கெட்ட கணவன்
நல்ல மனைவியைக் கொல்ல ஓடுகிறான்
நல்ல மனைவி கெட்ட கணவனுக்குத் தெரியாமல்
தன் உயிரைக் காக்க மறைந்து கொண்டாள்.
அவள் மறைந்து கொண்ட இடம்
அவள் ஒளிந்து கொண்டிருக்கும் இடம்
நாம் பார்த்தோம் என்று வைத்துக் கொள்வோம்.
நம்மிடம் வந்து அந்த கெட்ட கணவன் கேட்கிறான்
தன் மனைவி இருக்கும் இடம்
உங்களுக்கு தெரியுமா 
தெரிந்தால் சொல்லுங்கள் என்கிறான்.
         
இந்த பாவத்தை தரக்கூடிய செயலில்
ஒரு கெட்டவன் நல்லவளை கொல்லக்கூடிய செயலில்
பாவம் ஒளிந்திருக்கிறது.
இந்த பாவத்தை தரக்கூடிய செயலில்
அந்த பெண் இங்கே இருக்கிறாள் என்று
சரியான இடத்தைச் சொல்லி
அவள் இறப்பதற்கு காரணமாக நாம் ஆனால்
ஒரு தவறான கொலைக்கு
பாவம் தரக்கூடிய கொலைக்கு
நாம் உண்மையைச் சொல்லி
ஓர் நல்ல உயிர் இறப்பதற்கு
நாம் காரணமாகும் போது
அது பாவம்.

ஒரு பாவமான செயலில்
உண்மை சொன்னால் பாவமாக கருதப்படுகிறது.

அந்த பெண் எங்கே என்று எனக்குத் தெரியாது
இந்த வழியாகச் சென்றாள் என்று
தவறான வழியைக் காட்டி
அதாவது பொய் சொன்னால்
அந்த பெண் அப்போது அந்த சமயத்தில்
பிழைத்துக் கொள்வாள்.

ஒரு பாவமான செயலில்
பொய் என்ற பாவத்தை செய்யும் போது
புண்ணியம் கிடைக்கிறது.
          பாவமான செயலில்
                             உண்மை சொன்னால்------------பாவம்
                             பொய் சொன்னால்  -------------புண்ணியம்


ஒரு புண்ணியமான செயலில்
உண்மை சொல்லும்போது
புண்ணியம் கிடைக்கிறது ;
ஒரு புண்ணியமான செயலில்
பொய் சொல்லும் போது
பாவம் கிடைக்கிறது ;

ஒரு பாவ செயலில்
உண்மை சொல்லும் போது
பாவம் கிடைக்கிறது ;
ஒரு பாவ செயலில்
பொய் சொல்லும் போது
புண்ணியம் கிடைக்கிறது ;



செயலைப் பொறுத்து
பாவமும் புண்ணியமும்
தீர்மானிக்கப்படுவதில்லை
செயலினுள் உள்ள கருத்தினைப் பொறுத்துத் தான்
பாவமும் புண்ணியமும் தீர்மானிக்கப்படுகிறது.

செயலினுள்ள உள்ள கருத்தினைப் பொறுத்துத் தான்
பாவமும் புண்ணியமும் தீர்மானிக்கப்படுகிறது
என்றாலும்
செயலினுள் உள்ள கருத்து என்பது
அறியாமை , அலட்சியம் , உணர்ச்சி வயப்படுதல்
ஆகிய மூன்றினைப் பொறுத்தது
என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .

அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயப்படுதல்
ஆகிய மூன்றினாலும்
ஆகியவற்றால் உண்டாக்கும் செயல்களினாலும்
இந்த மூன்றினால் ஏற்படக்கூடிய செயல்களினாலும்
பாவம் புண்ணியம் ஏற்படுகிறது.

அறியாமை
ஒரு கஷ்டத்தில் இருக்கும்
ஒரு நல்லவருக்கு
துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நல்லவருக்கு
அறியாமையினால்
கெட்டது செய்தால் பாவம் ;

அறியாமை அகற்றி
புண்ணியம் செய்தால் புண்ணியம் ;

அலட்சியம்
கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்
ஒருநல்லவரை
நாலு பேர் முன்னிலையில் அவமானப்படுத்தி
அலட்சியத்தால் அசிங்கப்படுத்துவது பாவம் ;

அலட்சியத்தை அகற்றி
அவர் மனம் புண்படாமல்
செயல்களைச் செய்வது புண்ணியம் ;

உணர்ச்சி வயப்படுதல்
ஒரு நல்லவருக்கு ஆராயாமல்
சிந்தனை செய்யாமல்
உணர்ச்சி வயப்பட்டு கெடுதல்
செய்வது பாவத்தை கொண்டு வரும் ;

உணர்ச்சி வயப்படாமல்
கெடுதல் செய்யாமல்
இருப்பது புண்ணியத்தை கொடுக்கும் ;

செயலுக்குல் இருக்கும் கருத்தினை உணராமல்
அறியாமை ,அலட்சியம் ,உணர்ச்சி வயப்படுதல்
மூலமாக செயலைச் செயலைச் செய்வதால்
பாவமும், புண்ணியம் ஏற்படுகிறது
என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அறியாமை,  அலட்சியம்,  உணர்ச்சி வயப்படுதல்
தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ நடைபெறும்
எப்படி நடந்தாலும்
நடைபெறும் தன்மையைப் பொறுத்து
பாவமும் புண்ணியமும் தீர்மானிக்கப்படுகிறது.

இயேசு ஜனங்களை அனுப்பி விட்டு
தம்முடைய சீஷர்கள் படகில் ஏறி
தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி
அவர்களை விரைவு படுத்தினார்.

அவர்களை அனுப்பி விட்ட பின்பு
ஜனங்களை அனுப்பி விட்ட பின்பு
சாயங்காலமான போது தனித்து ஜெபம் பண்ண
ஒரு மலையின் மேல் ஏறி அங்கே தனிமையிலிருந்தார்.

அதற்குள்ளாக படகு நடுக்கடலிலே சேர்ந்து
எதிர் காற்றாக இருந்த படியால்
அலைகளினால் படகு அலைவு பட்டது
அலைகளினால் படகு அலைக்கழிக்கப்பட்டது
இதனைக் கண்ட இயேசு
இரவின் நாலாம் ஜாமத்திலே
கடலின் மேல் நடந்து அலைக்கழிக்கும் படகில்
உள்ள அவர்களிடத்திற்கு வந்தார்.

இயேசு கடலின்மேல் நடக்கிறதைக் கண்டு
சீஷர்கள் கலக்கமடைந்து பயத்தினால் அலறினார்கள்
இது அறியாமையினால் உண்டாவது.
இயேசுவைப்பற்றி தெரிந்திருந்தும் ;
இயேசுவின் மகிமையைப் பற்றி தெரிந்திருந்தும் ;

இயேசுவின் அன்பைப் பற்றி தெரிந்திருந்தும் ;
இயேசுவின் அருளைப் பற்றி புரிந்திருந்தும் ;
இயேசுவின் கருணையைப் பற்றி அறிந்திருந்தும் ;
அறியாமையினால் பயத்தினால் அலறினார்கள்.

இயேசுவைப் பற்றி தெரிந்திருந்தும் ;
இயேசு எவ்வளவு பெரிய காரியங்களையும் செய்யக்கூடியவர்
என்று கண்ணால் கண்ட பிறகும் ;
இயேசுவைப் பற்றி அறியாமல் ,
இயேசுவால் ஜலத்தினால் நடப்பது ஆகுமா
என்பதை அறியாமல் ,
நடந்து வந்தது வேறொருவரா அல்லது இயேசுவா
என்தை அறியாமல் ,
பயத்தினால் அலறினார்கள் ;
தவறு செய்தார்கள் ;
அறியாமை நம்பிக்கையின்மையை கொண்டு வந்து விடும்
அந்த நம்பிக்கையின்மை தான் அலட்சியம் .

உடனே இயேசு அவர்களோடே பேசி
திடங்கொள்ளுங்கள்
நான் தான் பயப்படாதிருங்கள் என்றார் .
அறியாமையில் மாட்டிக் கொண்ட
சீஷர்கள் மனதில் நம்பிக்கையை உண்டு பண்ண
அவர்கள் உண்மையை உணர்ந்து கொள்ளும் வகையில்
திடங்கொள்ளுங்கள்
நான் தான் பயப்படாதிருங்கள் என்றார்.

அவர்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்
அறியாமை கொண்ட மனதில்
இயேசுவின் வார்த்தைகள்
நம்பிக்கையை தோற்றுவித்து இருக்க வேண்டும்
ஆனால் சீஷர்கள் மனதில்
நம்பிக்கை இன்மை தான் தோன்றியது.
அறியாமை நம்பிக்கையின்மை பெறும்போது
அலட்சியத்தை உண்டு பண்ணி விடுகிறது .

பேதுரு அவரை நோக்கி,
ஆண்டவர் நீர் என்பது உண்மையானால் ;
இயேசுவே நீர் என்பது உண்மையானால் ;
எங்களை ரட்சிக்க வந்தவர் நீர் என்பது உண்மையானால் ;
எங்க்ளை காப்பாற்ற வந்தவர் நீர் என்பது உண்மையானால் ;
எங்கள் பாவங்களை ஏற்க வந்தவர் நீர் என்பது உண்மையானால் ;
எங்கள் பாவங்களைக் கழிக்க வந்தவர் நீர் என்பது உண்மையானால் ;

ஏழைகளுக்கு வாழ்வு தர வந்தவர் நீர் என்பது உண்மையானால் ;
தாழ் நிலையில் இருப்பவர்களை
உயர்நிலைக்கு கொண்டு வர வந்தவர் நீர் என்பது உண்மையானால் ;
அன்பே வடிவானவர் நீர் என்பது உண்மையானால் ;
கருணை உமது கண்களில் வடிவது உண்மையானால் ;
இரக்கம் உமது இதழ்களில்
புன்முறுவலாக தவழ்வது உண்மையானால் ;
என்று பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுக்க வேண்டும்
என்று நினைத்த
பேதுருவின் உள்ளம் நம்பிக்கையின்மையால் குழம்பி தவித்தது .

அதன் வெளிப்பாடாய் வந்த வார்த்தைகள் தான்
ஆண்டவரே நீரேயானால் நான் ஜலத்தின் மேல்
நடக்க வேண்டும் என்றும்
ஜலத்தின் மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும்
என்று பேதுரு கூறியது .

பேதுரு அறியாமையினால்
நம்பிக்கையின்மையில் மாட்டி
இவரால் இதைச் செய்ய
முடியுமா என்ற அலட்சியம் உண்டாகி விட்டது.
அறியாமை நம்பிக்கையின்மையினால்
அலட்சியத்தை கொண்டு வந்து விட்டது.

அறியாமையைத் தொடர்ந்து அலட்சியம்
உண்டாகி விட்டது
அறியாமையே அலட்சியமாக மாறி விட்டது
அறியாமைக்குள் ஒளிந்திருந்த அலட்சியம்
வெளிப்பட்டது என்று கூட சொல்லலாம்.

அறியாமை அலட்சியத்தை உண்டு பண்ணியதால்
இயேசு இதைச் செய்ய முடியுமா என்ற
குழப்பம் கொண்ட மனதால்
அலட்சியத்தால் தான் பேதுரு
ஆண்டவர் என்பது நீரானால்
நான் ஜலத்தின் மேல் நடந்து
உம்மிடத்தில் வரக் கட்டளையிடும்
என்று சொல்வதின் மூலம்
இயேசுவின்மேல் பேதுரு வைத்த அறியாமை
அலட்சியத்தால் வார்த்தைகளைக் கொட்ட வைத்து விட்டது

இதனைப் புரிந்து கொண்ட இயேசு
வா என் அருகில் ஜலத்தின் மேல் நடந்து
என்அருகே வா என்றார்.
ஜலத்தின் மேல் நடந்து வா என்றார்.

பேதுரு படகை விட்டு இறங்கி
இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான்
நம்பிக்கையின்மையினால் நடந்தான்.

அறியாமையினால் ஏற்பட்ட அலட்சியத்தால்
உண்டான பாதிப்பால்
நம்பிக்கையின்றி நடந்ததால்
காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு
பயந்து போய்
ஜலத்தில் அமிழ்ந்து போகையில்
பேதுரு ஆண்டவரே
என்னை ரட்சியும் என்று கூப்பிட்டார்.

அறியாமையினால் நம்பிக்கை இழந்து
அலட்சியத்தால் ஒரு
செயலைச் செய்யும் போது
உணர்ச்சி வயப்படும் நிலைக்கு மனம் வந்து விடும்
உணர்ச்சி வயப்படுதல் என்பது தெளிவற்ற
சிந்தனையைக் குறிக்கும் .
தெளிவற்ற சிந்தனையே
உணர்ச்சி வயப்படுதலைக் கொண்டு வந்து விடும்.
உணர்ச்சி வயப்படுதல்
காரியம் சிதறுவதற்கு
காரணமாகி விடும்.

உணர்ச்சி வயப்படுதல்
காரியம் சிதறுவதற்கு
காரணம்£கி விடும் ;
உணர்ச்சி வயப்படாமல் இருத்தலே
ஒரு செயல் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு
காரணமாக இருக்கும் ;

பேதுருவின் உணர்ச்சி வயப்பட்ட நிலை
அலட்சியத்தால் ஏற்பட்ட
உணர்ச்சி வயப்படுதல் நிலை.

அலட்சியத்தால் ஏற்பட்ட
உணர்ச்சி வயப்படுதல் நிலை
பேதுருவுக்கு ஏற்பட்டதால்
செய்த செயல் தவறாக
முடியக் காரணமாகி விட்டது

இயேசுவால் தம்மை
ஜலத்தின் மேல் நடக்க வைக்க முடியுமா
என்ற சந்தேகத்தால்
ஏற்பட்ட மனக்குழப்பத்தால்
உணர்ச்சி வயப்பட்டதால்
ஜலத்தில் அமிழ்ந்து போகையில்
ஆண்டவரே என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான் .

உடனே இயேசு கையை நீட்டி
பேதுருவைப் பிடித்து
அற்ப விசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.

விசுவாசம் என்பது ,
நாம் ஒருவரின் மேல்
நம்பிக்கையை முழுமையாக வைப்பது.

விசுவாசம் என்பது ,
நாம் ஒருவர் மேல் வைக்கும்
நூறு சதவீத நம்பிக்கையைக் குறிக்கும்.


அதுவும் கடவுளின்மேல்
நூறு சதவீத நம்பிக்கை வைத்து விட்டால்
அதுதான் பரிபூரண சரணாகதி அதாவது
தன்னை இறைவனிடம்
முழுமையாக ஒப்படைத்து விடுவது
என்பது பொருள் .

இந்த பரிபூரண சரணாகதியைத் தான்
நாம் விசுவாசம் என்கிறோம்
நூறு சதவீத நம்பிக்கை
விசுவாசம் எனப்படுகிறது

நம்பிக்கையில் ஒரு சதவீதம்
குறையிருந்தாலும்
விசுவாசம் பாதிக்கப்படுகிறது ;
விசுவாசம் குறைந்தவனை ,
நம்பிக்கை குறைந்தவனை ,
அற்ப விசுவாசி என்கிறோம் .

அற்ப விசுவாசி என்றால் ,
நம்பிக்கை குறைந்தவன் என்று பொருள் .

பேதுருவை இயேசு
அற்ப விசுவாசி என்றார்
அதாவது நம்பிக்கை குறைந்தவன்
என்றார்.

நாம் முழுவதுமாக விசுவாசமாக இல்லாமல்
அற்ப விசுவாசியாக இருப்போமேயாகில்
ஒருவரை அலட்சியமாக நினைத்து
உணர்ச்சி வயப்பட்டு
தவறான செயலையே செய்வோம் .

பேதுருவும் அலட்சியத்தால் அற்ப விசுவாசியாகி
உணர்ச்சி வயப்பட்டு
தவறான செயலையே செய்தான் ;
அதனால் தான் இயேசு அற்ப விசுவாசியே என்றார் ;
பேதுருவை இயேசு அற்ப விசுவாசியே என்றார் ;

அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமைதியானது ;
கொந்தளித்த கடல் அலை அமைதியானது ;
ஆர்ப்பரித்த காற்றானது அமைதியானது ;
அப்பொழுது படகில் உள்ளவர்கள்
மெய்யாகவே நீர்
தேவனுடைய குமாரன் என்று சொல்லி
இயேசுவைப் பணிந்து கொண்டார்கள்
பின்பு அவர்கள்
கடலைக் கடந்து
கெனெசரேத்து நாட்டிற்கு சென்றார்கள்.

பேதுருவுக்கு ஏற்பட்ட அறியாமையினால்
ஜலத்தின் மேல் நடப்பது
இயேசு என்று அறியாமையால் அலறினான்.
அறியாமையினால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையினால்
அலட்சியம் உண்டாகி ,
இயேசுவே நீர் ஆண்டவர் என்பது உண்மையானால்
என்னை ஜலத்தின் மேல் நடக்க வையும் என்றான்.

பேதுரு இயேசுவின் மேல்
அற்ப விசுவாசம்
கொண்டிருந்த காரணத்தினால் ,
தன்னை இயேசு ஜலத்தின் மேல்
நடக்க வைக்க முடியாது என்று
தவறாக நினைத்த காரணத்தினால் ,
உணர்ச்சி  வயப்பட்டு
தவறான முடிவு எடுத்த காரணத்தினால் ,
தண்ணீரில் மூழ்கிப் போனான்.

அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயப்படுதல் என்பது
ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது
இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக வரும் அல்லது
மூன்றும் ஒன்றாக வரும் அல்லது
தனித்தனியாக வரும்.

ஒன்றாக வந்தாலும் தனித்தனியாக வந்தாலும்
ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்தாலும்
அவை தவறுகளைத் தான் உண்டு பண்ணும்
பாவத்தைத் தான் உண்டு பண்ணும்
ஒரு செயலினுள் உள்ள கருத்தினை உணராமல்
அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயப்படுதல் மூலம்
செயல்களைச் செய்யும் போது
அது பாவத்தை உண்டு பண்ணி விடுகிறது

ஒரு செயலினுள் உள்ள கருத்தினை உணர்ந்து
அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயப்படுதல் - நீக்கி
செய்யப்படும் செயல் ,
வெற்றியைத் தருவதோடு
புண்ணியத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.
பேதுரு,
அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயப்படுதல் மூலம்
தவறினைச் செய்து பாவத்தில் மாட்டிக் கொண்டான்
ஆனால் ,
இயேசுவின் மகிமையை உணர்ந்த போது ,
முழு விசுவாசம் கொண்ட போது ,
பாவத்தில் இருந்து விடுதலையாகி
புண்ணியவான் ஆனான்.

பாவம் செய்தவன்
தன் பாவம் நீங்க வேண்டுமானால்
தன்னை ஆண்டவனிடம்
முழுமையாக ஒப்படைக்க வேண்டும் .

அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயப்படுதல் மூலம்
இயேசுவின் மேல் நம்பிக்கை இழந்து
அற்ப விசுவாசம் கொண்டு
ஜலத்தில் மூழ்கிய பேதுரு ,
இயேசுவே ஆண்டவர்
அவரே என்னைக் காப்பாற்றுவார்
என்று நம்பிக்கை கொண்டு ,

இயேசுவிடம் தன்னை
முழுமையாக ஒப்படைத்தபோது
இயேசு அவனை காப்பாற்றினார் .

பேதுரு செய்த
பாவத்தின் கட்டு உடைக்கப்பட்டு
புண்ணிவானாகிறான் ;
யார் செய்த பாவமானாலும்
இறைவனிடம் தன்னை
முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர்களுக்கு ,
இறைவனிடம் முழுமையாக நம்பிக்கை வைப்பவர்களுக்கு ,
இறைவனே நம் பாவத்தை நீக்கி
சுத்தப்படுத்தி சுகமளிப்பவர் என்பதை உணர்ந்து ,
இறைவனே நம் பாவங்களை ஏற்கக்கூடியவர்
என்பதில் தெளிந்து ,
கடவுளிடம் தன்னை முழுமையாக
ஒப்படைத்து கொண்டவர்களுக்கு
வாழ்வில் பயமில்லை.

பாவத்தை இறைவனிடம்
கலப்பதன் மூலமே
கழிக்க முடியும் ;

பாவத்தை இறைவனிடம் தன்னை முழுமையாக
ஒப்படைதன் மூலமே கழிக்க முடியும் ;
என்பதை உணர்ந்து பேதுரு
இயேசுவின் கரம் பிடித்தான்
காப்பாற்றப்பட்டான்.

கடவுள் தன் கரத்தை நீட்டி
நம்மை காப்பாற்ற
ஆயத்தமாக இருக்கிறார்.

நாம் கடவுளை உணராமல்
கடவுள் கையை சிக்கெனப் பற்றாமல்
இருக்கின்ற காரணத்தினால் ,
தான் நாம் துன்பத்தில் வாழுகிறோம்.

நாம் துன்பமற்று இன்பம் பெற்று
வாழ வேண்டுமானால்
நாம் இறைவனின் கையைப் பற்றி
அவர் வழியைப் பின்பற்றி
செல்ல வேண்டும் .

நாம் இறைவனின் கையைப் பிடித்து
அவர் காட்டும் வழியில் செல்வதின் மூலம்
பாவம் நீக்கி புண்ணியம் பெற்று
இன்பம் பெற்று
துன்பம் அற்று
மகிழ்வான வாழ்வை ;
நிம்மதியான வாழ்வை ;
அமைதியான வாழ்வை ;
பெறுவோம் என்கிறது பைபிள் .




சிவவாக்கியர் :

“”””உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை
   கருத்தினா லிருத்தியே காபாலமேற்ற வல்லிரே
   விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
   அருட்டரித்த நாதர்பாத மம்மையாக முண்மையே””””””

       - சிவவாக்கியர்--பெரிய ஞானக்கோவை

பிரஞ்சமானது இரண்டு நிலைகளில்
இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஒன்று இரண்டாக மாறும் போது
ஒன்று இரண்டாக மாற்றம் அடையும்போது
பிரபஞ்ச பரிணாமம் இயக்கத்திற்கு வருகிறது.
பிரபஞ்ச பரிணாமம்
பிரபஞ்ச தோற்றம் ஆகியவை
இரண்டு நிலைகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது.
ஒன்று          : இருப்பு நிலை
மற்றொன்று : இயக்க நிலை
இருப்பு நிலை என்பது இயக்கமற்ற நிலை
இயக்க நிலை என்பது இயங்கிக் கொண்டிருக்கும் நிலை

இயக்க மற்ற நிலை தான்
ஆனால்
அனைத்து இயக்கங்களையும்
தன்னுள் கொண்ட நிலை ;
இயக்கத்தை உருவாக்கும் நிலை ;
இயக்கம் பிரியும் நிலை ;
இயக்கமற்றத்திலிருந்து
இயக்கம் தோன்றும் நிலை ;
இயக்கமற்றதில் இயக்கம்
இருக்கும் நிலை ;
இயக்கமற்ற இருப்பு நிலையை உணரமுடியாத நிலை ;
உணர முடியாத நிலையாதலால்
இருப்பு நிலையை
இயக்கமற்ற நிலை என்கிறோம்.

இயக்க நிலையை உணர முடியும்
ஆதலால்
இயக்க நிலை என்கிறோம்.

அனைத்தையும் தன்னுள் கொண்ட ,
பிரபஞ்ச தோற்றத்தை தன்னுள் கொண்ட ,
பிரபஞ்ச பரிணாமத்தை தன்னுள் கொண்ட ,
பரிணாம கோட்பாட்டை தன்னுள் கொண்ட ,
இருப்பு நிலையை உணர முடியாத காரணத்தினால் தான்
இருப்பு நிலையை இயக்கமற்ற நிலை என்கிறோம்.

உணரும் போது
இருப்புநிலை தான்
ஆதி நிலை என்றும் ,
மூலநிலை நிலை என்றும் ,
இயக்க நிலைக்கு அடிப்படை காரணம் என்றும்
உணருகிறோம் .

இந்த இருப்பு நிலை அசையும் போது
இயக்கம் உருவாகிறது ;
இல்லாத இருப்புநிலை அசையும்போது
இயக்கம் உருவாகிறது ;

இல்லாத ஒன்றிலிருந்து
இருப்பது தோன்ற முடியாது ;
இருக்கும் ஒன்றிலிருந்து தான்
இருப்பது உருவாக முடியும் ;

இயக்க நிலையை
தன்னுள் கொண்ட காரணத்தினால் தான்
இருப்பு நிலை இயக்க நிலையாக மாற்றம் அடைகிறது
இருப்பு நிலையில் இயக்க நிலை
இல்லை என்றால்
இயக்க நிலை உருவாக முடியாது
தோன்ற முடியாது.

இயக்க நிலை உருவாக வேண்டுமென்றால்
இருப்பு நிலைக்குள்
இயக்க நிலை
இருக்க வேண்டும்.


இருப்பு நிலையும் - இயக்க நிலையும்
வேறு வேறு அல்ல
இரண்டும் ஒன்றே தான்.

இருப்பு நிலை
அசையும்போது இயக்க நிலை ;
இயக்க நிலை
இயக்கத்தை நிறுத்தும் போது இருப்பு நிலை ;

இருப்பு நிலையே
பின்னாக விரியும் போது
இயக்க நிலை ;
இயக்க நிலையே
இயக்கத்தை நிறுத்தி ஒடுங்கும் போது
இருப்பு நிலை ;

இருப்பு நிலைக்கும் இயக்க நிலைக்கும்
முதலில் வேறுபாட்டை தெரிந்து கொள்ள வேண்டும்.

கடல் - இருப்பு நிலை என்றால்
கடலிலிருந்து எழும்பும் அலை - இயக்க நிலை.

கடல் எழும்பும் போது - அலை
அலை அடங்கும் போது - கடல்.

கடலே - அலையாக மாற்றம் அடைகிறது
வேறுபாட்டை உணர்வதற்காகவும் ,
வேறுபாட்டை தெரிந்து கொள்வதற்காகவும் ,
வார்த்தை வேறுபடுகிறதே தவிர
பொருள் ஒன்று தான்.

கடலும் அலையும் ஒன்று தான்
கடல் - இருப்பு நிலை
அலை - இயக்க நிலை.

கடல் என்ற இருப்பு நிலை
அசையும் போது
அலை என்ற இயக்க நிலை
தோன்றுகிறது.

அலை என்ற இயக்க நிலை
அடங்கும் போது
கடல் என்ற இருப்பு நிலை
இருக்கிறது.
பொருள் ஒன்று தான்
அதுமாறும் தன்மையைப் பொறுத்து
உணர்ந்து கொள்வதற்காக
பெயர் மாற்றம் அடைகிறது.

இருப்பு நிலை
அசையும் போது இயக்க நிலை
இயக்க நிலை
தன் இயக்கத்தை நிறுத்தும் போது இருப்பு நிலை.

இருப்பு நிலை
அசையும் போது
பிரபஞ்ச தோற்றம் ;
பரிணாமக்கோட்பாடு ;
இயக்க நிலை
தன் இயக்கத்தை
நிறுத்தும் போது ஒடுக்கம்
இதை உணர்ந்தவன் ஞானி

ஒன்று இரண்டாக மாற்றமடையும்
தன்மையைத் தான் மனிதன்
தன் அறிவுக்கு எட்டிய வரை
புரிந்து கொள்ளும் தன்மைக்கேற்ப
இரண்டு நிலைகளை வைத்துக் கொண்டான்.
ஒன்று     : இருப்பு நிலை அல்லது இயக்கமற்ற நிலை
மற்றொன்று : இயக்கமுள்ள நிலை

இந்த இரண்டு நிலைகள் தான்
பிரபஞ்சம் முழுவதும்
நிரம்பி இருக்கிறது .

நாம அறிந்தும் அறியாமலும்
இந்த இரண்டு நிலைகளைத் தான்
பயன்படுத்திக் கொண்டு
வருகிறோம் .

நம் செயல்கள்
இந்த இரண்டு நிலைகளிலும்
நேராகவும், மறைமுகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இவைகள் இரண்டும்
இரண்டு மாறுபட்ட தன்மைகள்.

இரண்டு மாறுபட்ட தன்மைகள்
ஒன்றாக சேரும் போது தான்
செயல் சிறப்பாக அமையும்
செயல் சிறப்பாக அமைய வேண்டுமென்றால்
இரண்டு மாறுபட்ட தன்மைகள்
ஒன்றாக இணைய வேண்டும்.

பிரபஞ்சத்தில் இந்த
இரண்டு மாறுபட்ட தன்மைகள் தான்
அனைத்து இடங்களிலும்
நீக்கமற நிறைந்து இருப்பதை
நாம்  உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாறுபட்ட தன்மைகள்தான்
செயல் சிறப்பாக அமைவதற்கும்
செயல் தடங்கலின்றி
நடை பெறுவதற்கும் காரணம்.

இயக்கமற்ற நிலையையும் ,
இயக்கமுள்ள நிலையையும் ,
உற்று நோக்குவோம்.

இரயில் தண்டவாளம் இயக்கமற்ற நிலை
அதன் மேல் ஓடும் இரயில்
இயக்கமுள்ள நிலை
இரண்டும் ஓடினாலும்
பலன் இல்லை
இரண்டும் ஓடாவிட்டாலும் பலன் இல்லை.

அம்மி இயக்கமற்ற நிலை
அம்மிக்கல் இயக்கமுள்ள நிலை ;
இரண்டும் இயக்கத்தில் இருந்தாலும் பலனில்லை ;
இரண்டும் இயக்கமற்று இருந்தாலும் பலனில்லை ;

விஞ்ஞானத்தின் முன்னேற்றமாக
கருதப்படும் கிரைண்டர்
கல் நிலையாக இருக்கிறது
கீழே உள்ளது சுற்றுகிறது.

முன்பு கீழே உள்ளது
இயக்கமற்று இருக்கும் ;
மேலே உள்ளது சுற்றும் ;
இப்போது மேலே உள்ளது
இயக்கமற்று இருக்கிறது ;
கீழே உள்ளது சுற்றுகிறது ;

இயக்கமற்ற நிலையும்
இயக்கமுள்ள நிலையும்
ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது
என்பதை உணர்ந்து கொள்ளும்
போது அறிவு விழித்துக் கொள்கிறது .

நம்மைச் சுற்றி இருப்பவைகளை ;
நம்மைச் சுற்றி நடப்பவைகளை ;
நம்மைச் சுற்றி
நடக்கும் நிகழ்வுகள்
உணர்த்தும் உண்மைகளை ;
நம்மைச் சுற்றி நடக்கும்
சூட்சும விஷயங்களிலிருந்து
செயல்களில் உள்ள
சூட்சும விஷயங்களை புரிந்து கொள்ளவில்லை எனில்
மறை பொருளாக உள்ளவைகளை
எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும் .

முதலில் நம்மைச் சுற்றி நடப்பவைகளை
உணர்ந்து கொண்டால்
மறைபொருள் தன்னால் வெளிப்படும் ;
பிரபஞ்சம் தன் ரகசியத்தை வெளிப்படுத்தத் தொடங்கும் ;

நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டால் ,
நாம் ஏற்றுக் கொள்ளும் பாத்திரமாக மாறி விட்டால் ,
பிரபஞ்சம் தன் ரகசியங்களை கட்டவிழிக்கும் .
நாம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லாத வரை
பிரபஞ்சம் தன் ரகசியத்தை
வெளிப்படுத்தாது.

ஒன்று இரண்டாக மாறும் நிலையும்
இரண்டுக்குள் ஒன்று எப்படி
இருக்கிறது என்ற நிலையையும்
நாம் உணர வேண்டும்.

பிரபஞ்சம் இரண்டு நிலைகளில்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என்று உணர்பவர்களால் மட்டுமே
வாழ்க்கை மூன்று நிலைகளில்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என்பதை உணர முடியும்.

ஒன்று     : நம்மிடமிருந்து பிரிக்க முடியாதவை
இரண்டு : நம்மிடமிருந்து பிரிக்க முடிந்தவை
மூன்று   : நம்மிடமிருந்து பிரிந்தே இருப்பவை

நம்மிடமிருந்து பிரிக்க முடியாதவை என்பவை
நம்முடைய ஆன்மாவில்
பதிந்துள்ள கர்ம வினைகள்
கர்ம வினைகளை ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாது
ஆனால் கழிக்க முடியும் ;
எரிக்க முடியும் ;
அழிக்க முடியும் ;

          நம்மிடமிருந்து பிரிக்க முடிந்தவை என்பவை
உறவுகள்
தாய் - தந்தை ,
அண்ணன் - தம்பி ,
அக்கா - தங்கை ,
உறவு முறைகள்
நண்பர்கள்

          நம்மிடமிருந்து பிரிந்தே இருப்பவை என்பவை
நாம் சேர்த்து வைத்துள்ள
சொத்துக்கள், வீடுகள், மனைகள்
வாகனங்கள்.

நம்மிடமிருந்து பிரிக்க முடியாதவை ,
நம்மிடமிருந்து பிரிக்க முடிந்தவை ,
என்பவை ஆன்மா சம்பந்தப்பட்டது

நம்மிடமிருந்து பிரிந்தே இருப்பவை
என்பது உடல் சம்பந்தப்பட்டது

முதல் இரண்டும் ஆன்மா சம்பந்தப்பட்டது
மூன்றாவது உடல் சம்பந்தப்பட்டது

உடல் சம்பந்தப்பட்டவைகளுக்கு
தரும் முக்கியத்துவத்தை
நாம் ஆன்மா சம்பந்தப்பட்டவைகளுக்கு
தருவதில்லை.

ஆன்மா சம்பந்தப்பட்டவைகளுக்கு
நாம் முக்கியத்துவம் தரும் போது தான்
உடல் சம்பந்தப்பட்டவைகள்
ஒன்றும் இல்லை என்பது விளங்கும்.

மூன்றை விலக்கி
இரண்டை விலக்கி
ஒன்றை விலக்கும் போது தான்
ஒன்று எது என்ற உண்மை விளங்கும் .

ஒன்றை நாம் அறிய வேண்டுமானால்
இந்த மூன்றையும் உணர்ந்து
மூன்றையும் விலக்க வேண்டும் .

ஒன்று தான்
இரண்டை உருவாக்கி
மூன்று உருவாக காரணமாகிறது
நாமும்
மூன்றை விலக்கி
இரண்டை விலக்கி
ஒன்றை விலக்கும் போது தான்
ஒன்றின் உண்மைத் தன்மை விளங்கும் .


ஒன்றை அறிய வேண்டுமானால்
மேற்சொன்ன வரிசைப்படி
மூன்றையும் விலக்க வேண்டும் .

முதலில் நம்மிடம் பிரிந்து இருக்கக்கூடிய
வீடு, மனை, வாகனம்
ஆகிய அசையும் மற்றும்
அசையா சொத்துக்களை
முற்றிலுமாக துறக்க வேண்டும்.

முதலில் இதை துறக்க மனமில்லாதவன் ;
இதை துறக்க இயலாதவன் ;
கஷ்டப்பட்டு சம்பாதித்தோமே
இதனை எப்படி இழப்பது என்ற மனநிலை கொண்டவன் ;
உண்மையை உணர்வதற்கான
முதல் நிலையை இழக்கிறான்.
முதல் நிலைக்குள்ளேயே
நுழைய முடியாதவன்
எப்படி
இறுதி நிலையை அடைவான்.


ஒருவன் ஒரே சமயத்தில்
இரண்டு குதிரைகளின் மேல்
சவாரி செய்ய முடியாது
சிலர் அனைத்து செல்வங்களையும் வைத்துக் கொண்டு
பணம், பதவி, புகழ்
ஆகியவற்றை வைத்துக் கொண்டு
முக்தி அடையலாம என்று நினைக்கின்றனர்.

அனைத்தையும் இழந்த பிறகு
கிடைப்பது தான் ஞானம்
அனைத்தையும் துறந்த பிறகு கிடைப்பது தான் முக்தி
அனைத்தையும் வைத்துக் கொண்டு பெறுவதல்ல ஞானம்
ஞானம் என்பது இழப்பதின் மூலம் பெறுவது
ஞானம் என்பது அனுபவத்தின் மூலம் பெறுவது.

முதல் நிலையை கடப்பவனால் மட்டுமே
இரண்டாம் நிலைக்குள் செல்ல முடியும்
முதல் நிலையை கடக்க முடியாதவனால்
இரண்டாம் நிலைக்குள் செல்ல முடியாது.

இரண்டாம் நிலைக்கு செல்ல வேண்டுமானால்
முதல் நிலையை முற்றிலுமாக கடப்பவனால் மட்டுமே முடியும்.
இரண்டாம் நிலை என்பது சற்று கடினமான நிலை
முதல் நிலை பிரிந்து இருந்தது
அதை பிரிப்பதற்கே கஷ்டப்படுவோம்
பிரிந்தே இருந்தவைகளை
பிரிப்பதற்கு கஷ்டப்பட்ட நாம்
பிரிக்க முடிந்தவைகளை
பிரிப்பதற்கு எவ்வளவு கஷ்டப் பட வேண்டும்

பிரிக்க முடிந்தவைகள் எனப்படும்
தாய் - தந்தை
அண்ணன் - தம்பி
அக்கா - தங்கை
போன்ற உறவு முறைகள்.

இவைகள் நாம் பிறந்த பின்
நம்முடன் ஒட்டி வந்தவை
நம்முடன் ஒட்டியவை
ஒட்டி வந்தவைகளை
நாம்  வெட்டி விடுவது
நாம் கழற்றி விடுவது
அதிலிருந்து பிரிந்து வருவது கடினமே
அந்த கடினமான செயலையும்
துணிந்து செய்யக் கூடியவர்
உறவுகள் என்பது மாயை
நேற்று இருந்தது
இன்று இருக்கும்
நாளை இருக்காது
என்ற உண்மையை உணர்ந்தவர் மட்டுமே
பிரிக்க முடிந்த உறவுகளை பிரிந்து வெளியே வர முடியும்

நாம் வலுக்கட்டாயமாகவோ
உறவுகளை விலக்க வேண்டும்
என்ற எண்ணம் கொண்டோ ,
உறவுகளை விட்டு
பிரிந்து செல்ல வேண்டும்
என்ற எண்ணம் கொண்டோ ,
உறவுகளை அறுத்து விட்டு
செல்பவரால் மட்டுமே
ஞானம் அடைய முடியும்
என்ற தவறான எண்ணம் கொண்டோ,
உறவுகளை தவிக்க வைத்து விட்டு
உறவுகளை நட்டாற்றில் விட்டுவிட்டு,
நம்மை நம்பி இருந்தவர்களை
நட்டாற்றில் விட்டு விட்டு,
உறவுகளை கலங்க வைத்து விட்டு,
வலுக்கட்டாயமாக
வெளியில் செல்பவரால்
ஞானம் அடைய முடியாது.

அது உண்மையாக ஆன்மீகமும் அல்ல
உண்மையான ஆன்மீகம் என்பது
நாம்அனைத்தையும் துறக்கும் போது
உறவுகளால்
தனித்து வாழக்கூடிய
நிலைமை இருக்கும் ;
சூழ்நிலை உருவாகி இருக்கும் ;
உறவுகள் தனித்து வாழக்கூடிய
நம்முடைய தயவு இன்றி வாழக் கூடிய ;
சூழ்நிலை உருவாகக் கூடிய சமயத்தில் தான்
நாம் நம் உறவுகளைத் துறந்து
வெளியே  செல்வோம்.

அப்படி நாம் செல்லவில்லை எனில்
நாம் வாழ்க்கையை வாழ முடியாமல் ,
வாழ்க்கையை வாழ திராணி இல்லாமல் ,
வாழ்க்கையை வாழ நமக்கு தகுதி இல்லாமல் ,
வாழ்க்கையைப் பார்த்து பயந்து
ஓடி ஒளிந்து கொள்ளும்
கோழையின் நிலையில் தான்
நாம் வீட்டை விட்டு ஓடுவோம்.

உண்மையை அறியாமல்
வீட்டை விட்டு ஓடுவதற்கும் ,
உண்மையை அறிந்து
வீட்டை விட்டு ஓடுவதற்கும் ,
வேறுபாடு இருக்கிறது .

உண்மையை அறியாதவன்
உறவுகளை விட்டு
வீட்டை விட்டு வெறியேறினாலும் ,
உறவுகளையும்
வீட்டையும் நினைத்துக் கொண்டிருப்பான்.

உண்மையை அறிந்து
உறவுகளை துறந்து
வீட்டை விட்டு வெறியேறியவன்
வெறியேறிய அக்கணமே
மனதிலிருந்து அனைத்தையும்
வெளியேற்றி விடுவான் .

போலியான ஆன்மீகவாதிக்கும்
உண்மையான ஆன்மீகவாதிக்கும்
இது தான் வேறுபாடு .

போலி மாறிக்கொண்டே இருக்கும்
உண்மை என்றும் மாறாதது.

இந்த இரண்டு நிலைகளைக்
கடந்தவனால் மட்டுமே
மூன்றாவது நிலையான
பிரிக்க முடியாதவைகளை அணுக வேண்டும்
பிரிக்க முடியாதவைகளை பிரிக்க முடியாது
அழிக்க முடியும் என்பதை உணர வேண்டும்.

கர்ம வினைகள் என்பவை தாம் பிரிக்க முடியாதவை
பிரிந்து இருப்பவைகள் மூலமும்
பிரக்க முடிந்தவைகள் மூலமும்
உண்டாகுபவை தான்
கர்மவினைகள் எனப்படும்
பாவ, புண்ணியங்கள்.

பாவங்களை முற்றிலும் கழித்து விட்டு
புண்ணியத்தையும் கழித்து விட்டால்
பிரிக்க முடியாதவைகள் எனப்படும்
கர்ம வினைகள்
முற்றிலும் கழிந்துவிடும்.

கர்ம வினைகள் முற்றிலும்
கழிக்கப்பட்டு விடுமேயாகில்
எதை அடைய நினைத்தோமோ
அதை அடைவோம்.

எந்த நிலையை அடைவதற்காக
பிறப்பெடுத்தோமோ அதை
அடைந்து விடுவோம்.

பிறப்பின் நோக்கம் எதுவோ
அதை முடித்துவிடுவோம்.

மூன்று நிலைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை
ஒன்றை விலக்கி ஒன்றை நாம் செய்ய முடியாது
நிலைகளை மாற்றிக் கொண்டு செயல் நடைபெறும்
வரிசைக்கிரமமாக செயல் நடை பெற வேண்டும்
என்ற அவசியமில்லை.

ஒரு நிலை இயங்கிக் கொண்டிருக்கும் போது
மற்ற இரண்டு நிலைகளும் செயல் பட்டுகொண்டிருக்கும்.

இரண்டு நிலைகள் ஒன்றாக
இயங்கிக் கொண்டிருக்கும் போதே
மூன்றாவது நிலை
செயல் பட்டுக் கொண்டிருக்கலாம்
(அல்லது)
மூன்று நிலைகளும் தனித் தனியாக
இயங்கிக் கொண்டு இருக்கலாம்
(அல்லது)
மூன்று நிலைகளும்
ஒன்றாக இயங்கிக் கொண்டு இருக்கலாம்

மூன்று நிலைகளும்
வரிசையாகத் தான் நடக்கும்
என்று நினைப்பதே தவறு


ஒன்றுக்கும், மற்றொன்றுக்கும்
கால இடைவெளி அதிகமாக இருக்கும்.

அதாவது வருடக் கணக்கில்
இருக்கலாம் என்ற தவறான எண்ணம்
கொண்டு இருக்கக்கூடாது
அப்படி இருந்தால்
நாம் உண்மையைத் தவற விட்டு விடுவோம்.
ஆன்மீகத்திலிருந்து நழுவி வந்து விடுவோம்
மனம் தெளிவு பெற்றவர்களால் மட்டுமே
மூன்று நிலைகளும்
எதன் அடிப்படையில்
எப்படி நடை பெறுகிறது
என்பதை உணர்ந்து கொள்ள முடியும் ;
மனம் தெளிவு பெறாதவர்களால்
இதனை உணர்ந்து கொள்ள முடியாது ;

வாழ்நாளில் யோசித்து
எடுக்கப்படும் முடிவல்ல
அனைத்தையும் துறப்பது ;
அதுவாழ்க்கையில் ஏற்படக்கூடிய
ஒருவகை மாற்றம் ;

முடிவுக்கும் மாற்றத்திற்கும்
வேறுபாடு இருக்கிறது.

நாமே எடுத்தால்
அதற்குப் பெயர் முடிவு ;
காலமே எடுத்தால்
அதற்குப் பெயர் மாற்றம் ;

மாற்றம் தான் முக்கியம்
முடிவல்ல
மாற்றம் நம்மை உண்மையை உணர வைக்கும்
முடிவு நம்மை வருத்தத்திற்குள் தள்ளி விடும் .

மாற்றம் நம்மை உயர்நிலைக்கு கொண்டு செல்லும்
முடிவு நம்மை தாழ் நிலைக்கு தள்ளி விடும்.

நாம் எடுக்கும் முடிவை விட
காலம் தரும் மாற்றம் தான் முக்கியம்.

இத்தகைய மாற்றம் எப்போது வரும் என்றால்
உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை
கருத்தினாலே இருத்தி
கபாலம் ஏற்றும் போது வரும் .

உருத்தரித்த நாடி என்றால்
உயிர் உருவாகுவதற்கு காரணமானது என்று பொருள் .

பிராணன் உருவாகுவதற்கு காரணமானது
இருப்பு நிலை
இருப்பு நிலையிலிருந்து தான்
இயக்க நிலையான பிராணன் தோன்றுகிறது.

இருப்பு நிலையான மூல நிலையிலிருந்து
இயக்க நிலையான பிராணன்
பின்னமாகி இயங்கிக் கொண்டு இருக்கிறது .

இயங்கிக் கொண்டிருக்கும் பிராணனை
மீண்டும் இருப்பு நிலையான
மூலத்துடன் இணைக்க வேண்டும் .

நம்முடைய உடலில்
கபாலத்தில் இருப்பு நிலையான மூல நிலை
இறை நிலை இருக்கிறது
அந்த மூலநிலையை
எவ்வாறு தொடர்பு கொள்வது.

கபாலத்தில் இறைவன் எப்படி இருக்கிறான்
எந்த நிலையில் இருக்கிறான்
என்பதை அறிந்து
அவனுடன் இயக்க நிலையான பிராணனை
எப்படி சேர்ப்பது
என்ற முறைகளை அறிந்து
அந்த முறைகளைப் பயன்படுத்தி
இயக்க நிலையான பிராண சக்தியை
இருப்பு நிலையான
மூல நிலையுடன் இணைக்க வேண்டும்.

அதாவது ஒன்பது வாசலை அடைத்து
பத்தாவது வாசலைத்திறந்து
இயக்க நிலையான பிராண சக்தியை
இருப்பு நிலையான மூலநிலையுடன்
இணைக்க வேண்டும்.

விருத்தரும் பாலராவர் என்றால்,
வயதானவராக இருந்தாலும்
இளமையாக மாறுவார் என்று அர்த்தமல்ல

பாவத்தால் நிரம்பி வழிந்தவர்
அனைத்தும் கழிக்கப்பட்டு
குழந்தை எந்த நிலையில் இருக்குமோ
அத்தகைய நிலைக்கு
மாறுவார் என்று பொருள்.

மேனியும் சிவந்திடும் என்றால்,
கர்ம வினைகள் கழிக்கப்பட்டவரின் மேனியானது
ஒரு வித பொலிவைப் பெறும்
யாரும் பார்த்திராத ஒரு வகை மேனி ;
அனைவரும் கை எடுத்து
கையெடுத்து கும்பிடும் மேனி ;
அத்தகைய மேனியை
ஒருவர் அடைந்தாலே
அவர் உண்மையை உணர்ந்தவர் என்று
தெரிந்து கொள்ளலாம் .

அத்தகையவர்
நான் உண்மையை உணர்ந்தவன்
உண்மையை உணர்ந்தவன்
என்று சொல்லத் தேவையில்லை
அவரை பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடும்
அவர் உண்மையை உணர்ந்து
உயர்நிலையை அடைந்தவர் என்று .

இருப்பு நிலையான மூல நிலையுடன்
இயக்க நிலையான பிராணனை
இணைப்பதன் மூலம்
உண்மையை உணர்ந்து
உயர் நிலை அடையலாம்
என்ற உண்மையை
இருப்பு நிலையான அப்பன் மேலும்
இயக்க நிலையான அம்மை மேலும்
சத்தியமாக உரைக்கிறேன்
என்கிறார்.

இருப்பு நிலைக்கும்
இயக்க நிலைக்கும்
உள்ள வேறுபாட்டை உணர்ந்து
இருப்பு நிலைக்குள் இயக்க நிலையும்
இயக்க நிலைக்குள் இருப்பு நிலையும்
உள்ளது என்ற உண்மையை உணர்ந்து
இருப்பு நிலையின் பின்னமே
இயக்க நிலை என்ற
கருத்தை உணர்ந்து
பின்னமான இயக்க நிலையை
இருப்பு நிலையுடன்
சேர்ப்பதன் மூலம்
உண்மை உணர்ந்து
உயர் நிலை அடையலாம்
என்கிறார் சிவவாக்கியர்




இயேசு கிறிஸ்து - சிவவாக்கியர்
பைபிள்,
ஆண்டவர் மேல் முழுமையான விசுவாசம் கொண்டு
ஆண்டவர் அருளைப் பெற்று
ஆண்டவரிடம் இணைவதன் மூலமே
பாவங்கள் நீங்கப் பெற்று
உயர்நிலை அடையலாம்
என்கிறது.

அவ்வாறே,
சிவவாக்கியரும்,
இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து
இறைவனிடம் ஒன்றாக இணைவதன் மூலமே
பாவங்கள் நீங்கப் பெற்று
உயர்வான நிலை அடையலாம்
என்கிறார்.

 ””””போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                போற்றினேன் பதிவு அறுபத்துஒன்பது ந்தான்முற்றே”””