September 30, 2018

திருக்குறள்-பதிவு-28


                   திருக்குறள்-பதிவு-28

இந்த உலகத்தில்
தோன்றிக்
கொண்டிருப்பவைகளை
எல்லாம் இரண்டு
நிலைகளில் பிரித்து விடலாம்

ஒன்று  : பிறப்பால்
         தோன்றிக்
         கொண்டிருப்பவைகள்

இரண்டு : மாற்றத்தால்
  தோன்றிக்
  கொண்டிருப்பவைகள்

விதையிலிருந்து
செடி முளைத்து
வெளி வருகிறது
இதில் செடியை
பிறப்பால் தோன்றியது
எனலாம்

பூவிலிருந்து
காய் வருகிறது
இதில் காயை
மாற்றத்தில் தோன்றியது
எனலாம் அதைப்போல்
காயிலிருந்து கனி
வருகிறது இதில்
கனியை மாற்றத்தில்
தோன்றியது எனலாம்.

ஒன்று முதலில்
தோன்றும் போது
பிறப்பால் தோன்றியது
என்றும்,
பிறப்பால் தோன்றி
வளரும் போது
அதில் மாற்றம்
ஏற்பட்டு தோன்றுவதை
மாற்றத்தால்
தோன்றியது என்றும்
கூறலாம்

விதையிலிருந்து செடி
தோன்றுவது முதலில்
தோன்றியது எனவே
செடியை பிறப்பால்
தோன்றியது என்றும்
செடி வளர்ந்து மரமாகி,
மரத்தில் பூவானது
காயாக மாற்றம்
அடைவதும்
காயானது கனியாக
மாற்றம் அடைவதும்
மாற்றத்தால் தோன்றியது
என்றும் கூறலாம்

மனிதன் மாற்றத்தின்
மூலம் தோன்றியவன்
பிறப்பின் மூலம்
தோன்றியவன் அல்ல

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
விலங்கு என்ற
நிலை கழிக்கப்பட்டு
மனிதன் தோன்றினான்
அதாவது மனிதன்
மாற்றத்தின் மூலம்
தோன்றினான்
பிறப்பின் மூலம்
தோன்றவில்லை

மாற்றத்தின் மூலம்
மனிதன் தோன்றிய
காரணத்தினால் தான்
மனிதனுடைய
எண்ணம்,சொல், செயல்
நிமிடத்திற்கு நிமிடம்
மாறிக் கொண்டே
இருக்கிறது

மனிதன் மாற்றத்தில்
தோன்றியதால் தான்
தன் சொல்லையும்
செயலையும்
இச்சமுதாயத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
பெற்றோர்கள், சொந்தக்காரர்கள்,
நண்பர்கள், சுற்றத்தார்கள்
ஆகியோருக்கு ஏற்றபடி
தன் குணத்தை மாற்றிக்
கொண்டே இருக்கிறான்.

காட்டில் விலங்குகளோடு
நாம் எளிதில்
வாழ்ந்து விடலாம்
ஏனென்றால்
எது புலி, எது சிங்கம்,
எது நரி, என்று
நமக்கு தெரியும்
அதனால் காட்டில் புலி,
சிங்கம், நரி
அவைகளுக்கு ஏற்றபடி
அவைகளின் குணத்திற்கு
ஏற்றபடி நாம்
வாழ்ந்து விடலாம்

ஆனால் நாட்டில்
யார் புலி போன்று
இருந்து மனித
இரத்தத்தை குடிப்பவர்;
யார் சிங்கம் போல் இருந்து
பிறரை அழித்து வாழ்பவர்;
யார் நரி போல் இருந்து
பிறர் வாழ்க்கையை
அழிக்க சதி செய்பவர்;
என்பதை நாம்
அறிய முடியாது
எனவே, நாட்டில்
மனிதர்களோடு
வாழ்வதைக் காட்டிலும்
காட்டில் விலங்குகளோடு
நாம் இன்பமாக வாழலாம்

மாற்றத்தின் மூலம்
மனித இனம்
தோன்றும் போது
மூன்று இனங்கள்
தோன்றின

ஒன்று  ; ஆண் இனம்
இரண்டு ; பெண் இனம்
மூன்று  : ஆணும், பெண்ணும்
          சேர்ந்த இனம்

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
மனிதன் என்ற இனம்
மாற்றம் அடைந்து
தோன்றியபோது
ஆண் இனம், பெண் இனம்,
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனம்
என்ற மூன்று இனங்கள்
ஒரே நேரத்தில் தோன்றின

இதில் ஆண் இனமும்
பெண் இனமும் கலந்தால்
பிறப்பு என்பது நிகழ்ந்து
ஆணோ அல்லது
பெண்ணோ பிறக்கிறது
என்பதை உணர்ந்து
கொண்ட ஆண் இனமும்,
பெண் இனமும்
தங்களுடைய இரண்டு
இனமும் இணைந்தால்
பிறப்பு என்பது நிகழ்ந்து
சந்ததிகளை உருவாக்க
முடியும் என்பதை
உண்ர்ந்து கொண்டது

எனவே, ஆண் இனமும்,
பெண் இனமும்
ஒன்றாக அதிக
அளவில் கலந்து
பிறப்பை ஏற்படுத்தி
சந்ததிகளை உருவாக்கி
பெரும்பான்மையாக
வளர்ந்து விட்டது

அப்படி என்றால்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
இச்சமுதாயம் என்ன
செய்தது என்பதைப்
பற்றி இனி பார்ப்போம்

--------- இன்னும் வரும்
---------- 30-09-2018
///////////////////////////////////////


September 28, 2018

திருக்குறள்-பதிவு-27


                     திருக்குறள்-பதிவு-27

யாளி சிலை
அதிக அளவில்
செதுக்கப்பட்டு
பெரும்பாலான கோயில்களில்
மட்டும் வைக்கப்பட்டு
ஏன் பிற இடங்களில்
வைக்கப்படவில்லை
என்பதை மனிதன்
யோசித்து இருந்தால்,
கோடிக்கணக்கில் பணம்
செலவு செய்து
கணக்கில் அடங்காத
மனித உழைப்பை
பயன்படுத்தி கட்டப்பட்ட
கோயில்களில் எல்லாம்
தேவையில்லாத
ஒரு சிற்பத்தை
‘பெரும்பாலான
எண்ணிக்கையில்
வைக்க வேண்டிய
அவசியமில்லை
பின் எதற்காக யாளி
சிற்பத்தை கோயிலில்
வைத்தார்கள்
யாளி சிற்பத்தில் ஏதோ
ஒரு ரகசியம் இருக்கிறது
என்பதை மனிதன்
சிந்தித்து இருந்தால்
யாளி என்ற
உயிரினத்திலிருந்து தான்
மனிதன் வந்தான்
என்பதை மனிதன்
அறிந்து இருப்பான்

இந்து மதக் கோயில்களில்
ஆகம சாஸ்திர விதிகளின்படி    
கட்டப்பட்ட பல
கோயில்களுக்கு
நம்மில் பலர்
சென்றிருந்தாலும்
எத்தனை பேர் இந்த
யாளி சிலையைப்
பார்த்திருப்பார்கள்;
அப்படியே பார்த்து
இருந்தாலும்
இந்த சிலை என்ன
சிலை என்று
எத்தனை பேர் யோசித்து
இருப்பார்கள்;
எந்த விஷயத்தை
உணர்த்துவதற்காக
இந்த சிலை
செதுக்கப்பட்டிருக்கிறது
என்று சிந்தித்து
இருப்பார்கள்;
மனிதன் சிந்திக்காத
காரணத்தினால் தான்
யாளி பற்றிய
ரகசியத்தை மனிதனால்
கண்டுபிடிக்க முடியவில்லை

யாளி சிலை
தென் இந்தியாவில்
உள்ள ஆயிரக்கணக்கான
கோவில்களில்
லட்சத்திற்கும் மேற்பட்ட
சிலைகள் செதுக்கப்பட்டு
வைக்கப்பட்டு உள்ளன
உலகில் எந்த
ஒரு உயிரினத்திற்கும்
இந்த எண்ணிக்கையில்
முழு உருவ
முப்பரிமாண சிலைகள்
கிடையாது என்பதை
இந்த உலகம்
சிந்தனை செய்யத்
தவறி விட்டது

யாளி என்றால்
என்ன என்று மக்கள்
தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக
யாளிகளுக்கென்று
தமிழர்கள் தனியாகவே
ஒரு வரிசையை
கோவில் கோபுரத்தில்
ஒதுக்கி இருக்கிறார்கள்
அது யாளி வரிசை
என்றே அழைக்கப்படுகிறது

ராஜ ராஜ சோழன்
கட்டிய தஞ்சைப்
பெரிய கோயிலில்
யாளிக்கென்று ஒரு
முழு தனி வரிசையே
ஒதுக்கப்பட்டுள்ளது

மேலும் தஞ்சைப் பெரிய
கோயில் மட்டுமின்றி
மதுரை மீனாட்சி
அம்மன் கோயில்,
இராமேஸ்வரம் கோயில்,
சிதம்பரம் நடராசர் கோயில்,
காஞ்சிபுரம் வரதராஜப்
பெருமாள் கோயில்,
தென்காசி விஸ்வநாதர்
கோயில் என்று
தமிழ் மன்னர்களால்
கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான
பழமையான கோயில்களில்
எல்லாம் இரண்டு
கால்களில் நிற்கும்
யாளி சிலை
வைக்கப்பட்டிருக்கிறது

யாளிகள் பல்வேறு
வடிவங்களில்
செதுக்கப்பட்டு கோயில்
தூண்களில் வைக்கப்பட்டு
இருக்கிறது
சிங்கத்தின் தலை
கொண்டதை
சிம்மயாளி என்றும்,
யானை முகத்தை
கொண்டதை
யானையாளி என்றும்,
ஆட்டுத் தலை கொண்டதை
மகரயாளி என்றும்,
குதிரை முகம் கொண்டதை
குதிரை யாளி
என்றும் அழைக்கப்படும்
சிலைகளே அதிக
அளவில் கோயில்களில்
வைக்கப்பட்டு இருக்கும்

இவ்வாறு பல்வேறு
வடிவங்களில்
யாளி சிலைகள்
செதுக்கப்பட்டிருந்தாலும்
யாளிகள் என்பவை
பொதுவாக
சிங்கத்தின் முகத்தையும்
மனித உடலையும்
கொண்டு இரண்டு
கால்களில் நிற்கும் படியும்,
இரண்டு கைகள்
இருக்கும்படியும்,
வடிக்கப்பட்ட
சிலை என்பதை
அனைவரும் நினைவில்
கொள்ள வேண்டும்

குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்று சார்லஸ் டார்வின்
சொல்லி இருந்தாலும்,
தசாவதாரத்தில்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு உயிரினமான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
மனிதன் வந்தான் என்று
நம் முன்னோர்கள்
சொல்லி இருந்தாலும்,
மனிதனில்
முதலில் தோன்றியது
ஆணா, அல்லது பெண்ணா
என்பதை நாம் இது வரை
சிந்திக்க வில்லை
என்றால் இந்த
நேரத்தில் இருந்து நாம்
சிந்திக்கத் தொடங்குவோம்

--------- இன்னும் வரும்
---------- 28-09-2018
//////////////////////////////////////////////////////////



திருக்குறள்-பதிவு-26


                     திருக்குறள்-பதிவு-26

விஞ்ஞானத்திற்கும்
மெய்ஞ்ஞானத்திற்கும்
ஒரே ஒரு
வித்தியாசம் தான்
உலகம் முழுவதும்
சுற்றி வந்து
தன் புறக்கண்களால்
கண்ìடவைகளை
ஆய்வு செய்து
தான் கண்டுபிடித்ததை
இந்த உலகத்திற்கு
அளித்தால் அது
விஞ்ஞானம்

எங்கும் செல்லாமல்
இருந்த இடத்திலேயே
இருந்து கொண்டு
உலகம் முழுவதையும்
தன் அகக்கண்களால்
கண்டவைகளை
தனக்கு உணர்த்தப்பட்டதை
இந்த உலகத்திற்கு
அளித்தால் அது
மெய்ஞ்ஞானம்

மெய்+ஞானம்=மெய்ஞ்ஞானம்
மெய் என்றால்
உண்மை என்று பொருள்.
ஞானம் என்றால்
தெளிந்த அறிவு
என்று பொருள்
மெய்ஞ்ஞானம் என்றால்,
தெளிந்த அறிவை
தன்னுள் கொண்ட
உண்மை என்று பொருள்.

தெளிந்த அறிவைத்
தன்னுள் கொண்ட
உண்மையாக மெய்ஞ்ஞானம்
இருக்கின்ற
காரணத்தினால் தான்
மெய்ஞ்ஞானத்தால்
கண்டு பிடிக்கப்படுபவை
எல்லாம் காலத்தால்
மாற்றம் பெறுவதில்லை

தசவதாரத்தில்
விலங்கு நிலை
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை,
மனிதன் நிலை
என்ற வரிசையில்
விலங்குக்கும், மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையை
அதாவது
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
நம் முன்னோர்கள்
கண்டுபிடித்தார்கள்

விலங்குக்கும், மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையான
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
பிற்காலத்தில்
விஞ்ஞானம் கண்டுபிடிக்க
வாய்ப்பில்லை என்பதையும்,
பிற்காலத்தில் உண்மையான
மெய்ஞ்ஞானம்
இந்த உலகத்தில்
இருப்பதற்கு
வாய்ப்பில்லை என்பதையும்,
பிற்காலத்தில் மனிதன்
எந்த உயிரினத்திலிருந்து
வந்தான் என்பதை
மனிதனால் கண்டுபிடிக்க
வாய்ப்பில்லை என்பதையும்,
உணர்ந்த நம்
முன்னோர்கள்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த சிற்பத்தை
உருவாக்கி அதை
பொது இடத்திலோ
சுற்றுலா செல்லும்
இடங்களிலோ
வைக்கவில்லை

மக்கள் அனைவரும்
அடிக்கடி வந்து
செல்லும் இடமான,
மக்கள் அனைவரும்
ஒன்றாகக் கூடும் இடமான,
மக்களால் பாதுகாப்பாக
பாராமரிக்கப்படும் இடமான,
மக்களால் புனிதமாகக்
கருதப்படும் இடமான,
கோயிலில் வைத்தனர்

கோயில் கோபுரங்களிலும்
கோயில் தூண்களிலும்
அந்த சிற்பத்தை வைத்தனர்
பெரும்பாலும் கோயில்
தூண்களில் அந்த
சிற்பத்தை வைத்தனர்

அன்றும், இன்றும்
மக்கள் அனைவரும்
பார்க்கும் இடத்தில்
அமைந்து இருப்பது;
காலம் காலமாக
அனைவரும் பார்த்துக்
கொண்டிருப்பது,;
என்ன என்று
தெரியாமல் மக்களால்
சிந்தித்துக் கொண்டிருக்கும்
நிலையில் இருப்பது;
எண்ணற்ற கோயில்களில்
அதிகமான எண்ணிக்கையில்
சிற்பங்களாக இருப்பது;
காலத்தால் அழியாமல்
இன்றும் இருப்பது;
இது தான் அதன்
ரகசியம் என்று
தெரியாமல் இருப்பது;
அது தான் அந்த
சிற்பத்திற்கு பெயர் தான்
யாளி.

யாளி என்ற பெயர்
கொண்ட சிலை தான்
விலங்கும் மனிதனும்
சேர்ந்த ஒரு நிலை;
இந்த யாளி என்ற
உயிரினத்திலிருந்து
வந்தவன் தான் மனிதன்;

இந்த யாளி சிற்பங்கள்
கோயில்களின் தூண்களில்
வடிக்கப்பட்டிருக்கிறது
எண்ணற்ற வகையில்
ஆகம சாஸ்திர
விதிகளின்படி கட்டப்பட்ட
பல இந்து மத கோயில்
தூண்களில் வடித்து
வைக்கப்பட்டிருக்கிறது

யாளி சிலைகள்
அனைத்தையும் இந்து மத
கோயில்களில் மட்டுமே
நம் முன்னோர்கள்
சிற்பங்களாக செதுக்கி
வைத்திருக்கிறார்கள்

யாளி சிலையை நன்றாக
உற்றுப் பாருங்கள்
படங்களில் பார்க்காதீர்கள்
ஆகம சாஸ்திர
விதிகளின்படி கட்டப்பட்ட
இந்து கோயில்களுக்கு
நேரில் சென்று பாருங்கள்

பழமையான கோயில்களின்
தூண்களில் எல்லாம்
சிங்கத்தின் முகத்தையும்
மனித உடலையும்
கொண்டு இரண்டு
கால்களில் நிற்கும் படியும்,
இரண்டு கைகள்
இருக்கும்படியும்,
வடிக்கப்பட்ட
சிலை இருக்கும்
அதற்குப் பெயர்
தான் யாளி.
அந்த யாளி என்ற
உயிரினத்திலிருந்து
வந்தவன் தான் மனிதன்

உயர்ந்த ரகசியங்களை
தன்னுள் கொண்டு
கோயில்களில் குடி
கொண்டிருக்கும்
யாளிகளைப் பற்றி
இனி பார்ப்போம்

--------- இன்னும் வரும்
---------- 27-09-2018
//////////////////////////////////////////