September 28, 2018

திருக்குறள்-பதிவு-26


                     திருக்குறள்-பதிவு-26

விஞ்ஞானத்திற்கும்
மெய்ஞ்ஞானத்திற்கும்
ஒரே ஒரு
வித்தியாசம் தான்
உலகம் முழுவதும்
சுற்றி வந்து
தன் புறக்கண்களால்
கண்ìடவைகளை
ஆய்வு செய்து
தான் கண்டுபிடித்ததை
இந்த உலகத்திற்கு
அளித்தால் அது
விஞ்ஞானம்

எங்கும் செல்லாமல்
இருந்த இடத்திலேயே
இருந்து கொண்டு
உலகம் முழுவதையும்
தன் அகக்கண்களால்
கண்டவைகளை
தனக்கு உணர்த்தப்பட்டதை
இந்த உலகத்திற்கு
அளித்தால் அது
மெய்ஞ்ஞானம்

மெய்+ஞானம்=மெய்ஞ்ஞானம்
மெய் என்றால்
உண்மை என்று பொருள்.
ஞானம் என்றால்
தெளிந்த அறிவு
என்று பொருள்
மெய்ஞ்ஞானம் என்றால்,
தெளிந்த அறிவை
தன்னுள் கொண்ட
உண்மை என்று பொருள்.

தெளிந்த அறிவைத்
தன்னுள் கொண்ட
உண்மையாக மெய்ஞ்ஞானம்
இருக்கின்ற
காரணத்தினால் தான்
மெய்ஞ்ஞானத்தால்
கண்டு பிடிக்கப்படுபவை
எல்லாம் காலத்தால்
மாற்றம் பெறுவதில்லை

தசவதாரத்தில்
விலங்கு நிலை
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை,
மனிதன் நிலை
என்ற வரிசையில்
விலங்குக்கும், மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையை
அதாவது
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
நம் முன்னோர்கள்
கண்டுபிடித்தார்கள்

விலங்குக்கும், மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையான
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
பிற்காலத்தில்
விஞ்ஞானம் கண்டுபிடிக்க
வாய்ப்பில்லை என்பதையும்,
பிற்காலத்தில் உண்மையான
மெய்ஞ்ஞானம்
இந்த உலகத்தில்
இருப்பதற்கு
வாய்ப்பில்லை என்பதையும்,
பிற்காலத்தில் மனிதன்
எந்த உயிரினத்திலிருந்து
வந்தான் என்பதை
மனிதனால் கண்டுபிடிக்க
வாய்ப்பில்லை என்பதையும்,
உணர்ந்த நம்
முன்னோர்கள்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த சிற்பத்தை
உருவாக்கி அதை
பொது இடத்திலோ
சுற்றுலா செல்லும்
இடங்களிலோ
வைக்கவில்லை

மக்கள் அனைவரும்
அடிக்கடி வந்து
செல்லும் இடமான,
மக்கள் அனைவரும்
ஒன்றாகக் கூடும் இடமான,
மக்களால் பாதுகாப்பாக
பாராமரிக்கப்படும் இடமான,
மக்களால் புனிதமாகக்
கருதப்படும் இடமான,
கோயிலில் வைத்தனர்

கோயில் கோபுரங்களிலும்
கோயில் தூண்களிலும்
அந்த சிற்பத்தை வைத்தனர்
பெரும்பாலும் கோயில்
தூண்களில் அந்த
சிற்பத்தை வைத்தனர்

அன்றும், இன்றும்
மக்கள் அனைவரும்
பார்க்கும் இடத்தில்
அமைந்து இருப்பது;
காலம் காலமாக
அனைவரும் பார்த்துக்
கொண்டிருப்பது,;
என்ன என்று
தெரியாமல் மக்களால்
சிந்தித்துக் கொண்டிருக்கும்
நிலையில் இருப்பது;
எண்ணற்ற கோயில்களில்
அதிகமான எண்ணிக்கையில்
சிற்பங்களாக இருப்பது;
காலத்தால் அழியாமல்
இன்றும் இருப்பது;
இது தான் அதன்
ரகசியம் என்று
தெரியாமல் இருப்பது;
அது தான் அந்த
சிற்பத்திற்கு பெயர் தான்
யாளி.

யாளி என்ற பெயர்
கொண்ட சிலை தான்
விலங்கும் மனிதனும்
சேர்ந்த ஒரு நிலை;
இந்த யாளி என்ற
உயிரினத்திலிருந்து
வந்தவன் தான் மனிதன்;

இந்த யாளி சிற்பங்கள்
கோயில்களின் தூண்களில்
வடிக்கப்பட்டிருக்கிறது
எண்ணற்ற வகையில்
ஆகம சாஸ்திர
விதிகளின்படி கட்டப்பட்ட
பல இந்து மத கோயில்
தூண்களில் வடித்து
வைக்கப்பட்டிருக்கிறது

யாளி சிலைகள்
அனைத்தையும் இந்து மத
கோயில்களில் மட்டுமே
நம் முன்னோர்கள்
சிற்பங்களாக செதுக்கி
வைத்திருக்கிறார்கள்

யாளி சிலையை நன்றாக
உற்றுப் பாருங்கள்
படங்களில் பார்க்காதீர்கள்
ஆகம சாஸ்திர
விதிகளின்படி கட்டப்பட்ட
இந்து கோயில்களுக்கு
நேரில் சென்று பாருங்கள்

பழமையான கோயில்களின்
தூண்களில் எல்லாம்
சிங்கத்தின் முகத்தையும்
மனித உடலையும்
கொண்டு இரண்டு
கால்களில் நிற்கும் படியும்,
இரண்டு கைகள்
இருக்கும்படியும்,
வடிக்கப்பட்ட
சிலை இருக்கும்
அதற்குப் பெயர்
தான் யாளி.
அந்த யாளி என்ற
உயிரினத்திலிருந்து
வந்தவன் தான் மனிதன்

உயர்ந்த ரகசியங்களை
தன்னுள் கொண்டு
கோயில்களில் குடி
கொண்டிருக்கும்
யாளிகளைப் பற்றி
இனி பார்ப்போம்

--------- இன்னும் வரும்
---------- 27-09-2018
//////////////////////////////////////////


No comments:

Post a Comment