February 15, 2019

திருக்குறள்-பதிவு-108



                      திருக்குறள்-பதிவு-108

(கார்டினல் முட்ருஸி
(Cardinal Madruzzi)
அவர்கள் வீட்டில்
ஜியார்டானோ
புருனோவிற்கு
வழங்கப்பட வேண்டிய
தண்டனைகள் குறித்த
தீர்ப்பு வாசிக்கப்பட்டது

ஒரு அதிகாரி தீர்ப்பை
வாசிக்கத் துவங்கினார்)

அதிகாரி :
“ இன்று பிப்ரவரி, 8, 1600
08-02-1600
ஜுப்ளி வருடம்
(Jubliee Year)
ஜியார்டானோ புருனோவிற்கு
வழங்கப்படும் தண்டனை
பற்றிய விவரங்களை
அறிவிக்கிறோம் “

“ ஜியார்டானோ புருனோவின்
தவறான செய்கைகளாலும் ;
கருத்துக்களாலும் ;
புனிதமான கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
இரண்டாக பிரிந்து ;
உடையும் நிலைக்கு
குழப்பத்தை ஏற்படுத்திய
காரணத்தால்
ஜியார்டானோ புருனோவிற்கு
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் சட்டத்தின்படி
தண்டனை வழங்குகிறோம் “

“ ஜியார்டானோ புருனோவிற்கு
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
வழங்கப்பட்ட பெரிய
மற்றும் சிறிய பதவிகள்
அனைத்தும் இப்போது
முதல் அவரிடமிருந்து
பறிக்கப்படுகின்றன “

“ அவர் அந்த பதவிகளை
வகிப்பதற்கு தகுதியற்றவர்
என அறிவிக்கப்படுகிறார் “

” புனிதமான கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையிலிருந்தும் ;
கிறிஸ்தவ மதத்திலிருந்தும் ;
அன்பும், கருணையும்
வழிந்தோடும் சர்ச்சுகளில்
இருந்தும் அவர்
வெளியேற்றப்படுகிறார் ; “

“ ஜியார்டானோ  
புருனோவினுடைய
புத்தகங்கள் அனைத்தும்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிரான பல தவறான
தகவல்களையே
கொண்டிருக்கிறது ;
பொய்யானவைகளே
அதில் நிரம்பி இருக்கிறது “
அவைகள் பல்வேறு
விதமான பிழைகளைத்
தன்னுள் கொண்டவைகளாக
இருக்கிறது “
அவைகள் மக்கள் மனதில்
தவறானவைகளை விதைத்து
விட வாய்ப்பு இருக்கிறது ‘

மேலும், ஜியார்டானோ
புருனோவின் புத்தகங்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி இருக்கும்
பழக்க வழக்கங்களுக்கு
எதிராகவும் ;
கிறிஸ்தவ மக்கள்
காலம் காலமாக
கடைபிடித்து வரும்
மத பழக்கவழக்கங்களுக்கு
எதிராகவும் ;
சர்ச்சுகள் கடைபிடித்து
வரும் புனிதத் தன்மைக்கு
எதிராகவும் ;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராகவும் ;
ஜியார்டானோ புருனோவின்
எழுத்துக்கள் இருக்கின்ற
காரணத்தினால்
ஜியார்டானோ புருனோவின்
புத்தகங்கள் அனைத்தும்
தடை செய்யப்படுகின்றன. “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை தடை செய்து
வைத்திருக்கும் புத்தகங்களின்
பட்டியலில் ஜியார்டானோ
புருனோவின் புத்தகங்கள்
தடைசெய்யப்பட்ட
புத்தகங்கள் வரிசையில்
கொண்டு வரப்பட வேண்டும் ‘

“ஜியார்டானோ புருனோவின்
புத்தகங்கள் அனைத்தும்
புனிதர் பீட்டர்ஸ் சர்ச்சின்
(Saint Peter’s Square)
புனித படிக்கட்டிற்கு
முன்னால் உள்ள
திறந்தவெளியில் பொது
மக்கள் முன்னிலையில்
அவருடைய புத்தகங்கள்
அனைத்தும் எரிக்கப்பட்டு
அழிக்கப்படவேண்டும்”.

“ ஜியார்டானோ புருனோ
குற்றவாளி என்று
அறிவிக்கப்படுகிறார்
குற்றவாளியான
ஜியார்டானோ புருனோவிற்கு
வழங்கப்பட்ட தண்டனையை
நிறைவேற்றுவதற்காக
ரோம் நகரின் கவர்னரிடம்
ஜியார்டானோ புருனோவை
ஒப்படைக்கிறோம் “.

 "செயல்முறைகளின்படி
ஜியார்டானோ புருனோவிற்கு
வழங்கப்பட வேண்டிய
தண்டனை வாசிக்கப்பட்டது “

“ குற்றவாளியின்
முன்னிலையில்
காட்ரினல் மட்ருஸ்சியின்
(Cardinal Madruzzi’s)
இல்லத்தில்
நவனோ சதுக்கத்தில்
(Navano Square)
பிளமியனோ அட்ரினோ
(Notary Flaminio Adriano)
பதிவுரிமை அலுவலரால்
வாசிக்கப்பட்டது “

“ பிரான்செஸ்கோ
பீட்ரஸாண்டா
(Francesco Pietrasanta)
மற்றும்
பாதர் பெனட்டோ மண்டினா
(Father Benedetto Mandina)
இருவரும் ஜியார்டானோ
புருனோவிற்கு வழங்கப்படும்
தண்டனைக்கு சாட்சியாக
இருந்து தங்கள்
சாட்சியை பதிவு செய்தனர் “

“ஜியார்டானோ
புருனோவிற்கு வழங்கப்பட்ட
தண்டனையை
நிறைவேற்றுவதற்காக
ஜியார்டானோ புருனோ
ரோம் நகரின் ஆளுநரிடம்
ஒப்படைக்கப்படுகிறார். “

“ ஜியார்டானோ புருனோவிற்கு
எத்தகைய தண்டனை
வழங்கப்பட்டது என்பது
மிகவும் ரகசியமாக
வைக்கப்பட்டது “

08-02-1600
ஆம் ஆண்டு ஜியார்டானோ
புருனோவிற்கு இந்த
தீர்ப்பு வழங்கப்பட்டது “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  15-02-2019
//////////////////////////////////////////////