April 09, 2025

ஜபம்-பதிவு-1052 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-30

 ஜபம்-பதிவு-1052

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-30
தென்னாட்டை வடநாட்டுடன்,
போர் செய்து இணைக்க முயன்றார்கள் அவர்களால் இணைக்க முடியவில்லை,
நயவஞ்சக வார்த்தைகள் கூறி இணைக்க முயன்றார்கள் அவர்களால் இணைக்க முடியவில்லை,
சமாதானம் பேசி இணைக்க முயன்றார்கள் அவர்களால் இணைக்க முடியவில்லை,
சூழ்ச்சிகள் செய்து இணைக்க முயன்றார்கள் அவர்களால் இணைக்க முடியவில்லை,
துரோகங்கள் செய்து இணைக்க முயன்றார்கள் அவர்களால் இணைக்க முடியவில்லை.
வடநாட்டையும், தென்னாட்டையும் பல ஆண்டுகளாக, பலரும் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவர்களால் இணைக்க முடியவேயில்லை. அவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது.
ஆனால் யாராலும் செய்ய முடியாததை என் மகள் சித்திராங்கதை செய்து இருக்கிறாள். ஆமாம், வடநாட்டையும், தென்னாட்டையும் இணைத்து இருக்கிறாள். காதல் மூலம் வட நாட்டையும், தென்னாட்டையும் இணைத்து இருக்கிறாள்.
எந்த ஒன்றையும் காதலால் இணைக்க முடியும் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபித்து இருக்கிறாள். எந்த ஒன்றாலும் செய்ய முடியாததை காதலால் செய்ய முடியும் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபித்து இருக்கிறாள். இந்த உலகம் புரிந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரூபித்து இருக்கிறாள். இணைக்க முடியாத எந்த ஒன்றையும் காதலால் இணைக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறாள். காதல் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை நிரூபித்து இருக்கிறாள்.
இளவரசி என்ற முறையில் வடநாட்டையும் தென்னாட்டையும் இணைப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறாள். இந்த உலகமும் ஒன்றை புரிந்து கொண்டிருக்கிறது. இணைக்க முடியாத ஒன்றைக் கூட காதல் இணைக்கும் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தி இருக்கிறாள். ஆகவே, தந்தை என்ற முறையில் என் மகளின் காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன். அரசன் என்ற முறையில் இளவரசியின் காதலை நான் அங்கீகாரம் செய்கிறேன்.
ஆமாம், தென்னாட்டைச் சேர்ந்த பாண்டிய நாட்டின் இளவரசி, வடநாட்டைச் சேர்ந்த பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனைத் திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறேன். இவர்கள் இருவரின் கல்யாணம் மூலம் வடநாடும், தென்னாடும் இணைகிறது. காதலின் மூலம் வடநாட்டையும், தென்னாட்டையும் இணைக்க முடியும் என்பதற்கு இவர்களின் திருமணமே சாட்சி.
அமைச்சரே! பாண்டிய நாட்டின் இளவரசி சித்திராங்கதையின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள். இதுவரை யாரும் செய்திராத திருமணமாக சித்திராங்கதையின் திருமணம் இருக்க வேண்டும். சேரர்களும், சோழர்களும் இதுவரை செய்யாத திருமணமாக சித்திராங்கதையின் திருமணம் இருக்க வேண்டும். இந்த உலகமே இது வரை பார்த்திராத திருமணமாக சித்திராங்கதையின் திருமணம் இருக்க வேண்டும். இனி யாரும் இப்படி ஒரு திருமணத்தை செய்ய முடியாது என்று அனைவரும் நினைக்கும் வகையில் சித்திராங்கதையின் திருமணம் இருக்க வேண்டும்.
பாண்டிய நாடே திருமணக்கோலம் பூணட்டும். மங்கல வாத்தியங்கள் முழங்கட்டும்.
(என்று அவர் பேசி முடித்ததும் அவருடைய கருத்தை அந்த அவை ஏற்றுக் கொண்டது. அவை கலைந்தது)
தென்னாட்டைச் சேர்ந்த பாண்டிய நாட்டு இளவரசி சித்திராங்கதைக்கும், வட நாட்டைச் சேர்ந்த பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனுக்கும் திருமணம் நடந்தது. பப்ருவாகனன் பிறந்தான். பாண்டிய நாட்டை ஆள்வதற்கு வருங்கால மன்னன் பிறந்தான்.
பப்ருவாகனன் பிறந்தான்.
பப்ருவாகனன் பிறந்தான்.
-----ஜபம் இன்னும் வரும்
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
Like
Comment
Share

ஜபம்-பதிவு-1051 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-29

 ஜபம்-பதிவு-1051

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-29
ஒரு இளவரசரைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசரைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். சிறப்பு வாய்ந்து பாண்டவர்களில் ஒருவரைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். அனைவரும் வியந்து பார்க்கும் ஒருவரைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். இந்த உலகமே போற்றும் ஒரு வீர்ரைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். அனைவராலும் விரும்பப்படும் ஒருவரைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். அதனால் நான் ஒரு இளவரசியாக இருந்து நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையைத் தான் செய்து இருக்கிறேன்
பெண்ணாக இருந்து ஒரு குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து நான் தவறவும் இல்லை. இளவரசியாக இருந்து நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறவும் இல்லை.
என் விருப்பத்தைச் சொல்லி விட்டேன்
இதற்கு மேல் முடிவு எடுக்க வேண்டியது பாண்டிய நாடும்,
பாண்டிய நாட்டு மக்களும் தான்.
(என்று சொல்லி விட்டு சித்திராங்கதை அமர்ந்து விட்டாள். அரியணையிலிருந்து மன்னர் சித்திரவாகனன் எழுந்து பேசுகிறார்.)
சித்திரவாகனன் : சித்திராங்கதையின் நாவில் தமிழ் மொழி நாட்டியமாடியதைப் பார்த்து இருக்கிறேன். ஆனால், காதல் மொழியும் நாட்டியமாடும் என்பதை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன். சித்திராங்கதை என் மகள் என்று சொல்லிக் கொள்வதை விட பாண்டிய நாட்டின் இளவரசி என்று சொல்லிக் கொள்வதில் தான் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் மட்டுமல்ல இந்த பாண்டிய நாடே பெருமைப்படும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தவர் தான் இளவரசி சித்திராங்கதை.
சித்திராங்கதை பெண் என்ற முறையில் தன் மனதில் உள்ளதை சொல்லி விட்டாள். இளவரசி என்ற முறையில் முடிவெடுக்கும் உரிமையை நம்மிடம் ஒப்படைத்து விட்டாள். இதிலிருந்து சித்திராங்கதை பெண்ணாகவும் தன் கடமையிலிருந்து தவறவில்லை, இளவரசியாகவும் தன் கடமையிலிருந்து தவறவில்லை என்பதை நிரூபித்து விட்டாள். அவளை நினைத்து இந்த பாண்டிய நாடே பெருமையடைகிறது.
பெண்கள் பொதுவாகவே தனக்காக வாழ மாட்டார்கள். பிறருக்காகவே வாழ்வார்கள். சில சமயங்களில் தனக்காக வாழ்வது போலத் தோன்றும். ஆனால், அதை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அதுவும் பிறருக்காகத் தான் வாழ்கிறார்கள் என்பது தெரிய வரும்.
நாய் குட்டி போட்டவுடன் அதனுடைய உடம்பில் சக்தி குறைந்து விடும். சக்தி குறைந்ததால் அதன் உடம்பு பலகீனமாகி விடும். உடம்பு பலகீனமாகி விடுவதால் அதனால் நிற்கக் கூட முடியாமல் தடுமாறும். நிற்க முடியாத காரணத்தினால் அதனால் நடக்க முடியாது. அதனுடைய உடம்புக்கு சக்தி வர வேண்டுமானால் அந்த நாய் சாப்பிட வேண்டும்.
உடம்பில் சக்தி இல்லாத காரணத்தினால் அதனால் அலைந்து திரிந்து உணவு தேட முடியாது. நாய் உணவு சாப்பிடவில்லை என்றால் அதனால் உயிரோடு இருக்க முடியாது. இறந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அதனால், தாய் நாய் தன் உடம்புக்கு சக்தி வர வேண்டும் என்பதற்காக தன்னுடைய குட்டிகளில் ஒரு குட்டியை சாப்பிட்டு விடும்.
இந்தக் காட்சியை நாம் பார்க்கும் போது தாய் நாய் தன்னுடைய பசியை போக்க வேண்டும் என்பதற்காகவும், தான் சக்தி பெற வேண்டும் என்பதற்காகவும், தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தான் வாழ வேண்டும் என்பதற்காகவும், தான் இறந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தாய் நாய் தான் போட்ட குட்டிகளில் ஒன்றை சாப்பிட்டதாக நாம் எண்ணிக் கொள்வோம். ஆனால் அது தவறானது.
தாய் நாய் வாழ்ந்தால் தான், உயிரோடு இருந்தால் தான், சக்தியுடன் இருந்தால் தான், தன் குட்டிகளைகளுக்கு பால் கொடுக்க முடியும். குட்டிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும். தாய் நாய் குட்டிகளுக்கு பால் கொடுக்கவில்லை என்றால் தாய் நாயினுடைய குட்டிகள் அனைத்தும் இறந்து விடும் என்ற காரணத்திற்காகத் தான் தாய் நாய் தன் குட்டிகளில் ஒன்றை எடுத்து சாப்பிட்டு விடுகிறது.
மேலோட்டாக பார்க்கும் போது தாய் நாய் தான் போட்ட குட்டிகளில் ஒன்றை சாப்பிட்டது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என்று எண்ணத் தோன்றும். ஆனால் நன்றாக ஆழ்ந்து பார்த்தால், நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்தால் தாய் நாய் தான் போட்ட குட்டிகளில் ஒன்றை சாப்பிட்டது தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுப்பதற்காக என்பதையும், தன்னுடைய குட்டிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
இதில், தாய் நாய் தன் உயிரைக் காப்பாற்ற செயல்படவில்லை. தன் குட்டிகளைக் காப்பாற்ற செயல்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தாய் நாய் தனக்காக வாழவில்லை. தன்னுடைய குட்டிகளுக்காக வாழ்ந்து இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அதைப்போலத் தான் பெண்கள் சில சமயங்களில் தங்களுக்காக வாழ்வது போலத் தோன்றும். ஆனால், நன்றாக ஆராய்ந்து பார்த்தால் பெண்கள் தங்களுக்காக வாழவில்லை, மற்றவர்களுக்காக வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
சித்திராங்கதையும் தன் மனதில் உள்ளதைச் சொல்லி விட்டு முடிவை நம்மிடம் ஒப்படைத்ததில் இருந்து அவள் தனக்காக வாழவில்லை. பாண்டிய நாட்டிற்காக வாழ்கிறாள். பாண்டிய நாட்டிற்காகத் தன்னையே அர்ப்பணித்து இருக்கிறாள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதனால் தந்தை என்ற முறையில் நான் எடுக்கும் முடிவும், அரசன் என்ற முறையில் நான் எடுக்கும் முடிவும் சித்திராங்கதைக்கு ஏற்றதாகவும் இருக்கும், பாண்டிய நாட்டிற்கு உகந்ததாகவும் இருக்கும்.
வடநாட்டை தென்னாட்டுடன் இணைக்க முயற்சி செய்து, வட நாட்டிலிருந்து பல மன்னர்கள் தென்னாட்டின் மீது படை எடுத்து வந்திருக்கிறார்கள்.
அவர்களால் தென்னாட்டிற்குள் காலடி கூட எடுத்து வைக்க முடியவில்லை,
அவர்களால் தென்னாட்டிற்குள் நுழையக் கூட முடியவில்லை,
தென்னாட்டை வடநாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற அவர்களுடைய எண்ணம் பலிக்கவேயில்லை,
தென்னாட்டை வடநாட்டுடன் இணைக்க வேண்டும் என்று அவர்கள் மேறகொண்ட முயற்சிகள் ஒன்று கூட வெற்றி பெறவே இல்லை,
வடநாடு முழுவதும் பிடித்து அரசாண்ட மிகப்பெரும் வலிமை படைத்த மன்னர்களால் கூட தென்னாட்டை வடநாட்டுடன் இணைக்க முடியவில்லை.
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-1050 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-28

 ஜபம்-பதிவு-1050

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-28
தேன் உண்ட வண்டு அடைந்த மகிழ்ச்சியில் நான் இருந்தேன். அதனால் எதனையும் நான் விலக்க விரும்பவில்லை. அதை விட்டு விலகி வர நான் விரும்பவில்லை. அதை விட்டு விலகி வர என்னால் முடியவில்லை. அதனால் அந்த இன்பத்திலேயே நான் மூழ்கிக் கொண்டு இருந்தேன். என்னை மறந்த நிலையில் இருந்தேன். மதி மயங்கிய நிலையில் இருந்தேன். சிந்தனையைத் தொலைத்த நிலையில் இருந்தேன். அறிவு பிறழ்ந்த நிலையில் இருந்தேன்.
காதலுக்குள் சிக்கிக் கொண்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன். இது தான் காதலின் தொடக்கம் என்பதை உணர்ந்து கொண்டேன். காதல் ஏற்பட்டால் இத்தகைய நிலை தான் ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்டேன். காதல் செய்பவர்களுக்கு இத்தகைய ஒரு நிலை தான் ஏற்படும் என்பதைத் தெரிந்து கொண்டேன். இத்தகைய காரணத்தால் காதலிப்பவர்கள் பிரிந்தால் காதல் வேதனையில் அவதிப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். காதலின் மகத்துவம் தெரிந்து கொண்டேன். காதலின் அருமை தெரிந்து கொண்டேன். காதலின் புனிதம் தெரிந்து கொண்டேன்.
மொத்தத்தில் காதல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டேன். இருந்தும் எனக்குள் உண்டான காதலை அவரிடம் சொல்லவில்லை. மறைத்து விட்டேன்.
நான் புலியைக் கொல்லும் செயலைப் பார்த்தும், பேசிய பேச்சைக் கேட்டும், நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தும் நான் சாதாரணமான ஒரு பெண்ணாக இருக்க முடியாது என்பதையும், நான் இந்த பாண்டிய நாட்டின் இளவரசியாகத் தான் இருக்க வேண்டும் என்பதையும், நான் இளவரசி சித்திராங்கதை என்பதையும் கண்டுபிடித்து சொன்னார்.
நானும், அவர் பேசிய பேச்சிலிருந்து அவரும் ஒரு சாதரணமான மனிதராக இருக்க முடியாது என்பதையும், அரச குலத்தில் பிறந்தவராகத் தான் இருக்க முடியும் என்பதையும், இளவரசராகத் தான் இருக்க முடியும் என்பதையும், தெரிந்து கொண்டு சொன்னேன்.
நான் உங்களைக் காதலிக்கிறேன் நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா என்று அவர் என்னைக் கேட்டதற்கு, நான் அவரைக் காதலிப்பதை சொல்லவில்லை.
ஆனால், ஒன்று சொன்னேன். நான் என் மனதில் உள்ளதை சொல்லும் போது அது உங்கள் வாழ்க்கையை மாற்றுவதாகத் தான் இருக்கும் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டேன்.
இப்போதும் சொல்கிறேன் நான் சொல்லப்போவது அவருடைய வாழ்க்கையை மாற்றப் போவதாகத் தான் இருக்கும்
அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்பதற்காகவோ, அவருடைய தலை உடலிலிருந்து எடுக்கப்படும் என்பதற்காகவோ, அவருடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவோ நான் சொல்லவில்லை.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகச் சொல்கிறேன். என் மனதில் உள்ளதை சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகச் சொல்கிறேன். இப்போது சொல்லாவிட்டால் எப்போதுமே சொல்ல முடியாது என்ற காரணத்திற்காகச் சொல்கிறேன். என் மனதில் உள்ளதை சொல்கிறேன். இது இருவருடைய வாழ்க்கையையும் மாற்றும் என்ற காரணத்தால் சொல்கிறேன்.
நான் இவரைக் காதலிக்கிறேன். அர்ஜுனனைக் காதலிக்கிறேன். வில்லுக்கு விஜயன், உலகத்திலேயே சிறந்த வில்லாளி என்று போற்றப்படக்கூடிய இங்கே நிற்கும் அர்ஜுனனைக் காதலிக்கிறேன்.
நான் இளவரசி என்பது தெரிவதற்கு முன்பாகவே அவர் என்னை காதலித்தார். அவர் இளவரசர் என்று தெரிவதற்கு முன்பாகவே நான் அவரை காதலித்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரிவதற்கு முன்பாகவே நாங்கள் காதலித்தோம்.
அவர் என்னை காதலித்ததை அன்றே சொல்லி விட்டார். ஆனால் நான் அவரைக் காதலிப்பதை அன்று சொல்லவில்லை. இன்று தான் சொல்கிறேன்.
கண்டதும் காதலா என்று கேட்காதீர்கள்
காதல் எப்போது, எந்த இடத்தில், எந்த நேரத்தில்,
எந்த சூழ்நிலையில் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது
நீண்ட நாள் பழகினால் தான் காதல் வரும் என்று சொல்ல முடியாது
அழகைப் பொறுத்துத் தான் காதல் வரும் என்று சொல்ல முடியாது.
பணம், பதவி, அதிகாரம் பார்த்துத் தான்
காதல் வரும் என்று சொல்ல முடியாது.
காதல் இப்படித் தான் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது
காதல் எப்படி வேண்டுமானாலும் வரும்
காதல் வருவதற்கு ஒரு வினாடி போதும்
அழகைப் பொறுத்துத்தான் காதல் வரும் என்று சொல்வதே தவறானது. அழகைப் பொறுத்து வருவதல்ல காதல். காதல் உண்டாவதற்கு இது தான் வேண்டும் என்று யாராலும் சொல்ல முடியாது. எந்த ஒன்றாலும் காதல் என்பது வரும்.
காட்டை எரிக்க எப்படி ஒரு துளி நெருப்பு போதுமோ அதைப் போல காதல் உண்டாவதற்கு ஒரு வார்த்தையோ, ஒரு செயலோ, ஒரு எழுத்தோ ஏன் எந்த ஒரு பொருளோ போதும்.
பன்னீரில் குளித்து, சந்தனத்தில் நீந்தி, கனவுலகம் சென்றால் தான் வருவேன் என்று சொல்வதல்ல காதல். காதல் பணம் படைத்த செல்வந்தருக்கும் வரும் காசில்லாத ஏழைக்கும் வரும்.
காதல் தனிப்பட்ட முறையில் பெருமையடைவதில்லை
காதலர்களைப் பொறுத்துத் தான் காதல் பெருமையடைகிறது
காதலை பெருமையடையச் செய்யும் காதலர்கள் நாங்கள்
காதலை நாங்கள் தான் பெருமையடைய வைக்கப் போகிறோம்
காதல் எங்களால் தான் பெருமையடையப் போகிறது.
இனி எங்கள் பெயர் தான் காதலுக்கு உதாரணமாகத் திகழப் போகிறது.
நான் பெண்ணாக இருந்து காதலித்து இருந்திருக்கிறேன். அதுவும் ஒரு வீரனைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். அதனால் ஒரு பெண்ணாக இருந்து குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமையைத் தான் செய்து இருக்கிறேன்
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////////////////////
Like
Comment
Share
v

ஜபம்-பதிவு-1049 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-27

 ஜபம்-பதிவு-1049

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-27
அமைச்சர்: இங்கே நடந்து கொண்டிருந்த அனைத்து விஷயங்களையும் நீங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தீர்கள். அதனால், உங்களுக்கு தனியாக எந்த ஒன்றையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் முடிவு எடுப்பதற்கு முன்னால் நீங்கள் ஒரு இளவரசி என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்.
நீங்கள் எடுக்கும் முடிவு பாண்டிய நாட்டை அவமானப்படுத்தும் வகையில் இருந்து விடக்கூடாது என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்.
நீங்கள் எடுக்கும் முடிவு பாண்டிய நாட்டின் பெருமையை சிதைக்கும் வகையில் இருந்து விடக்கூடாது என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்.
நீங்கள் எடுக்கும் முடிவு பாண்டிய நாட்டின் பெருமையை உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்.
நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும், உங்களை மட்டுமல்ல அது இந்த பாண்டிய நாட்டையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்
நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அந்த முடிவு பாண்டிய நாட்டின் அரியணையோடு தொடர்பு கொண்டது என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்.
உங்கள் முடிவுக்காக இந்த பாண்டிய நாடே காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்.
சித்திராங்கதை : நான் என்னுடைய முடிவைச் சொல்வதற்கு முன் வளம் மிகுந்த பாண்டிய நாடும், வீரம் செறிந்த பாண்டிய நாட்டு மக்களும் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் நான் ஒரு பெண். பிறகு தான் நான் இந்த நாட்டின் இளவரசி என்பதை அமைச்சருக்கும், பாண்டிய நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
இந்த உலகத்தில் பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தான் பிறக்கிறது. எந்த குடும்பத்தில் பிறக்கிறதோ அந்த குடும்பத்தைப் பொறுத்துத் தான் பிறந்த குழந்தையின் மதமும், சாதியும் தீர்மானம் செய்யப்படுகிறது.
பிறக்கும் போதே எந்த குழந்தையும் சாதி, மத அடையாளங்களுடன் பிறப்பதில்லை.
நான் பிறக்கும் போதே இந்த மதத்தில் பிறந்தவர், இந்த சாதியில் பிறந்தவர் என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு அறிவில்லை என்று பொருள்.
பிறக்கும் போதே யாரும் மதத்துடனோ, சாதியுடனோ பிறக்க முடியாது. ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தான் பிறக்க முடியும்.
நான் இந்த உலகத்தில் பெண்ணாகத் தான் பிறந்தேன். அரச குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் தான் நான் இளவரசி ஆனேன்.
பெண்ணாகப் பிறந்தாலும் நான் என் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமையிலிருந்து ஒரு போதும் தவறியதே இல்லை. அதே போல் இளவரசியாக இருந்தாலும் பாண்டிய நாட்டிற்காக நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தவறியதே இல்லை.
நான் பெண்ணாக இருந்து முடிவு எடுக்கப் போகிறேனா அல்லது இளவரசியாக இருந்து முடிவு எடுக்கப் போகிறேனா என்பது தான் முக்கியம்.
நான் பெண்ணாக இருந்து முடிவு எடுத்தாலும், இளவரசியாக இருந்து முடிவு எடுத்தாலும், நான் எடுக்கும் முடிவு யாரையும் பாதிக்காத வகையில் தான் இருக்கும். அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இருக்காது.
நான் காட்டைக் கடந்து செல்லும் போது இவரைக் கண்டேன். இவர் புலியிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று புலியைக் கொன்று இவரைக் காப்பாற்றினேன். புலியிடமிருந்து காப்பாற்றிய இவர் என்னைப் பார்த்து காதல் வார்த்தைகள் பேசினார். தைரியமாக அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டு நான் மெய் மறந்து நின்றேன்.
அவர் பேசிய காதல் வார்த்தைகளை என்னால் தடுக்க முடியவில்லை. அவர் மீது என் கோபத்தைக் காட்ட முடியவில்லை. நீங்கள் தவறாக பேசுகிறீர்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அவர் பேச வேண்டும் நான் கேட்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் மேலோங்கி நின்றது.
அவர் பேசிய பேச்சுக்கள் எனக்குள் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என் மனதிற்குள் ஒரு புயலைக் கிளப்பியது. சிந்தனையில் பூகம்பத்தை உண்டாக்கியது. இதுவரை ஏற்படாத ஒரு மாற்றம் எனக்குள் ஏற்பட்டது. உடலில் நடுக்கம் ஏற்பட்டது. உள்ளத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. என்னால் பேச முடியாத நிலை ஏற்பட்டது..
எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப்போன்ற ஒரு நிலை எனக்கு இது வரை ஏற்பட்டதில்லை. அதனால் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. என் கால்கள் தரையில் படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். உடல் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். ஏதோ ஒன்றில் மாட்டிக் கொண்டேன் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இது எனக்கு ஒரு புதுவித உணர்வாக இருந்தது. அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அதை தவிர்க்கவும் நான் விரும்பவில்லை. ஏனென்றால் எனக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. அந்த இன்பத்தில் நான் என்னை அறியாமல் மிதந்து கொண்டு இருந்தேன். அந்த இன்பம் எனக்கு வேண்டும் வேண்டும் என்று என்னுடைய மனது துடித்தது.
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////v

ஜபம்-பதிவு-1048 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-26

 ஜபம்-பதிவு-1048

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-26
அர்ஜுனன் : உலகத்திலேயே நான் தான் சிறந்த வில்லாளி என்பதை
ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?
அமைச்சர் : வடநாட்டில் வீரம் இல்லாதவர்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று விட்டு சிறந்த வில்லாளி என்றால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
பாண்டியர்களுடன் சண்டையிட்டு வென்று காட்டு
அப்போது ஒத்துக் கொள்கிறோம் நீ சிறந்தவில்லாளி என்று
அர்ஜுனன் : நான் தயார்
அமைச்சர் : பாண்டியர்கள் தயார் இல்லை?
அர்ஜுனன் : ஏன் தயார் இல்லை?
அமைச்சர் : நீ குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளி. முதலில் நீ குற்றவமற்றவன் என்பதை நிரூபி அப்புறம் சண்டையிடலாம். காலம் வரும் போது சண்டையிடலாம். காலம் உனக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறது. நீ பாண்டியர்களுடன் சண்டையிடுவதைப் பார்க்க வேண்டும் என்று, நீ பாண்டியர்களுடன் சண்டையிட்டால் அது தான் நீ இந்த மண்ணில் வாழும் கடைசி நாளாக இருக்கும்.
அர்ஜுனன் : என்னை அழைத்து வந்து விட்டு, விசாரணை செய்யாமல் தேவையில்லாததை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
நான் எதற்காக பாண்டிய நாட்டிற்கு வந்திருக்கிறேன் என்று தெரியுமா?
அமைச்சர் : தீர்த்த யாத்திரை வந்து இருக்கிறீர்கள்!
அர்ஜுனன் : அது தவறு. நான் எதற்காக வந்திருக்கிறேன் என்பது எனக்கும், என்னுடைய அண்ணனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியாத விஷயம். உலகத்திலேயே சிறந்த ஒற்றர்களைக் கொண்ட பாண்டியர்களால் கூட கண்டுபிடிக்க முடியாது.
அமைச்சர் : ஏன் முடியாது. பாண்டியர்களால் முடியாது என்பது இந்த உலகத்தில் எதுவும் இல்லை
அர்ஜுனன் : நான் எதற்காக பாண்டிய நாட்டிற்காக வந்திருக்கிறேன் என்பதை சொல்லி விட்டால், நான் ஒத்துக் கொள்கிறேன் பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் தான் உலகத்திலேயே திறமைசாலி ஒற்றர்கள் என்பதை .ஒத்துக் கொள்கிறேன். நான் ஒத்துக் கொள்கிறேன்.
அமைச்சர் : பஞ்சபாண்டவர்கள் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து இருக்கின்றனர். அவள் பெயர் பாஞ்சாலி. இவர்களுக்குள் சண்டை வரக்கூடாது என்ற காரணத்தினால் பஞ்ச பாண்டவர்களும், பாஞ்சாலியும் தங்களுக்குள் ஒரு விதியை உருவாக்கி வைத்து இருக்கின்றனர்.
பஞ்சபாண்டவர்களில் ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் குடும்பம் நடத்த வேண்டும். அவ்வாறு குடும்பம் நடத்துபவருக்கு மட்டுமே பாஞ்சாலி மனைவியாக இருப்பாள். பாஞ்சாலியும், பாஞ்சாலியுடன் குடும்பம் நடத்துபவரும் தனித்து ஒரு அறையில் தனிமையில் இருக்கும் போது யாராவது அந்த அறையில் மீறி நுழைந்தால் அவர் 12 மாதங்கள் வனவாசம் செல்ல வேண்டும்.
பசுவைக் களவாடிச் சென்ற கொள்ளையர்களிடமிருந்து பசுக்களை மீட்டுக் கொடுப்பதற்காக அர்ஜுனன் வில்லை எடுக்க தர்மனும், பாஞ்சாலியும் தனிமையில் இருந்த அறைக்குள் நுழைந்து வில்லை எடுக்கும் போது அர்ஜுனனை தர்மன் மட்டுமே பார்த்தான். பாண்டவர்களுக்கும், பாஞ்சாலிக்கும் இடையே போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை மீறிய காரணத்தினால் அர்ஜுனன் காடு செல்ல செல்ல வேண்டும். அதனால் அவன் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு வந்திருக்கிறான். பாண்டிய நாட்டின் காட்டிற்குள் வந்திருக்கிறான். இளவரசியை துரத்திச் சென்றிருக்கிறான்.
அர்ஜுனன் : அற்புதம். எதிரியாக இருந்தாலும் திறமைசாலியாக இருந்தால் ஒத்துக் கொள்ள வேண்டியது தான். எனக்கும், என்னுடைய அண்ணனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயத்தை சொல்லி விட்டீர்கள். நான் ஒத்துக் கொள்கிறேன். பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் உலகத்திலேயே மிகச் சிறந்த ஒற்றர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் இளவரசியை நான் துரத்திச் செல்லவில்லை. அவருடைய விருப்பத்தின் பேரிலேயே சென்றேன். என்னை மட்டுமே விசாரித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இளவரசியை கூப்பிடுங்கள். நான் குற்றவாளி இல்லை என்பது தெரியும்.
அமைச்சர் : அதை நீ சொல்லக் கூடாது. நீ குற்றவாளி இல்லை என்பதை நீ சொல்லக்கூடாது. இளவரசி நேரில் வந்து நடந்த உண்மையை சொன்ன பிறகு தான் நீ குற்றவாளியா? இல்லையா? என்பது தெரிய வரும். இளவரசியை அழையுங்கள்.
(இளவரசி வந்து அவையின் முன்பு நிற்கிறார். அமைச்சர் பேசுகிறார்.)
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025. ----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
Like
Comment
Share