April 09, 2025

ஜபம்-பதிவு-1044 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-22

 ஜபம்-பதிவு-1044

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-22
இந்த உலகத்தில் உள்ள சிலர் தங்கள் சாதி என்று சில மன்னர்களைச் சொல்லக் காரணம் அந்த மன்னர் வரலாறு படைத்தார் என்ற காரணத்தினால் தான். தங்கள் சாதியைச் சேர்ந்த மன்னர் என்று யாராவது சொன்னால் அவர்கள் சொல்லும் மன்னரை நன்றாக உற்றுக் கவனித்தால் அவர் வரலாறு படைத்தவராகத் தான் இருப்பார். வரலாறு படைத்த காரணத்தினால் தான் தங்கள் சாதி என்று சொல்கிறார்கள். வரலாறு படைக்கவில்லை என்றால் தங்கள் சாதி என்று சொல்ல மாட்டார்கள். இதிலிருந்து சாதி வெறி எப்படி மனிதனுக்குள் ஆட்டம் போடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சாதி வெறி ஒரு மனிதனை எப்படி ஆட்டி வைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
வரலாறு படைத்த மன்னர்களை தங்கள் சாதி என்று சொல்லிக் கொண்டு சண்டையிட்டுக் கொள்வது இந்த உலகத்தில் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
உங்களால் வரலாற்றை உருவாக்க முடியவில்லை. அதனால் முன்னோர்களின் வரலாற்றை சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள். வரலாறு படைத்த மன்னர்களை உங்கள் சாதி என்று சொல்லிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏற்றபடி வரலாற்றை உருமாற்றி வைத்துக் கொள்கிறீர்கள்.
அமைச்சர் : வரலாறு இருப்பவர்கள் தங்கள் வரலாற்றைப் பற்றிப் பேசுவார்கள். வரலாறு இல்லாதவர்கள் வரலாறு இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். அதை கோபத்தின் மூலம் வெளிப்படுத்துவார்கள். நீ கோபப் படுவதைப் பார்க்கும் போது உனக்கு வரலாறு இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
உன்னுடைய முன்னோர்கள் எந்த ஒரு வரலாறையும் உருவாக்கவில்லை என்று தெரிகிறது. வரலாற்றை உருவாக்காதவர்கள் உன்னுடைய முன்னோர்கள் என்று தெரிகிறது. வரலாற்றை உருவாக்க முடியாமல் போனவர்கள் உன்னுடைய முன்னோர்கள் என்று தெரிகிறது. வரலாற்றை உருவாக்கும் தகுதி உன்னுடைய முன்னோர்களுக்கு இல்லை என்று தெரிகிறது. அதனால் தான், வரலாறு உள்ளவர்கள் வரலாற்றைப் பற்றிப் பேசும் போது எந்த ஒரு வரலாறும் இல்லாத உனக்கு கோபம் வருகிறது.
தங்களுக்கு என்று ஒரு வரலாறு இருந்தால் மட்டுமே அவர்கள் தங்கள் முன்னோர்களைப் பற்றிப் பேசுவார்கள். வரலாறு இல்லாதவர்கள் வரலாறு உள்ளவர்களைப் பார்த்து கோபப்படத்தான் செய்வார்கள்.
பாண்டியர்களுக்கென்று மாபெரும் வரலாறு இருக்கிறது,
பாண்டியர்களுக்கென்று தனிப்பட்ட வரலாறு இருக்கிறது,
யாரும் இது வரை உருவாக்காத வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது,
யாராலும் இனி உருவாக்க முடியாத வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது,
யாராலும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத வரலாறு
பாண்டியர்களுக்கு இருக்கிறது,
மறைத்து வைக்கப்பட்ட வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது,
பலபேர் தெரிந்து கொள்ளாத வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது,
பலபேர் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாத வரலாறு
பாண்டியர்களுக்கு இருக்கிறது,
யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்று
மறைத்து வைக்கப்பட்ட வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது,
வரலாற்றிலே சிறந்த வரலாறு பாண்டியர்களுடைய
வரலாறு தான் என்று வரலாற்றிலேயே இருக்கிறது,
பாண்டியர்களுடைய வரலாற்றைப் போன்ற வரலாறு
யாரிடமும் இல்லாமல் இருக்கிறது,
சேரர்களை விட சிறந்த வரலாறு பாண்டியர்களிடம் தான் இருக்கிறது,
சோழர்களை விட சிறந்த வரலாறு பாண்டியர்களிடம் தான் இருக்கிறது,
மூவேந்தர்களில் சிறந்த வரலாறு பாண்டியர்களிம் மட்டும் தான் இருக்கிறது.
உலகிலுள்ள எந்த ஒரு மன்னரும் செய்யாத வரலாறு
பாண்டியர்களிடம் தான் இருக்கிறது,
சேரர்களையும், சோழர்களையும் வென்ற வரலாறு
பாண்டியர்களிடம் தான் இருக்கிறது.
சேரர்களையும், சோழர்களையும் அடிமைப்படுத்திய வரலாறு பாண்டியர்களிடம் தான் இருக்கிறது.
உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த வரலாறு
பாண்டியர்களிடம் தான் இருக்கிறது.
கலை, பண்பாடு, கலாச்சாரம், நாகரிகத்தில் சிறந்தவர்கள்
பாண்டியர்கள் தான் என்ற வரலாறு இருக்கிறது,
மிகப்பெரிய வரலாறு பாண்டியர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment