October 13, 2019

பரம்பொருள்-பதிவு-70


             பரம்பொருள்-பதிவு-70

“செயலுக்குரிய
விளைவானது
என்னவாக இருக்கும்
என்று அனைவரும்
யோசித்துக்
கொண்டிருக்கும்
சூழ்நிலையில் அந்த
செயலைச் செய்வதற்குரிய
சரியான நபர்களைத்
தேர்ந்தெடுத்து
அந்த நபர்களை வைத்து
அந்த செயலைச்
செய்ய வைத்து
செயலுக்குரிய முடிவை
செயலைச் செய்த
நபர்களுக்கு
மட்டுமில்லாமல்
உலகில் உள்ள
அனைவருக்கும்
தெரியப்படுத்தும் வகையில்
மிகப் பெரிய வேலையை
செய்பவர் தான் நாரதர்”

“ஞானப் பழத்தை
வெட்டி பகிர்ந்து
சாப்பிடக்கூடாது
என்று நாரதர் நிபந்தனை
விதித்திருந்த காரணத்தினால்
சிவபெருமான்
விநாயகருக்கும் முருகருக்கும்
ஒரு போட்டி
வைத்து உலகத்தை
யார் முதலில்
சுற்றி வருகிறாரோ
அவருக்கே ஞானப்பழம்
வழங்கப்படும் என்று
அறிவித்ததால்
சிவனும் பார்வதியும்
சேர்ந்ததே உலகம்
அவர்களை சுற்றினாலே
உலகத்தை சுற்றிய
மாதிரி என்று
சிவனையும் பார்வதியையும்
சுற்றி வந்து
ஞானப்பழத்தை
பெற்றார் விநாயகர்”

“உலகம் முழுவதும்
சற்றி வந்தும் முருகரால்
ஞானப்பழத்தைப்
பெற முடியவில்லை”

“விநாயகர் படைத்தவனுக்குள்
படைப்புகளைப் பார்த்தார்”

“முருகர் படைப்புகளுக்குள்
படைத்தவனைப் பார்த்தார்”

“படைத்தவனுக்குள்
படைப்புகள்
அனைத்தும் இருக்கிறது
என்று உணர்ந்தவர்
விநாயகர் ;
படைத்தவனை வணங்கினால்
படைப்புகள் அனைத்தையும்
வணங்கியதற்குச் சமம் ;
படைத்தவனை சுற்றினால்
படைப்புகள் அனைத்தையும்
சுற்றியதற்குச் சமம் ;
என்று உணர்ந்து
படைப்புகளுக்குக் காரணமான
படைத்தவர்களான
சிவனையும் பார்வதியையும்
சுற்றி வந்து
ஞானப்பழத்தைப்
பெற்றார் விநாயகர்”

“படைப்புகளுக்குள்
படைத்தவனைப் பார்த்தார்
முருகர் ;
படைப்புகளை வணங்கினால்
படைத்தவனை
வணங்கியதற்குச் சமம் ;
படைப்புகளைச் சுற்றினால்
படைத்தவனைச்
சுற்றியதற்குச் சமம் ;
என்ற காரணத்தினால்
இந்த உலகம் முழுவதும்
சுற்றி வந்தார் முருகர்”

“படைத்தவனிலிருந்து தான்
அனைத்து படைப்புகளும்
தோன்றி இருக்கின்றன ;
படைத்தவனுக்குள் தான்
அனைத்து படைப்புகளும்
இருக்கின்றன ;
படைத்தவன் தான்
அனைத்து
படைப்புகளையும் தாங்கி
படைப்புகளை
வழி நடத்துகிறான் ;
என்று உணர்வது
உயர்ந்த நிலையான
முக்தி நிலை ;
இந்த நிலையில்
இருந்தவர் தான்
விநாயகர்”

“அனைத்து
படைப்புகளுக்குள்ளும்
படைத்தவன் இருக்கிறான் ;
படைப்புகளுக்குள்
படைத்தவன் இல்லை
என்றால் படைப்புகளால்
இயங்க முடியாது ;
படைப்புகள் தோன்ற
படைத்தவன் தேவை ;
என்று உணர்வது
ஞான நிலை இதனால்
தான் முருகர்
ஞானக் கடவுள்”

“படைத்தவனுக்குள்
படைப்புகளைப் பார்த்து
முக்தி நிலையில்
இருந்ததால் விநாயகர்
வெற்றி பெற்றார்”

“படைப்புகளுக்குள்
படைத்தவனைப் பார்த்து
ஞானநிலையில் இருந்ததால்
முருகரால் வெற்றி
பெற முடியவில்லை”

“நாரதர்
சிவன் பார்வதி விநாயகர்,
முருகர் ஔவையார்
ஆகியோரை ஒரு செயலில்
ஈடுபடவைத்து
ஞான நிலையை விட
முக்தி நிலையே
உயர்ந்த நிலை என்பதை
இந்த உலகத்திற்கு
எடுத்துக் காட்ட வேண்டும்
என்ற காரணத்திற்காக
நாரதர் நடத்திய
செயல் தான்
ஞானப்பழக்கதை”

“இவ்வாறாகத்தான்
உயர்ந்த உண்மைகளை
உலகத்திற்கு
உணர்த்துவதற்காக
செயலுக்குரிய
நபர்களைத் தேர்ந்தெடுத்து
செயல்களைச் செய்ய
வைப்பவர் தான் நாரதர்”

“இத்தகைய சிறப்பு
மிக்க நாரதர் தான்
பஞ்ச பாண்டவர்களை
நோக்கி நடந்து
சென்று கொண்டிருந்தார்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------13-10-2019
//////////////////////////////////////////