April 01, 2019

6-ஜியார்டானோ புருனோ உருவான கதை


          6-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
திணை விதைத்தவன்
திணை அறுப்பான்
அதாவது,
நாம் எந்த செயலைச்
செற்கிறோமோ அந்த
செயலுக்குரிய விளைவு
தான் கிடைக்கும்
புண்ணியம் தரக்கூடிய
செயலைச் செய்தால்
இன்பமும்
பாவத்தை தரக்கூடிய
செயலைச் செய்தால்
துன்பமும் கிடைக்கும்
என்பதே இதற்குப் பொருள்

ஒவ்வொரு செயலுக்கும்
விளைவு உண்டு - ஒரு
செயலைச் செய்து விட்டு
அதன் விளைவிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது
நாம் எந்த செயலைச்
செய்கிறோமோ - அந்த
செயலுக்குரிய விளைவை 
நாம் அனுபவித்தே ஆக
வேண்டும்

புண்ணியத்தைத் தரக்கூடிய
செயலைச் செய்தால்
இன்பமும் ;  - பாவத்தைத்
தரக்கூடிய செயலைச் செய்தால்
துன்பமும் ; கிடைக்கும்  
நாம் அனுபவிக்கும்
அனைத்து நல்லவைகளும்
கெட்டவைகளும் - நாம்
செய்த புண்ணியச் செயலையும்,
பாவச் செயலையும்
சார்ந்தே இருக்கும்

எந்தச் செயலாக இருந்தாலும்
சரி ஒரு செயலைச் செய்து
விட்டு அதன் விளைவிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது,.
ஆனால் அதிலிருந்து தங்களை
காத்துக் கொள்வதற்காக - மூன்று
விதமான முறைகளை
மக்கள் கையாள்கின்றனர்

ஒன்று  :பிராயச்சித்தம்
இரண்டு :மேல்பதிவு
மூன்று :அடியோடு அழித்தல்

பிராயச்சித்தம்
என்பது செய்த பாவத்தின்
துன்பம் தன்னை பாதிக்காமல்
இருப்பதற்காக பலவிதமான
நல்ல காரியங்கள் செய்வது 
அதாவது அன்னதானம் செய்வது
ஏழைப் பெண்களுக்கு
திருமணம் செய்வது போன்ற
செயல்களைக் குறிக்கும்

இந்த செயல் துன்பதைக்
குறைக்க மட்டுமே செய்யும்
நமக்கு ஏற்படக்கூடிய
துன்பம் முழுவதையும்
நீக்காது

எனவே பிராயச்சித்தத்தை
நாம் துன்பத்தை நீக்குதற்கு
பயன்படுத்த முடியாது
குறைப்பதற்கு மட்டுமே
பயன்படுத்த முடியும்

மேல்பதிவு
என்பது செய்த பாவத்தின்
துன்பம் நம்மை பாதிக்காமல்
இருப்பதற்காக தொடர்ந்து
புண்ணியம் தரும் செயல்களை
மட்டுமே செய்து கொண்டிருப்பது

தொடர்ந்து நாம் புண்ணியத்தை
தரக்கூடிய செயல்களை மட்டுமே
செய்து கொண்டிருந்தால்
பாவத்தின் விளைவால் எழுந்த
துன்பம் மிகப்பெரிய அளவில்
பாதிப்பை ஏற்படுத்தாது

ஆனால் நல்ல செயல்களைத்
தொடர்ந்து நம்மால் செய்து
கொண்டிருக்க முடியாது.
ஆதலால் துன்பத்தை நீக்க
நாம் மேல்பதிவைப்
பயன்படுத்த முடியாது
துன்பத்தை குறைப்பதற்கு
மட்டுமே பயன்படுத்த
முடியும்

அடியோடு அழித்தல்
என்பது துன்பத்திற்கு
காரணமான பாவத்தை
முற்றிலாக அழித்து விடுவது

பாவத்தினால் ஏற்படக்கூடிய
துன்பத்தை எப்படி குறைப்பது
அதன் தாக்கத்திலிருந்து எப்படி
தப்பித்துக் கொள்வது என்று
சிந்திப்பதை விட அந்த
துன்பத்திற்கு காரணமான
பாவத்தை அழித்து
விட்டால் நல்லது என்று
யோசித்து அதை பாவத்தை
அழிப்பதற்காக தவங்கள்
செய்து அந்த பாவத்தை
முற்றிலும் அழித்தனர்

பாவத்தை முற்றிலுமாக
அழிப்பதற்கு அனைவராலும்
முடியவில்லை என்ற
காரணத்தினால் மக்களால்
இதை பயன்படுத்த
முடியவில்லை

அடியோடு அழித்தல் என்பதை
சாதாரண மனிதர்களால்
செய்யமுடியாது -ஆனால்
பிராயச்சித்தம் மேல்பதிவு
ஆகியவற்றை சாதாரண
மனிதர்களால் செய்ய முடியும்

பிராயச்சித்தம் மேல்பதிவு
இரண்டும் பாவத்தால்
எழும் துன்பங்களின்
தாக்கத்தை குறைக்கத்
தான் முடியுமே தவிர
துன்பத்தை முற்றிலுமாக
நீக்க முடியாது

இதிலிருந்து ஒன்றை நாம்
தெரிந்து கொள்ளலாம்
பிராயச்சித்தம் மேல்பதிவு
ஆகியவற்றைப்
பயன்படுத்தினாலும் செய்த
செயலுக்குரிய விளைவிலிருந்து
யாரும் தப்ப முடியாது
என்பதை நாம்
தெரிந்து கொள்ளலாம்

ஜியார்டானோ புருனோவை
சிறையில் சித்திரவதை செய்து
கொண்டிருந்த போது அவர்
சிறு வயதில் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்ட ஒரு பெண்ணை
துன்பப் படுத்திய நிகழ்வை
நினைத்துக் கொண்டார்,
அவர் செய்த அந்த
பாவத்தின் செயலுக்கு
இப்போது விளைவானது
துன்பமாக வந்திருக்கிறது
அதாவது கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்ட காரணத்திற்காக
தான் தற்போது
துன்பப்படுத்தப் படுவதை
நினைத்துக் கொணடார்

செய்த வினை
செய்தவனை சும்மா விடாது
செய்த பாவத்திலிருந்து
யாரும் தப்ப முடியாது
என்பதையும்
ஊழ்வினை உறுத்து
வந்து ஊட்டும் என்பதையும்
தெரிந்து கொண்டார்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
//////////////////////////////////////////

ஜியார்டானோ புருனோ
சிறையில் சித்திரவதை
செய்யப்பட்டுக்
கொண்டிருந்தபோது
தான் சிறிய வயதில்
செய்த பாவத்தின்
விளைவு தற்போது
துன்பமாக வந்து
தன்னை சித்திரவதை
செய்து கொண்டிருக்கிறது
என்பதை உணர்ந்து
கொண்ட காட்சி

/////////////////////////////