March 09, 2016

(2) - இயேசு கிறிஸ்து-அகத்தியர்-உண்ணும்போது-பதிவு-75-(பாகம்-2)



இயேசு கிறிஸ்து-அகத்தியர்-உண்ணும்போது-பதிவு-75-(பாகம்-2)

""""பதிவு எழுபத்துஐந்தை விரித்துச் சொல்ல
          ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

 அகத்தியர்

"""""உண்ணும்போ துயிரெழுத்தை உயர வாங்கி
                        உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்
                   பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
                                                பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு
         திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்
                                                தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
                    மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
                                                மறலிகையில் அகப்படவு மாட்டார் தானே"""""
                                                                 
                                           ------அகத்தியர்------அகஸ்தியர் ஞானம்-----
                                            ------பெரிய ஞானக்கோவை-------

மனிதன் வாழும் வாழ்க்கையை
இரண்டு நிலைகளில் பிரிக்கலாம்

  ஒன்று     : சிற்றின்ப வாழ்க்கை
                இரண்டு   : பேரின்ப வாழ்க்கை

பேரின்ப வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாமலே,
பேரின்ப வாழ்க்கை என்றால்  என்ன என்று புரியாமலே,
பேரின்ப வாழ்க்கை என்றால் என்ன என்று அறியாமலே,
பேரின்ப வாழ்க்கை என்றால்  என்ன என்று உணராமலே,
பேரின்ப வாழ்க்கையை என்றால்
என்ன என்று உணர்ந்து கொள்வதற்கு ஆசைப்படாமலே,
மனிதன் சிற்றின்ப வாழ்க்கையைத் தான்
உண்மையான வாழ்க்கை என்று நினைத்து
சிற்றின்ப வாழ்க்கையை வாழ்ந்து
தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறான்.

மனிதனுடைய வாழ்க்கையானது
சிற்றின்ப வாழ்க்கை பேரின்ப வாழ்க்கை
என்று இரண்டு நிலைகளில் பிரிந்து விரிந்து கிடந்தாலும்
பெரும்பாலானவர்களால்
பேரின்ப வாழ்க்கை என்றால் என்ன என்று
உணர்ந்து கொள்ள முடியாமலேயே
சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டு  சிற்றின்ப வாழ்கையிலேயே
தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
சிற்றின்ப வாழ்க்கை என்றாலும் பேரின்ப வாழ்க்கை என்றாலும்
அகநிலையிலோ அல்லது புற நிலையிலோ
ஒரு நிகழ்வு நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் போது
செய்யப்படும் செயலைப் பொறுத்து விளைவுகள் ஏற்படும்.

சிற்றின்ப வாழ்க்கையில்  செய்யப்படும் செயலில் விளையும் விளைவும்
பேரின்ப வாழ்க்கையில்  செய்யப்படும் செயலில் விளையும் விளைவும்
ஒன்றாக இருக்காது வேறுபட்டு இருக்கும்.

பேரின்ப வாழ்க்கையும் சிற்றின்ப வாழ்க்கையும்
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பதை
சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபடுவோரும்
பேரின்ப வாழ்க்கையில் ஈடுபடுவோரும்
வாழ்க்கையில்  ஒரு நிகழ்வு எதிர்ப்படும்போது
செய்யப்படும் செயலால் ஏற்படும் விளைவானது
வேறுபட்டு இருப்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து இருப்பார்கள்.

நிகழ்வு-1
சிற்றின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
அகநிலையில் ஒரு நிகழ்வு எதிர்ப்படும்போது
அடக்கி வைத்து இருத்தல் என்ற செயலைச் செய்யும் போது
விளையும் விளைவானது தீமையானதாகவும்,
அடக்கி வைக்காமல் இருத்தல் என்ற செயலைச் செய்யும்போது
விளையும் விளைவானது நன்மையானதாகவும்  இருக்கும்.

நிகழ்வு-2
சிற்றின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
அகநிலையில்  மற்றொரு நிகழ்வு எதிர்ப்பட்டால்
அடக்கி வைத்து இருத்தல் என்ற செயலைச் செய்யும்போது
விளையும் விளைவானது தீமையானதாகவும்,
அடக்கி வைக்காமல் இருத்தல் என்ற செயலைச் செய்யும்போது
விளையும் விளைவானது தீமையானதாகவும் இருக்கும்.

நிகழ்வு-3
சிற்றின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
புறநிலையில்  ஒரு நிகழ்வு நிகழும்போது
அடக்கி வைத்து இருத்தல் என்ற செயலைச் செய்யும் போது
விளையும் விளைவானது நன்மையானதாகவும்,
அடக்கி வைக்காமல் இருத்தல் என்ற செயலைச் செய்யும் போது
விளையும் விளைவானது தீமையானதாகவும் இருக்கும்.

நிகழ்வு-4
சிற்றின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
புறநிலையில்  மற்றொரு நிகழ்வு நிகழும்போது
அடக்கி வைத்து இருத்தல் என்ற செயலைச் செய்யும் போது
விளையும் விளைவானது தீமையானதாகவும்,
அடக்கி வைக்காமல் இருத்தல் என்ற செயலைச் செய்யும்போது
விளையும் விளைவானது தீமையானதாகவும் இருக்கும்.

இதற்கு நேர்மாறுபட்டதாக இருக்கும்
பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்களுடைய வாழ்வு.

பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
ஒரு நிகழ்வு எதிர்ப்படும்போது செய்யப்படும் செயலால்
விளையும் விளைவானது மாறுபட்டு இருக்கும்.

நிகழ்வு-5
பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
ஒரு நிகழ்வு எதிர்ப்படும்போது
அடக்கி வைத்து இருத்தல் என்ற செயலைச் செய்யும்போது
விளையும் விளைவானது நன்மையானதாக இருக்கும்
பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
ஒரு நிகழ்வு எதிர்ப்படும்போது அடக்கி வைக்காமல் இருத்தல்
என்ற செயலைச் செய்யும்போது விளையும் விளைவானது
நன்மையானதாகவும்  இருக்கும்.

பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
ஒரு நிகழ்வு எதிர்ப்படும்போது அடக்கி வைத்து இருத்தல்
அடக்கி வைக்காமல் இருத்தல் என்ற செயலைச் செய்யும் போது
இரண்டு செயலுக்கும்  விளையும் விளைவானது
நன்மையானதாகத் தான் இருக்கும்.

ஆனால், சிற்றின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
அடக்கி வைத்து இருத்தல்அடக்கி வைக்காமல் இருத்தல்
என்ற இரு செயல்களைச் செய்யும் போது
விளையும் விளைவானது
ஒன்று நன்மையானதாகவும் மற்றொன்று
தீமையானதாகவும் இருக்கும் மேலும்,
ஒன்று தீமையானதாகவும் மற்றொன்று
தீமையானதாகவும் இருக்கும்.

எப்படி இருந்தாலும் சிற்றின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
ஒரு நிகழ்வு எதிர்ப்படும்போது செய்யப்படும் செயலால்
விளையும் விளைவானது தீமை ஒன்று அதில் எப்படியும் இருக்கும்.

ஆனால் பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
ஒரு நிகழ்வு எதிர்ப்படும்போது செய்யப்படும் செயலால்
விளையும் விளைவானது
எப்போதும் நன்மையானதாக  மட்டுமே இருக்கும்
தீமையானது இருக்காது
இது தான் சிற்றின்ப வாழ்க்கை வாழ்பவர்களுக்கும்
பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்களுக்கும்
உள்ள முக்கியமான வேறுபாடு.

ஏன் இந்த நிலை ஏன் இந்த வேறுபாடு
ஏன் இந்த வித்தியாசம் என்பதை
பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்களுக்கும்
பேரின்ப வாழ்க்கையை வாழ்ந்தவர்களிடம்
கேட்டுத் தெரிந்து கொண்டவர்களுக்கும் இந்த வேறுபாடு தெரியும்.

நிகழ்வு-1
ஒரு தொழிலாளி
ஒருவர் அலுவலகத்தில்  வேலை செய்து கொண்டிருக்கிறார்;
அவருடைய மேலதிகாரி  அவருக்கு தொடர்ந்து தொல்லைகள்
கொடுத்து கொண்டு இருக்கிறார்;
இடையூறுகள் அளித்துக் கொண்டு இருக்கிறார்;
மனக்கவலைகள் கொடுத்து கொண்டு இருக்கிறார்;
வேலை செய்ய விடாமல் மன அழுத்தம் அளித்துக் கொண்டு இருக்கிறார்;
தேவையில்லாததைக் கூறி வேலையின் மேல
வெறுப்பை ஏற்படுத்துகிறார்; பொறுத்தமற்றதைப் பேசி
மனதில் குழப்பத்தை உண்டாக்குகிறார்;- என்று மனம் வெதும்பி அவர்
அவருடைய மேலதிகாரி மேல் கோபம் கொண்டால்
அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளிப்படுத்தினால்
தன் மனதில் உள்ள குறைகளினால்  ஏற்பட்ட தாக்கத்தை
கோபமாக வெளிப்படுத்தினால்
வேலையில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

சில சமயங்கள் வேலையை இழக்க நேரிடும்
வேலை போனால் பரவாயில்லை
வேறு வேலை தேடிக் கொள்ளலாம் என்றாலும்
வேறு வேலைகள் கிடைக்க  வாய்ப்பில்லாமல் போய்விடும் அல்லது
வேலைகள் கிடைப்பதற்கான வழிகள்  அடைக்கப்பட்டு விடும்.

சினத்தை அடக்கி வைக்காமல் வெளிப்படுத்தினால்
வேலையில் துன்பத்தை கொடுக்கும்
மேலும், சினத்தை அடக்கி வைக்க அடக்கி வைக்க
சினமானது வஞ்சமாக மாறிவிடும்
சினத்தை அடக்கக்கூடாது
சினத்தை அடக்கும்போது சினமானது வஞ்சமாக மாறி
பழி உணர்ச்சியைத் தூண்டி
பழி வாங்கும் நடவடிக்கையில்இறங்க வைத்து விடும்.
சினத்தை அடக்கி வைக்கும் போது சினமானது வஞ்சமாக மாறி
பழிவாங்கும் நிலைக்கு  கொண்டு போய் துன்பத்தை கொடுக்கும்
அழுத்தப்பட்ட சினம் வஞ்சமாக மாறிவிடும்

சினத்தை அடக்கி வைக்காமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும்
சினத்தை வெளிப்படுத்தினால் ஏற்படக்கூடிய தீமைகளையும்,
சினத்தை வெளிப்படுத்தினால் ஏற்படக்கூடிய இழப்புகளையும்,
சினத்தை வெளிப்படுத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும்,
உற்று நோக்கி சிந்தித்து பார்த்தோமேயாகில்
சினத்தை அடக்கி வைக்காமல் ஆராய்ந்து பார்த்து
சினத்தை அன்பாக மாற்றி விட வேண்டும்
சினம் அன்பாக மாற மாற  நாமே அன்பாக மாறி விடுவோம்
எனவே, அடக்கப்படாத சினம் காலமாற்றத்தால்அன்பாக வெளிப்படும்
அடக்கி வைக்கப்பட்ட சினம் காலமாற்றத்தால் வஞ்சமாக வெளிப்படும்.

அடக்கப்படாத சினம் அன்பாக வெளிப்படும்
சினம் அன்பாக வெளிப்படும்போது நன்மையையே கொடுக்கும்.

சிற்றின்ப வாழ்க்கை வாழ்பவர்கள்  வாழ்வில்
அகநிலையில் ஒரு நிகழ்வு எதிர்ப்படும்போது
அடக்கி வைத்து இருத்தல் என்ற செயலைச் செய்யும் போது
விளையும் விளைவானது தீமையானதாகவும்,
அடக்கி வைக்காமல் இருத்தல் என்ற செயலைச் செய்யும்போது
விளையும் விளைவானது நன்மையானதாகவும்  இருக்கும்.

அகநிலையில் சினம் என்ற செயலை
அடக்கி வைக்கும் போது வஞ்சமாக மாறி துன்பத்தை கொடுக்கும்
அடக்கி வைக்காத போது இன்பத்தை கொடுக்கும்

அகநிலையில்  சினம் என்ற செயல் அடங்கி இருந்தால் துன்பத்தையும்
அடக்கி வைக்காத போது இன்பத்தையும் கொடுக்கும்.

நிகழ்வு-2
நாம் ஒரு சாக்கடையை  கடந்து செல்ல வேண்டும்
அதற்கு வேறு பாதை கிடையாது
அந்த வழியாகத் தான்  நாம் போய்ச் சேர வேண்டியது
தவிர்க்க முடியாதது என்றால்
அந்த பாதை வழியாக  கண்டிப்பாக செல்ல வேண்டும் என்றால்
சாக்கடை உள்ள பாதையை  கடந்து செல்ல வேண்டும்

சாக்கடையிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. நாம் கடந்து செல்லும்போது
மூக்கை மூடி மூச்சை அடக்கி வைக்கிறோம்
அடக்கி வைத்தல் என்ற  செயல் இங்கே நடைபெறுகிறது
இந்த இடத்தில் அடக்கி வைத்து இருத்தல்
என்ற செயல் சரியானது தானா என்று
சிந்தனை செய்து பார்க்க வேண்டும்

நாம் சாக்கடையை கடப்பதற்கு முன்
மூக்கை மூடி மூச்சை அடக்குகிறோம்.
சாக்கடையை கடந்த பின்பு அடக்கிய மூச்சை விடுகிறோம்.

மூச்சை அடக்காமல் சாக்கடையைக் கடந்தாலே
10 சதவீதம் துர்நாற்றம் தான்  நாம் சுவாசிப்போம்
இயல்பான துர்நாற்றத்தை தான் சுவாசிப்போம்
ஆனால், நாம் மூச்சை அடக்கி சாக்கடையை கடந்த பிறகு
மூச்சை விட்டதால் 20 சதவீதம் துர்நாற்றத்தை நாம் சுவாசிக்கிறோம்.

எந்த இடத்தில் எதை அடக்க வேண்டும்- என்று  தெரியாத காரணத்தினால்
அடக்க வேண்டிய இடத்தில் அடக்காமல் இருக்கிறோம்.

சாக்கடையைக் கடக்கும் போது துர்நாற்ற
பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள
அடக்கி வைத்து இருத்தல் என்ற செயலைச் செய்தாலும்
அடக்கி வைக்காமல் இருத்தல் என்ற செயலைச் செய்தாலும்
விளையும் விளைவானது தீமையானதாக இருக்கும்.

சிற்றின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
அகநிலையில்  மற்றொரு நிகழ்வு எதிர்ப்பட்டால்
அடக்கி வைத்து இருத்தல் என்ற செயலைச் செய்யும்போது
விளையும் விளைவானது தீமையானதாகவும்,
அடக்கி வைக்காமல் இருத்தல் என்ற செயலைச் செய்யும்போது
விளையும் விளைவானது தீமையானதாகவும் இருக்கும்.

நிகழ்வு-3
பாய்ந்து வரும் வெள்ளத்தை அணைகட்டி தடுத்தால்
அதாவது பாய்ந்துவரும் வெள்ளத்தை
அதன் ஓட்டத்தை தடுத்து அதன் இயக்கத்தை தடுத்து
அதன் இயக்கநிலையை தடுத்து அதன் வேகத்தைத் தடுத்து
அடக்கி வைத்தால் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம்
பல நல்லவேலைகளுக்கு பல நல்ல செயல்களுக்கு
மக்களின் முக்கியமான தேவைகளுக்கு
அடக்கி வைத்த வெள்ளத்தை
சேமித்து வைத்த வெள்ளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாய்ந்து வரும் வெள்ள நீரை
மனிதனின் முக்கியமான தேவைகளுக்கும்
முக்கியமான செயல்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாய்ந்து வரும் வெள்ள நீரை அடக்கி வைத்து இருத்தல்
என்ற செயலைச் செய்வதன் மூலம்
நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.

ஓடி வரும் வெள்ள நீரை, பாய்ந்து வரும் வெள்ள நீரை,
அடித்துக் கொண்டு வரும் வெள்ள நீரை,
சுழன்று கொண்டு வரும் வெள்ள நீரை, அணை கட்டி தடுக்காமல்
அதன் வேகத்திலேயே விட்டு விட்டோமானால்
அதன் நிலை வேறு மாதிரி இருக்கும்.

வெள்ளத்தினால்  பாதிப்புகள்அழிவுகள்சிதைவுகள்; அதிகமாக இருக்கும்
வெள்ள நீரை தன் போக்கில் போக விட்டால்
மனிதன்  தன் தேவைக்கேற்ப பயன் படுத்த முடியாது;
தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாது;
தன் தேவையை தீர்த்துக் கொள்ள முடியாது;
தன் தேவையை நிறை வேற்றிக் கொள்ள முடியாது;

தறிகெட்டு ஓடும் வெள்ள நீர் அபாயகரமானது
அபாயங்களை ஏற்படுத்தும்; இன்னல்களை ஏறபடுத்தும்;
துன்பங்களை எற்படுத்தும்; கவலைகளை ஏற்படுத்தும்;
அழிவுகளை ஏற்படுத்தும்; இயற்கையை பாழ்படுத்தும்;

தறிகெட்டு ஓடும் வெள்ள நீர் ஆபத்தானது
கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும்
ஓடிவரும் வெள்ள நீரை  அடக்கி வைக்கா விட்டால்
கெட்டவைகளைத் தான் கொடுக்கும்.

ஓடிவரும் வெள்ள நீரை அடக்கி வைத்தால்
நல்லவைகளைக் கொடுக்கும்;
ஓடிவரும் வெள்ள நீரை அடக்கி வைக்கா விட்டால்
கெட்டவைகளைத் தான் கொடுக்கும்;

சிற்றின்ப வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்வில்
புற நிலையில்  மற்றொரு நிகழ்வு எதிர்ப்பட்டால்
அடக்கி வைத்து இருத்தல் என்ற செயலைச் செய்யும்போது
விளையும் விளைவானது நன்மையானதாகவும்,
அடக்கி வைக்காமல் இருத்தல் என்ற செயலைச் செய்யும்போது
விளையும் விளைவானது தீமையானதாகவும் இருக்கும்.

நிகழ்வு-4
ஒரு இனம் ஆண்டான்டு காலமாக
அடிமையாக அடக்கிவைக்கப்பட்டிருக்கிறது
கோழையாக இருக்கும்படி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது
ஏழையாக இருக்கும்படி தட்டி வைக்கப்பட்டிருக்கிறது
மானம் பிடிங்கப்பட்டு விலங்காக அலைய விடப்பட்டிருக்கிறது
பேச்சுரிமை அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது
எழுத்துரிமை முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது
உரிமைகள் எரித்து வைக்கப்பட்டிருக்கிறது
உணர்வுகள் அழித்து வைக்கப்பட்டிருக்கிறது
சிந்தனை சிதைத்து வைக்கப்பட்டிருக்கிறது
கனவுகள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கிறது
என்பதை உணர்ந்து கொண்ட  என்பதை புரிந்து கொண்ட
என்பதை அறிந்து கொண்ட என்பதை தெரிந்து கொண்ட
அடிமையாக இருக்கும் ஒருவர் நாம் அடிமையாக இருக்கிறோம்

எத்தனை நாளுக்கு தான் நாம்  அடிமையாக இருப்பது
அடிமை விலங்கொடித்து
சுதந்திரக் காற்றை சுவாசிப்பது எப்போது
சுதந்திரமாக நடமாடுவது எப்போது
சுதந்திரத்தை சுவைப்பது எப்போது
சுயமாக சிந்திப்பது எப்போது
அறிவு பூர்வமாக வாழ்வது எப்போது
சுய உணர்வுடன் வாழ்வது எப்போது
உரிமை பெற்று வாழ்வது எப்போது
மகிழ்வில் நனைந்து வாழ்வது எப்போது
சந்தோஷத்தில் திளைத்து வாழ்வது எப்போது
உணர்வுகள் பெற்று வாழ்வது எப்போது என்று நினைத்து
அடிமை நிலையை எதிர்த்து போராட வேண்டும்
அடிமை நிலையை அழித்து
அடிமை நிலையிலிருந்து விடுபட்டு
அடிமை நிலையிலிருந்து  சுதந்திர நிலைக்கு மாறி
சுதந்திர காற்றை சுவாசித்து சுதந்திரமாக வாழ்வதற்கு
செயல்களைச் செய்ய வேண்டும் என்று
போராட தொடங்கினால் அடக்கி வைத்த இனம்
ஆண்டான்டு காலமாக அடிமையாக வைத்திருந்த இனம்
அடிமையிலிருந்து விடுவிக்காது சுதந்திரத்தை தராது.

அதனால் போராட வேண்டும்; 
நெருப்பாற்றில் நீந்த வேண்டும்;
இழப்புகளைச் சந்திக்க வேண்டும்; 
துரோகத்தை பார்க்க வேண்டும்;
நட்புகளை இழக்க வேண்டும்; 
உறவுகளை துறக்க வேண்டும்;
சுற்றங்களை மறக்க வேண்டும்; 
என்பதை உணர்ந்து நிம்மதி போய்விடும்
போராடினால் அமைதி போய்விடும்

அடிமை நிலையை எதிர்த்து போராடினால்
அடிமையாக வைத்திருந்த ஆளும் வர்க்கம் எதிர்க்கும்
துன்பங்களைக் கொடுக்கும் இன்னல்களைக் கொடுக்கும் சுதந்திரம் தராது.

அடிமையாக இருப்பவனை  தனக்கு சமமாக வைத்து பார்க்க நினைக்காது
அடிமை தனக்கு சமமாக   உட்கார வைக்க யாரும் விருப்பப்படுவதில்லை
அடிமை எழுந்து விட்டால் தன் தேவைகளை நிறைவேற்ற முடியாது
என்ற சிந்தனைகளை நினைவில் நிறுத்தி
அடிமையாகவே வைக்கத்தான் முயற்சி செய்யுமே தவிர
சுதந்திரத்தை தராது.

உணர்வுகளை அடக்கி வைக்காமல் உரிமை
தேடி போகும்போது நம் நிம்மதி கெட்டு விடும்
தீயவைகளைத் தான் கொடுக்கும்-என்று சிந்தனை செய்து
அடிமை நிலையை எதிர்த்து போராடாமல்
அடிமை நிலையிலிலேயே இருந்து விடலாம்
என்று நினைத்து அடிமை வர்க்கமாகவே
அடிமை என்ற முத்திரையுடன்  வாழ்வதும் தீமையானதாகும்.

அடிமையாக இருப்பவன் ஆர்த்தெழுந்து விட்டால்
அடக்கி வைத்த இனம் அடங்க¤ விடும் என்ற எண்ணத்தில்
அடிமையாக இருந்த இனம் அடிமை விலங்கொடித்து
சுதந்திரக் காற்றை சுவாசிக்க போராடினால்
நிம்மதி போய்விடும் அமைதி குலைந்து விடும்
நிம்மதியாக வாழ முடியாது என்பதை உணர்ந்து
அடிமையாகவே வாழ்ந்து கொண்டிருப்பதும்;
தன்மானம் இழந்து வாழ்ந்து கொண்டிருப்பதும்;
மரியாதை இழந்து வாழ்ந்து கொண்டிருப்பதும்;
கௌரவம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதும்;
சுயமரியாதை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதும்;
சுய கொளரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதும்;
சுயமாக சிந்திக்காமல் வாழ்ந்து கொண்டிருப்பதும்;
உணர்வற்று வாழ்ந்து கொண்டிருப்பதும்;
அவமானம் என்று தெரிந்தும்
அடக்கி வைத்திருப்பவர்களை அடிமையாக வைத்திருப்பவர்களை
அடிமையாக காரணமானவர்களை எதிர்த்து போராடினால்
வாழ்வில் துன்பம் ஏற்படும் என்பதை உணர்ந்து
எதிர்த்து போராடாமால் கோபத்தை அடக்கி வைத்து இருத்தல்  
என்ற செயலைச் செய்யும்போது விளையும் விளைவானது
தீமையானதாக இருக்கும்.

கோபத்தை அடக்கி வைப்பதன் மூலம் பல்வேறு துன்பங்களிலிருந்து
தன்னை காத்துக் கொள்ளலாம் என்று நினைத்து
தொடர்ந்து அடிமையாக இருப்பதும்,
வாழ்க்கையில் அடிமை என்ற முத்திரை குத்தப்பட்டு வாழ்வதும்,
குற்ற உணர்ச்சியுடன் வாழ்வதும்,
வாழ்க்கையில் நிம்மதியை  கழித்து விடுகிறது என்பதை உணர்ந்தும்,
அடிமையாக வாழ்வது என்பது அவமானம் என்று தெரிந்தும்
அடிமையாக வாழ்வது என்பது
அமைதி கிடைக்கும் நிம்மதி கிடைக்கும் என்ற நினைப்பில்
அடிமை என்ற முத்திரையுடன்
அடிமையாக வாழ்வது  என்பது தீமையானதாகும்.

எத்தனை ஆண்டுகாலம்
தான் அடிமையாக இருக்க முடியும்;
அடிமையாக கை கட்டி சேவகம் செய்ய முடியும்;
அடிமையாக வாய் மூடி இருக்க முடியும்;
அடிமையாக உணர்வற்று இருக்க முடியும்;
அடிமையாக சுயமரியாதை இன்றி இருக்க முடியம்;
அடிமையாக மானமின்றி இருக்க முடியும்;
அடிமையாக விலங்காக இருக்க முடியும்;
அடிமையாக சிந்தனையின்றி வாழ முடியும்;
அடிமையாக அறிவின்றி காலத்தை நகர்த்த முடியும்;
அடிமையாக அமைதியின்றி வாழ முடியும்;
அடிமையாக கவலையுடன் வாழ முடியும்;
அடிமை நிலை  இழிவான நிலை
அந்த நிலையில் வாழ்வதை விட
மரணம் அடைவதே மேல் - என்று  துணிந்து முடிவு எடுத்து
அடிமையாக வைத்திருக்கும்
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை எதிர்ப்பதன் மூலம்
நம் அமைதி போய்விடும் என்று நினைக்காமல்
அமைதி போனால் என்ன நிம்மதி போனால் என்ன
வாழ்க்கை போனால் என்ன என் வாழ்க்கை போனால் என்ன
வருங்கால சந்ததியினராவது
நிம்மதியாக ; சந்தோஷமாக; அமைதியாக வாழ வேண்டும்
அதற்காக தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும்
தன் வாழ்க்கை போனால் என்ன  என்று முடிவெடுத்து
அடிமை நிலையை எதிர்த்து போராடும் போது
போராட்டத்தில் விடுதலை கிடைக்கலாம் அல்லது
விடுதலை கிடைக்காமல் போகலாம்
ஆனால் ஒரு நாள் இல்லை
ஒரு நாள் கண்டிப்பாக விடுதலை கிடைக்கும்
என்ற சிந்தனையை மனதில் நிறுத்தி போராடுவோம்
துன்பத்தில் நீராடுவோம்.

சமுதாயத்திற்கு ஒரு நன்மை
தன்னால் கிடைக்கும் என்றால்
எதிர்த்து நின்று போராடுவோம் என்ற
வைராக்கியத்தை மனதில் விதைத்து போராடுவோம்
போராடினால் கண்டிப்பாக விடுதலை கிடைக்கும்
என்று உணர்ந்து போராட வேண்டும்
விடுதலையை நோக்கிய பயணம்
பல்வேறு இன்னல்களைத் தன்னுள் கொண்டது;
பல்வேறு துன்பங்களைத் தன்னுள் கொண்டது;
பல்வேறு கவலைகளைத் தன்னுள் கொண்டது;
பல்வேறு எதிரிகளைத் தன்னுள் கொண்டது;
பல்வேறு துரோகிகளைத் தன்னுள் கொண்டது; என்பதை உணர்ந்து
அடிமையாக 1000 ஆண்டுகள் வாழ்வதை விட
சுதந்திரமாக 1 நாள் வாழ்ந்து சாவதே மேல் என்று நினைத்து
போராடுவது சிறந்தது என்பதை உணர்ந்து போராட வேண்டும்
விடுதலையை நுகர வேண்டும்.

அடிமை நிலையை எதிர்த்து போராடினால் அடக்கி வைத்திருப்பவர்கள்
துன்பத்தை கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து
அடிமை நிலையை எதிர்த்து போராடாமல்
கோபத்தை அடக்கி வைத்து இருந்தாலும் துன்பத்தைக் கொடுக்கும்;

அடிமை நிலையை எதிர்த்து போராடுவதால்
அடக்கி அடிமையாக வைத்திருப்பவர்கள்
துன்பத்தை கொடுப்பார்கள் என்று தெரிந்தும்
போராடுவோம் என்று முடிவெடுத்து விடுதலை கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் போராடினாலும்
கோபத்தை அடக்கி வைக்காமல் இருந்து  போராடினாலும்
துன்பத்தை கொடுக்கும்;
சிற்றின்ப வாழ்க்கையில் புறநிலையில்
ஒரு நிகழ்வு எதிர்ப்படும்போது அடக்கி வைத்து இருத்தல்
என்ற செயலைச் செய்யும் போது விளையும் விளைவானது தீமையானதாகவும்,
அடக்கி வைக்காமல் இருத்தல் என்ற செயலைச் செய்யும் போது
விளையும் விளைவானது தீமையானதாக இருக்கும்

நிகழ்வு-5
அத்தியாவசியத் தேவையின்  அடிப்படையில் எழுவது ஆசை;
தேவைக்கு மேல் ஏற்படுவது பேராசை;
ஆசை என்ற செயல்
அடக்கி வைத்தாலும் துன்பத்தையும் கொடுக்கும்
அடக்கி வைக்கா விட்டாலும் துன்பத்தையும் கொடுக்கும்

ஆசைக்கும்; பேராசைக்கும்; வேறுபாடு இருக்கிறது.
என்னுடைய பொருள் என்னுடையது என்று சொல்லும் போது ஆசை;
அவனுடையதும் என்னுடையதே - என்று  சொல்லும் போது பேராசை;
தேவையின் பொருட்டு ஏற்படுவது ஆசை;
தேவைக்கு மேல் ஏற்படுவது பேராசை;

அன்றாத் தேவைகளை றிறை வேற்றும் பொருட்டு
பூர்த்தி செய்யும் பொருட்டு
செய்யப்படும் செயலுக்கு பெயர் ஆசை;
தேவைக்கு மேல் உள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு
செய்யப்படும் செயலுக்கு பெயர் பேராசை;

ஆசையை இரண்டு விதங்களில் பிரிக்கலாம்

    ஒன்று    : தேவையுள்ள ஆசை
   இரண்டு  : தேவையற்ற ஆசை

அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும்
வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும்
பயன்படுவது தேவையுள்ள ஆசை

தேவையுள்ள ஆசை ;  ஆசை எனப்படுகிறது.
வாழ்க்கைத் தேவைக்கு மேல் சேர்க்க ஆசைப்படுவது
தேவையற்ற ஆசை; இது பேராசை எனப்படுகிறது
இதை தீய ஆசை முரணான ஆசை
தீயவிளைவுகளைத் தரக்கூடிய ஆசை
ஒழுக்கக் குறைவான ஆசை என்றும் அழைக்கலாம்.

தேவையுள்ள ஆசையை ஆசை என்றும்
தேவையற்ற ஆசையை பேராசை என்றும் சொல்லாம்.

தேவையற்ற ஆசையை அடக்கி வைத்தாலும் துன்பம்
அடக்காமல் வைத்தாலும் துன்பம்.
நம் தேவையின் அடிப்படையில் எழும் ஆசை
அத்தியாவசியமான  ஆசையா என்று ஆராய வேண்டும் ;
அத்தியாவசிய தேவையின்  அடிப்படையில் எழுந்த ஆசையா
என்பதைக் கண்டறிய வேண்டும்;
நிறைவேற்றக் கூடிய ஆசையா என்பதைச் சிந்திக்க வேண்டும்;
நியாயமான ஆசையா என்பதை யோசிக்க வேண்டும்;
நியாயமற்ற ஆசையா என்பதை உணர வேண்டும்;

அத்தியாவசிய தேவையின்
அடிப்படையில் எழுந்த ஆசை என்றால்  அதை அடக்கி வைக்க கூடாது
எழும் அந்த ஆசையை வாழ்க்கை தேவையை நிறைவு செய்யும்
அந்த அத்தியாவசிய தேவைக்குரிய ஆசையை
நிறைவேற்ற வேண்டும் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் போட்டுக் கொள்ள  ஒரு சட்டையை வாங்கினால்  அதற்குப் பெயர் ஆசை;
நம் மானத்தை காக்க என்று வாங்கி அணிந்தால் அதற்கு பெயர் ஆசை
நம் சம்பளத்திற்கு மேல் கடன் வாங்கி ஒரு சட்டையை வாங்கி  
அதை அணிந்து கொள்ள விரும்பினால் அதற்கு பெயர் பேராசை;

அத்தியாவசிய தேவையை அறிந்து அதை அடக்கி வைக்காமல்
நிறைவேற்றிக் கொள்வது நன்மையே பயக்கும்.

அத்தியாவசிய தேவையை தவிர்த்து
ஆடம்பர தேவையாக இருந்தால்
அந்த தேவை அவசியம் தானா என்று  ஆராய வேண்டும்;
அது இல்லாமல் நம்மால் வாழ முடியுமா அல்லது முடியாதா
என்று கண்டறிய வேண்டும்;
அந்த தேவை வாழ்க்கைக்கு முக்கியமானது 
தானா என்று ஆராய வேண்டும்;
அந்த தேவை நியாயமானது தானா என்று கண்டறிய வேண்டும்;
அந்த தேவை வாழ்வை பாதிக்கும் தேவையா
நிம்மதியை குலைக்கும் தேவையா
இன்பத்தை கலைக்கும் தேவையா;
துன்பத்தை கொடுக்கும் தேவையா
வருத்தத்தை அளிக்கும் தேவையா;
கவலைகளை வழங்கும் தேவையா
இழிவுகளை தரும் தேவையா;
கண்ணீரை வரவழைக்கும் தேவையா
அமைதியை கெடுக்கும் தேவையா;
மகிழ்ச்சியை கொல்லும் தேவையா
மானத்தை அழிக்கும் தேவையா;
என்பதை உணர வேண்டும் ஆராய வேண்டும்.
இந்த தேவை இல்லாமல் நம்மால் வாழ முடியுமா என்பதை
உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தேவையற்ற ஆசைகள்  எவை என உணர்ந்து
அத்தகைய ஆசைகள்  நம் வாழ்க்கைக்கு தேவையில்லை
அத்தகைய தேவைகள் இல்லாமல்  நம்மால் வாழ முடியும்
என்பதை உணர்ந்து ஆசையை அடக்கி வைத்து இருத்தல்
என்ற செயலைச் செய்யும்போது விளையும் விளைவானது
நன்மையைக் கொடுக்கும்.

தேவையின் அடிப்படையில்  எழும் ஆசைகளை
நியாயமான ஆசைகளை நிறைவேற்றத்தக்க ஆசைகளை
நாம் எவை என உணர்ந்து
தேவையுள்ள ஆசையையும் தேவையற்ற ஆசையையும்
பிரித்து பார்க்கும் தன்மை உடையவர்கள்
தேவையற்ற ஆசையை விலக்கி
தேவையுள்ள ஆசையை மட்டும் அடக்கி வைக்காமல்
வாழ்க்கையை நடத்துவதால் நன்மையை கொடுக்கும்.

நாம் ஒன்றின் மேல்
தேவையற்ற ஆசையை வைத்து விட்டால்
அந்த தேவையற்ற ஆசை பற்றாக மாறிவிடும்
அதனால் மனம் அதை அடைவதற்கான வழிகளை
எந்தவிதமான செயல்களையும்
செய்து அடைய மனம் நினைக்கும்.
தீய வழிகளில் சென்று தன் தேவையற்ற ஆசையை
நிறைவேற்றிக் கொள்ள மனம் துடிக்கும்.

தேவையற்ற ஆசை அன்பு, கருணை, இரக்கம் இதில் எதையும் பார்க்காது
தேவையற்ற ஆசைக்கு
நட்பின் புனிதம் தெரியாது
அன்பின் அருமை தெரியாது;
கருணையின் நிலை தெரியாது
இரக்கத்தின் மேன்மை தெரியாது;
பாசத்தின் உண்மை தெரியாது
உறவுகளின் உணர்வுகள் தெரியாது;
சுற்றத்தின் சுகங்கள் தெரியாது
இல்லறத்தின் இனிமை தெரியாது;

அப்படிப்பட்ட தேவையற்ற ஆசை மனித மனதுள் எழுந்தால்
தேவையற்ற ஆசை பற்றாக மாறி, பற்று வெறியாக மாறி,
தன் தேவையற்ற ஆசையை  நிறைவேற்றிக் கொள்ள
தகாத செயல்களை செய்யத் தூண்டி
சமுதாயத்தில் அவப் பெயரையும் ஏற்படுத்தி விடும்.

தேவையற்ற ஆசையை அடக்காமல் வைத்திருந்தாலும்
துன்பத்தை கொடுக்கும்;
தேவையற்ற ஆசையை அடக்கி வைத்திருந்தாலும்
துன்பத்தை கொடுக்கும்;

தேவையற்ற ஆசையை அடக்கி வைத்தால் தேவையற்ற ஆசை பற்றாகி
பிறகே தீய செயல்களில் ஈடுபட வைக்கும்;
ஆனால் தேவையற்ற ஆசையை அடக்காமல் வைத்தால்
நேரடியாக தீய செயல்களில் ஈடுபட வைக்கும்;

தேவையற்ற ஆசையை அடக்கி வைத்தால்
எத்தகைய தன்மைகளைக் கொண்டு
எத்தகைய தீய செயல்களைச் செய்யுமோ
அதே நிலையில் தான் தேவையற்ற ஆசையை
அடக்காமல் வைத்து இருந்தாலும்
அதே தன்மைகளைக் கொண்டு அதே தீய செயல்களில் தான் செய்யும்.

தேவையற்ற ஆசையை அடக்கி வைத்தாலும்
அடக்காமல் வைத்தாலும்
விளையும் விளைவு  துன்பத்தைத் தான் கொடுக்கும்
எனவே, தேவையுள்ள ஆசை எது
தேவையற்ற ஆசை எது என்று வேறுபடுத்தி பிரித்துப் பார்க்க
தெரிந்திருக்க வேண்டும்.

தேவையற்ற ஆசையை நாம் தேவையுள்ள ஆசையாக
மாற்றிக் கொண்ட காரணத்தால் தான்
நாம் தேவையற்ற ஆசையை நிறைவேற்ற
தகாத செயல்களைச் செய்ய ஓடுகிறோம்.

தேவையற்ற ஆசையை அடக்கி வைக்கவும் கூடாது
அடக்காமல் வைக்கவும் கூடாது.
இது வாழ்க்கைக்கு தேவையற்ற ஆசை
இந்த ஆசை வளர்ந்தால் வாழ்க்கை நரகமாகி விடும்;
நிம்மதி இழந்து விடும்
அமைதி ஓடி விடும்;
அன்பு கரைந்து விடும்
கருணை மடிந்து விடும்;
பாசம் சரிந்து விடும்
உண்மைகள் சாம்பலாகி விடும்;
உறவுகள் கரைந்து விடும்
உணர்வுகள் குலைந்து விடும்;
சுற்றங்கள் குறைந்து விடும்
இரக்கம் செத்து விடும்;
எதிர்காலம் சூனியமாகி விடும்
இன்பங்கள் குலைந்து விடும்;
என்பதை உணர்ந்து 
தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து
தேவையற்ற ஆசை எழும்போதே
அதை அழித்து விட வேண்டும்.

அழிக்கப்பட்ட எதுவும் மீண்டும் வளராது
அழிக்கப்பட்டாதவைகள் தான் வளர்ந்து கொண்டே இருக்கும்.

விதையை சுட்டு விட்டால் நெருப்பில் சுட்டுவிட்டால் விதை வளராது
சுட்ட விதை வளராது நெருப்பால் சுடப்படாத விதை தான் வளரும்.

பேரின்ப வாழ்க்கையில் தேவையற்ற ஆசை இவை என உணந்து
தேவையற்ற ஆசையை கைக்கொள்ளாமல்
தேவையற்ற ஆசையை அடக்கி வைத்து இருத்தல்
என்ற செயலுக்கு உட்படுத்தும் பொழுது
விளையும் விளைவு நன்மையாகவும்
தேவையற்ற ஆசை இவை என உணர்ந்து
தேவையற்ற ஆசையை கைக்கொள்ளாமல்
தேவையற்ற ஆசையை அடக்கி வைத்து
தேவையுள்ள ஆசையை அடக்கி வைக்காமல் இருத்தல்
என்ற செயலுக்கு உட்படுத்தும் பொழுது
விளையும் விளைவு நன்மையாகவும் இருக்கும்.

பேரின்ப வாழ்க்கையில்  இருக்கும் போது
தேவையுடையது எது என்றும்
தேவையற்றது எது என்றும் உணர்ந்து கொள்ளும் மனப்பக்குவம்;
ஆராய்ந்து பார்க்கும் பார்வை; தீர்க்க சிந்தனை;
விரிந்த அறிவு; தொலை நோக்கு பார்வை;  ஆகியவை ஏற்படும்.

சிற்றின்ப வாழ்க்கையில் ஒரு நிகழ்வு எதிர்ப்படும்போது
அடக்கி வைத்தல்  என்ற  செயலைச் செய்தாலோ அல்லது
அடக்கி வைக்காமல் இருத்தல்  என்ற செயலைச் செய்தாலோ
ஏற்படும் விளைவு நன்மையாகவோ அல்லது
தீமையாகவோ இருக்கும். ஆனால்,
பேரின்ப வாழ்க்கையில் ஒரு நிகழ்வு எதிர்ப்படுபோது
அடக்கி வைத்தல் என்ற செயலைச் செய்தாலோ
அல்லது அடக்கி வைக்காமல் இருத்தல் என்ற செய்தாலோ
ஏற்படும் விளைவு நன்மையாகத் தான் இருக்கும்

இது தான் சிற்றின்ப வாழ்க்கைக்கும்
பேரின்ப வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு  ஆகும்

"உண்ணும் போது உயிரெழுத்தை உயர வாங்கி "
உயிரெழுத்து என்றால் உயிர் தோன்றுவதற்கு
காரணமாக இருக்கும் எழுத்து என்று பொருள்
உயிர் தோன்றுவதற்கு காரணமான எழுத்து  என்றால் அது தான் ஓம்
ஓம் என்பது அனைத்திற்கும் மூலம் அதுவே படைப்பின் ரகசியம்
ஓம் என்பது  அகரம், உகரம், மகரம் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது.

உலகிலுள்ள அனைத்து  மனித உயிர்களும் இந்த ஓம்
என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன.
தெரிந்தும் தெரிந்து கொள்ளமலும்  தெரிந்து கொள்ள முடியாமலும்
இது தான் பிரபஞ்ச ஒலி என்று புரியாமலும்
இது ஆதியிலே இருந்த வார்த்தை என்பதை புரிந்து கொள்ள முடியாமலேயே
ஓம் என்ற சொல்லை  மனித இனம்  பயன்படுத்திக் கொண்டு வருகிறது.

மனித இனம் பேசும் போது
மூன்றுவிதமான குறியீடுகளைப் பயன்படுத்தி வருகிறது.
வாயைத் திறக்கிறது; வாயை குவிக்கிறது; வாயை மூடுகிறது;
உலகில் பேசும் அனைத்து மொழிகளும்
இந்த மூன்று நிலைகளில் தான் இயங்கி வருகிறது இயக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தவிர்த்து
எந்த மொழியும் எந்த வழிமுறைகளையும் பின்பற்றுவதில்லை
இந்த மூன்று நிலைகளைப் பின்பற்றி தான்
மனித இனம் மொழிகளைப்  பயன்படுத்தி வருகிறது. அதாவது
வாயைத் திறப்பது அகரம்
வாயைக் குவிப்பது உகரம் 
வாயை மூடுவது மகரம்
இந்த அகரம், உகரம், மகரம் சேர்ந்தது தான் ஓம்.
ஓம் என்று நாம் சொல்லும்போது
இந்த மூன்று செயல்களும் நடைபெறுகிறது.

இந்த மூன்று சொல்லும் இல்லாமல்
எந்த சொல்லையும் பயன்படுத்தவும் முடியாது
உபயோகப்படுத்தவும் முடியாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உண்ணும்போது என்றால்   உணவை  உண்ணும்போது என்று பொருள்.
உண்ணும்போது உயிரெழுத்தை  உயரவாங்கி என்றால்,
உணவை உண்ணப் போவதற்கு முன்
இந்த பயிற்சியை செய்ய வேண்டும் என்று பொருள் அல்ல.
உணவை உண்ணும்போதே இந்த
பயிற்சியை செய்ய வேண்டும் என்று பொருள்
உணவை உண்ணும்போது என்றால் திட உணவு அல்ல
காற்றை உண்ணும்போது காற்றை நாம் உண்ணும்போது
உணவை உண்ணும்போது என்றால்  காற்றை நாம் சுவாசிக்கும்போது
அதாவது காற்றை நாம் உண்ணும்போது என்று பொருள்.

உண்ணும்போது உயிரெழுத்தை  உயரவாங்கி என்றால்
காற்றை நாம் உண்ணும்போது
உயிர் தோன்றுவதற்கு காரணமான எழுத்தை
அதாவது ஓம் என்ற எழுத்தை உயரே இழுக்க வேண்டும்  என்று பொருள்.

உண்ணும்போது உயிரெழுத்தை  உயரவாங்கி என்றால்
காற்றை நாம் உண்ணும்போது அதாவது காற்றை நாம் ஓம் என்று
உச்சரித்துக் கொண்டே மேல் நோக்கி இழுக்க வேண்டும்
அவ்வாறு இழுத்து மேல் நிலையில்
உள்ள இறைவனுடன் சேர்க்க வேண்டும்.

ஒரு குழந்தை வெளியில் விளையாடி பழக்கப் பட்டு விட்டது என்றால்
அது எந்நேரமும் வெளியிலேயே  தான் இருக்க ஆசைப்படும்
அந்த குழந்தையை வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்தால்
கத்த ஆரம்பித்து விடும் அழ ஆரம்பித்து விடும்
அடம் பிடிக்க ஆரம்பித்து விடும்.

அதனால் மீண்டும் மீண்டும் நாம் குழந்தையை வெளியிலேயே
கூட்டிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும
இதனை தீர்க்க வேண்டும் என்றால்
குழந்தை ஏன் வெளியில் இருக்க ஆசைப்படுகிறது
என்று கண்டறிய வேண்டும்.

வெளியில் இருக்கும் அத்தகைய ஆசையை
அத்தகைய ஒரு சூழ்நிலையை அத்தகைய ஒரு அமைப்பை
அத்தகைய ஒரு மகிழ்ச்சியான நிலையை
வீட்டிற்குள்ளும் ஏற்படுத்தி வைத்தால்
குழந்தை வீட்டிற்குள்ளேயே இருக்கும்

குழந்தை வெளியில் செல்ல அடம் பிடிக்காது
வெளியில் செல்வதை மறந்து விடும்
வெளியில் இருப்பதை மகிழ்ச்சி என்று
நினைத்துகொண்டு இருந்த குழந்தைக்கு
உள்ளேயும் மகிழ்ச்சி இருக்கிறது
என்று காண்பித்து விட்டால்
குழந்தை வெளியில் செல்ல பிரியப்படாது.

அதைப்போல ஆண்டாண்டு காலம்
சுவாசமானது வெளியில் சென்றே  பழக்கப்பட்டு விட்டது
அப்படி பழக்கப்பட்டுப்போன சுவாசத்தை
உள்ளே அடக்கி வைக்கக் கூடாது அடக்கி வைக்கவும் முடியாது
உள்ளே சுவாசம் ஓடுவதற்கான  வழிமுறைகளை கண்டறிந்து
உள்ளுக்குள்ளேயே  சுவாசத்தை ஓடவிட பயிற்சி செய்ய வேண்டும்.

சுவாசத்தை அடக்கி வைக்கக் கூடாது
சுவாசத்தை வெளியில் விடாமல்
உள்ளேயே சுற்றி கொண்டிருக்க வைக்க வேண்டியது தான்.

சுவாசத்தை அடக்கி வைப்பதற்கும்
ஒரே நிலையில் சுழல வைப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.

சுவாசத்தை அடக்கி உள்ளே வைக்க முயற்சி செய்தால்
அது வெளியே ஓடும் ஆனால் சுவாசக் காற்றை உள்ளே
சுழல விட்டால் உள்ளுக்குள்ளேயே ஓட விட்டால்
சுவாசக் காற்றானது உள்ளுக்குள்ளேயே ஓடிக் கொண்டிருக்கும்

இது தான் வாசிப் பயிற்சிக்கும்
மற்ற மூச்சிப் பயிற்சிக்கும் உள்ள வித்தியாசம்.

வாசிப்பயிற்சியானது மூச்சுக் காற்றை
உள்ளேயே சுழலுவதற்கு உள்ளேயே இயங்குவதற்கு
தேவையானவற்றை ஏற்படுத்திக் கொடுக்கும்
மற்ற மூச்சுப் பயிற்சிகள் மூச்சை நிறுத்துவதற்கோ
மூச்சை அடக்குவதற்கோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாசிப்பயிற்சியானது கீழ்க்கண்ட நிலையில் இயங்குகிறது.
நம் உள்ளில் ஓடுவதை  பிராணன் என்கிறோம்
வெளியில்  போவதை அபானன் என்கிறோம்
வெளியில் போகின்ற அபானனை வெளியில் போக விடாமல்
பிராணனுடன் சேர்த்து உள்ளுக்குள்ளேயே ஒரே கதியாய் நடத்தி
ஒரே கதியாய் இயங்க வைத்து பிராணனை நேரே கொண்டு போவது

பிராணனை வெளியில் போகாமல் தன்னுள்ளிலடங்கி
கீழ் மேல் ஒரே கதியாய் வரும்போது நேரே ஆகின்றது.

உண்ணும்போது உயிரெழுத்தை உயரவாங்கி என்றால்
அபானனை வெளியில் விடாமல் பிராணனுடன் சேர்த்து
மேலே கொண்டு போகும்போது நீளமாகுகிறது என்று பொருள்.

உறங்குகின்ற போது எல்லாம்  அதுவேயாகும்
நாம் தூங்காத சமயத்தில் சுவாசக் காற்று எப்படி
இறைவனுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ
நாம் தூங்கும் சமயத்திலும் சுவாசக் காற்று இறைவனை
தொட்டு விட்டு திரும்ப வரும்.

நாம் தூங்குகிற சமயத்தில் நம்முடைய
சுவாசமானது பல்வேறு விதமாக இயங்க ஆரம்பிக்கிறது
சுவாச நிலையை நாம் தூங்கும் சமயத்தில் தெரிந்து கொள்ளலாம்
தூங்கும் போது குறட்டை உண்டாகிறது
தூங்கும் போது சுவாசமானது  இயங்கும் விதத்தைப் பொறுத்து
குறட்டை சத்தமானது மாறுபடும் ஒலி மாறுபடும்
குறட்டை பல்வேறு சத்தங்களுடன் எழும்பும்
அவை அத்தனையும் இறை நிலையுடன்
தொடர்பு படுத்தி வரும்  வெளிப்படும் குறட்டை அல்ல
சரியான குறட்டை மட்டுமே இறை இருக்கும் நிலையுடன்
தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வரும் அது தான் சரியான குறட்டை

அதனால் எல்லா குறட்டைகளும் சரியான குறட்டையும் அல்ல
எல்லா குறட்டைகளும் இறைநிலையுடன் இணைந்து வருவது அல்ல
சரியான குறட்டை எது என்று கண்டறிந்தால்
அதன் ஒலி எப்படி இருக்கும் என்று தெரியும்
அந்த ஒலியே அந்த குறட்டையே தூங்கும் போதும் இறைநிலையுடன்
தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வரும் ஒலி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தூங்காத சமயத்தில் செய்யப்படும் வித்தையினால்
சுவாசக் காற்று இறைநிலையுடன்
இணைந்து எத்தகைய தன்மையைப் பெறுகிறதோ
தூங்கும் சமயத்திலும் சுவாசக் காற்று இறைநிலையுடன்
தன்னை இணைத்துக் கொள்ளும் போது
ஏற்படும் ஒலியைக் கொண்ட குறட்டையை உணர்ந்து கொண்டால்
தூங்கும் சமயத்திலும் தூங்காத சமயத்திலும்
சுவாசக் காற்றானது  இறைநிலையுடன் இணைந்து வருகிறது
என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு

பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம் என்ற வார்த்தைகளுக்கு
சமுதாயம் ஒரு அர்த்தத்தை மக்கள் மனதில்  விதைத்து விட்டிருக்கிறது
இதற்கு அர்த்தம் நாம் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்
ஞானேந்திரியங்கள் ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து
ஆக மொத்தம் இந்திரியங்கள் 10.

பெண்ணின் பால் இந்திரியம்  விடும்போதெல்லாம் என்றால்
இந்தியரிங்களை பெண்ணின் பால் செலுத்தும் போது
இந்திரியங்களை பெண்ணின் பால் விழ வைக்கும் போது
இந்திரியங்களை பெண்ணின் பால் உபயோகப்படுத்தும் போது
ஏற்படக்கூடிய நிலைகளை நிகழும் நிகழ்வுகளை
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொருள்.

ஞானேந்திரியங்கள்-5 மெய், வாய், கண், மூக்கு, செவி
கர்மேந்திரியங்கள்-5 வாய், கை, கால், மலவாய்,கருவாய்
ஆக மொத்தம் இந்திரியங்கள்-10

இந்த 10 இந்திரியங்களை
எந்த ஒன்றின் மீது நாம்  செலுத்தினாலோ அல்லது
எந்த ஒன்றின் மீது பயன்படுத்தினாலோ  நம்முடைய சக்தி வீணாகிறது
எந்த ஒன்றின் மீது நாம்  நாம் நம் இந்திரியங்களை பயன்படுத்துகிறோமோ
அதற்கேற்றவாறு நம்முடைய சக்தி விரயமாகிறது
அதற்கேற்றவாறு நம்முடைய சக்தி வீணாகிறது.

நாம் எந்த ஒரு செயலைச் செய்ய
இந்திரியங்களை பயன்படுத்துகிறமோ அதற்கேற்றவாறு
அதன் தன்மைக்கேற்றவாறு சக்தி வெளிப்படுகிறது சக்தி செலவாகிறது.

நாம் எந்த ஒரு செயலைச் செய்ய இந்திரியங்களை பயன்படுத்தினாலும்
சக்தி குறைவாக வெளிப்படுகிறது சக்தி குறைவாகவே செலவாகிறது
ஆனால் பெண்கள் மீது நம் இந்திரியங்களை
பயன்படுத்தும் போது அதிக அளவில் சக்தி வெளிப்படுகிறது
அதிக அளவில் சக்தி விரயமாகிறது.

ஒரு பெண்ணை நாம் பார்க்கும் போது
கண் என்ற இந்திரியத்தால் பார்க்கும் போது
வாய் என்ற இந்திரியத்தால் பேசும் போது
மூக்கு என்ற இந்திரியத்தால் பெண் வாசனையை நுகரும் போது
மெய் என்ற இந்திரியத்தால் பெண்ணை தொடும் போது
கை என்ற இந்திரியத்தால பெண்னை அணைக்கும் போது
கால் என்ற இந்திரியத்தால் பெண்ணை உரசும் போது
சக்தி அதிக அளவில் விரயமாகும்.

இரண்டு எதிர் எதிர் சக்திகள் ஒன்றாக இணையும் போது
அதிக அளவில் சக்தி வெளிப்படுகிறது என்பது அறிவியல்
இரண்டு அணுக்களை ஒன்றாக மோத விடும்போது
அதிக அளவில் சக்தி வெளிப்படும் என்பது தெரிந்த விஷயம்.

அதைப்போலத் தான் நமக்கு
எந்த ஒன்றின் மீது பிடிப்பு இருக்கிறதோ
எந்த ஒன்றின் மேல் நமக்கு விருப்பம் இருக்கிறதோ
எந்த ஒன்றின் மேல் நமக்கு ஆசை இருக்கிறதோ
எந்த ஒன்றின் மேல் நமக்கு மையல் இருக்கிறதோ
அந்த ஒன்றின் மேல்  நம் இந்திரியங்களை பயன்படுத்தும் போது
எந்த இந்திரியங்களை பயன்படுத்தினாலும்
எந்த இந்திரியங்களை  அந்த செயலுக்காக செயல்படுத்தினாலும்
சக்தி அதிக அளவில் விரயமாகிறது.

சக்தி விரயமாகாமல்  சக்தி வெளிப்படுவது  அதிக அளவில் வீணாகாமல்
இருக்க வேண்டும் என்றால் பெண்ணை நினைத்து
பெண்ணின் மேல் இந்திரியங்களை  பயன்படுத்தும் போது
நாம் நம் சுவாசக் காற்றை மேல் நோக்கி சென்று
இறைநிலையுடன் கலந்து இருக்க வேண்டும்
இந்திரியங்களை பெண்ணின் மேல்
பயன்படுத்தும் போது எல்லாம்
நாம் நம் சுவாசக்காற்றை மேல் நோக்கி செலுத்தி
இறைநிலையுடன் இணைந்து நிற்பதன் மூலம் வெளிப்படும் சக்தி
விரயமாகாமல் உயர் நிலையை நோக்கி செல்லும்.

இது தான் பெண்ணின்பாலிந்திரியம் விடும்போதேல்லாம்
பேணி வலம் மேல் நோக்கி நில்லு என்பதற்கு இது தான் அர்த்தம்.

வாசியோகம் என்பது ஒரு சித்த வித்தை
இந்த வித்தையை செய்பவர்கள் வித்தியார்த்திகள்
இந்த உயர்ந்த கலையின் மகிமையை தெரிந்தவர்கள்
அதன் அருள்நிலையை புரிந்தவர்கள் அதன் உயர்நிலையை தெர்ந்தவர்கள்
அதன் சிறப்புத் தன்மையை அறிந்தவர்கள்
வாசியோகத்தை உயர் நிலையில் வைத்து போற்றுவர் அதன் வழி நடப்பவர்

வாசியோகம் என்பது இறை நிலைக்கான நுழைவு வாயில்
கர்மாவைக் கழிக்கும் திறவுகோல் பிறவியை எரிக்கும் காட்டுத்தீ
ஜென்மாவை புதைக்கும் அரிய நிலை.

மந்திரங்கள் தந்திரங்கள் யந்திரங்கள்
யோகம் , தியானம், தவம், மூச்சுப்பயிற்சிகள் மற்றவை எல்லாமே
மனிதனுடைய கர்மாவை கழிப்பவை
அவை ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே கர்மாவைக் கழிக்கும்.

எந்த அளவிற்கு கர்மா கழிகிறதோ அந்த அளவிற்கு தான்
மனிதன் இறைவனிடம் நெருங்கி செல்ல முடியும்
கர்மா குறைய குறைய கர்மா கழிய கழிய
மனிதன் இறைவனிடம் நெருங்கி செல்லும்  தூரம் குறையும்.

மனிதனுக்கும் கடவுளுக்கும்உள்ள தூரம் குறைய வேண்டுமானால்
மனிதன் இறைவனிடம்  நெருங்கி செல்ல வேண்டும் என்றால்
மனிதன் இறைவனிடம் கலக்க வேண்டும் என்றால்
மனிதன் இறைவனிடம் நெருங்கி செல்ல வேண்டும் என்றால்
மனிதன் தன் கர்மாவைக் கழிக்க  வேண்டும் என்றால்
மனிதன் தன் பிறவியை எரிக்க  வேண்டும் என்றால்
மனிதன் தன் ஜென்மாவை அழிக்க வேணடும் என்றால்
மனிதன் பிரம்ம ரகசியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால்
மனிதன் பரப்பிரம்மத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால்
மனிதன் மறை பொருள் நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால்
மனிதன் இறைவனாகவே  மாற வேண்டும் என்றால்
மனிதன் இறவா நிலையை அடைய  வேண்டும் என்றால்
மனிதன் பிறவா நிலையை பெற வேண்டும் என்றால்
உயர்ந்த சித்தர் கலையான சித்த வித்தை எனப்படும்
மௌன வித்தை எனப்படும் வாசியோகத்தை பயன்படுத்த வேண்டும்
என்பதை உணர்ந்ததால் சித்தர்கள் இதைப் பயன்படுத்தினர்.

இறைவனாகவே மாறி விட்டவர்கள் இறை நிலையை உணர்ந்தவர்கள்
உண்மை உணர்ந்த பெரியோர்கள் மறை பொருள் உணர்ந்த மகான்கள்
உள் உணர்வு உயர்வு பெற்ற ஆன்றோர்கள்
இறைவனுடன் இணைந்து நிற்கும்  மறைபொருள் உணர்வு பெற்றோர்
தான் உணர்ந்ததை மக்கள் தெரிய வேண்டும்
உணர வேண்டும் அனுபவிக்க வேண்டும்
என்பதை உணர்ந்து உயர்ந்த எண்ணத்தில் உயர்ந்த குறிக்கோளில்
வாசி என்றால் என்ன என்றும் வாசி என்றால் எது என்றும்
மக்கள் உணர்ந்து பின்பற்ற வேண்டும்
என்பதற்காக அந்த அரிய கலையை அந்த உயர்ந்த கலையை
அந்த சிறப்பு வாய்ந்த வித்ததையை சொல்லி தருகின்றனர்.
குரு சீடன் பரம்பரையில் வரும் சித்த வித்தை உயர்ந்த நிலையில் இருப்பதை
சித்தர்கள் கலை உயர்ந்த நிலையில்
இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்
சித்த வித்தையை செயல்படுத்துவதால்
ஏற்படும் மாற்றங்களை  உண்மையாக உணர்ந்தவர்கள்
அதனை தொடர்ந்து தன் வாழ்வில் செய்து வருகின்றனர்.

வாசியோகத்தைப் பற்றி ஒரு
முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்
வாசியோகம் என்பது கர்மாவைக் கழித்து
இறைவனை அறிய வைத்து; இறைவனுடன் இணைய வைத்து;
இறைவனுடன் கலக்க வைத்து; இறைவனாகவே மாற்றுவது;

வாசியோகமானது
100 சதவீதம் நம் கர்மாவைக் கழிப்பது
கர்மாவைக் கழிக்கும் போது ஏற்படும் விளைவைக் கொடுத்துவிடும்
பல பிறவிகளாக பல ஜென்மங்களாகசேர்த்துவைத்த நம் கர்மாக்களை
இது வரை எடுத்த பிறவிகளிலும் இனி எடுக்கப்போகும் பிறவிகளிலும்
இருக்கும் கர்மாக்களை கழிப்பதன் மூலமே
முன் பின் கர்மாக்களை கழிப்பதன் மூலமே நாம் முக்தி அடைய முடியும்.
ஞானம் அடைந்து சித்தி அடைந்து  முக்தி அடைய முடியும்.

ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு
நாம் ஒரு செயலை ஒரு கர்மாவை செய்யும் போது
ஒரு கர்மாவை உண்டு பண்ணும்
ஒரு செயலைச் செய்யும்போது செய்யப்படும் செயல்
நடைபெறும் சூழ்நிலை நடைபெறும் காலம்
நடைபெறும் செயலின் தன்மையைப் பொறுத்து விளைவானது
தகுந்த காலத்தில் வெளிப்படும்
அது மணியாக இருக்கலாம் அல்லது நாளாக இருக்கலாம் அல்லது
ஆண்டாக இருக்கலாம் அல்லது அடுத்த ஜென்மாவாக இருக்கலாம்
அதனால் தான் நாம் அடுத்த ஒரு ஜென்மா  தேவை இல்லை
அடுத்த ஒரு பிறவி தேவை இல்லை இனி ஒரு பிறப்பே தேவை இல்லை
நான் பிறக்க ஆசைப்படவேஇல்லை என்பவர்கள்
முக்தி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வாசி யோகத்தை செய்யலாம்.

வாசியோகத்தை தகுந்த குருவிடம் கற்றுக் கொண்டு தொடர்ந்து
நாள் தோறும் தவறாமல ஒரு குறிப்பிட்ட வேளையில்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் தவறாமல் செய்யும் போது
உண்டாகும் அக்கினி அலையானது நம் கர்மாவை எரிக்கத் தொடங்கும்
எந்த ஒரு பொருளை எரித்தாலும்
எரிக்கப்பட்ட பொருளின் மீதம் கரியாக இருக்கும்.

அதைப் போலத்தான் நாம்  வாசியோகத்தின் மூலம்
நம் கர்மாவை நாம் எரிக்கும்போது
செய்த கர்மாவிற்கு தகுந்த விளைவை அனுபவித்தே ஆக வேண்டும்.

அனுபவிக்க வேண்டும் என்றவுடன் பயப்பட வேண்டிய அவசியமில்லை
எந்த கஷ்டம் வந்தாலும் சித்தர்கள் நம் அருகில் இருப்பார்கள்
இறைவன் நம் அருகில் இருப்பான்
இவர்கள் நம்மையே கவனித்துக் கொண்டு இருப்பார்கள்

கர்மாவைக் கழிக்கும் போது ஏற்படும்
விளைவினால் ஏற்படும் கஷ்டங்களை தாங்கக் கூடிய சக்தி
இவர்களுக்கு இருக்கிறதா என்று  பரிசோதித்து பார்ப்பார்கள்
இழப்புகளையும் வேதனைகளையும் துயரங்களையும் கஷ்டங்களையும்
தோல்விகளையும் நாம் எப்பபடி எதிர்கொள்கிறோம் என்பதைப்
பொறுத்தே நாம் வாசியோகம் செய்யும் போது பலன் கிடைக்கும்.

எந்த ஒன்றையும் இழக்காமல் எந்த ஒன்றையும் பெற முடியாது
உயர்ந்த ஒன்றை பெற வேண்டும் என்றால்
உயர்ந்த ஒன்றை இழந்து தான் ஆக வேண்டும்.

வாசியோகத்தை  உண்மையாக கற்றவர்கள்
வாசியோகத்தை செய்து உண்மையை உணர்ந்தவர்கள்
வாசியோகத்தை செய்வதன் மூலம்
என்ன நடக்கும் என்பதை உணர்ந்தவர்கள்
வாசியோகத்தை முறையாக பயிற்சி செய்துஅதன் பலன் கண்டவர்கள்
வாசியோகத்தை உண்மையாகச் செய்பவர்கள்
உண்மையான வாசியோகத்தை செய்பவர்கள்
வாசியோகத்தின் மதிப்பை  உணர்ந்து இருப்பார்கள்.

வாசியோகத்தை செய்பவர்கள்  எதிலிருந்து வந்தார்களோ
அதுவாகவே மாறுகிறார்கள் அது அதுவாகவே மாறி விட்டால்
அது சொல்ல ஆரம்பித்து விடும்.
இது வாசியோகம் செய்பவர்களுக்குதெரியும்.

இறவா நிலையை அடைவதற்கும் பிறவா நிலையை பெறுவதற்கும்
வாசியோகத்தால் முடியும் என்பதை  வாசியோகம் செய்பவர்களுக்கு தெரியும்.

யோகம் தியானம் மூச்சுப் பயிற்சி மந்திரம் மூலிகைகள்
ஆகியவைகளைக் கொண்டு
செய்யப்படுபவைகள் அனைத்தும் இந்த சித்த வித்தைக்கு ஈடாகாது
இவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு
சித்த வித்தை ஒன்றை மட்டுமே செய்து
வந்தால் மற்றவை எவையும் தேவையில்லை.
தின்னும் காய் இலை மருந்து அதுவேயாகும் என்றால்
நாம் உடலுக்காக உணவை உண்ணுவதும்
உயிருக்காக சுவாசக் காற்றை உண்ணுவதும் தனித்தனியாக தேவையில்லை
சித்த வித்தை மட்டும் செய்தால் போதும்
வாசியோகம்  என்ற ஒன்றை மட்டு செய்தால்
மற்ற எவையும் செய்ய வேண்டிய அவசியமில்லை
வாசியோகம் மட்டும் செய்தால் போதும்
உடலுக்கு தேவையான உணவும் உயிருக்கு தேவையான உணவும்
ஆன்மீகத்துக்கு தேவையான உணவும்
முக்திக்குத் தேவையான வழியும் கிடைக்கும்
அதனால் தான் அகத்தியர்
தின்னுங் காய் இலை மருந்து  அதுவேயாகும் என்கிறார்.

நம் உடலில் தச வாயுக்கள் உள்ளன.
பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன்,
நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்ஜெயன்,
இவைகளில் பிராணன் அபானன் முக்கியமானவை.

பிராணன் நம் உள்ளில் இருப்பது அபானன்  வெளியில் போவது
வெளியில் போகும் அபானனை  வெளியில் போக விடாமல்
பிராணனுடன் போனனை சேர்த்து
உள்ளுக்குள்ளேயே ஒரே கதியாய் நடத்துவது

அவ்வாறு நடத்தும்போது வெளியில் செல்லாமல் உள்ளுக்குள்ளேயே
மேல் கீழாய் ஒரே கதியாய் வரும்போது மேல் கீழாய் நேராக வரும்போது
வெளியில் செல்லாமல் உள்ளுக்குளேயே ஒரே நிலையில் இருக்கிறது.

இவ்வாறு மேல் கீழாய் ஒரே கதியாய் ஓடும்போது
நம் ஜீவசக்தியை வெளியில் விடாமல் தனக்குள்ளேயே மேல் கீழாய் நடத்தி
பத்தாவது வாசலுக்குள் சென்று பிரம்மந்திரத்தைத் திறக்க வேண்டும்
பிரம்மரந்திரத்தை திறந்து
நம் ஜீவசக்தியை பிரம்மத்துடன் கலக்க வேண்டும்
அப்பொழுதே மனிதன் கடவுளாகிறான்.

நாம் அதுவாகவே மாறி விட்டால் நமக்கு பிறப்பு இல்லை இறப்பு இல்லை.
இந்த வித்தையை தொடர்ந்து நாள்தோறும் செய்து வர
தொடர்ந்து செய்து வர நேரம் தவறாமல் செய்து வர மரணம் இல்லை.

அழியக்கூடியது அழியாத ஒன்றுடன்  இணையும் போது அழியும் ஒன்று
அழியாத ஒன்றாக மாறி விடுகிறது.

சிறிய ஒன்று பெரிய ஒன்றுடன் சேரும் போது
சிறிய ஒன்று, பெரிய ஒன்றாக மாற்றம் அடைகிறது
1000 லிட்டர் பாலில் 1 லிட்டர் தண்ணீர் கலந்தால்
தண்ணீர் பாலோடு ஒன்றாகி விடுகிறது அல்லது
1000 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் பால் கலந்தால்
பால் தண்ணீரோடு கலந்து விடுகிறது

சிறிய ஒன்று பெரிய ஒன்றுடன் சேரும் போது
சிறிய ஒன்று பெரிய ஒன்றாகவே மாற்றம் அடைந்து விடுகிறது
அதைப்போலவே சிறிய ஆத்மா  பெரிய ஆத்மாவுடன் சேரும்போது
சிறிய ஆத்மா பெரிய ஆத்மாவாகவே மாறி விடுகிறது
ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேரும்போது.
ஜீவாத்மா பரமாத்மாவாகவே மாறி விடுகிறது.

அழியக்கூடிய உடல் அழியாத இறைநிலையுடன் கலக்கும்போது
அழியக்கூடிய உடலும் அழியாத நிலையை அடைகிறது.

தினந்தோறும் இத்தகைய சிறப்புமிக்க சித்த வித்தை எனப்படும்
வாசியோகத்தை செய்வதன் மூலம்
மரணத்தை வென்று வாழலாம்
மரணமின்றி வாழலாம் இந்த உலகம் உள்ள வரை வாழலாம்
மரணம் இன்றி இந்த உலகம் உள்ள வரை வாழலாம்
என்கிறார் அகத்தியர்.


இயேசு கிறிஸ்து - அகத்தியர்
இயேசு கிறிஸ்து,
இச் சமுதாயம்
தேவையுடைய செயலை தேவையற்ற செயலாகவும்
தேவையற்ற செயலை தேவையுடைய செயலாகவும்
நினைத்து செயல்படுவதால் பல்வேறு துன்பங்கள் ஏற்படுகின்றன
என்கிறார்.

அவ்வாறே
அகத்தியரும்
நாம் இச்சமுதாயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் எவை என்று
உணர்ந்து செயல்பட்டால் துன்பங்கள் எதுவுமில்லை
என்கிறார்.


""""போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
         போற்றினேன் பதிவுஎழுபத்துஐந்துந் தான்முற்றே""""