June 26, 2020

அறிய வேண்டியவை-பதிவு-61


                 ஜபம்-பதிவு-553
           (அறிய வேண்டியவை-61)

“உன்னுடைய
கருணையே
கருணை என்று
கிருஷ்ணனை
வணங்கிக்
கொண்டிருக்கும் போதே
கர்ணனுடைய
ஆன்மா
கர்ணனை
விட்டுப் பிரிகிறது “

“கர்ணனுடைய
ஆன்மா
கிருஷ்ணனுடன்
கலந்து விடுகிறது”

“கர்ணனுடைய
ஜீவாத்மா
கிருஷ்ணன் என்ற
பரமாத்மாவுடன்
கலந்து
விடுகிறது “

“கர்ணனுடைய
ஆன்மா
தன்னுடைய
இறுதி
யாத்திரையை
முடித்துக்
கொண்டது “

“அது அதுவாகவே
மாறி விடுகிறது”

“இந்தக் கதையில்
முக்கியமான
உண்மை ஒன்று
நாம் அறிய
வேண்டியதிருக்கிறது”

“மனிதனுடைய
ஆன்மாவில்
பதிந்துள்ள
பாவப்பதிவுகளும்
புண்ணியப்
பதிவுகளும்
கழிந்தால் மட்டுமே
ஆன்மா
மோட்சத்தை
அடைய முடியும்”

“கர்ணன்
பிறந்தது முதல்
வாழும்
காலத்திலும்
இறக்கும்
வரையிலும்
தன்னுடைய
ஆன்மாவில்
பதிந்துள்ள
பாவப் பதிவுகளின்
விளைவுகளான
துன்பங்களை
அனுபவித்து
விட்டான் “

“கர்ணனுடைய
ஆன்மாவில்
புண்ணியப்
பதிவுகள்
மட்டுமே
பதிந்து
இருந்தது “

“புண்ணியப்
பதிவுகளுக்கான
விளைவுகளை
அனுபவிக்காமல்
கர்ணனால்
மோட்சத்தை
அடைய
முடியாது “

“கர்ணன்
மோட்சத்தை
அடைய
வேண்டுமானால்
கர்ணனுடைய
ஆன்மாவில்
பதிந்துள்ள
புண்ணியப்
பதிவுகள்
அழிய
வேண்டும் “

“புண்ணியப்
பதிவுகளை
அனுபவிக்கும்
அளவிற்கு
கர்ணனுடைய
உடலில்
தெம்பு இல்லை “

“இதனை உணர்ந்து
தான் கிருஷ்ணன்
உன்னுடைய
புண்ணியங்கள்
அனைத்தையும்
எனக்கு
தர்மமாகக்
கொடு
என்று
கேட்டு
வாங்கினார் “

“கர்ணனும்
என்னுடைய
புண்ணியங்கள்
அனைத்தையும்
தருவதாகக் கூறி
தன்னுடைய
புண்ணியத்தை
எல்லாம்
தர்மமாக
அளித்து
விட்டான் “

“கர்ணன்
தன்னுடைய
புண்ணியங்கள்
எல்லாவற்றையும்
தர்மமாக
அளித்ததின்
மூலம்
அவனுக்கு
புண்ணியம்
தானே சேர
வேண்டும்
என்பார்கள்
அது தவறான
கருத்து “

“கர்ணன்
தன்னுடைய
புண்ணியங்கள்
அனைத்தையும்
பரமாத்மாவான
கிருஷ்ணனிடம்
கொடுக்கிறார் ;
இதனால்
கர்ணனுடைய
ஆன்மாவில்
பதிந்துள்ள
கர்மாக்களில்
ஏற்கனவே
கழிந்த
பாவப்பதிவுகளோடு
புண்ணியப்
பதிவுகளும்
கழிந்து
விடுகிறது “

“அதனால்
கர்ணனுடைய
ஆன்மா
தூய்மை
அடைகிறது “

“கர்ணன்
தன்னுடைய
ஆன்மாவை
பரமாத்மாவான
கிருஷ்ணனிடம்
ஒப்படைத்து
விடுகிறான் “

“கர்ணனுடைய
ஜீவாத்மா
கிருஷ்ணனுடைய
பரமாத்மாவுடன்
கலந்து
விடுகிறது “

“அது அதுவாகவே
மாறி விடுகிறது”

“கர்ணன்
மோட்சத்தை
அடைந்து
விடுகிறான்”

“இது தான்
இந்தக் கதையில்
அறிய வேண்டிய
உண்மை ஆகும்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 26-06-2020
//////////////////////////////////////////


அறிய வேண்டியவை-பதிவு-60


             ஜபம்-பதிவு-552
        (அறிய வேண்டியவை-60)

கர்ணன் :
“புண்ணியங்கள்
பதிந்துள்ள
என்னுடைய
ஆன்மாவை
உங்களுக்கு
தர்மமாக
அளிக்கிறேன்
என்னுடைய
ஆன்மாவை ஏற்றுக்
கொள்ளுங்கள் “

கிருஷ்ணன் :
“தர்மமாகப் பிறந்து
தர்மமாக வாழ்ந்து
சாகும் நிலையிலும்
தர்மம் செய்த கர்ணா”

“இந்த உலகம்
இருக்கும் வரைக்கும்
உன்னுடைய பெயர்
தர்மத்திற்கு
எடுத்துக் காட்டாக
இருக்கும்”

“தர்மவான் கர்ணன்
என்று இந்த
உலகம்
உன்னை போற்றும்”

“பிறந்தது முதல்
பாவப்பதிவுகளின்
விளைவுகளால்
அவமானங்களையும் ;
துன்பங்களையும் ;
வேதனைகளையும் ;
கஷ்டங்களையும் ;
துரோகங்களையும் ;
சாபங்களையும்
அனுபவித்ததின் மூலம்
உன்னுடைய
பாவப்பதிவுகள்
அனைத்தும்
தீர்ந்து விட்டது “

“புண்ணியப்
பதிவுகள்
எஞ்சியிருந்ததால்
உன்னுடைய உயிர்
உன்னை விட்டு
போகவில்லை
புண்ணியப்
பதிவுகளை
நீ எனக்கு
தர்மம் செய்ததால்
உன்னுடைய
புண்ணியப்
பதிவுகளும்
கழிந்து விட்டது “

“உன்னுடைய
ஆன்மா
பாவப்பதிவுளையும்
கழித்து விட்டது
புண்ணியப்
பதிவுகளையும்
கழித்து விட்டது”

“பாவப் பதிவுகளும்
புண்ணியப்
பதிவுகளும்
இல்லாத ஒரு
நிலையில்
உன்னுடைய
ஆன்மா
தூய்மையாக
இருக்கிறது “

“உன்னுடைய
ஆன்மா
தன்னுடைய
பயணத்தை
இத்துடன் முடித்துக்
கொள்கிறது “

“உன்னுடைய
ஆன்மா
முக்தி என்ற
மோட்சத்தை 
அடைவதற்கு
தயாராகி விட்டது”

“கர்ணா நான்
உனக்கு
முக்தியை
அளிக்கிறேன் “

கர்ணன் :
“எனக்கு முக்தியை
அளிப்பதற்கு
நீங்கள் யார்

உங்களால் எப்படி
எனக்கு முக்தியை
அளிக்க  முடியும்”

“முக்தியை நீங்கள்
எனக்கு
அளிப்பவராக
இருந்தால்
நீங்கள்
சாதாரண மனிதராக
இருக்க முடியாது
முக்தியை
அளிக்கிறேன்
என்று சொன்ன
நீங்கள் யார்”

கிருஷ்ணன் :
“கர்ணா
நன்றாகப் பார்”

“என்னை
நன்றாகப் பார் !
நன்றாக
என்னைப் பார் ! “

(கர்ணன் பார்க்கிறான்
அந்தணர் வேடத்தில்
இருந்த கிருஷ்ணன்
தன்னுடைய
விஸ்வரூப
தரிசனத்தைக்
காட்டுகிறார்)

கர்ணன் :
(கிருஷ்ணனை
வணங்குகிறான்)

“பரம்பொருளே
அனாதை ரட்சகா
இந்த உலகத்தை
ரட்சிக்கும்
பரந்தாமா”

“யாருக்கும்
கிடைக்காத
பாக்கியம் எனக்குக்
கிடைத்து இருக்கிறது”

“தாங்கள்
தானா - இந்த
எளியவனிடம்
யாசகம் கேட்க
மாறு வேடத்தில்
வந்தது”

“தாங்கள் கேட்டிருந்தால்
என்னிடம் இருக்கும்
எதையும் இல்லை  ;
என்று சொல்லாமல்
கொடுத்து இருப்பேனே “

“உன்னுடைய
உருவில்
வந்திருந்தால் - நான்
தரமாட்டேன் என்று
சொல்லி
விடுவேன் என்று
நினைத்து விட்டாயா”

“எதற்கு இந்த
மாறுவேடம்
ஏன் இந்த நாடகம்
கிருஷ்ணா”

“கடவுளான நீ
மனிதனான
என்னிடம்
தர்மம் கேட்டு
அதை நான் உனக்கு
அளித்ததின் மூலம்
என்னுடைய
மதிப்பை
இந்த உலகத்தில்
உயர்த்தி விட்டாய்”

“யாருக்கும்
கிடைக்காத
மிகப்பெரிய
பாக்கியம்
எனக்கு
கிடைக்கும் படிச்
செய்து விட்டாய்”


----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 26-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-59


             ஜபம்-பதிவு-551
       (அறிய வேண்டியவை-59)

கிருஷ்ணன் :
“யாரிடமும்
இல்லாத
உயர்ந்த ஒன்று
உன்னிடம் இருக்கிறது”

“யாரும் பெற
முடியாத
உயர்ந்த ஒன்று
உன்னிடம்
இருக்கிறது”

“இந்த உலகத்தில்
இது வரை
பிறந்தவர்களாலும்
இனி இந்த
உலகத்தில்
பிறக்கப்
போகிறவர்களாலும்
பெற முடியாத
ஒன்று
உன்னிடம்
இருக்கிறது”

“யாரும்
நினைத்துக் கூட
பார்க்க முடியாத
உயர்ந்த ஒன்று
உன்னிடம்
இருக்கிறது”

“உயிரை விட
முக்கியமான ஒன்று
உன்னிடம்
இருக்கிறது”

“உயிரை விட
மேலான ஒன்று
உன்னிடம்
இருக்கிறது”

கர்ணன் :
“நீங்கள் சொல்வது
எனக்கு புரியவில்லை”

“என்னிடம் நீங்கள்
சொல்லும் உயர்ந்த
ஒன்று இருந்தால்
அதை உங்களுக்கு
அளிப்பதில் நான்
மிக்க மகிழ்ச்சி
அடைவேன்”

“என்னிடம்
இருக்கும்
உயர்ந்த ஒன்று
எது என்று
சொல்வீர்கள்
என்றால்
அதை நான்
உங்களுக்குத்
தருகிறேன் “

“என் உயிர்
என்னை விட்டு
பிரியும் முன்
அதைக் கேட்டுப்
பெற்றுக்
கொள்ளுங்கள் “

“உதவி கேட்டு
செய்யாமல் போய்
விட்டான் கர்ணன்
என்ற அவச்சொல்
எனக்கு ஏற்படாமல்
என்னை உதவி
செய்ய
அனுமதியுங்கள்”

“என்ன வேண்டும்
தங்களுக்கு
கேளுங்கள்”

கிருஷ்ணன் :
“நான் கேட்கும்
உயர்ந்த ஒன்றை
நீ அளிக்காமல்
உன்னால்
உன்னுடைய
உயிரை விட
முடியாது கர்ணா”

“அந்த உயர்ந்த
ஒன்று உன்னிடம்
இருக்கும் வரை
மரணமும்
உன்னை
நெருங்காது “

“காலனும் உன்னை
நெருங்க முடியாது”

“காலமும் கை
கட்டி வேடிக்கை
பார்த்துக்
கொண்டிருக்க
வேண்டியது தான்”

கர்ணன் :
“என்னிடம் உயர்ந்த
ஒன்று என்று
தாங்கள் எதை
சொல்கிறீர்கள்”

“அந்த உயர்ந்த
ஒன்றை என்னிடம்
கேளுங்கள்
நான் உங்களுக்குத்
தருகிறேன் ;
காலம் தாழ்த்தாமல்
கேளுங்கள் ;
நான் உங்களுக்கு
அளிப்பதற்கு
தயாராக
இருக்கிறேன் “

கிருஷ்ணன் :
“நீ செய்த
புண்ணியத்தை
எல்லாம் எனக்குத்
தர்மமாக
வழங்க வேண்டும்”

கர்ணன் :
“என்னுடைய
மனம் குளிர்ந்தது
இறந்து
கொண்டிருக்கும்
எனக்கு - நீங்கள்
கேட்ட வார்த்தைகள்
எனக்கு
மன மகிழ்ச்சியை
அளிக்கிறது
இது வரை நான்
செய்ததிலேயே
மிகப் பெரிய
தர்மம் இப்போது
செய்யப்
போவது தான் “

“என்னுடைய
புண்ணியங்கள்
அனைத்தும்
என்னுடைய
ஆன்மாவில்
பதிந்து இருக்கிறது”

“ஆன்மாவில்
பதிந்து இருக்கும்
நான் செய்த
புண்ணியங்களை
தனியாக பிரித்துக்
கொடுக்க
என்னால் முடியாது”

“புண்ணியங்கள்
பதிந்துள்ள
என்னுடைய
ஆன்மாவை
என்னுடைய உடலில்
இருந்து பிரித்து
உங்களுக்கு
தர்மமாக
அளிக்கிறேன்”

(என்று சொல்லிக்
கொண்டே உடலில்
துளைத்துக் கொண்டு
நின்ற பாணத்தை
எடுக்கும் போது
கொட்டிய இரத்தத்தை
கிருஷ்ணனின்
கையில் ஊற்றிய
படி கர்ணன்
சொன்னான்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 26-06-2020
//////////////////////////////////////////