June 26, 2020

அறிய வேண்டியவை-பதிவு-59


             ஜபம்-பதிவு-551
       (அறிய வேண்டியவை-59)

கிருஷ்ணன் :
“யாரிடமும்
இல்லாத
உயர்ந்த ஒன்று
உன்னிடம் இருக்கிறது”

“யாரும் பெற
முடியாத
உயர்ந்த ஒன்று
உன்னிடம்
இருக்கிறது”

“இந்த உலகத்தில்
இது வரை
பிறந்தவர்களாலும்
இனி இந்த
உலகத்தில்
பிறக்கப்
போகிறவர்களாலும்
பெற முடியாத
ஒன்று
உன்னிடம்
இருக்கிறது”

“யாரும்
நினைத்துக் கூட
பார்க்க முடியாத
உயர்ந்த ஒன்று
உன்னிடம்
இருக்கிறது”

“உயிரை விட
முக்கியமான ஒன்று
உன்னிடம்
இருக்கிறது”

“உயிரை விட
மேலான ஒன்று
உன்னிடம்
இருக்கிறது”

கர்ணன் :
“நீங்கள் சொல்வது
எனக்கு புரியவில்லை”

“என்னிடம் நீங்கள்
சொல்லும் உயர்ந்த
ஒன்று இருந்தால்
அதை உங்களுக்கு
அளிப்பதில் நான்
மிக்க மகிழ்ச்சி
அடைவேன்”

“என்னிடம்
இருக்கும்
உயர்ந்த ஒன்று
எது என்று
சொல்வீர்கள்
என்றால்
அதை நான்
உங்களுக்குத்
தருகிறேன் “

“என் உயிர்
என்னை விட்டு
பிரியும் முன்
அதைக் கேட்டுப்
பெற்றுக்
கொள்ளுங்கள் “

“உதவி கேட்டு
செய்யாமல் போய்
விட்டான் கர்ணன்
என்ற அவச்சொல்
எனக்கு ஏற்படாமல்
என்னை உதவி
செய்ய
அனுமதியுங்கள்”

“என்ன வேண்டும்
தங்களுக்கு
கேளுங்கள்”

கிருஷ்ணன் :
“நான் கேட்கும்
உயர்ந்த ஒன்றை
நீ அளிக்காமல்
உன்னால்
உன்னுடைய
உயிரை விட
முடியாது கர்ணா”

“அந்த உயர்ந்த
ஒன்று உன்னிடம்
இருக்கும் வரை
மரணமும்
உன்னை
நெருங்காது “

“காலனும் உன்னை
நெருங்க முடியாது”

“காலமும் கை
கட்டி வேடிக்கை
பார்த்துக்
கொண்டிருக்க
வேண்டியது தான்”

கர்ணன் :
“என்னிடம் உயர்ந்த
ஒன்று என்று
தாங்கள் எதை
சொல்கிறீர்கள்”

“அந்த உயர்ந்த
ஒன்றை என்னிடம்
கேளுங்கள்
நான் உங்களுக்குத்
தருகிறேன் ;
காலம் தாழ்த்தாமல்
கேளுங்கள் ;
நான் உங்களுக்கு
அளிப்பதற்கு
தயாராக
இருக்கிறேன் “

கிருஷ்ணன் :
“நீ செய்த
புண்ணியத்தை
எல்லாம் எனக்குத்
தர்மமாக
வழங்க வேண்டும்”

கர்ணன் :
“என்னுடைய
மனம் குளிர்ந்தது
இறந்து
கொண்டிருக்கும்
எனக்கு - நீங்கள்
கேட்ட வார்த்தைகள்
எனக்கு
மன மகிழ்ச்சியை
அளிக்கிறது
இது வரை நான்
செய்ததிலேயே
மிகப் பெரிய
தர்மம் இப்போது
செய்யப்
போவது தான் “

“என்னுடைய
புண்ணியங்கள்
அனைத்தும்
என்னுடைய
ஆன்மாவில்
பதிந்து இருக்கிறது”

“ஆன்மாவில்
பதிந்து இருக்கும்
நான் செய்த
புண்ணியங்களை
தனியாக பிரித்துக்
கொடுக்க
என்னால் முடியாது”

“புண்ணியங்கள்
பதிந்துள்ள
என்னுடைய
ஆன்மாவை
என்னுடைய உடலில்
இருந்து பிரித்து
உங்களுக்கு
தர்மமாக
அளிக்கிறேன்”

(என்று சொல்லிக்
கொண்டே உடலில்
துளைத்துக் கொண்டு
நின்ற பாணத்தை
எடுக்கும் போது
கொட்டிய இரத்தத்தை
கிருஷ்ணனின்
கையில் ஊற்றிய
படி கர்ணன்
சொன்னான்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 26-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment