ஜபம்-பதிவு-549
         (அறிய
வேண்டியவை-57)
அர்ஜுனன்
: 
“என்ன
கிருஷ்ணா 
என்ன
நடக்கிறது 
இங்கே
- நான் 
விடும்
பாணங்கள் 
அனைத்தும்
கர்ணனின்
உடலைத்
துளைக்காமல்
மலர்
மாலையாக 
கர்ணனின்
மேல் 
விழுந்து
கொண்டிருக்கிறதே!:
கிருஷ்ணன்
: 
“அர்ஜுனா!
தர்ம
தேவதை 
உன்னுடைய
அம்புகளை
தடுத்து
நிறுத்துகிறாள்”
“தர்மம்
அவனைக் 
காத்து
நிற்கிறது”
“கர்ணனுக்கு
காவலாக
தர்ம
தேவதை 
நின்று
கொண்டிருக்கிறாள்”
“தர்ம
தேவதை 
கர்ணனுக்கு
காவலாக
இருக்கின்ற
காரணத்தினால்
மரண
தேவனும் 
கர்ணனை
நெருங்க 
அச்சப்பட்டு
கர்ணனை
நெருங்காமல்
தள்ளி
நின்று 
கொண்டிருக்கிறான்”
“காலன்
தன்னுடைய 
கடமையைச்
செய்ய 
முடியாமல்
கலங்கி
நிற்கிறான்
காலம்
என்ன 
செய்வது
என்று 
தெரியாமல்
விழிபிதுங்கி
நின்று 
கொண்டிருக்கிறது
“
“கர்ணன்
செய்த
தர்மம் 
அவனைக்
காத்துக் 
கொண்டிருக்கிறது
“
“கர்ணன்
செய்த 
புண்ணியங்கள்
அனைத்தும்
அவனுடைய
உயிர் 
அவனை
விட்டுப் 
பிரியாமல்
பார்த்துக் 
கொண்டிருக்கிறது”
“கர்ணன்
செய்த 
பாவங்கள்
அனைத்தும்
கழிந்து
விட்டது “
“பாவத்தின்
பலன்களை
எல்லாம்
கர்ணன் 
அனுபவித்து
விட்டான்
அவனுடைய
புண்ணியப்
பதிவுகள் 
மட்டுமே
அவனிடம்
எஞ்சி
நிற்கிறது”
“புண்ணியப்
பதிவுகள்
அவனிடம்
இருக்கின்ற
காரணத்தினால்
அவன்
இறக்க 
முடியாமல்
தவித்துக்
கொண்டிருக்கிறான்”
“இது
தான் 
கர்ணனுக்கு
கடைசி
பிறவி
அவன்
செய்த 
பாவப்பதிவுகள்
அனைத்தும்
கழிந்து
விட்டாலும் 
கர்ணன்
செய்த 
புண்ணியப்
பதிவுகள்
இருக்கின்றது”
“கர்ணன்
செய்த 
புண்ணியத்திற்கென்று
கர்ணன்
ஒரு
பிறவி 
எடுத்தாக
வேண்டும்”
“கர்ணனுக்கு
இது
கடைசி 
பிறவி
என்ற 
காரணத்தால்
கர்ணனால்
புண்ணியத்திற்கென்று
ஒரு
பிறவி 
எடுக்க
முடியாது
புண்ணியப்
பதிவுகளின் 
விளைவுகளை
கர்ணன்
இந்தப் 
பிறவியில்
அனுபவித்துத்
தான் 
ஆக
வேண்டும் 
அதனால்
அவனுடைய 
உயிர்
அவனை 
விட்டு
போகாமல் 
இருக்கிறது”
“கர்ணனுக்கு
இது 
கடைசி
பிறவி 
இந்தப்
பிறவியில் 
அவன்
முக்தி என்ற 
மோட்சத்தை
அடைந்து
ஆக
வேண்டும்
அவனுடைய
புண்ணியத்தை
கழிக்க
வேண்டும்
கர்ணன்
இருக்கும் 
நிலையில்
அவனால் 
புண்ணியப்
பதிவுகளை 
கழிக்க
முடியாது”
“அது
மட்டும் இல்லை 
அவனால்
இன்னொரு 
பிறவியும்
எடுக்க
முடியாது”
“இந்த
இக்கட்டான 
நிலையில்
கர்ணன் 
துடித்துக்
கொண்டிருக்கிறான்”
“இதனை
சரி செய்ய 
வேண்டுமானால்
நான்
தான் 
செல்ல
வேண்டும்”
“கர்ணனுக்கு
நான் 
செய்ய
வேண்டிய 
கடமை
நெருங்கி 
விட்டது”
“கர்ணனுக்கு
நான் 
செய்ய
வேண்டிய 
கடமை
ஒன்று 
பாக்கி
இருக்கிறது”
“கர்ணனை
வழியனுப்பி 
வைக்க
வேண்டிய 
முக்கிய
கடமை 
எனக்கு
இருக்கிறது”
“கர்ணனுடைய
புண்ணியப்
பதிவுகளை 
ஏற்றுக்
கொள்ள 
வேண்டிய
கடமை 
எனக்கு
இருக்கிறது”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
26-06-2020
//////////////////////////////////////////
 
No comments:
Post a Comment