June 26, 2020

அறிய வேண்டியவை-பதிவு-56


             ஜபம்-பதிவு-548
        (அறிய வேண்டியவை-56)

“போர் விதிமுறைகளை
மீறி கௌரவர்கள்
கும்பலாக
சேர்ந்து கொண்டு
அபிமன்யுவைக்
கொல்லும் போது
நடந்த அந்த
தவறான
செயலைத்
தடுக்காமல்
தானும் சேர்ந்து
கொண்டு தவறான
அந்த செயலுக்கு
கர்ணன்
துணை போனானே
அப்போது தர்மம்
எங்கே போனது”

“தர்மத்தின் படி
கர்ணன்
நடந்து இருந்தால்
அவனைத்
தர்மத்தின் படி
கொல்லலாம் ;
அதர்மத்தின் வழியில்
கர்ணன்
நடந்திருக்கிறான்
அதர்மத்தை
செய்தவர்களுக்கு
துணையாக
இருந்திருக்கிறான் ;” 

“அதர்மம்
நடத்தப்படும் போது
அதர்மத்திற்கு
துணை போய்
இருக்கிறான் ;”

“அதர்மம்
நடத்தப்படும்
போது அதை
தடுப்பதற்கு
முயற்சி செய்யாமல்
அதர்மம் நடக்கும்
போது அதை
வேடிக்கை பார்த்துக்
கொண்டு
இருந்திருக்கிறான் ;”

“அதர்மத்தை
செய்தவர்களை
தடுக்காமல் அதர்மம்
செய்தவர்களுடன்
உறவு
வைத்திருந்திருக்கிறான் ;”

“அதர்மத்தின் பக்கம்
நின்று கொண்டு
கர்ணன் தான்
தர்மவான் என்று
சொல்ல முடியாது”

“அதர்மச் செயலை
செய்து
கொண்டிருக்கும்
துரியோதனனுக்கு
துணையாக
இருந்து கொண்டு
நட்புக்காக
இருக்கிறேன் என்று
சொன்னாலும்
கர்ணன்
அதர்மத்தின் பக்கம்
தான் நிற்கிறான் “

“நண்பனுக்காக
உயிரைக்
கொடுப்பேன்
என்று சொல்லிக்
கொண்டிருந்தாலும்
கர்ணன்
அதர்மத்தின் பக்கம்
தான் நிற்கிறான் “

“கர்ணன் தான்
நல்லவன் என்று
நிரூபிப்பதற்கு
பல்வேறு
காரணங்களைச்
சொன்னாலும் கர்ணன்
அதர்மத்தின் பக்கம்
நின்று கொண்டு
அதர்மச் செயலைத்
தான் செய்து
கொண்டிருக்கிறான் “

“அதர்மத்தின் பக்கம்
நின்று அதர்மச்
செயலை புரிந்து
கொண்டிருக்கும்
கர்ணனை
தர்மத்தின் படி
கொல்ல முடியாது”

“கர்ணன் ஆயுதம்
வைத்துக்
கொண்டிருக்கும் போது
கொல்ல முடியாது

அதர்மம் என்று
நினைக்காமல்
அர்ஜுனா
கர்ணனுக்கு
அதர்மத்தின்
படியே
மரணத்தை
அளிப்பாய்”

“அதர்மம் என்று
நினைக்காதே
கர்ணனைக் கொல்வது
தர்மம் என்று
நினைத்துக் கொள்”

“இப்போது கிடைத்த
இந்த
சந்தர்ப்பத்தைத் தவற
விட்டு விட்டால்
உன்னால்
கர்ணனைக்
கொல்லவே
முடியாது “

“அந்தண சாபத்தால்
தேர் தரையில்
அழுந்திய நிலையில்
இருக்கும் போது
தேரை தூக்க
முயற்சி செய்து
கொண்டிருக்கும்
கர்ணனை
ஆயுதம் ஏதும் இன்றி
நிராயுதபாணியாக
இருக்கும் கர்ணனை
பரசுராம சாபத்தால்
அஸ்திர மந்திரத்தை
மறந்த நிலையில்
இருக்கும் கர்ணனை
கொல்வதற்கு
இது தான் சமயம்
கர்ணன் மேல்
பாணங்களை விடு “

“அர்ஜுனா
கர்ணன் மேல்
பாணங்களை விடு “

(அர்ஜுனன் கர்ணன்
மேல் பாணங்களை
விடுகிறான் ;
அர்ஜுனனுடைய
பாணங்களினால்
தாக்கப்பட்ட கர்ணன்
கீழே விழுகிறான்

அர்ஜுனனுடைய
பாணங்கள் தொடர்ந்து
கர்ணனுடைய
உடலைத் துளைத்து
கர்ணனுடைய உடலில்
ஆழப் பதிந்ததால்
உடலில் வழிந்த
இரத்தத்துடனும்
வலியின்
வேதனையுடனும்
தேர்ச்சக்கரத்தில்
போய் சாய்ந்தான்
கர்ணன் தொடர்ந்து
அர்ஜுனன்
எய்த பாணங்கள்
அனைத்தும் கர்ணனின்
கழுத்தில் மலர்
மாலையாக விழுந்தன)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 26-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment