June 26, 2020

அறிய வேண்டியவை-பதிவு-53


              ஜபம்-பதிவு-545
        (அறிய வேண்டியவை-53)

“செய்த செயல்
பாவமாக இருந்தால்
பாவத்திற்குரிய
விளைவும் 
செய்த செயல்
புண்ணியமாக
இருந்தால்
புண்ணியத்திற்குரிய
விளைவும்
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும் “

“மனிதன் செய்த
பாவம் மற்றும்
புண்ணியம் ஆகிய
செயலுக்குரிய
விளைவானது
இயற்கையாக
இவ்வாறு கழிகிறது”

“மனிதன் செய்த
பாவம் புண்ணியம்
ஆகிய இரண்டு
செயலுக்குரிய
விளைவை மனிதன்
சித்தவித்தை
எனப்படும்
வாசியோகத்தின்
மூலம்
கழிக்க முடியும்”

“ஜென்மம் ஜென்மமாக
தொடர்ந்து வரும்
பாவப் பதிவுகளையும்
புண்ணியப்
பதிவுகளையும்
சித்தவித்தை எனப்படும்
வாசியோகத்தை
பயன்படுத்தி நாமே
கழிக்கலாம் “

“இயற்கையாக
பாவப்பதிவுகள்
புண்ணியப் பதிவுகள்
கழிந்தாலும்
நாமே
வாசியோகத்தின் மூலம்
பாவப்பதிவுகள்
புண்ணியப்
பதிவுகளை
கழித்தாலும்
அதனுடைய
விளைவுகளை
அனுபவித்துத் தான்
தீர வேண்டும்”

“பாவப்பதிவுகளுக்கு
நரக வாழ்க்கையும்
புண்ணியப்
பதிவுகளுக்கு
சுவர்க்க
வாழ்க்கையும்
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும்”

“வாசியோகம்
செய்யும் போது
நம்முடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
கர்மாக்களான
பாவப்பதிவுகளும்,
புண்ணியப்
பதிவுகளும் கழியும் ;
அவைகள்
கழியும் போது
அவைகளுக்குரிய
விளைவுகளை
கொடுத்து விட்டுத்
தான் செல்லும்
அவைகளை
அனுபவித்துத் தான்
தீர வேண்டும்”

“விளைவுகளை
அனுபவிக்காமல்
பாவப்பதிவுகளையும்
புண்ணியப்
பதிவுகளையும்
கழிக்க முடியாது”

“இதற்கு மிகச் சிறந்த
உதாரணம்
மகாபாரதத்தில்
வரும் கர்ணன்
வாழ்க்கை ஆகும்”

(கர்ணன்
வாழ்க்கையானது
பாவப்பதிவுகளை
அனுபவித்ததையும்
புண்ணியப்பதிவுகளை
கழித்து முக்தி என்ற
மோட்சத்தை
அடைந்ததையும்
குறிக்கிறது)

(அர்ஜுனனும்
கர்ணனும்
நேருக்கு நேராக
நின்று போர்
செய்து
கொண்டிருந்தனர்)

(“உலகத்திலேயே மிகச்
சிறந்த வீரர்கள் என்று
சொல்லப்படக்கூடிய ;
யாராலும் வீழ்த்த
முடியாது என்று
சொல்லப்படக் கூடிய;
வில் செலுத்துவதில்
மிகச் சிறந்தவர்கள்
என்று
சொல்லப்படக்கூடிய;
வீரத்திற்கு வடிவமாக
இருக்கக் கூடியவர்கள்
என்று
சொல்லப்படக்கூடிய;
அர்ஜுனனும் கர்ணனும்
நேருக்கு நேராக
வில் மூலம்
மோதிக் கொண்டனர்;”

“பிரபஞ்சமே
அவர்களுடைய
மோதலை பார்த்துக்
கொண்டிருந்தது ;
என்ன நடக்கப்
போகிறது என்பதை
உலகமே உற்று
நோக்கிக்
கொண்டிருந்தது ;
மனிதர்கள் மட்டுமல்ல
தேவர்கள் அனைவரும்
இவர்கள்
இருவருடைய
சண்டையைத் தான்
உற்று நோக்கிக்
கொண்டிருந்தனர் ;

“அர்ஜுனனுடைய தேரில்
அனுமனின் உருவம்
பொறித்த கொடியுடன்
அனுமனின்
துணையுடனும் ;
சாரதியாக இருக்கும்
பரமாத்மா கிருஷ்ணன்
துணையுடனும்
அர்ஜுனன்
போரிட்டுக்
கொண்டிருந்தான் ;”

“ஆனால் கர்ணன்
யாருடைய துணையும்
இல்லாமல்
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான் “

“பிறந்தது முதல்
தன்னை
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
பலவாறாக பலரால்
அவமானப்படுத்தப்பட்ட
கர்ணன்
அவமானத்தால் ஏற்பட்ட
துன்பங்களைத்
தாங்கிக் கொண்டு
அர்ஜுனனோடு
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 26-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment