May 06, 2019

பரம்பொருள்-பதிவு-12


                       பரம்பொருள்-பதிவு-12

”மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து உயிரூட்டப்பட்டு
கடவுளாகவே மாறிவிட்ட
கடவுள் சிலை
இயங்குவதற்கும் ;
சக்தியை தொடர்ந்து
பெறுவதற்கும் ;
இரண்டு விதமான
முறைகள் பின்பற்றப்
படுகின்றன; ”

ஒன்று :
“கும்பாபிஷேகத்தின்
மூலம் கடவுள் சக்தியை
இயங்கச் செய்வது “

இரண்டு :
“மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றின்
மூலம் சக்தியை
பெறும்படிச் செய்வது “

“மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து உயிரூட்டப்பட்டு
கடவுளாகவே மாறிவிட்ட
கடவுள் சிலை
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றின் மூலம்
கர்ப்பக்கிரகத்தில்
பீடத்தின் மேல்
நிர்மாணம் செய்யப்பட்டு ;
கும்பாபிஷேகத்தின்
மூலம் இயங்குவதற்கான
சக்தியைப் பெற்று ;
அதனைத் தொடர்ந்து
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றால் செய்யப்படும்
பூஜைகள். அபிஷேகங்கள்
ஆகியவற்றின் மூலமாக
தொடர்ந்து சக்தியை பெற்று
பெற்ற சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்யும்
செயலை கோயிலின்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
சிலைகள் செய்கின்றன ;”

“மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைகளுக்கு
12 வருடங்களுக்கு
ஒரு முறை
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றால்
கடவுள் சிலையை
புதுப்பித்தல் ;
கும்பாபிஷேகத்தின் மூலம்
சக்தியை இயங்கச் செய்தல் ;
கடவுள் சிலைக்கு
செய்யப்படும் தொடர்
பூஜை முறைகளால்
சக்தியை பெறச்செய்தல் ;
ஆகிய செயல்களைச்
செய்ய வேண்டும்; “

“அப்படி செய்யவில்லை
என்றால் கடவுள் சிலையின்
மூலம் பெறப்படும்
சக்தியை கோயிலுக்குள்
செலுத்தி கோயிலுக்குள்
சக்தியை உற்பத்தி
செய்ய முடியாது “

“மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு
உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலையை
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றால்
புதுப்பிக்க வேண்டிய
அவசியம் இல்லை ;
12 வருடங்களுக்கு
ஒரு முறை
கும்பாபிஷேகம்
செய்ய வேண்டிய
அவசியம் இல்லை ;
அதனைத் தொடர்ந்து
தொடர்ந்தாற் போல்
பூஜைகள். அபிஷேகங்கள்.
செய்ய வேண்டிய
அவசியம் இல்லை;”

“ஒரு முறை மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை செய்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டி விட்டால்
கடவுள் சிலையில்
சக்தியானது காலம் காலமாக
தொடர்ந்து இருந்து
கொண்டே இருக்கும்: ”

“கடவுள் சிலையானது
இருக்கும் வரை
சக்தியானது அதில்
தொடர்ந்து இருந்து
கொண்டே இருக்கும் ;
காலத்தால் அழியாமல்
அப்படியே இருக்கும் ;”

“ இதிலிருந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைகளைக்
காட்டிலும் ;
மந்திரத்தைப் பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைகள்
எவ்வளவு வலிமை
வாய்ந்தவை என்பதை
அறிந்து கொள்ளலாம் ;”

“ தனி ஒரு நபராக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
உயிரூட்ட ஆன்மீகத்தில்
உச்ச நிலையும் ;
தனி ஒரு நபராக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை செய்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு
பக்தி மார்க்கத்தில்
உச்ச நிலையும் ;
அடைந்தவர்களால் மட்டுமே
சாத்தியம் எனும் போது
பிராண பிரதிஷ்டை என்பது
எவ்வளவு பெரிய
உயர்ந்த மதிப்புமிக்க
விஷயம் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் ;”

“இந்த உயர்ந்த
மதிப்பு மிக்க விஷயத்தை
வேறு ஒரு விஷயத்திற்கும்
பயன்படுத்துகிறார்கள்
எதற்கு என்று
தெரியுமா………………………………………-?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 06-05-2019
/////////////////////////////////////////////////////