June 08, 2012

இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-துhரந்துhரந்- பதிவு-43



         இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-துhரந்துhரந்- பதிவு-43
               
             “”பதிவு நாற்பத்திமூன்றை விரித்துச் சொல்ல                         
                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :                 

 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று ,  பரிசேயர்  அவரிடத்தில் கேட்ட பொழுது , அவர்களுக்கு அவர்  பிரதியுத்தரமாக : தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது .”
                                           ---------லுhக்கா - 17 : 20

இதோ , இங்கே என்றும் , அதோ , அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது ; இதோ தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார் .”
                                           ---------லுhக்கா - 17 : 21

இளைய தேகம் வாடிடும்
இனிமை தான் தேடிடும்
புதிய ராகம் மீட்டிடும்
புதுமை தான் கண்டிடும் .

                           விடியல் தேடி ஓடிடும்
                          விதியை எண்ணி வருந்திடும்
                          கடமை செய்து பார்த்திடும்
                         கண்ணியம் தான் மறந்திடும் .

பொறுமை இழந்து தவித்திடும்
பொல்லாங்கு பேசி அலைந்திடும்
நித்திரை இழந்து விழித்திடும்
நிம்மதி விற்று கரைந்திடும் .

                         பழையதை எண்ணி வருந்திடும்
                         பாதையை மறந்து திரிந்திடும்
                         உழைப்பை விற்று உறங்கிடும்
                         உண்மை மறைத்து பேசிடும் .

துரோகம் செய்து வாழ்ந்திடும்
துன்பம் தந்து சிரித்திடும்
அபயம் தர மறுத்திடும்
அன்பைக் காட்ட மறந்திடும்.

எண்ணியது எண்ணியபடி நடக்க
நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்த தன்
தேவை எது என்று தெரியாமல்
தேவையின் அர்த்தம் புரியாமல்
தேவையின் முக்கியத்துவம் விளங்காமல்
தேவையை அடைய தேடுதலில் ஈடுபட்டு
தேடிக் கொண்டே இருக்கிறது
தேவை தீராமல்
மனித மனம் .

தேவை – தேடுபவரின் மனதைப் பொறுத்து
அர்த்தம் வேறுபடுகிறது        .
தேவையானது புறத் தேவை , அகத் தேவை
என்ற இரண்டு நிலைகளைக் கொண்டது .
மனித மனம் புறத்தேவையை மட்டுமே நாடிச் செல்கிறது
மனித மனம் புறத்திலே இயங்கி பழக்கப்பட்டு விட்டதால்
புறப்பொருட்களோடு தொடர்பு கொண்டு பழக்கப்பட்டு விட்டதால்
புற உலகத்தோடு இயங்கும் தன்மையைப் பெற்று விட்டதால்
புறத்தேவையை நோக்கியே மனித மனம் செல்கிறது ;
புறப் பொருட்களையே தேடி ஓடுகிறது ;
புறப் பொருட்களையே மனம் நாடுகிறது ;
அகத் தேவையை உணர மறுக்கிறது ;
அகத்திற்குள் உள்ளதை உணர மறுக்கிறது .

வாழ்க்கையை ஓட்டுவதற்கு தேவைப்படும் தேவைகள் புறத் தேவைகள்
இறைவனை அடைவதற்காக தேவைப்படும் தேவைகள் அகத் தேவைகள்
புறத் தேவையை பூர்த்தி செய்யும் ஒருவனால் மட்டும்
அகத் தேவையை பூர்த்தி செய்து இறைவனை அறிய முடியும்  

மனித மனம் புறத் தேவையை நோக்கியே
சென்று கொண்டிருக்கிறது.

கல்வியில் உயர் நிலை அடைய ;
உயர்  கல்வியில் சிறப்பு நிலை அடைய ;
வேலை பெற்று தகுதி நிலை அடைய ;
தொழில் செய்து உன்னத நிலை அடைய ;
வீடு கட்டி நிம்மதி நிலை அடைய ;
திருமணம் செய்து ஆனந்த நிலை அடைய ;
குழந்தை பெற்று இன்ப நிலை அடைய ;
புதவிகள் பெற்று உயர்வு நிலை அடைய ;
அதிகாரங்கள் பெற்று மரியாதை நிலை அடைய ;
சொத்துக்கள் சேர்த்து சுகபோக நிலை அடைய ;
உயர்வில் குளித்து மேல் நிலை அடைய ;
ஏற்றத்தை அடைந்து மகிழ்ச்சி நிலை அடைய ;

என்று பல்வேறுபட்ட புற நிலைகளில் மனம் ஈடுபட்டு
புறத்தேவைகளை நிறைவு செய்ய
புறத்தேவையை நாடியே மனம் ஓடுகிறது ; மனம் இயங்குகிறது .

புறத்தேவைகள் நிறைவடைந்தால் மட்டுமே ,
புறத்தேவைகளை முழுவதும் அனுபவித்தால் மட்டுமே ,
புறத்தேவைகளின தேவை தீர்ந்தால் மட்டுமே ,
புறத்தேவையின் எல்லையைக் கடந்தால் மட்டுமே ,
புறத்தேவையை விட்டு அகத்திற்குள் செல்ல முடியும் .

வாழ்க்கைத் தேவையை ஒருவர்  
முழுவதுமாக அனுபவிக்காமல் ; பூரணமாக உணராமல் ;
உண்மை தெளியாமல் ; விளக்கம் பெறாமல் ;
அகத்தேவையை உணர்ந்து அகத்திற்குள் செல்ல முடியாது .

புறத்தேவையை நாடி ஓடி செல்லும் மனித மனதால்
அகத்தேவை எவை என்று உணரவும் முடியாது ,
அகத்திற்குள் செல்லவும் முடியாது ,
ஆண்டவனை தரிசிக்கவும் முடியாது ,
தேவனுடைய ராஜ்யத்தை காணவும் முடியாது ,
தேவனை தரிசிக்கவும் முடியாது ,
தேவனுடைய ஆசிர்வாதம் பெறவும் முடியாது ,

புறத்தேவையின் உண்மை நிலை உணர்ந்து
புறத்தேவையில் தெளிவு பெற்று
புறத்தேவையில் முழுமை பெற்று
புறத்தேவையின் அநித்திய நிலை உணர்ந்து
நித்திய நிலையாக இருக்கும் ஆண்டவனை
ஆண்டவனுடைய ராஜ்யத்தை
தேவனுடைய ராஜ்யத்தை அடைய
அகத்தேவை உணர்ந்து அகத்திற்குள்
மனித மனம் செல்ல வேண்டும் .

தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வரும் என்று
பரிசேயர்  இயேசுவிடம் கேட்ட பொழுது
புறத்தை விட்டு
புறத்தேவைகளை விட்டு
அகத்திற்குள் செல்பவனால் மட்டுமே
தேவனுடைய ராஜ்யத்தைக் காண
முடியும் என்கிறார் .

தேவனுடைய ராஜ்யம் இதோ இங்கே இருக்கிறது
அதோ அங்கே இருக்கிறது
அதோ அந்த இடத்தில் இருக்கிறது என்று
ஒவ்வொரு இடமாக ஒவ்வொரு திசையாக
காட்ட வேண்டிய அவசியம் இல்லை .

ஏனென்றால் தேவனும் தேவனுடைய ராஜ்யத்தையும்
புறத்தே காண முடியாது .
நம்மைச் சுற்றி புறத்தே இருப்பவை எல்லாம்
அழியக் கூடியவை மாறக் கூடியவை
மாற்றம் பெறக் கூடியவை .

அழியக் கூடிய ஒன்றினுள்
என்றும் அழியாத
என்றும் நிரந்தரமான
என்றும் நித்தியமான
ஆண்டவரை எப்படி காண முடியும்
எப்படி தரிசிக்க முடியும்
எப்படி ஆசிர்வாதம் பெற முடியும் .

அழியாத ஒன்றினுள் அழியக் கூடிய
ஒன்றினைக் காண முடியும் .
அழியக் கூடிய ஒன்றினுள் அழியாத ஒன்றை நாம்
காண வேண்டுமானால்,
புறத்தேவையை நிறைவு செய்து
அகத்திற்குள் சென்றால் மட்டுமே காண முடியும் .

அகத்தில் ஏற்றப்படும் தீபமே
புறத்தில் ஒளியைக் காட்டும் .

நிலத்தில் புதைக்கப்பட்ட விதையே புறத்தில்
அதன் வடிவைக் காட்டும் .
அகத்திற்குள் செல்பவனால் மட்டுமே ,
அகத்திற்குள் செல்ல முடிந்தவனால் மட்டுமே ,
அகத்திற்குள் செல்லும் தகுதியைப் பெற்றவனால் மட்டுமே ,
அகத்திற்குள் செல்லும் வழியை உணர்ந்தவனால் மட்டுமே ,
ஆண்டவனை உணர முடியும் .
ஆண்டவனை அறிய முடியும் .
ஆண்டவரை தரிசிக்க முடியும் .
ஆண்டவர்  ஆசிர்வாதம் பெற முடியும் .
ஆண்டவனுடைய ராஜ்யத்தை உணர முடியும் .
ஆண்டவருடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் .

அதனால் தான் இயேசு தேவனுடைய ராஜ்யம்
உங்களுக்குள் இருக்கிறது
தேவனுடைய ராஜ்யம் அகத்தில் இருக்கிறது .

ஆண்டவரை அகத்தில் தேடுங்கள்
புறத்தே தேடி ஓடி காலத்தை வீணாக்காதீர்கள் .
மடமையில் மூழ்காதீர் ;
சிந்தனை தடுமாறாதீர் ;
தவறான வழி செல்லாதீர் ;
அறியாமையில் மாட்டாதீர் ;
என்கிறார்  இயேசு .

அகத்தில் ஆண்டவரை தேடுங்கள்
தேவனுடைய ராஜ்யத்தைக் காணுங்கள்
என்கிறார்  இயேசு .



சிவவாக்கியர்:

துhரந்துhரந் துhரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய் பரந்தஅப் பராபரம்
ஊருநாடு காடுமோடி யழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முள்ளே யறிந்துணர்ந்து கொள்ளுமே
                 ------சிவவாக்கியர்----பெரியஞானக் கோவை---

ஓன்றுக்குள் ஒன்று கலந்திருப்பதை
அறிந்து கொண்டு பிரித்துப் பார்ப்பவனால் மட்டுமே
ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்தி  அறிய முடியும்.

ஓன்றுக்குள் ஒன்று கலந்திருப்பதை
அறிய முடியாதவனால் பிரித்து பார்த்து
ஓன்றை ஒன்று வேறுபடுத்தி  அறிய முடியாது.

பிரித்துப் பார்க்கும் திறன் உடையவனால் மட்டுமே
வேறுபடுத்தி அறிய முடியும்.
பிரித்துப் பார்க்கும் திறன் அற்றவனால்
எதையும் வேறுபடுத்தி அறிய முடியாது .

ஒன்றுக்குள் ஒன்று மறைந்திருப்பதை
ஒளிந்திருப்பதை கலந்திருப்பதை உணர்ந்து
அவற்றைப் பிரித்துப் பார்த்து அதன் தன்மைகளை
வேறுபடுத்தி பார்த்து விளக்கம் பெறுபவனால் மட்டுமே
உண்மை நிலை உணர முடியும் .

பாலுக்குள் , தயிர் ,  வெண்ணெய் , நெய் ஆகியவை
ஒன்றுக்குள் ஒன்று கலந்திருக்கிறது மறைந்திருக்கிறது .
என்பதை உணர்ந்து
அறிவு விளக்கம் பெற்று
பிரித்துப் பார்க்கும் திறன் பெற்று
வேறுபடுத்தி அறிந்து
அவற்றுக்குள் உள்ள மாறுபாட்டை உணர்ந்து
பயன்படுத்தும் திறன் பெற்றவனால் மட்டுமே
அவற்றின் தனித்தன்மையை உணர முடியும் .

ஒன்றுக்குள் ஒன்று எவ்வாறு கலந்திருக்கிறது
எந்த விகிதத்தில் எந்த முறையில்
எந்த அடிப்படையில் கலந்திருக்கிறது
என்பதை சிந்திப்பவனால் ,
ஆராய்ச்சி செய்பவனால் ,
முயற்சி மேற்கொள்பவனால் ,
பயிற்சியில் ஈடுபடுபவனால் மட்டுமே உணர முடியும் .

பாலுக்குள் , தயிர் , வெண்ணெய் , நெய்
ஆகியவை மறைந்திருக்கிறது என்பதை
ஆதியிலே கண்டவன் மகா திறமைசாலி .
தான் கண்டதை ,
தான் பெற்றதை ,
தான் உணர்ந்ததை ,
தான் அனுபவித்ததை ,
மற்றவரும் பெற்று பயன் பெற வேண்டும்
சமுதாயம் செழிக்க வேண்டும்
சமுதாயம் வளம் பெற வேண்டும்
என்ற உயரிய நோக்கில் ,
அனைவரும் எளிதாக பயன்பெறும் வகையில்
செயல் வடிவம் கொடுத்து பயனை நுகர்ந்து பார்க்க
செய்தவன் உயர்  மனம் கொண்டவன் .

தனக்கு கிடைத்த வித்தைகளை ,
உண்மையின் விளக்கங்களை ,
ரகசியத்தின்  தன்மைகளை ,
சூட்சுமத்தின் பண்புகளை ,
மாற்றங்களின் மறைப்புகளை ,
முன்னேற்றத்தின் பாடங்களை ,
இந்த சமுதாயம் பயன்பெற அளிக்காமல்
குரு என்ற பெயரில் சுற்றி வருபவன்
மகா அயோக்கியன் .

இத்தகைய தன்மை கொண்ட , சுயநலம் கொண்டவர்களால்
உண்மைத் தன்மைகள் பலர்  பயன்படுத்தி விளக்கம் பெற்று
சிறப்புற்று வாழ முடியாமல்
காலமாற்றத்தால் கசங்கி ஆணவத்தால்
புதையுண்டு போய் விட்டது .
தானும் முழுமையாக விளக்கம் பெற முடியாமல்
மற்றவரையும் விளக்கம் பெற்று வாழச் செய்யாமல்
தனக்கு கிடைத்த சில அரிய பொக்கிஷங்களின்
மதிப்பு உணர முடியாமல்
மற்றவருக்காகவாவது அதைக் கொடுத்து
மற்றவர்களாவது பயன் அடைய வேண்டும் .
அதன் ரகசியம் தெரிய வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கம் இல்லாமல்
சுயநலத்துடன் திரியும் ஆணவத்துடன் அலையும்
குரு என்ற முத்திரை குத்திக் கொண்டு
யாருக்கும் எதையும் காட்டாமல் அளிக்காமல்
தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு
அலைபவர்கள் பலர் .

அவர்கள் தங்களிடம் உள்ளவைகளை
மற்றவருக்கு பிரித்து கொடுக்கும்
மனப்பான்மை இல்லாதவர்கள் .

ஒன்றுக்குள் ஒன்று கலந்திருப்பதை
முழுமையாக உணராதவர்கள் ;
முழுமையாக உணர முடியாதவர்கள் ;
விளக்கம் பெறாதவர்கள் ;
அனுபவம் அடையாதவர்கள் ;
தான் கற்றதை மற்றவருக்கு
சொல்லித் தர தயங்குவார்கள் .

தன்னை விட தன்னிடம் கற்றவன் ;
உயர்ந்த நிலை அடைந்து விடுவான் ;
மேன்மை நிலை பெற்று விடுவான் ;
ரகசிய நிலை உணர்ந்து விடுவான் ;
ஆன்ம பலம் பெற்று விடுவான் ;
அறியாமை நீக்கி உயர்ந்து விடுவான் ;
ஏழ்மை விலக்கி வளமாகி விடுவான் ;
இயலாமை நீக்கி எழுந்து விடுவான் ;
வறுமை நீக்கி செழித்து விடுவான் ;
மறைபொருள் அறிந்து உயர்ந்து விடுவான் ;
சூட்சும ரகசியம் தெரிந்து விடுவான் ;
கருணை எல்லையை தொட்டு விடுவான் ;
அன்பின் மேன்மையை அடைந்து விடுவான் ;
இல்லறத்தின் இனிமையை சுவைத்து விடுவான் ;
சுகபோக வாழ்வை பெற்று விடுவான் ;
கவலைகளை எரித்து கரைத்து விடுவான் ;
புகழின் உச்சியில் அமர்ந்து விடுவான் ;
போய்வேஷம் போடுபவரை அழித்து விடுவான் ;
நல்லெண்ணம் கொண்டவரை உயர்த்தி விடுவான் ;
மகிழ்ச்சி மழையில் நனைந்து விடுவான் ;
தோல்விகளை மண்ணில் புதைத்து விடுவான் ;
நல்லோர்  கருணையில் சிறப்புற்று வாழ்வான் ;

என்ற எண்ணம் கொண்டதனால்
அரைகுறை விளக்கம் பெற்றோர்
தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு
சொல்லித் தருவதுமில்லை .

யாரையும் சீடராக ஏற்றுக் கொள்வதுமில்லை .
இத்தகைய தன்மை கொண்டவர்கள்
தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு
சொல்லாமல் மறைப்பவர்கள் ;
சமுதாயத்திற்கு தராமல் மறுப்பவர்கள்;
காலத்தின் அனல் காற்றில்
    வெந்து போவார்கள் ;
    அழிந்து போவார்கள் ;
    மாண்டுபோவார்கள் ;
    உதிர்ந்து போவார்கள் ;
    கரைந்து போவார்கள் ;
    மறைந்து போவார்கள் ;
    கருகிப் போவார்கள் ;
    எரிந்து போவார்கள் ;

முழுமையாக உணர்ந்தவனால் மட்டுமே
தான் அறிந்ததை விளக்கும் அறிவு இருக்கும் ;
தான் பெற்றதை அளிக்கும் மனம் இருக்கும் ;
தான் கற்றதை கொடுக்கும் அறிவு இருக்கும் ;
சீடனுக்கு சொல்லிக் கொடுக்கும்
உயர்ந்த குணம் இருக்கும் ;

இத்தகைய உயர்ந்த நிலையை
பிரித்துப் பார்க்கும் மனநிலையை அடைந்தவனால் மட்டுமே
ஒன்றுக்குள் ஒன்று கலந்திருப்பதை உணர முடியும் .

இந்த உலகம் முழுவதும் நீக்கமற
நிறைந்து இருப்பவன் இறைவன் ;
அனைத்திலும் கலந்திருப்பவன் இறைவன் ;
ஓர்  அறிவு  உயிர்  முதல் ஆறறிவு உயிர்  வரை
அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் ;
திட , திரவ , வாயு நிலைகளிலும்
உருவாகி , அருவாகி , அருஉருவமாகி இருப்பவன் ;
இயக்க நிலையிலும் ,
இயக்கமற்ற நிலையிலும் ,
     ஆதி – அந்தமாகவும் ,
     பாவ – புண்ணியமாகவும் ,
     கர்ம வினைதாக்கமாகவும் ,
     இன்ப – துன்பமாகவும் ,
     பிறப்பு – இறப்பாகவும் ,
     தோற்ற – மறைவாகவும் ,
அனைத்திலும் நம்மிலும் நம்மைச்சுற்றிலும்
அனைத்திலும் நிறைந்திருப்பவன் இறைவன் .

அனைத்திலும் கலந்து ஒன்றுக்குள் ஒன்றாய்
நிறைந்து இருக்கும் இறைவனை காண முடியாததால்,
உணர முடியாததால்,
ஒவ்வொன்றிலும் உள்ள இறைவனை
பிரித்து உணர முடியாததால்
கடவுள் நம்மை விட்டு தொலைவில் இருக்கிறார் ;
காண முடியாத நிலையில் இருக்கிறார் ;
தொடர்பு கொள்ள முடியாத வகையில் இருக்கிறார் ;
உரையாட முடியாத நிலையில் இருக்கிறார் ;
நம்மை விட்டு பிரிந்து வெகு தொலைவில் இருக்கிறார் ;
என்று தெரிந்து கொண்டு ,
ஊர்  ஊராக அலைந்து ,
நாடு நாடாக திரிந்து ,
காடு காடாக அலைந்து ,
இறைவனை தேடி
இறைவன் இருக்கும் இடம் நாடி
இறைவன் அருள் பெற வேண்டி
இறைவனை ஊர்  ஊராக கோயில்களில்
குகைகளில் தேடி அலைபவர்களே !

இந்த அண்டம் முழுவதும் இறைவனாக இருப்பவன்
பிண்டத்தில் இறைவனாக , உயிராக , அறிவாக
இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் .

புறம் என்பது அகத்தின் வெளிப்பாடு
அகத்தை உணர்ந்தால் புறத்தை உணர முடியும்
அகத்தை உணராமல் புறத்தை உணர முடியாது
புறத்தை உணர்வதன் மூலம் அகத்தை உணர முடியாது
அகத் தெளிவு பெற்றவனால் மட்டுமே புறத்தெளிவு பெற முடியும்
அகநிலை தெளிவடைபவனால் மட்டுமே புறநிலை
தெளிவு பெற முடியும் .

அகத்திலே நம்முள்ளே இருக்கும் இறைவனே
புறத்திலே உலகம் முழுவதும் இறைவனாக இருக்கிறான்
என்பதை உணர முடியும் .

அகத்தில் கடவுளைக் காண்பவன்
புறத்தில் கடவுளைக் காண்பான் .

நம்மையும் நம்முள் இருக்கும் இறைவனையும்
பிரித்துப் பார்த்து இறைவனை
உணர முடிந்தவனால் மட்டுமே
புறத்திலே இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கும்
பொருட்கள் ஊடே கலந்திருக்கும்
இறைவனை பிரித்துப் பார்த்து வேறுபடுத்தி உணர்ந்து
இறைவனை அறிந்து
உலகம் முழுதும் நிறைந்து இருப்பவன்
இறைவன் என்பதில் தெளிவு அடைய முடியும் .

கடவுள் வெளியே இருக்கிறார் ;
வெகு தொலைவில் இருக்கிறார் ;
நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார் ;
என்ற அறியாமையை விலக்கி,
கடவுள் எங்கும் இருக்கிறார் ;
எல்லா இடத்திலும் இருக்கிறார் ;
அனைத்திலும் கலந்து இருக்கிறார் ;
எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறார் ;
என்பதை அறிய நமக்குள்ளே சென்று
நம்முள்ளே உள்ள இறைவனை அடையும்
வழிகளை ஆராய்ந்து ,
முறைகளை கற்றுணர்ந்து ,
மறைபொருள் தெளிந்து ,
இறைவனை தரிசியுங்கள் .
தான் அவனாக மாறும்போது அனைத்துமாக ,
இந்த பிரபஞ்சமாக , உலகமாக , உயிர்களாக
பரிணமித்திருப்பதை அறிந்து கொள்ளலாம் .

எல்லாமாக விரிந்திருப்பதே கடவுள் ;
எல்லாமாக உருவாகி இருப்பதே கடவுள் ;
எல்லாமாக பரிணமித்து இருப்பதே கடவுள் ;
என்பதில் தெளிவு பெற வேண்டுமானால்
முதலில் நாம் நம்முள்ளே உள்ள
இறைவனை உணர்ந்து கொள்ள வேண்டும் .  

அக உணர்வைப் பெற்றால்
மட்டுமே அனைத்து உணர்வுகளையும் பெற
முடியும் என்கிறார் சிவவாக்கியர்.



இயேசு கிறிஸ்து- சிவவாக்கியர்:
இயேசு ,
கடவுளை வெளியில் தேடி அலையாதீர்கள்
கடவுள் அனைவர்  உள்ளும் இருக்கிறார்
எனவே , கடவுளை உள்ளே தேடுங்கள் என்கிறார் .


அவ்வாறே ,
சிவவாக்கியரும் ,
கடவுளை தேடி ஊர்  ஊராக அலையாதீர்கள்
வெகு துhரம் சென்று தேடாதீர்கள்                         
நமக்கு உள்ளே கடவுள் இருக்கிறார்
கடவுளை உள்ளே தேடுங்கள்
உள்ளே இருக்கும் கடவுளை உணர்வதன் மூலம்
அனைத்தையும் உணர்ந்து கொள்ளலாம் என்கிறார்.

        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                           போற்றினேன் பதிவுநாற்பத்திமூன்று ந்தான்முற்றே