July 04, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 36


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 36

உலகில் மனிதர்கள்
அனைவரும்
செய்யும் செயல்களை
எல்லாம் இரண்டே
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று  : நன்மையான 
         செயல்கள்
இரண்டு : தீமையான
          செயல்கள்

நன்மையான செயல்களை
புண்ணியமான செயல்கள்
என்றும்,
தீமையான செயல்களை
பாவமான செயல்கள்
என்றும் சொல்லலாம்

ஒருவர் செய்யும்
செயலை வைத்து
செய்த செயல்
நன்மையான செயலா
தீமையான செயலா
என்று சொல்ல முடியாது
செயலை எதற்காக
செய்தார் என்பதை
வைத்துத் தான்
செய்த செயல்
நன்மையான செயலா
தீமையான செயலா
என்று சொல்ல
முடியும்

செய்த செயல்
நன்மையான பலனைத்
தந்தால்
புண்ணியம் என்றும்
அதைச் செய்த செயல்
நன்மையான செயல் என்றும்
தீமையான பலனைத்
தந்தால் பாவம் என்றும்
அதைச் செய்த செயல்
தீமையான செயல் என்றும்
செய்த செயல்
எதற்காக செய்தார்
என்பதை வைத்து
செய்த செயல்
நன்மையான செயலா
தீமையான செயலா
என்று தீர்மானம்
செய்யப்படுகிறது.

முதல் நபர்
இரண்டாம் நபருக்கு
பணம் தருகிறார்
என்ற செயலை வைத்து
இந்த செயல்
நன்மையான செயலா அல்லது
தீமையான செயலா என்று
சொல்ல முடியாது
எதற்காக இந்த
செயலை செய்தார்
என்பதைப் பார்க்க
வேண்டும்
முதல் நபர்
இரண்டாம் நபருக்கு
பணம் தருகிறார்
இரண்டாம் நபருடைய
குடும்ப கஷ்டம்
தீர வேண்டும்
என்பதற்காக
என்று பார்க்கும் போது
புண்ணியத்தை தரக்கூடிய
செயலை செய்கிறார்
எனவே இந்த செயலை
நன்மையான செயல்
என்று சொல்லலாம்

முதல் நபர்
இரண்டாம் நபருக்கு
பணம் தருகிறார்
என்ற செயலை வைத்து
இந்த செயல்
நன்மையான செயலா அல்லது
தீமையான செயலா என்று
சொல்ல முடியாது
எதற்காக இந்த
செயலை செய்தார்
என்பதைப் பார்க்க
வேண்டும்
முதல் நபர்
இரண்டாம் நபருக்கு
பணம் தருகிறார்
மூன்றாம் நபரை
கொலை செய்வதற்கு
என்று பார்க்கும்போது
பாவத்தை தரக்கூடிய
செயலை செய்கிறார்
எனவே இந்த செயலை
தீமையான செயல்
என்று சொல்லலாம்

நாம் எந்த
செயலைச் செய்தாலும்
புண்ணியச் செயலை
செய்தாலும்,
பாவச் செயலை
செய்தாலும்,
செய்யக்கூடிய
ஒவ்வொரு செயலுக்கும்
விளைவு உண்டு
செய்த செயலுக்குரிய
விளைவானது
அந்த செயலிலேயே
தொக்கி நிற்கும்
அதாவது
செய்த செயலிலேயே
செய்த செயலுக்குரிய
விளைவும் அதனுள்ளே
அடங்கி இருக்கும்
காலம் வரும்போது
செய்த செயலுக்குரிய
விளைவு தன்னால்
வெளிப்படும்.

நாம் ஒரு பாவத்தை
செய்தால்
பாவப்பதிவின் விளைவு
வெளியாக
வேண்டிய சந்தர்ப்பம்
வெளியாக வேண்டிய
காலம் வரும் போது
பாவத்தின் விளைவு
ஒரு சிறு துன்பமோ
அல்லது ஒரு
பெருந்துன்பமோ
தந்துவிட்டுத் தான்
செல்லும்

அதைப்போல்
நம்மிடம் பதிந்துள்ள
பதிவுகளின் விளைவுகள்
அனைத்தும்
விளைவுகள் வெளிப்படக்கூடிய
காலம் வரும்போது
அவை வெளிப்படும்

செய்த
செயலுக்குரிய
விளைவுகள்
வெளிப்படக்கூடிய
காலம் வரும்போது
நோக்கம், திறமை,
தொடர்பு கொள்ளும் பொருள்
காலம், இடம்
ஆகியவற்றைப் பொறுத்து
செய்த செயலுக்குரிய
விளைவானது
உண்டாகி வெளிப்படுகின்றது

செய்த செயலுக்குரிய
விளைவானது
எவ்வாறு வெளிப்படுகிறது
என்பதைப் பற்றி
பார்ப்போம்

---------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////