November 17, 2021

பதிவு-7-முடிவும்- திருக்குறள்

 பதிவு-7-முடிவும்-

திருக்குறள்

 

விழாவை

தொடங்குவதற்கு

முன்பு,

விழாவை

நடத்தும் போது,

விழாவை

நடத்தி

முடித்த பின்பு

என்று மூன்று

நிலைகளில் எப்படி

செயல்பட

வேண்டும்

என்பதை அறிந்து

திட்டம் தீட்டி

விழாவினை

நடத்தும்

போது தான்

எந்த ஒரு

விழாவினையும்

சிறப்பாக

நடத்த முடியும்,

 

எந்த ஒரு

விழாவினை

எடுத்துக்

கொண்டாலும்

பல பேர்கள்

பல செயல்களைச்

செய்து

இருக்கிறார்கள்

என்பதையும்,

பல பேர்கள்

தங்கள்

உழைப்பை

கொடுத்திருக்கிறார்கள்

என்பதையும்,

பல பேர்கள்

தங்கள் அறிவைப்

பயன்படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்,

எவ்வளவு

பணத்தை

ஒவ்வொருவரும்

செலவு செய்து

இருக்கிறார்கள்

என்பதையும்

பெரிய விழாவாக

இருந்தாலும் சரி

அல்லது

சிறிய விழாவாக

இருந்தாலும் சரி

அல்லது

எந்த ஒரு

விழாவாக

இருந்தாலும் சரி

எந்த ஒரு

விழாவினையும்

நடத்துவது

எவ்வளவு சிரமம்

என்பதையும்,

எந்த ஒரு

விழாவினையும்

அவ்வளவு

எளிதாக நடத்தி

விட முடியாது

என்பதையும்,

ஒரு விழாவினை

நடத்துவதற்கு

பல பேருடைய

ஒத்துழைப்பு

தேவை

என்பதையும்,

பல பேர்கள்

ஒன்று பட்டு

ஒற்றுமையாக

இணைந்து

செயல்களைச்

செய்தால் தான்

விழாவினை

நடத்த முடியும்

என்பதையும்,

தனிப்பட்ட

ஒருவரால்

எந்த ஒரு

விழாவினையும்

நடத்த முடியாது

என்பதையும்,

எந்த ஒரு

விழாவினையும்

தலைமை ஏற்று

நடத்துபவருக்கு

பொறுமை

நிதானம்,

தொலைநோக்கு

பார்வை,

அனைத்தையும்

சமாளிக்கும் திறன்,

அனைவரையும்

கட்டுப் படுத்தும்

திறமை

ஆகிய ஐந்தும்

இருக்க வேண்டும்

என்பதையும்

தெரிந்து

கொள்ளலாம்.

 

எந்த ஒரு

செயலைச்

செய்யும் போதும்

அந்த செயலை

செய்யும் போது

ஏற்படும்

தடைகள்

முடிவில்

கிடைக்கும் பயன்

ஆகியவற்றை

எண்ணிப் பார்த்து

பிறகே செய்தல்

வேண்டும்

என்பதைத் தான்

 

“”முடிவும்

இடையூறும்

முற்றியாங்கு

எய்தும்

படுபயனும்

பார்த்துச்

செயல்”””

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவு

படுத்துகிறார்.

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////

பதிவு-6-முடிவும்- திருக்குறள்

 பதிவு-6-முடிவும்-

திருக்குறள்

 

விழாவில்

எடுக்கப்பட்ட

புகைப்படங்கள்,

வீடியோக்கள்

ஆகியவற்றை வாங்கி

பத்திரப்படுத்தி

வைக்க வேண்டும்.

அது மட்டுமல்ல

விழாவிற்கான

அழைப்பிதழையும்

பத்திரப்படுத்தி

வைக்க வேண்டும்.

இவைகள் தான்

நாம் விழாவை

நடத்தியதற்கான

ஆவணங்கள்

மற்றும்

நம்முடைய

மறக்க முடியாத

நினைவுகள் ஆகும்.

 

விழா

நடத்துவதற்கு

முன்பு

விழாவை

இப்படித் தான்

நடத்த வேண்டும்,

இந்த

வரிசையில் தான்

நடத்த வேண்டும்,

என்று

துல்லியமாக

எவ்வளவு தான்

திட்டம் போட்டு

முறைப்படி செய்து

இருந்தாலும்

விழாவை

நடத்தும் போது

நாம் போட்ட

திட்டத்தின் படி

வரிசையாக

நடக்கவே நடக்காது.

நடப்பதற்கு

வாய்ப்பே இல்லை

பல நிகழ்வுகள்

மாறி மாறித் தான்

நடந்து இருக்கும்.

 

எந்த ஒரு

விழாவை

எடுத்துக்

கொண்டாலும்,

விழாவை நடத்த

வேண்டும் என்று

திட்டம்

போட்டாலும்,

விழாவை

நடத்தினாலும்,

விழாவை நடத்தி

முடித்தாலும்

அதில் இரண்டு

பேர்கள் கண்டிப்பாக

இருப்பார்கள்

 

ஒருவர்      :

அறிவுரை

சொல்பவர்

இரண்டாமவர்  :

குறை சொல்பவர்

 

அறிவுரை

சொல்பவர் யார்

குறை

சொல்பவர் யார்

என்பதைக்

கண்டறியத் தெரிந்து

வைத்திருக்க

வேண்டும்.

வேறுபாடு காண

தெரிந்து வைத்து

இருக்க வேண்டும்

 

நம்முடைய நலனில்

அக்கறை கொண்டவர்

அறிவுரை சொல்வார்.

நம் மேல்

பொறாமைப்படுபவர்

குறை சொல்வார்.

 

அறிவுரையில்

வாழ்த்துவதும்

இருக்கும்,

திட்டுவதும் இருக்கும்.

ஆனால்

குறை

சொல்வதில்

குறை சொல்வது

மட்டும் தான்

இருக்கும்.

 

அறிவுரை

சொல்பவர்களையும்,

குறை

சொல்பவர்களையும்

பேதம் பிரித்து

பார்க்கக்

கற்றுக் கொண்டு

குறை

சொல்பவர்களின்

குறைகளை

காதில் வாங்கிக்

கொள்ளாமல்,

அறிவுரை

சொல்பவர்களின்

அறிவுரைகளைக்

காது கொடுத்து

கேட்டு அதை

செயல்படுத்தினால்

நாம் நடத்தும்

எந்த ஒரு

விழாவாக

இருந்தாலும்

நன்மையாகத்

தான் முடியும்.

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////

பதிவு-5-முடிவும்- திருக்குறள்

 பதிவு-5-முடிவும்-

திருக்குறள்

 

விழாவிற்கு

வருபவர்களின்

வயிறு

நிறைந்தால் தான்

அவர்கள்

மகிழ்ச்சியாக

இருப்பார்கள்.

அவ்வாறு

மகிழ்ச்சியாக

இருக்கும்

போது தான்

விழாவினை

விழாவை

மகிழ்ச்சியாக

கண்டு களிப்பார்கள்

விழாவை

ரசிப்பார்கள்

விழா

நடத்தியவர்களை

போற்றுவார்கள்

எனவே, இந்த

விஷயத்தில்

அதிக கவனம்

செலுத்த வேண்டும்.

 

பணத்தை பற்றி

கவலைப்படாமல்

நல்ல

சாப்பாட்டிற்கு

ஏற்பாடு

செய்ய வேண்டும்.

 

விழாவினை

போட்டோ

எடுப்பதற்கும்,

வீடியோ

எடுப்பதற்கும்

தேவையான

ஏற்பாடுகளைச்

செய்ய வேண்டும்.

ஏனென்றால்,

போட்டோக்களும்,

வீடியோக்களும் தான்

நம்முடைய

நினைவுகளாக

இருக்கக்

கூடியவைகள்

என்பதை

கவனத்தில் கொண்டு

அதற்கு

தனிக் கவனம்

செலுத்த வேண்டும்.

 

விழா முடிந்து

செல்பவர்கள்

அவர்கள்

செல்ல வேண்டிய

இடங்களுக்குச்

செல்லத் தேவையான

நடவடிக்கைகளை

மேற்கொள்ள

வேண்டும்.

 

பொதுவாக

சொல்ல வேண்டும்

என்றால்

பெரிய விழாவாக

இருந்தாலும் சரி,

அல்லது

சிறிய விழாவாக

இருந்தாலும் சரி

அல்லது

எந்த ஒரு

விழாவாக

இருந்தாலும் சரி

விழாவினை

நடத்துவதற்கு

தனித்திறமை

வேண்டும்

துணிச்சல்

வேண்டும்.

திறமை

வேண்டும்.

தலைமைப் பண்பு

வேண்டும்.

அனைவரையும்

கட்டுப்படுத்தும்

திறமை வேண்டும்.

இவைகள்

இருந்தால் மட்டுமே

எந்த ஒரு

விழாவினையும்

சிறப்பாக

நடத்த முடியும்

 

மூன்று :

விழா நடத்துவதற்கு

முன்பு விழாவிற்கு

எவ்வளவு பணம்

செலவு ஆகும்.

எவ்வளவு பணத்தை

செலவு செய்ய

வேண்டும் என்று

கணக்கு போட்டு

வைத்திருந்தோமோ

அதை விட

கூடுதலாகத் தான்

பணம் செலவு

ஆகுமே தவிர

குறைவாக

செலவு ஆகாது.

 

விழாவிற்குரிய

விழா

நிகழ்வுகளை

நடத்துவதற்கு

யாருக்கு எல்லாம்

ஏற்கனவே பணம்

கொடுத்து

இருக்கிறோமோ

அவர்களுக்கு

எல்லாம் விழா

முடிந்தவுடன்

மீதி எவ்வளவு

பணம் கொடுக்க

வேண்டுமோ

அவ்வளவு பணத்தை

கணக்குப் பார்த்து

கொடுக்க வேண்டும்,

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////

பதிவு-4-முடிவும்- திருக்குறள்

 பதிவு-4-முடிவும்-

திருக்குறள்

 

எந்த ஒரு

சிக்கலான

விஷயத்தையும்

சமாளிக்கும்

திறமை இருந்தால்

மட்டுமே

விழாவை

விழா அன்று

எந்தவிதமான

தடங்கல்

ஏற்பட்டாலும்

அந்த விழாவை

சரியாக

நடத்த முடியும்.

 

விழாவிற்கு

வருகிறேன் என்று

சொன்னவர்களில்

பலர் வராமல்

போகலாம்.

சில சமயங்களில்

நாம்

எதிர்பார்க்காதவர்கள்

கூட விழாவிற்கு

வரலாம்.

 

விழாவிற்கு நாம்

நினைத்த

எண்ணிக்கையை விட

குறைவானவர்கள்

வரலாம்

(அல்லது)

விழாவிற்கு நாம்

அழைத்தவர்களை

விட அதிகமான

எண்ணிக்கையில்

வரலாம்.

இந்த சிக்கலான

விஷயங்களை

சமாளிக்கும்

திறமை வேண்டும்.

 

விழாவிற்கு

ஒரு குறிப்பிட்ட

நேரத்தை குறித்தால்

அந்த நேரத்தில்

பெரும்பாலானவர்கள்

வர மாட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில்

வந்தவர்களை

வைத்துக் கொண்டு

விழாவை

நடத்துவதற்கு

தேவையான

சாமர்த்தியம்

இருக்க வேண்டும்.

 

விழாவின்

நிகழ்வுகளை

குறிப்பிட்ட நேரங்களில்

முடிப்பதற்கும்,

தொடர்ச்சியான

வரிசையிலோ

அல்லது

தேவைப்படும்

வரிசையிலோ

விழாவின்

நிகழ்வுகளை

நடத்துவதற்குத்

தேவையான

திறமை

இருக்க வேண்டும்.

 

விழாவிற்கு

முக்கியமானவர்கள்

வரவில்லை

என்றாலும்,

இவர்

இல்லாவிட்டால்

விழாவையே

நடத்த முடியாது

என்ற நிலை

இருந்தாலும்

அதை சமாளித்து

எத்தகையவர்களை

வைத்துக் கொண்டு

விழாவை

நடத்த முடியுமோ

அத்தகையவர்களை

வைத்துக் கொண்டு

விழாவினை

நடத்துவதற்கு

தேவையான

துணிச்சல்

இருக்க வேண்டும்.

 

விழாவில் வழி

தெரியாமல்

தடுமாறுகிறவர்களுக்கு

வழி காட்டுவதற்கும்,

விழாவிற்கு

வருகிறவர்களை

அழைத்து

வருவதற்கும்

போக்குவரத்து

தொடர்பான

செயல்களைச்

செய்ய வேண்டும்.

 

விழாவில்

பங்கேற்பவர்கள்,

விழாவில்

கலந்து

கொள்கிறவர்கள்

ஆகியோருக்கு

தேவைப்படும்

தண்ணீர், குளிர்பானம்,

தேனீர், சாப்பாடு

ஆகியவற்றை

குறிப்பிட்ட

நேரத்தில் வழங்க

வேண்டும்.

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////