November 17, 2021

பதிவு-3-முடிவும்- திருக்குறள்

 பதிவு-3-முடிவும்-

திருக்குறள்

 

விழாவில்

பங்கேற்பவர்கள்,

கலந்து

கொள்கிறவர்கள்

ஆகியோருக்கு

போக்குவரத்து

வசதி இல்லை

என்றால் செய்து

தருவதற்கும்,

வழி தெரியாமல்

தவிப்பவர்களுக்கு

வழி காட்டுவதற்கும்,

விழாவில் கலந்து

கொள்ள வருபவர்கள்

வர முடியாமல்

தவிக்கும் போது

அவர்களை அழைத்து

வருவதற்கும்,

விழா முடிந்து

செல்லுபவர்களை

அவர்கள்  செல்லும்

இடங்களுக்கு

அனுப்பி

வைப்பதற்கும்

போக்குவரத்து

ஏற்பாடுகளைச்

செய்ய வேண்டும்.

 

விழாவிற்கு ஆகும்

செலவை கணக்கில்

எடுத்துக் கொண்டு

அதற்கான பணத்தை

நம்மிடம் வைத்துக்

கொள்ள வேண்டும்.

 

விழாவில்

பங்கேற்கிறவர்களுக்கும்,

விழாவில் கலந்து

கொள்கிறவர்களுக்கும்

ஏதேனும்

பரிசுப் பொருட்கள்,

வழங்குவதாக

இருந்தால்

அவைகளை

வாங்கி வைத்துக்

கொள்ள வேண்டும்

 

விழாவில்

கலந்து கொள்ள

அழைப்பிதழ்

கொடுக்க வேண்டும்.

என்று முடிவு

எடுத்தால்

விழாவிற்கு

ஒரு வாரத்திற்கு

முன்பே

கொடுக்க வேண்டும்

மேலும்,

விழாவிற்கு

முந்திய நாளில் கூட

விழாவிற்கு

வருபவர்களை

அழைக்க வேண்டும்.

 

விழாவில் உள்ள

நிகழ்வுகளை

எந்த வரிசையில்

நடத்த வேண்டும்.

என்றும்

யாரை வைத்து

நடத்த வேண்டும்.

என்றும்

எவ்வளவு நேரம்

நடத்த வேண்டும்

என்றும்

ஒவ்வொரு

நிகழ்வுக்கும்

எவ்வளவு நேரம்

ஒதுக்க வேண்டும்

என்றும்

முடிவு செய்து

அதற்கு

ஏற்ற வகையில்

நேரங்களை

ஒதுக்க வேண்டும்

 

விழாவிற்கு

தேவையான

அனைத்தையும்

நாம் மட்டும்

தனியாக செய்யாமல்

நமக்கு உதவியாக

இருப்பவர்களையும்,

நமக்கு அறிவுரை

சொல்பவர்களையும்,

நமக்கு வழி

காட்டுபவர்களையும்,

துணைக்கு

வைத்துக் கொண்டு

விழாவிற்கான

அனைத்து

ஏற்பாடுகளையும்

செய்ய வேண்டும்.

 

இரண்டு : 

விழாவை

நடத்துவதற்கு முன்பு

எவ்வளவு தான்

திட்டங்கள்

போட்டாலும்

அந்த திட்டங்களை

எல்லாம்

விழா அன்று

செயல்படுத்துவது

தான் முக்கியம்.

ஏனென்றால்,

விழா அன்று

பல சிக்கலான

விஷயங்கள் நடக்க

வாய்ப்பு உண்டு.

அவைகளை எல்லாம்

சமாளிக்கும்

திறமை வேண்டும்.

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////

No comments:

Post a Comment