August 22, 2018

திருக்குறள்-பதிவு-4



                       திருக்குறள்-பதிவு-4


“”””நன்றி மறப்பது

நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது

நன்று””””””              

மனிதன் தன் வாழ்வில்
முக்கியமாக இரண்டு
விஷயங்களைத் தெரிந்து
வைத்திருக்க வேண்டும்

ஒன்று : ஒருவர் நமக்குச்
         செய்த நன்மையான
         செயல்களை மறப்பது
         நல்லது கிடையாது
         என்பதைத் தெரிந்து
         வைத்திருக்க
         வேண்டும்.
        
இரண்டு :ஒருவர் நமக்குச்
         செய்த தீமையான
         செயல்களை
         உடனே மறந்து
         விட வேண்டும்
         என்பதைத் தெரிந்து
         வைத்திருக்க
         வேண்டும்
         

ஒருவர் நமக்குச்
செய்த நன்மையான
செயல்களை மறப்பது
நல்லது கிடையாது
என்றால்,
அவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
மறந்து விட்டு
அவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டுமே நினைக்க
வேண்டும் என்று பொருள்.

ஒருவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
உடனே மறந்து விட
வேண்டும் என்றால்,
அவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
மறந்து விட்டு
அவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டும் நினைக்க
வேண்டும் என்று பொருள்

நன்றாக உற்றுக்
கவனித்தால்
இரண்டுமே ஒரே ஒரு
பொருளைத் தான்
சொல்ல வருகிறது என்பதை
நம்மால் புரிந்து
கொள்ள முடியும்
அதாவது ஒருவர்
நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டுமே நினைக்க
வேண்டும் என்பது
தெளிவாகும்.

எதற்காக ஒருவர்
நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டுமே நினைக்க
வேண்டும் என்பதை
நாம் தெரிந்து
கொள்ள வேண்டும்

நமக்கு குடும்பத்தில்     
தீர்க்க முடியாத கஷ்டம்
ஏற்பட்ட போதெல்லாம்
ஒருவர் நமக்கு
ஓடோடி வந்து
உதவிகள் செய்து
இருக்கிறார்
இக்கட்டான சூழ்நிலையில்
நாம் மாட்டிக் கொண்டு
மன வேதனைப் பட்ட
சமயத்தில் எல்லாம்
நம்முடைய
வேதனையை நீக்கி
துணை புரிந்து
இருக்கிறார்
இழப்புகள் ஏற்பட்டு
வருத்தத்தில்
துவண்ட போதெல்லாம்
நம்முடைய வருத்தத்தில்
பங்கு கொண்டு நம்மை
அந்த வருத்தத்தில்
இருந்து மீட்டு கொண்டு
வந்து இருக்கிறார்
நாம் கஷ்டப்பட்ட
போதெல்லாம்
பல உதவிகள் நமக்காக
செய்து இருக்கிறார்,

நாம் துன்பப்
பட்ட போதெல்லாம்
நமக்காக உதவிகள்
செய்து இருக்கிறார்.
ஆனால் ஒரு சமயம்
அவர் நமக்கு
தெரிந்தோ தெரியாமலோ
நன்மை செய்ய
முடியாமல் போய் இருக்கும்
அவருடைய சூழ்நிலை
எப்படி இருந்ததோ
நமக்கு தெரியாது
தீமையான செயலை
செய்து விட்டார்

அதன் விளைவால்
அவர் நமக்குச் செய்த
பல ஆயிரக்கணக்கான
உதவிகள்
நம் கண்ணுக்கு தெரியாது
அவர் செய்த
அந்த தீமையான
செயல் மட்டும் தான்
நம் நினைவில் நிற்கும்.



அவர் நமக்கு செய்த
ஆயிரக் கணக்கான
நன்மையான செயல்களை
மறந்து விடுவோம்
ஆனால் அவர் நமக்கு
செய்த அந்த
தீமையான செயலை
மட்டுமே நினைத்துக்
கொண்டு இருப்போம்

ஒருவர் நமக்கு
செய்த தீமையான செயலை
மட்டுமே நினைத்துக்
கொண்டிருந்தால்
அவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்கள்
எதுவும் நமக்கு தெரியாது
அவர் நமக்கு செய்த
தீமையை மட்டுமே
நினைத்துக் கொண்டிருப்போம்

ஒருவர் நமக்கு செய்த
தீமையான செயலை
மறப்பதன் மூலமே
ஒருவர் நமக்கு
செய்த நன்மையான செயலை
நினைவில் வைத்துக்
கொள்ள முடியும்

ஒருவர் நமக்கு
செய்த நன்மையான
செயல்களை மறப்பது
நல்லது கிடையாது


ஒருவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மறக்காமல் இருக்க
வேண்டுமானால்
அவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
உடனே மறந்து
விட வேண்டும்

ஒருவர் நமக்குச்
செய்த தீமையான
செயல்களை
உடனே மறந்து
விடுவதன் மூலமே
அவர் நமக்குச்
செய்த நன்மையான
செயலை நினைவில்
வைத்துக் கொள்ள
முடியும் என்ற
காரணத்தினால் தான்

நன்றி மறப்பது

நன்றன்று

நன்றல்லது அன்றே

மறப்பது நன்று

என்றார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  21-08-2018
/////////////////////////////////////////////////