September 26, 2018

திருக்குறள்-பதிவு-25


                     திருக்குறள்-பதிவு-25

உலகில் கண்டுபிடிக்கப்பட்ட
கண்டுபிடிப்புகள்
எல்லாவற்றையும்
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று விஞ்ஞானத்தால்
       கண்டுபிடிக்கப்பட்ட
       கண்டுபிடிப்புகள்

இரண்டு மெய்ஞ்ஞானத்தால்
         கண்டுபிடிக்கப்பட்ட
         கண்டுபிடிப்புகள்

விஞ்ஞானத்தால்
கண்டுபிடிக்கப்பட்ட
கண்டுபிடிப்புகள் அனைத்தும்
காலத்தால்
மாறிக்கொண்டே இருப்பவை
ஆனால்,
மெய்ஞ்ஞானத்தால்
கண்டுபிடிக்கப்பட்ட
கண்டுபிடிப்புகள் அனைத்தும்
காலத்தால் மாறாமல்
இருப்பவை

அணுவை பிளக்க
முடியாது என்றனர்
விஞ்ஞானிகள்
பின்னர் வந்த
விஞ்ஞானிகள்
அணுவை பிளக்க முடியும்
என்று சொல்லி அணுவை
பிளந்து புரோட்டான்,
எலக்ட்ரான், நியூட்ரான்
இருக்கிறது என்றனர்

மெய்ஞ்ஞானம் சொன்னது
செவ்வாய் கிரகம்
சிவப்பு நிறத்தில்
இருக்கிறது என்று
அவர்களுக்கு பின்னால்
வந்த மெய்ஞ்ஞானிகள்
அதை மறுக்கவில்லை
ஏனென்றால்
அவர்கள் இறுதியான
ஒன்றை உண்மையான
ஒன்றை கண்டுபிடித்து
சொன்னதே காரணம்

இதிலிருந்து
விஞ்ஞானிகள் சொல்வது
மாறிக் கொண்டே
இருக்கும் என்பதையும்
மெய்ஞ்ஞானிகள் சொல்வது
மாறாது இருக்கும்
என்பதையும்
தெரிந்து கொள்ளலாம்

காலத்தால் மாறிக்
கொண்டே இருக்கும்
விஞ்ஞானத்தால் மூன்று
விஷயங்களைச் சொல்ல
முடியாது

ஒன்று : ஏன் என்பதை
        சொல்ல முடியாது

இரண்டு: மாற்றம் எந்த
         இடத்தில் நிகழ்கிறது
         என்பதை சொல்ல
         முடியாது

மூன்று : இறுதியானது எது
         என்பதை சொல்ல
         முடியாது

குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்று சொல்ல
முடிந்த விஞ்ஞானத்தால்
மனிதன் ஏன்
குரங்கிலிருந்து வந்தான்
என்ற கேள்விக்கு
குரங்கின் குரோமோசோமும்
மனிதனின் குரோமோசோமும்
நெருங்கிய தொடர்பு
கொண்டிருக்கிறது
என்று மட்டுமே
சொல்ல முடிந்த
விஞ்ஞானத்தால்
தெளிவான காரணத்தை
விஞ்ஞானத்தால் விளக்கி
சொல்ல முடியவில்லை

மெய்ஞ்ஞானம் சொன்னது
விலங்கிலிருந்து
மனிதன் வரவில்லை
விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு
நிலையிலிருந்து தான்
மனிதன் வந்தான்
ஏன் என்றால்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையில்
விலங்கு என்ற
நிலை கழிக்கப்பட்டு
மனிதன் என்ற
நிலை வந்தது
என்பதை மெய்ஞ்ஞானம்
சொன்னது

விலங்கிலிருந்து மனிதன்
வந்தான் என்றால்,
விலங்கு நிலையில்
எந்த இடத்தில்
மாற்றம் நிகழ்ந்து
மனிதன் வந்தான்
என்பதை விஞ்ஞானத்தால்
சொல்ல முடியவில்லை

ஆனால்
மெய்ஞ்ஞானம் சொன்னது
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையில்
விலங்கு நிலை கழிவதும்
மனிதன் நிலை
உருவாவதும் ஒரே
சமயத்தில் நடைபெறும்
இரு செயல்கள்
இந்த இரு செயல்களும்
ஒரே புள்ளியில்
நடைபெறுகிறது
இந்த இடத்தில் தான்
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு
மனிதன் என்ற நிலை
உருவானது என்று
மெய்ஞ்ஞானம் சொன்னது

விலங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்பது தான்
இறுதியான முடிவு
என்பதை விஞ்ஞானத்தால்
அறுதியிட்டு சொல்ல
முடியவில்லை ஆனால்
மெய்ஞ்ஞானம்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
மனிதன் வந்தான்
என்பது தான்
இறுதியானது என்பதை
மெய்ஞ்ஞானம்
சொன்னது

விஞ்ஞானத்தால்
ஏன் என்பதையும்,
எந்த இடத்தில்
என்பதையும்,
இறுதியானது எது
என்பதையும்
சொல்ல முடியாது
என்ற காரணத்தால் தான்
சார்லஸ் டார்வினால்
விலங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்று மட்டுமே
சொல்ல முடிந்தது
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையைக்
கண்டுபிடிக்க முடியவில்லை.

இருந்தாலும்
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
முதன் முதலில் இந்த
உலகத்திற்கு அளித்து
விஞ்ஞானத்தில் புரட்சியை
ஏற்படுத்திய அறிவியல்
மாமேதை
சார்லஸ் டார்வினை
நாம் வணங்கவில்லையெனில்
அறிவில் சிறந்த  மேதைகள்,
இந்த உலகத்தில்
தோன்றாமலேயே போய்
விடுவார்கள் என்பதை
மட்டும் நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

--------- இன்னும் வரும்
---------- 26-09-2018
//////////////////////////////////////////////////////////