December 02, 2018

திருக்குறள்-பதிவு-61


                    திருக்குறள்-பதிவு-61

ஒத்த எண்ணம்
கொண்டவர்கள்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டு இருந்தாலும்,
எண்ணத்தில் ஒன்றுபட்டு
இருப்பார்கள்

தாயையும், தாரத்தையும்
எடுத்துக் கொள்வோம்
  
மகனுக்கு திருமணம்
ஆவதற்கு முன்பு
மகன் இரும்புவதை
நேரில் காணும் தாய்
இவ்வாறு சொல்கிறார்
கண்ட கண்ட இடத்திற்கு
சுற்ற வேண்டியது ;
கண்ட கண்ட தண்ணீரை
குடிக்க வேண்டியது ;
மழையில் நனையாதே
நனையாதே என்று
சொன்னால் சொல்
பேச்சைக் கேட்காமல்
மழையில் நனைந்து
ஊர் ஊராக
அலைய வேண்டியது ;
இப்போது நோய் வந்தால்
யார் அவஸ்தைப்படுவது ;
என்கிறார்.

மகனுக்கு திருமணம்
ஆன பின்பு மகனுடன்
தொலைபேசியில்
பேசும் போது தாய்
இவ்வாறு சொல்கிறார்
ஏண்டா இரும்புகிறாய் ;
உடம்பு சரியில்லையா ?
மாத்திரை போட்டாயா ?
கஷாயம் வைத்து குடி
ஜுரம் குறையவில்லை
என்றால்
டாக்டரைப் போய் பார் ;
சும்மா வேலை வேலை
என்று அலையாதே ;
இரண்டு மூன்று
நாட்கள் விடுமுறை
எடுத்து ஓய்வு எடுத்த
பிறகு வேலைக்கு போ ;
நமக்கு உடம்பு தான்
முக்கியம் வேலை
எப்போது வேண்டுமானாலும்
பார்த்துக் கொள்ளலாம் ;
முதலில் உடம்பைப் பார் ;
சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய
முடியும் என்கிறார்.

மகனுக்கு திருமணம்
ஆவதற்கு முன்பும் ;
மகனுக்கு திருமணம்
ஆன பின்பும் ;
மகனுக்கு உடல்நிலை
சரியில்லாதபோது
தாய் சொல்லும்
வார்த்தைகள் இவை.

காதலனுக்கும், காதலிக்கும்
திருமணம் ஆவதற்கு
முன்பு காதலியை
நேரில் சந்திக்கும்
காதலன் இரும்புகிறான்
காதலி இவ்வாறு
சொல்கிறார்
ஏண்டா இரும்புகிறாய் ;
உடம்பு சரியில்லையா ?
மாத்திரை போட்டாயா ?
கஷாயம் வைத்து குடி
ஜுரம் குறையவில்லை
என்றால்
டாக்டரைப் போய் பார் ;
சும்மா வேலை வேலை
என்று அலையாதே ;
இரண்டு மூன்று
நாட்கள் விடுமுறை
எடுத்து ஓய்வு எடுத்த
பிறகு வேலைக்கு போ ;
நமக்கு உடம்பு  தான்
முக்கியம் வேலை
எப்போது வேண்டுமானாலும்
பார்த்துக் கொள்ளலாம் ;
முதலில் உடம்பைப் பார் ;
சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய
முடியும் என்கிறார்.

காதலன், காதலி
திருமணம் செய்து
கணவன், மனைவி
ஆன பின்பு,
மனைவி தொலைபேசியில்
பேசும்போது
கணவன் இரும்புகிறான்
மனைவி இவ்வாறு
சொல்கிறார்
கண்ட கண்ட இடத்திற்கு
சுற்ற வேண்டியது ;
கண்ட கண்ட தண்ணீரை
குடிக்க வேண்டியது ;
மழையில் நனையாதே
நனையாதே என்று
சொன்னால் சொல்
பேச்சைக் கேட்காமல்
மழையில் நனைந்து
ஊர் ஊராக
அலைய வேண்டியது ;
இப்போது நோய் வந்தால்
யார் அவஸ்தைப்படுவது ;
என்கிறார்.

காதலன், காதலிக்கு
திருமணம் ஆவதற்கு
முன்பு காதலனுக்கு
உடல்நிலை சரியில்லாத
போது காதலியும் ;
காதலன், காதலிக்கு
திருமணம் முடிந்து
கணவன், மனைவி
ஆன பின்பு ;
கணவனுக்கு உடல்நிலை
சரியில்லாத போது
மனைவியும் ;
சொல்லும்
வார்த்தைகள் இவை.
  
தாயும், தாரமும்
சொன்ன வார்த்தைகளை
நன்றாக ஒப்பிட்டு
மீண்டும் ஒரு முறை
படித்துப் பார்த்தால்
ஒரு எழுத்து மாறாமல்
வேறு வேறு
சூழ்நிலைகளில் இருவரும்
பேசி  இருப்பதை நாம்
உணர்ந்து கொள்ளலாம்
இவ்வாறு
தாயும். தாரமும்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டாலும் எண்ணத்தில்
ஒன்று படுகிறார்கள்
அதாவது தாயானவள்
தன்னுடைய மகனுடைய
உடல்நலத்தின் மீதும்
தாரமானவள் தன்னுடைய
கணவனின் உடல்நலத்தின்
மீதும் அக்கறையுடன்
இருக்கிறார்கள்
இது தான்
தாயும், தாரமும்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டாலும்
எண்ணத்தில்
ஒன்றுபடுவது

நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
கியோர்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
தாங்கள் கண்டு பிடித்த
கண்டு பிடிப்புகளை
இந்த சமுதாயத்திற்கு
சொன்னது
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டதைக் குறிக்கிறது
தாங்கள் சொன்ன
கருத்திற்காக தங்களுடைய
உயிரை இழப்பதற்கும்
தயாராக இருந்தது
எண்ணத்தில் ஒன்றுபட்டு
இருந்ததைக் குறிக்கிறது

---------  இன்னும் வரும்
---------  02-12-2018
///////////////////////////////////////////////////////////