April 03, 2022

ஜபம்-பதிவு-728 (சாவேயில்லாத சிகண்டி-62)

 ஜபம்-பதிவு-728

(சாவேயில்லாத

சிகண்டி-62)

 

அகிருதவ்ரணர் :

பீஷ்மரை

வீழ்த்தக்கூடிய

மிகப்பெரும்

சக்தியாக

அம்பையை காலம்

உருவாக்கிக்

கொண்டிருக்கிறது

 

ஹோத்திரவாஹனர் :

பீஷ்மரை

வீழ்த்தக் கூடிய

ஆயுதமாக அம்பை

இருப்பாளா

 

அகிருதவ்ரணர் :

தன்னை

வீழ்த்தக் கூடிய

ஆயுதமாக

அம்பையை

உருவாக்கியதே

பீஷ்மர் தான்

 

ஹோத்திரவாஹனர் :

பீஷ்மரா

 

அகிருதவ்ரணர் :

ஆமாம்

பீஷ்மர் தான்

 

தன்னை

அழிக்கக்கூடிய

ஆயுதத்தை

தானே

உருவாக்கிக்

கொண்டார்

 

விசித்திர

வீர்யனுக்காக

அம்பையை

சிறை எடுத்து

அம்பையின்

வாழ்க்கை

அழிவதற்கு

காரணமாக இருந்து

தன்னை

வீழ்த்தக்கூடிய

ஆயுதமாக

அம்பையை

பீஷ்மர் தானே

உருவாக்கிக்

கொண்டார்

 

ஹோத்திரவாஹனர் :

இது பீஷ்மர்

தெரியாமல் செய்தது

 

அகிருதவ்ரணர் :

தெரிந்து செய்தாலும்

தெரியாமல்

செய்தாலும்

பாவம் பாவமே

 

பாவத்தின் பலனை

அனுபவித்துத்

தான் தீர

வேண்டும்

 

தன்னுடைய

சபதத்தை விடுத்து

பீஷ்மர் அம்பையை

திருமணம் செய்து

கொண்டிருந்தால்

தான் செய்த

பாவத்திற்கு

பிராயச்சித்தமாக

திருமணம் என்ற

செயல்

இருந்திருக்கும்

 

அவர் அதை

செய்யாத

காரணத்தினால்

தன்னை

வீழ்த்தக்கூடிய

ஆயுதமாக

அம்பையை

உருவாக்கி வைத்துக்

கொண்டார்

 

அதனால் அம்பை

இறந்தாலும்

பீஷ்மரைக்

கொல்லாமல்

விட மாட்டேன்

என்ற

லட்சியத்துடன்

சென்று

கொண்டிருக்கிறாள்

 

ஹோத்திரவாஹனர் :

அம்பை

இறந்து விட்ட

பிறகு பீஷ்மரை

அவளால்

எப்படி கொல்ல

முடியும்

 

அகிருதவ்ரணர் :

லட்சியம்

நிறைவேறுவதற்கு

முன்னரே

ஒருவர்

இறந்து விட்டாலோ

அல்லது

லட்சியத்தை

நிறைவேற்ற

முடியவில்லையே

என்ற

மனவருத்தத்துடன்

ஒருவர்

இறந்து விட்டாலோ

மேற்கொண்ட

லட்சியத்தை

முடிப்பதற்காக

அவர்களுடைய

ஆன்மா

இன்னொரு

பிறவியை எடுத்து

எடுத்த லட்சியத்தை

முடிக்கும்

 

ஹோத்திரவாஹனர் :

அப்படி என்றால்

அம்பை

 

அகிருதவ்ரணர் :

அம்பையைப் பற்றி

தெரிந்து கொள்ள

வேண்டும் என்றால்

அம்பையைப் பின்

தொடருங்கள்

 

அவளுடைய

வாழ்க்கையை

கூர்ந்து

கவனியுங்கள்

 

நிறைய

விஷயங்களை

நீங்களே

தெரிந்து

கொள்ளலாம்

 

(அவர்கள்

இருவரும் பேசி

முடித்து விட்டு

அம்பை சென்ற

திசையைப்

பார்த்த போது

அம்பை அவர்கள்

கண்களில் இருந்து

மறைந்து

வெகுதூரம் சென்று

விட்டிருந்தாள்

பரசுராமர்

இருக்கும் இடம்

நோக்கி அம்பை

சென்று

கொண்டிருக்கிறாள்)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-04-2022

-------ஞாயிற்றுக்கிழமை

//////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-727 (சாவேயில்லாத சிகண்டி-61)

 ஜபம்-பதிவு-727

(சாவேயில்லாத

சிகண்டி-61)

 

ஹோத்திரவாஹனர் :

அம்பை

தன்னுடைய லட்சியத்தை

அடைந்து விடுவாள்

என்கிறீர்களா

 

அகிருதவ்ரணர் :

லட்சியத்தை

அடைவது என்பது

இரண்டாம்பட்சம் தான்

 

லட்சியப் பாதையில்

பயணிப்பது தான்

மிக மிக முக்கியம்

 

அம்பையின்

லட்சியம்

சரியோ தவறோ

ஆனால்

தான் மேற்கொண்ட

லட்சியத்திற்காக

எவ்வளவு கஷ்டங்கள்

வந்தாலும்

அவைகளையெல்லாம்

எதிர்ந்து

புறந்தள்ளிவிட்டு

பீஷ்மரைக்

கொல்வேன் என்ற

ஒரே லட்சியத்துடன்

செல்லும்

அம்பையின் செயல்

போற்றுதலுக்குரியது

 

ஹோத்திரவாஹனர் :

பீஷ்மரை

அம்பை கொன்று

விடுவார்

என்கிறீர்களா

 

விருப்பப்படும்

போது தான்

மரணம் என்று

வரம் பெற்ற

பீஷ்மரை

அம்பையால்

கொல்ல முடியுமா

 

அகிருதவ்ரணர் :

பீஷ்மருக்கு

விருப்பப்படும்

போது தான்

மரணம் என்றால்

அவரை யாராலும்

கொல்ல முடியாது

என்று அர்த்தம்

 

அவரை எந்த

ஆயுதத்தாலும்

அழிக்க முடியாது

என்று அர்த்தம்

 

அவர்

விரும்பினாலொழிய

அவரை மரணம்

நெருங்காது

என்று அர்த்தம்

 

ஹோத்திரவாஹனர் :

அப்படி என்றால்

பீஷ்மரைக்

கொல்ல முடியாதா

 

அகிருதவ்ரணர் :

பீஷ்மரை யாராலும்

கொல்ல முடியாது

அம்பை உட்பட

ஆனால்

அவருடைய சபதத்தை

வைத்தே மரணத்தை

அவர் தழுவச்

செய்யலாம்

 

ஹோத்திரவாஹனர் :

எப்படி

 

அகிருதவ்ரணர் :

பீஷ்மர் தன்

மரணத்தை தானே

விரும்பி

ஏற்றுக்கொள்வதற்கான

வழிமுறையை

அம்பை

யோசித்து

வைத்திருக்கிறாள்

 

ஹோத்திரவாஹனர் :

அம்பையா

 

அகிருதவ்ரணர் :

ஆமாம்

அம்பை தான்

 

நினைத்து கூட

பார்க்க முடியாத

வகையில்

யோசித்து

வைத்திருக்கிறாள்

 

ஹோத்திரவாஹனர் :

என்ன யோசித்து

வைத்திருக்கிறாள்

 

அகிருதவ்ரணர் :

பீஷ்மருக்கு

காயத்தை ஏற்படுத்தி

வீழ்த்தி படுக்க

வைத்து விட்டால்

அவரை இயங்க

முடியாமல்

செய்து விட்டால்

தன்னுடைய

அத்தியாவசிய

தேவையுடன்

எந்த ஒரு

தேவைக்கும்

யாரையாவது

சார்ந்து தான்

இருக்க வேண்டும்

என்ற நிலையை

அவருக்கு

உருவாக்கி வைத்து

விட்டால்

தன்னுடைய

அத்தியாவசிய

தேவையையே

தன்னால்

நிறைவேற்ற

முடியவில்லையே

என்ற மன

வருத்தமே

தனக்குரிய

மரணத்தை

தானே விரும்பி

ஏற்றுக் கொள்ளும்

நிலையை

பீஷ்மருக்கு

உருவாக்கி விடும்

அதனால் பீஷ்மரை

எப்படி வீழ்த்த

வேண்டும் என்பதை

அம்பை யோசித்துக்

கொண்டிருக்கிறாள்

 

ஹோத்திரவாஹனர் :

சக்தி படைத்த

பீஷ்மரை

சாதாரண

பெண்ணான

அம்பையால்

பீஷ்மரை வீழ்த்தி

படுக்க வைத்து

விட முடியுமா

 

பீஷ்மரை

வீழ்த்த வேண்டும்

என்றால்

பீஷ்மரைப் போல

சக்தி படைத்த

பெண்ணாக

அம்பை

உருவாக வேண்டும்

அல்லவா

 

அம்பையால்

இது முடியுமா

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-04-2022

-------ஞாயிற்றுக்கிழமை

//////////////////////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-726 (சாவேயில்லாத சிகண்டி-60)

 ஜபம்-பதிவு-726

(சாவேயில்லாத

சிகண்டி-60)

 

பரசுராமரைச்

சந்தித்து உன்

தேவையைச் சொல்

அடுத்து நடக்க

வேண்டியவைகளை

அவர்

பார்த்துக் கொள்வார்

 

அம்பை :

அவரை நான்

சந்தித்தே

ஆக வேண்டும்

அவரை சந்திக்கும்

வழியைச்

சொல்லுங்கள்

 

அகிருதவ்ரணர் :

பரசுராமரை

அவ்வளவு எளிதில்

யாராலும்

சந்திக்க முடியாது

 

பரசுராமரை

சந்திக்க வேண்டும்

என்ற விதி

இருந்தால் மட்டுமே

பரசுராமரைச்

சந்திக்க முடியும்

 

பரசுராமரைச்

சந்திக்க வேண்டும்

என்பதற்காகவே

பலர் தவம் செய்து

கொண்டிருக்கிறார்கள்

 

பரசுராமரைச்

சந்திக்கும் பாக்கியம்

உனக்கு இருந்தால்

நீ கண்டிப்பாக

பரசுராமரை சந்திப்பாய்

 

அம்பை :

இப்போது

பரசுராமர்

எங்கே இருக்கிறார்

 

அகிருதவ்ரணர் :

இப்போது பரசுராமர்

மலைகளில்

முதன்மையான

மகேந்திர மலையில்

தவம் செய்து

கொண்டு இருக்கிறார்

 

அந்த மலைக்கு

செல்வது

அவ்வளவு எளிதல்ல

அடர்த்தியான

காடுகள்,

சதுப்பு நிலங்கள்,

வறண்ட நிலங்கள்

என்று பல்வேறு

வகையான 

இயற்கைத் தடைகள்

பலவற்றைக்

கடந்து தான்

செல்ல வேண்டும்

 

அம்பை :

லட்சியத்தை

நோக்கி

செல்பவர்களுக்கு

தடைகள் ஒரு

பொருட்டல்ல

நான் இப்போது

செல்கிறேன்

பரசுராமரைச்

சந்திக்கிறேன்

என் தேவை என்ன

என்பதைச்

சொல்கிறேன்

 

நான் வருகிறேன்

 

(என்று அம்பை

யாருடைய பதிலையும்

எதிர்பார்க்காமல்

செல்ல முயன்றாள்)

 

ஹோத்திரவாஹனர் :

அம்பையே

நீ இந்த

ஆசிரமத்திற்கு

வந்த நாள் முதல்

எதுவும்

சாப்பிடவில்லை

 

பரசுராமர்

இருக்கும்

இடம் தேடி சென்று

அவரைச் சந்திப்பதற்கு

உன் உடலில்

சக்தி வேண்டாமா

உணவு

உண்டு விட்டு

பிறகு செல்

 

அம்பை :

பரசுராமரை

சந்திப்பதற்கு எனக்கு

உணவு

தேவையில்லை

பீஷ்மரைக்

கொல்வேன் என்ற

லட்சியமே போதும்

 

ஹோத்திரவாஹனர் :

ஓய்வு எடுத்து

விட்டாவது செல்

 

அம்பை :

பீஷ்மரைக் கொன்று

விட்டுத்தான் நான்

ஓய்வு எடுப்பேன்

அது வரை

எனக்கு ஓய்வு

கிடையாது

 

பீஷ்மரைக்

கொல்லும் வரை

எனக்கு பசியில்லை

உறக்கம் இல்லை

 

நான் வருகிறேன்

 

(என்று சொல்லி

விட்டு யாரிடமும்

எந்த ஒரு

பதிலையும்

எதிர்பார்க்காமல்

அம்பை

பரசுராமரைச்

சந்திக்க நடந்து

சென்று கொண்டு

இருந்தாள்.

அம்பை நடந்து

செல்வதையே

பார்த்துக் கொண்டு

இருந்த

ஹோத்திரவாஹனர்

அகிருதவ்ரணரிடம்

பேசத் தொடங்கினார்)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-04-2022

-------ஞாயிற்றுக்கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-725 (சாவேயில்லாத சிகண்டி-59)

 ஜபம்-பதிவு-725

(சாவேயில்லாத

சிகண்டி-59)

 

அகிருதவ்ரணர் :

உன்னுடைய

கைகளால் தான்

பீஷ்மர்

கொல்லப்பட

வேண்டும்

என்று இருந்தால்

கண்டிப்பாக

உன்னால் தான்

பீஷ்மர்

கொல்லப் படுவார்

 

உன்னால் பீஷ்மர்

கொல்லப்படக்கூடாது

என்று இருந்தால்

நீ எவ்வளவு

முயற்சி செய்தாலும்

உன்னால்

பீஷ்மரைக்

கொல்ல முடியாது

 

பிறப்பும்

இறப்பும்

நம் கைகளில்

கிடையாது

 

அது இறைவனின்

தெய்வீகத்

திருவிளையாடல்கள்

 

மறைபொருளாக

வைக்கப்பட்டிருக்கும்

தெய்வீகத்தின்

ரகசியங்கள்

 

பிரபஞ்சத்தால்

மறைத்து

வைக்கப் பட்டிருக்கும்

மறை பொருள்கள்

 

திறக்க முடியாத

சூட்சுமத்தின்

ரகசியங்கள்

 

அம்பை :

பீஷ்மரை நான்

கொல்ல

மாட்டேனா

 

பீஷ்மருக்கு

என்னால் மரணம்

கிடையாதா

 

அகிருதவ்ரணர் :

இந்த உலகத்தில்

தானாகவே

ஏற்படும் மரணம்

பிறரால்

ஏற்படும் மரணம்

என்று

இரண்டு

நிலைகளில் தான்

மரணம் என்பது

ஏற்படுகிறது

 

வயது முதிர்வால்

ஏற்படும் மரணம்

நோயினால்

ஏற்படும் மரணம்

ஆகியவை

தானாகவே

ஏற்படும் மரணம்

 

பிறர் நம்மை

கொல்வதால்

ஏற்படும் மரணம்

பிறரால்

ஏற்படும் மரணம்

 

ஆனால்

பீஷ்மரைப்

பொறுத்தவரை

விருப்பப்படும்

போது தான்

மரணம் என்ற

நிலை இருக்கிறது

அதனால்

உன்னால்

பீஷ்மரைக்

கொல்ல முடியுமா

என்ற

கேள்விக்கான பதில்

காலத்தின்

கைகளில் தான்

இருக்கிறது

 

அம்பை :

பீஷ்மரின்

மரணம் காலத்தின்

கைகளில் இல்லை

என்னுடைய

கைகளில் தான்

இருக்கிறது

 

என்னுடைய

கைகளால்

பீஷ்மரை வீழ்த்துவேன்

வீழ்த்தப்பட்டதால்

ஏற்பட்ட காயத்தின்

வலி தாங்க முடியாமல்

விரும்பினால்

மட்டுமே மரணம்

ஏற்படும்

என்ற வரத்தைப்

பெற்ற பீஷ்மர்

இந்த உலகத்தில்

வாழப்பிடிக்காமல்

தானே மரணத்தை

விரும்பி

ஏற்றுக் கொள்வார்

 

பீஷ்மருக்கு

பிறராலும்

விருப்பப்பட்டும்

என்ற இரண்டு

நிலைகள் கலந்து

தான் மரணம்

 

இது தானே

நடக்கப் போகிறது

 

அகிருதவ்ரணர் :

அதை

சொல்லக்கூடிய

நிலையில்

நான் இல்லை

 

உன் சந்தேகத்தை

தீர்த்து

வைக்கக்கூடியவர்

உன் வாழ்க்கைக்கு

தேவையானது

எது என்பதை

உணர்ந்து

செய்யக் கூடியவர்

பரசுராமர் ஒருவர்

மட்டும் தான்

 

உன் வாழ்க்கைக்கு

எது தேவையோ

அதை

நிறைவேற்றி

வைப்பார்

 

அம்பை :

என் வாழ்க்கைக்கு

எது தேவையோ

அதை

நிறைவேற்றி

வைக்க வேண்டாம்

என் மனதுக்கு

எது தேவையோ

அதை

நிறைவேற்றினால்

போதும்

 

அகிருதவ்ரணர் :

எது தேவை

எது

தேவையில்லை

என்பதை

பரசுராமர்

முடிவு செய்வார்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-04-2022

-------ஞாயிற்றுக்கிழமை

//////////////////////////////////////////////////