April 03, 2022

ஜபம்-பதிவு-726 (சாவேயில்லாத சிகண்டி-60)

 ஜபம்-பதிவு-726

(சாவேயில்லாத

சிகண்டி-60)

 

பரசுராமரைச்

சந்தித்து உன்

தேவையைச் சொல்

அடுத்து நடக்க

வேண்டியவைகளை

அவர்

பார்த்துக் கொள்வார்

 

அம்பை :

அவரை நான்

சந்தித்தே

ஆக வேண்டும்

அவரை சந்திக்கும்

வழியைச்

சொல்லுங்கள்

 

அகிருதவ்ரணர் :

பரசுராமரை

அவ்வளவு எளிதில்

யாராலும்

சந்திக்க முடியாது

 

பரசுராமரை

சந்திக்க வேண்டும்

என்ற விதி

இருந்தால் மட்டுமே

பரசுராமரைச்

சந்திக்க முடியும்

 

பரசுராமரைச்

சந்திக்க வேண்டும்

என்பதற்காகவே

பலர் தவம் செய்து

கொண்டிருக்கிறார்கள்

 

பரசுராமரைச்

சந்திக்கும் பாக்கியம்

உனக்கு இருந்தால்

நீ கண்டிப்பாக

பரசுராமரை சந்திப்பாய்

 

அம்பை :

இப்போது

பரசுராமர்

எங்கே இருக்கிறார்

 

அகிருதவ்ரணர் :

இப்போது பரசுராமர்

மலைகளில்

முதன்மையான

மகேந்திர மலையில்

தவம் செய்து

கொண்டு இருக்கிறார்

 

அந்த மலைக்கு

செல்வது

அவ்வளவு எளிதல்ல

அடர்த்தியான

காடுகள்,

சதுப்பு நிலங்கள்,

வறண்ட நிலங்கள்

என்று பல்வேறு

வகையான 

இயற்கைத் தடைகள்

பலவற்றைக்

கடந்து தான்

செல்ல வேண்டும்

 

அம்பை :

லட்சியத்தை

நோக்கி

செல்பவர்களுக்கு

தடைகள் ஒரு

பொருட்டல்ல

நான் இப்போது

செல்கிறேன்

பரசுராமரைச்

சந்திக்கிறேன்

என் தேவை என்ன

என்பதைச்

சொல்கிறேன்

 

நான் வருகிறேன்

 

(என்று அம்பை

யாருடைய பதிலையும்

எதிர்பார்க்காமல்

செல்ல முயன்றாள்)

 

ஹோத்திரவாஹனர் :

அம்பையே

நீ இந்த

ஆசிரமத்திற்கு

வந்த நாள் முதல்

எதுவும்

சாப்பிடவில்லை

 

பரசுராமர்

இருக்கும்

இடம் தேடி சென்று

அவரைச் சந்திப்பதற்கு

உன் உடலில்

சக்தி வேண்டாமா

உணவு

உண்டு விட்டு

பிறகு செல்

 

அம்பை :

பரசுராமரை

சந்திப்பதற்கு எனக்கு

உணவு

தேவையில்லை

பீஷ்மரைக்

கொல்வேன் என்ற

லட்சியமே போதும்

 

ஹோத்திரவாஹனர் :

ஓய்வு எடுத்து

விட்டாவது செல்

 

அம்பை :

பீஷ்மரைக் கொன்று

விட்டுத்தான் நான்

ஓய்வு எடுப்பேன்

அது வரை

எனக்கு ஓய்வு

கிடையாது

 

பீஷ்மரைக்

கொல்லும் வரை

எனக்கு பசியில்லை

உறக்கம் இல்லை

 

நான் வருகிறேன்

 

(என்று சொல்லி

விட்டு யாரிடமும்

எந்த ஒரு

பதிலையும்

எதிர்பார்க்காமல்

அம்பை

பரசுராமரைச்

சந்திக்க நடந்து

சென்று கொண்டு

இருந்தாள்.

அம்பை நடந்து

செல்வதையே

பார்த்துக் கொண்டு

இருந்த

ஹோத்திரவாஹனர்

அகிருதவ்ரணரிடம்

பேசத் தொடங்கினார்)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-04-2022

-------ஞாயிற்றுக்கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment