April 03, 2022

ஜபம்-பதிவு-728 (சாவேயில்லாத சிகண்டி-62)

 ஜபம்-பதிவு-728

(சாவேயில்லாத

சிகண்டி-62)

 

அகிருதவ்ரணர் :

பீஷ்மரை

வீழ்த்தக்கூடிய

மிகப்பெரும்

சக்தியாக

அம்பையை காலம்

உருவாக்கிக்

கொண்டிருக்கிறது

 

ஹோத்திரவாஹனர் :

பீஷ்மரை

வீழ்த்தக் கூடிய

ஆயுதமாக அம்பை

இருப்பாளா

 

அகிருதவ்ரணர் :

தன்னை

வீழ்த்தக் கூடிய

ஆயுதமாக

அம்பையை

உருவாக்கியதே

பீஷ்மர் தான்

 

ஹோத்திரவாஹனர் :

பீஷ்மரா

 

அகிருதவ்ரணர் :

ஆமாம்

பீஷ்மர் தான்

 

தன்னை

அழிக்கக்கூடிய

ஆயுதத்தை

தானே

உருவாக்கிக்

கொண்டார்

 

விசித்திர

வீர்யனுக்காக

அம்பையை

சிறை எடுத்து

அம்பையின்

வாழ்க்கை

அழிவதற்கு

காரணமாக இருந்து

தன்னை

வீழ்த்தக்கூடிய

ஆயுதமாக

அம்பையை

பீஷ்மர் தானே

உருவாக்கிக்

கொண்டார்

 

ஹோத்திரவாஹனர் :

இது பீஷ்மர்

தெரியாமல் செய்தது

 

அகிருதவ்ரணர் :

தெரிந்து செய்தாலும்

தெரியாமல்

செய்தாலும்

பாவம் பாவமே

 

பாவத்தின் பலனை

அனுபவித்துத்

தான் தீர

வேண்டும்

 

தன்னுடைய

சபதத்தை விடுத்து

பீஷ்மர் அம்பையை

திருமணம் செய்து

கொண்டிருந்தால்

தான் செய்த

பாவத்திற்கு

பிராயச்சித்தமாக

திருமணம் என்ற

செயல்

இருந்திருக்கும்

 

அவர் அதை

செய்யாத

காரணத்தினால்

தன்னை

வீழ்த்தக்கூடிய

ஆயுதமாக

அம்பையை

உருவாக்கி வைத்துக்

கொண்டார்

 

அதனால் அம்பை

இறந்தாலும்

பீஷ்மரைக்

கொல்லாமல்

விட மாட்டேன்

என்ற

லட்சியத்துடன்

சென்று

கொண்டிருக்கிறாள்

 

ஹோத்திரவாஹனர் :

அம்பை

இறந்து விட்ட

பிறகு பீஷ்மரை

அவளால்

எப்படி கொல்ல

முடியும்

 

அகிருதவ்ரணர் :

லட்சியம்

நிறைவேறுவதற்கு

முன்னரே

ஒருவர்

இறந்து விட்டாலோ

அல்லது

லட்சியத்தை

நிறைவேற்ற

முடியவில்லையே

என்ற

மனவருத்தத்துடன்

ஒருவர்

இறந்து விட்டாலோ

மேற்கொண்ட

லட்சியத்தை

முடிப்பதற்காக

அவர்களுடைய

ஆன்மா

இன்னொரு

பிறவியை எடுத்து

எடுத்த லட்சியத்தை

முடிக்கும்

 

ஹோத்திரவாஹனர் :

அப்படி என்றால்

அம்பை

 

அகிருதவ்ரணர் :

அம்பையைப் பற்றி

தெரிந்து கொள்ள

வேண்டும் என்றால்

அம்பையைப் பின்

தொடருங்கள்

 

அவளுடைய

வாழ்க்கையை

கூர்ந்து

கவனியுங்கள்

 

நிறைய

விஷயங்களை

நீங்களே

தெரிந்து

கொள்ளலாம்

 

(அவர்கள்

இருவரும் பேசி

முடித்து விட்டு

அம்பை சென்ற

திசையைப்

பார்த்த போது

அம்பை அவர்கள்

கண்களில் இருந்து

மறைந்து

வெகுதூரம் சென்று

விட்டிருந்தாள்

பரசுராமர்

இருக்கும் இடம்

நோக்கி அம்பை

சென்று

கொண்டிருக்கிறாள்)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-04-2022

-------ஞாயிற்றுக்கிழமை

//////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment