April 08, 2022

ஜபம்-பதிவு-729 (சாவேயில்லாத சிகண்டி-63)

 ஜபம்-பதிவு-729

(சாவேயில்லாத

சிகண்டி-63)

 

(அம்பை பல்வேறு

கஷ்டங்களைக்

கடந்து சென்று

பரசுராமரைச்

சந்திக்கிறாள்)

 

பரசுராமர் :

என்னைக்

காண்பதற்காக

பல்வேறு

கஷ்டங்களைக்

கடந்து

வந்திருக்கிறாயே

யாரம்மா நீ

உன்னுடைய

பெயர் என்ன

 

அம்பை :

என்னுடைய

பெயர் அம்பை

 

காசி நாட்டு மன்னன்

பீமதேவனின்

மூத்த

மகளாக இருந்தவள்

 

பரசுராமர் :

இருந்தவள் என்றால்

 

அம்பை :

இப்போது இல்லை

என்று பொருள்

 

பரசுராமர் :

ஏன் இல்லை

 

அம்பை :

என்னை புறக்கணித்து

விட்டார்கள்

 

பரசுராமர் :

எதற்காக

புறக்கணித்தார்கள்

 

அம்பை :

பீஷ்மனால்

 

பரசுராமர் :

என்ன பீஷ்மனாலா

 

அம்பை :

ஆமாம்

பீஷ்மனால் தான்

 

என்னுடைய இந்த

அவல நிலைக்கு

காரணமே அந்த

பீஷ்மன் தான்

 

பரசுராமர் :

பீஷ்மன்

தவறு செய்ய

மாட்டான்

 

அம்பை :

பீஷ்மன்

உங்களுடைய சீடன்

என்பதற்காக

அவ்வாறு

சொல்கிறீர்களா

 

இந்த உலகத்தில்

சாதாரண நிலையில்

இருக்கும் மனிதர்கள்

சிறிய தவறு

செய்தாலும்

அதைப்

பெரிதுபடுத்திக்

காட்டும்

இந்த உலகம்,

உயர்ந்த நிலையில்

இருக்கும்

பீஷ்மன்

போன்றவர்கள்

பெரிய தவறு

செய்தாலும்

அந்தத் தவறை

மூடி மறைக்கத்

தான் பார்க்கிறது

 

இந்த உலகத்தில்

சாதாரண

மனிதர்களுக்கு

ஒரு நியாயம்

உயர்ந்த நிலையில்

இருப்பவர்களுக்கு

ஒரு நியாயம்

என்று தான்

இருக்கிறது

 

பரசுராமர் :

என்னைப்

பொறுத்தவரை

தவறு

செய்தவர் யாராக

இருந்தாலும்

அவர் தண்டிக்கப்பட

வேண்டியவர்

 

அது

என்னுடைய

சீடனாக

இருந்தாலும் சரி

யாராக

இருந்தாலும் சரி

 

சொல்

அம்பையே

 

பீஷ்மன் என்ன

தவறு செய்தான்

 

அம்பை :

காசி நாட்டு

சுயம்வர மண்டபத்தில்

திருமணம்

செய்வதற்காக

காத்துக்

கொண்டிருந்த

என்னை

பீஷ்மன்

சிறை எடுத்தார்

 

பரசுராமர் :

திருமணம்

செய்வதற்காக

ஷத்திரியர்கள்

பெண்ணை

சிறை எடுப்பது

தவறில்லையே

 

அம்பை :

பிரம்மச்சாரியாக

இருக்கும் பீஷ்மன்

சிறை எடுத்தது

தான் தவறு

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------08-04-2022

-------வெள்ளிக்கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment