April 08, 2022

ஜபம்-பதிவு-730 (சாவேயில்லாத சிகண்டி-64)

 ஜபம்-பதிவு-730

(சாவேயில்லாத

சிகண்டி-64)

 

பரசுராமர் :

திருமணம்

செய்வதற்காக சிறை

எடுத்திருக்கலாம்

 

அம்பை :

தனக்காக

சிறை எடுக்கவில்லை

வேறு ஒருவருக்காக

சிறை எடுத்தார்

 

பரசுராமர் :

வேறு

ஒருவருக்காகவா

 

அம்பை :

ஆமாம்

பீஷ்மனின் தம்பி

விசித்திர வீர்யனுக்காக

என்னை

சிறை எடுத்தார்

 

பரசுராமர் :

நீங்கள் எதிர்ப்பு

தெரிவிக்கவில்லையா

 

அம்பை :

விசித்திர வீர்யனை

திருமணம் செய்ய

மாட்டேன் என்று

நான் எதிர்ப்பு

தெரிவித்ததால்

என்னை அனுப்பி

விட்டார்

 

பீஷ்மன் என்னை

சிறை எடுத்ததால்

என்னுடைய காதலன்

சால்வன்

என்னை ஏற்க

மறுத்து விட்டார்

 

பீஷ்மனுக்கு

பயந்து என்னுடைய

பெற்றோர்கள்

என்னை

ஏற்றுக் கொள்ளாமல்

என்னை

புறக்கணித்து

விட்டார்கள்

 

நான் யாருமற்ற

அனாதையாக

நிற்பதற்கு

நீங்கள் தான்

காரணம்

நீங்கள் தான்

என்னைத் திருமணம்

செய்து கொள்ள

வேண்டும் என்று

கேட்டதற்கு

அஸ்தினாபுரத்தின்

அவையில்

அனைவரும்

கூடியிருக்கும் போது

என்னை திருமணம்

செய்து கொள்ள

மாட்டேன் என்று

சொல்லி என்னை

அவமானப்படுத்தி

அசிங்கப்படுத்தி

அனுப்பி விட்டான்

அந்த பீஷ்மன்

 

பிரம்மச்சாரியாக

இருக்கும்

பீஷ்மன் என்னை

சிறை எடுத்தது

முதல் தவறு

 

வேறு ஒருவருக்காக

என்னை சிறை

எடுத்தது

இரண்டாவது தவறு

 

சிறை எடுப்பதற்கு

முன்னர் சிறை

எடுக்கப்போகும்

பெண் யாரையாவது

காதலிக்கிறாளா

என்று தெரியாமல்

சிறை எடுத்தது

மூன்றாவது தவறு

 

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

என்று என்னை

அவமானப்படுத்தியது

நான்காவது தவறு

 

என்னுடைய

வாழ்க்கையை

அழித்தது

ஐந்தாவது தவறு

 

மன்னிக்கவே

முடியாத பல

தவறுகளைச் செய்து

என்னுடைய

வாழ்க்கை

அழிவதற்கு காரணமாக

இருந்த பீஷ்மன்

கொல்லப்பட

வேண்டும்

 

பரசுராமர் :

எந்த ஒரு

பிரச்சினைக்கும்

கொல்வது என்பது

தீர்வாகாது

 

அம்பை :

கொல்வது

ஒன்று தான்

தீர்வு  என்றால்

கொன்று தானே 

ஆக வேண்டும்

 

பெண்ணின் வாழ்க்கை

அழிவதற்கு காரணமாக

இருப்பவர்கள்

பணம்

படைத்தவர்களாக

இருந்தாலும் சரி

பதவி

படைத்தவர்களாக

இருந்தாலும் சரி

அதிகாரம்

படைத்தவர்களாக

இருந்தாலும் சரி

யாராக இருந்தாலும் 

அவர்கள்

கொல்லப்படுவார்கள்

என்பதை

இந்த உலகம்

தெரிந்து கொள்ள

வேண்டும் என்றால்

பீஷ்மன்

கொல்லப்படத் தான்

வேண்டும்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------08-04-2022

-------வெள்ளிக்கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment