December 22, 2011

போகர்-7000-சாயா தரிசனம்-செய்யும் முறை- பதிவு-6





               போகர்-7000- சாயா தரிசனம் - செய்யும் முறை - பதிவு -6

        """"“”பதிவு ஆறை விரித்துச் சொல்ல
                                             ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - செய்யும் முறை:
பாடல் - 2:

     “”””””காணவே சாமமது ரெண்டுக்குள்ளே
                               கருவான காயாதி கற்பங்கொண்டு
              கோணவே போசனங்கள் உண்டுமேதான்
                              தோறாமல் பூமிதனில் நின்றுகொண்டு
              நாணவே முடிதனையே அசைக்காமல்தான்
                               நன்மையுடன் இருகரமும் தொங்கவிட்டு
             பூணவே தன்நிழலைக் கண்ணால்கண்டு
                              பொங்கமுடன் நன்மைதின்மை அறிந்திடாயே”””””””
                                                                              ---------போகர்------ 7000---------
           “”””””காணவே சாமமது ரெண்டுக்குள்ளே”””””
சாயா தரிசனத்தை இரண்டு சாமத்திற்குள் செய்ய வேண்டும் என்கிறார் போகர்.
முதலில் சாமம் என்றால் என்ன என்றும் , அதன் கால அளவு எவ்வளவு என்றும் தெரிந்து கொள்வோம் .


சாமம் :
ஒரு நாளைக்கு 10 சாமம்
பகல் 5 சாமம், இரவு 5 சாமம் ---ஆக மொத்தம்-----ஒரு நாளைக்கு 10 சாமம்
ஆகும் .

பகல் 5 சாமம் ----என்பது ---அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ,
இரவு 5 சாமம்---- என்பது -------மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 06..00 மணி வரை ,
ஆகும் .

                        1 சாமம் --------------  6 நாழிகை
                        1 நாழிகை------------ 24 நிமிடம்
                        6 நாழிகை------------ 02 மணி 24 நிமிடம்
                        எனவே ,
                         1 சாமம்--------------- 02 மணி 24 நிமிடம்
                         2 சாமம்----------------04 மணி 48 நிமிடம்

போகர்  சாயா தரிசனத்தை “”சாமமது ரெண்டுக்குள்ளே”” செய்ய வேண்டும் என்றும் , காலையில் சூரியனை வைத்தும் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார் .

அதாவது காலையில் இரண்டு சாமத்திற்கான அளவுகளை கணக்கிட்டு அந்த கால அளவுக்குள் , சாயா தரிசனத்தை செய்யும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
போகர்  சொல்லும் சாயா தரிசனத்திற்கான கால அளவை பின்வருமாறு கணக்கிட்டு செய்ய வேண்டும்.    

இரண்டு சாமத்திற்கான அளவு - கணக்கிடுதல் : 
             
          காலை ------------- 06 . 00 மணி (அதிகாலை 06.00 மணி)
       1 சாமம் --------------  02 . 24 (2 மணி 24 நிமிடம்)
                                                   --------------------
          1 சாமம் -------------  08 . 24 (8 மணி 24 நிமிடம்)   
                                                    ---------------------

            காலை---------------- 08 - 24 (8 மணி 24 நிமிடம்)
           1 சாமம்----------------  02 . 24
                                                          --------------------
              2 சாமம் --------------  10 . 48 (10 மணி 48 நிமிடம்)
                                                        ---------------------


சாமமது இரண்டுக்குள்ளே என்றால் அதிகாலை 06.00 மணியிலிருந்து அதிகாலை 10.48 மணிக்குள் என்று பொருள்.
சாயா தரிசனத்தை அதிகாலை 06.00 மணிமுதல் அதிகாலை 10..48 மணிவரை இடைப்பட்ட நேரத்திற்குள் காலத்திற்குள் செய்ய வேண்டும் என்கிறார்  போகர்.



                                  “”””””””கருவான காயாதி கற்பங்கொண்டு
                         கோணவே போசனங்கள் உண்டுமேதான்”””””””””
 காய கற்பம் :
காயம் என்றால் உடம்பு என்று பொருள் .
கற்பம் என்றால் அழிவில்லாமல் பாதுகாப்பது என்று பொருள் .
காய கற்பம் என்றால் உடலை அழிவில்லாமல் பாதுகாப்பது என்று பொருள் .

இங்கே போகர்  காயாதி கற்பம் கொண்டு என்கிறார் . ஆனால் அதன் விவரங்கள் என்ன என்று அவர்  சொல்லவில்லை .
காயாதி கற்பம் என்றால் லேகியம் என்று தவறாக நினைத்து விட வேண்டாம்.
அது என்னவென்ற ரகசியம் குரு , சீடர்  பரம்பரை வாயிலாக மறை பொருளாக வந்து கொண்டு இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .

போசனங்கள் உண்டுமே தான் என்றால் நன்றாக சாப்பிட்டு விட்டு என்று பொருள் .

சாயா தரிசனத்தை சாப்பிட்டு விட்டுத் தான் செய்ய வேண்டும் என்கிறார் போகர் .



             “”””””””தோறாமல் பூமிதனில் நின்றுகொண்டு
               நாணவே முடிதனையே அசைக்காமல்தான்
                           நன்மையுடன் இருகரமும் தொங்கவிட்டு”””””””

முதலில் பூமியில் அசையாமல் நேராக நின்று கொள்ள வேண்டும் .

பெண்களுக்கு நாணம் வந்தால் எப்படி முகத்தை தொங்கப் போடுவார்களோ, அவ்வாறு முகத்தை பூமியை நோக்கி தொங்க விட்டுக் கொண்டு,  முகத்தை அசைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .

நம்முடைய இரண்டு கரங்களையும் தளர்த்திக் கொண்டு தரையை நோக்கியவாறு இருக்கும் படி தொங்க விட்டுக் கொள்ள வேண்டும் .
இரண்டு கரங்களும் பூமியை நோக்கி இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் .



””””””பூணவே தன்நிழலைக் கண்ணால்கண்டு
                             பொங்கமுடன் நன்மைதின்மை அறிந்திடாயே”””””””
மேலே சொல்லப்பட்ட முறைகளின் படி செயல்களைச் செய்து தன்னுடைய நிழலை முழுமையாக பார்த்து சாயா தரிசனத்தை செய்வதற்குரிய பயிற்சியை தொடங்க வேண்டும் .


நமது வாழ்வில் நடை பெறக் கூடிய நன்மை , தீமைகளை அறிந்து கொள்ளக் கூடிய சக்தியை பெற வேண்டுமானால் சாயா தரிசனத்தை செய்ய வேண்டும் என்று சொல்லும் போகர் ,

சாயா தரிசனத்தை தொடர்ந்து செய்யும் முறைகளை தொடர்ந்து பின்வரும் பாடல்களில்  கூறுகிறார் .

                     """""“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                    போற்றினேன் பதிவுஆறு  ந்தான்முற்றே “”""""