August 24, 2022

ஜபம்-பதிவு-868 (சாவேயில்லாத சிகண்டி-202)

 ஜபம்-பதிவு-868

(சாவேயில்லாத

சிகண்டி-202)

 

ஒரு பெண்

நினைத்தால்

எத்தகைய

விஷயத்தையும்

சாதிக்கலாம்

முடிக்க முடியாத

விஷயத்தையும்

முடிக்கலாம்

என்பதை

அம்பையின்

வாழ்க்கையைப்

பார்த்துத்

தெரிந்து 

கொள்ளலாம்

 

பெண்கள் ஒவ்வொரு

வேலைக்கும் பிறர்

உதவியையே

எதிர்பார்த்து

சார்ந்து வாழாமல்

தன்னுடைய

வேலையை

தானே முடித்துக்

கொள்ளும்

தனித்துவத்துடன்

வாழ்ந்தால் மட்டுமே

வெற்றி பெற

முடியும்என்பதை

அம்பையின்

வாழ்க்கையைப்

பார்த்துத் தெரிந்து

கொள்ளலாம்

 

இந்த உலகத்தில்

பெண்கள்எப்படி

வாழ வேண்டும்

என்பதற்கு

உதாரணமாக

இருந்தவள்

அம்பை

 

சிகண்டியாகி

பீஷ்மரைக் கொன்ற

அம்பைக்குரிய

மரியாதையை

செலுத்துவோம்

 

என்று கிருஷ்ணன்

சொன்னதை அடுத்து

எரிந்து கொண்டிருக்கும்

சிகண்டியின்

உடலைப்

பார்த்துபஞ்ச

பாண்டவர்கள்

தலை குனிந்து

மரியாதை

செலுத்தி வணங்கினர்

 

ஒரு பெண்

எப்படி வீரத்துடன்

வாழ வேண்டும்

என்பதை

இந்த உலகத்திற்குக்

காட்டிய

அம்பையை

வணங்குவோம்

 

ஒரு பெண் எப்படி

சுயமரியாதையுடன்

வாழ வேண்டும்

என்பதை இந்த

உலகத்திற்கு

நிரூபித்த

அம்பையை

வணங்குவோம்

 

சிகண்டியாகி

பீஷ்மரைக்

கொன்ற

அம்பையை

வணங்குவோம்

 

இந்த உலகத்தில்

ஒவ்வொரு

பெண்ணும்

அம்பையாக

வாழ்ந்தால்

மட்டுமே

வாழ முடியும்

என்று நிரூபித்து

விட்டு சென்ற

அம்பையை

வணங்குவோம்

 

ஒவ்வொரு

பெண்ணும்

தனக்கு ஏற்பட்ட

கஷ்டத்தைத் தானே

தான் தீர்த்துக்

கொள்ள வேண்டும்

என்பதை

சிகண்டியாகி

பீஷ்மரைக் கொன்று

இந்த உலத்திற்கு

நிரூபித்த

அம்பையை

வணங்குவோம்

 

தன்னுடைய

நீண்ட

வாழ்க்கைப்

போராட்டப்

பயணத்தை

முடித்துக்

கொண்ட

அம்பையை

வணங்குவோம்

 

அம்பையின்

ஆன்மா

இறைவனுடன்

இரண்டறக் கலந்து

அமைதி பெற

அம்பையை

வணங்குவோம்

 

தெய்வ நிலையை

அடைந்த

அம்பையை

வணங்குவோம்

 

தெய்வத்தாயான

அம்பையை

வணங்குவோம்

 

""""""சிகண்டியாகி

பீஷ்மரைக் கொன்ற

அம்பை """""  யை

வணங்குவோம்

 

சுபம்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

 

ஜபம்-பதிவு-867 (சாவேயில்லாத சிகண்டி-201)

 ஜபம்-பதிவு-867

(சாவேயில்லாத

சிகண்டி-201)

 

ஆன்மாவில் உள்ள

கர்மாக்கள்

அனைத்தையும்

கழிந்தால் தான்

முக்தி என்பது

கிடைக்கும்

என்பதை

அம்பை தன்னுடைய

ஆன்மாவில் உள்ள

கர்மாக்கள்

அனைத்தையும்

கழித்து

முக்தி பெறுவதற்கு

தகுதி

பெற்றதிலிருந்து

தெரிந்து

கொள்ளலாம்

 

ஆன்மாவில் கர்மா

இருந்தால் மட்டுமே

மனிதன் இந்த

உலகத்தில் பிறப்பான்

ஆன்மாவில் கர்மா

இல்லை என்றால்

இந்த உலகத்தில்

மனிதன்

பிறக்க மாட்டான்

என்பதை

அம்பையின்

ஆன்மாவில்

உள்ள கர்மாக்கள்

அனைத்தும்

கழிந்த பிறகும்

பீஷ்மரை வீழ்த்த

வேண்டும் என்ற

வரத்தை சிவனிடம்

இருந்து கேட்டுப

பெற்றதால்

அம்பையின்

ஆன்மாவில்

கர்மா பதிவாகி

அம்பை

சிகண்டினியாக

பிறப்பு

எடுத்ததிலிருந்து

தெரிந்து

கொள்ளலாம்

 

ஒவ்வொரு

ஆன்மாவும்

இந்த உலக்தில்

எதற்காக பிறப்பு

எடுக்கிறதோ

அந்த கடமையை

முடிக்கும்என்பதை

அம்பையின் ஆன்மா

பீஷ்மரை

வீழ்த்துவதற்காக

சிகண்டினியாகப்

பிறப்பெடுத்து

சிகண்டினியிலிருந்து

சிகண்டியாக மாறி

பீஷ்மரை

வீழ்த்தியதிலிருந்து

தெரிந்து கொள்ளலாம்

 

ஆன்மா தன்னுடைய

கடமையை

முடித்தவுடன்

இறைவனுடன்

இரண்டறக்

கலந்து விடும்

என்பதை

அம்பையின்

ஆன்மா பீஷ்மரை

வீழ்த்திதன்னுடைய

கடமையை முடித்து

விட்டதால்

இறைவனுடன்

இரண்டறக் கலக்க

தயாராகி

விட்டதிலிருந்து

தெரிந்து கொள்ளலாம்

 

தெரிந்து செய்தாலும்

தெரியாமல் செய்தாலும்

பாவத்தை செய்தவர்

யாராக இருந்தாலும்

செய்த பாவத்திற்குரிய

தண்டனையை

அனுபவித்துத் தான்

ஆக வேண்டும்

பாவத்திற்குரிய

தண்டனையிலிருந்து

யாரும் தப்பிக்க

முடியாது

என்பதை

அம்பையின்

வாழ்க்கையை

பீஷ்மர்

தெரியாமல்

பாழாக்கியதால்

அம்பை

சிகண்டினியாகப்

பிறப்பெடுத்து

சிகண்டினியிலிருந்து

சிகண்டியாக மாறி

பீஷ்மரை

வீழ்த்தியதிலிருந்து

தெரிந்து

கொள்ளலாம்

 

ஆன்மா தொடர்ந்து

பல பிறப்புகளை

எடுக்கும்

என்பதை

அம்பை

சிகண்டினியாகப்

பிறப்பு எடுத்ததிலிருந்து

தெரிந்து கொள்ளலாம்

 

பெண்களுக்கு கஷ்டம்

என்பது ஏற்பட்டால்

கஷ்டத்தைத் தீர்க்க

வேண்டும் என்று

யாரிடமும் சென்று

நிற்கக் கூடாது

தங்களுடைய

கஷ்டத்தைத்

தாங்களே

தான் தீர்த்துக்

கொள்ள வேண்டும்

என்பதை

அம்பையின்

வாழ்க்கையைப்

பார்த்துத் தெரிந்து

கொள்ளலாம்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-866 (சாவேயில்லாத சிகண்டி-200)

 ஜபம்-பதிவு-866

(சாவேயில்லாத

சிகண்டி-200)

 

அம்பை மட்டும்

இல்லாவிட்டால்

பீஷ்மரைக் கொல்ல

வேண்டும் என்ற

வரத்தை சிவனிடம்

இருந்து அம்பை

மட்டும்

பெற்றிருக்காவிட்டால்

பாண்டவர்களால்

குருக்ஷேத்திரப்

போரில்

வெற்றி

பெற்றிருக்கவே

முடியாது

 

வாழ்க்கையில்

எதிர்ப்பட்ட

கஷ்டங்களினால்

பாதிக்கப்பட்டு

மேற்கொண்ட

கொள்கையைத்

துறந்து விட்டு

வாழ்பவர்கள் மத்தியில்

எவ்வளவோ கஷ்டங்கள்

வாழ்க்கையில்

எதிர்ப்பட்ட போதும்

அந்த கஷ்டங்களை

எல்லாம் எதிர்த்து

நின்று போராடி

வெற்றி பெற்று

தன்னுடைய

கொள்கையான

பீஷ்மரைக் கொல்ல

வேண்டும் என்பதையே

சிவனிடம் இருந்து

வரமாகக் கேட்டுப்

பெற்றவள் தான்

அம்பை

 

உலகத்திலேயே

மிக உயர்ந்த

விஷயமான

முக்தியை நோக்கி

இந்த உலகமே

ஓடிக்கொண்டிருக்கும்

வேளையில்

தனக்கு வரமாக

அந்த முக்தியே

கிடைக்கவிருந்தும்

அதை ஏற்றுக்

கொள்ளாமல்

வேண்டாம் என்று

சொல்லி விட்டு

தன்னுடைய

கொள்கையான

பீஷ்மரைக் கொல்ல

வேண்டும் என்பதையே

சிவனிடம் இருந்து

வரமாகக் கேட்டுப்

பெற்றவள் தான்

அம்பை

 

பீஷ்மரைக்கொல்ல

வேண்டும் என்ற

அம்பையின்

கொள்கையின்

முன்னால்

சிவனால்

அளிக்கப்படும்

முக்தி ஒன்றும்

அம்பைக்குப்

பெரியதாகத்

தெரியவில்லை

 

கொள்கையை

தங்கள்

வாழ்க்கையில்

மேற்கொண்டவர்கள்

எப்படி இருக்க

வேண்டும் என்பதை

தன்னுடைய

வாழ்க்கையில்

வாழ்ந்து காட்டி

விட்டு சென்று

இருப்பவள் தான்

அம்பை

 

தனக்கு முக்தி

வேண்டாம்

தன்னுடைய

கொள்கையான

பீஷ்மரை கொல்லும்

வரம் தான்

வேண்டும் என்று

சிவனிடம்

வரம் பெற்று

அதை நிறைவேற்ற

வேண்டும் என்பதற்காக

அதற்காகவே ஒரு

பிறப்பெடுத்து

பெண்ணிலிருந்து

ஆணாக

சிகண்டியாக மாறி

பீஷ்மரை வீழ்த்தி

தன்னுடைய

எண்ணத்தை

நிறைவேற்றியவள்

தான் அம்பை

 

அம்பையின்

வாழ்க்கையில்

இருந்துநாம் கற்றுக்

கொள்ள வேண்டியது

நிறைய இருக்கிறது

 

அம்பையின்

வாழ்க்கையை

உற்று நோக்கினால்

நாம் நிறைய

விஷயங்களைத்

தெரிந்து கொள்ளலாம்

நிறைய உண்மைகளை

அறிந்து கொள்ளலாம்

நிறைய நீதிகளைத்

தெரிந்து கொள்ளலாம்

நிறைய தர்மங்களை

உணர்ந்து கொள்ளலாம்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-865 (சாவேயில்லாத சிகண்டி-199)

 ஜபம்-பதிவு-865

(சாவேயில்லாத

சிகண்டி-199)

 

கிருஷ்ணன் :

யாராலும் வீழ்த்த

முடியாத பீஷ்மரை

வீழ்த்தி இருக்கிறானே

அது ஒன்று

போதாதா

யாராலும் செய்ய

முடியாததைத் தான்

சிகண்டி செய்து

இருக்கிறான் என்று

 

பீமன் :

சென்ற பிறவியில்

அம்பையாகப் பிறந்து

சிவனிடம் வரம்

பெற்றதால் தான்

இந்தப் பிறவியில்

சிகண்டியாகி

பீஷ்மரை

வீழ்த்தியிருக்கிறான்

 

கிருஷ்ணன் :

சிவனிடம்வரம்

வாங்குவது

அவ்வளவு

எளிதான காரியம்

என்று

நினைத்தாயா பீமா

 

வாழ்க்கையில்

அனைத்தையும்

இழந்த பிறகு

இனி இழப்பதற்கு

எதுவும் இல்லை

என்ற நிலை

வந்த பிறகு

ஆன்மாவில்

உள்ள கர்மாக்கள்

அனைத்தும் கழிந்த

பிறகுதான் சிவன்

தோன்றுவார்

வரம் தருவார்

 

கர்மாக்கள்

கழிந்தால்

மட்டுமே

சிவன்

தோன்றுவார்

 

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களைக் கழித்து

சிவனை நேரில்

வரவழைத்து

வரத்தைப்

பெறுவதற்கு

அம்பை எவ்வளவு

கஷ்டப்பட்டிருக்க

வேண்டும்எவ்வளவு

அவமானங்களை

பார்த்திருக்க வேண்டும்

எவ்வளவு

அசிங்கங்களைச்

சந்தித்திருக்க வேண்டும்

எவ்வளவு

இழிவுகளை

ஏற்றிருக்க வேண்டும்

எவ்வளவு

இழப்புகளை

கடந்திருக்க வேண்டும்

எவ்வளவு

இன்பங்களை

இழந்திருக்க வேண்டும்

 

அத்தனையும்

அனுபவித்து

விட்டுத் தான்

அம்பை தன்னுடைய

ஆன்மாவில் உள்ள

கர்மாக்களைக்

கழித்து

சிவனை நேரில்

வரவழைத்து

பீஷ்மரைக்

கொல்வதற்கான

வரத்தை சிவனிடம்

இருந்து பெற்றாள்

 

சிவனிடம்

இருந்து வரத்தை

அம்பை

எளிதாக பெற்று

விடவில்லை

 

பேராடித் தான்

பெற்றாள்

 

பீமன் :

இவ்வளவு

கஷ்டப்பட்ட அம்பை

சிவனிடம் முக்தியைக்

கேட்டிருக்கலாமே

 

ஏன் தாத்தா பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்ற வரத்தைக்

கேட்டாள்

அம்பை

 

கிருஷ்ணன் :

அம்பை மட்டும்

பீஷ்மரைக்கொல்ல

வேண்டும் என்ற

வரத்தைக் கேட்காமல்

முக்தி வேண்டும்

என்ற வரத்தைக்

கேட்டிருந்தால்

குருக்ஷேத்திரப்போரில்

பீஷ்மரை யாராலும்

வீழ்த்தியிருக்க

முடியாது

 

பாண்டவர்களால்

குருக்ஷேத்திரப்

போரில்

வெற்றி பெற்று

இருக்கவே முடியாது

 

பாண்டவர்கள்

குருக்ஷேத்திரப்

போரில்

வெற்றி

பெறுவதற்கு

முக்கிய

காரணமாக

இருந்ததே

அம்பை தான்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////