July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-88


               ஜபம்-பதிவு-580
         (அறிய வேண்டியவை-88)

“வளர்ச்சியடைந்த
எந்த ஒரு
ஆண்மகனும்
ஒரு பெண்
முன்னால்
ஆடைகளின்றி
செல்வது
பாவம் ஆகும்
வளர்ச்சியடைந்த
ஆண் மகனான
நீ - உனக்கு
தாயாக இருக்கும்
பெண் முன்னால்
ஆடைகளின்றி
செல்வது
பாவம் ஆகும்” 

“இந்த பாவத்தைத்
தரக்கூடிய செயலை
நீ செய்தால்  
பாவத்தில்
வீழ்ந்து நரக
வேதனையைத்
தான் அனுபவிப்பாய்”

“இப்போது நீ
அடையும்
துயரங்களை
விட அதிக
அளவில்
துன்பங்களை
அடையக்கூடிய
சூழ்நிலைகள்
உருவாகுவதற்கும்
வாய்ப்பு இருக்கிறது”

“நீ இப்போது
செய்யப் போகும்
செயல் உனக்கு
பாவத்தை
உண்டு பண்ணும்”

(கிருஷ்ணனுடைய
வார்த்தைகளைக்
கேட்டுக்
கொண்டிருந்த
துரியோதனன்
கொஞ்சம்
கொஞ்சமாக
மனம் மாற்றம்
அடைந்தான்
தன் தாய்
சொன்னாலும் தான்
எப்படி பிறந்த
மேனியாக
தன்னுடைய
தாயின் முன்னால்
சென்று எப்படி
நிற்க முடியும்
அது தவறான
செயல் அல்லவா
அது பாவமான
செயல் அல்லவா
கிருஷ்ணன்
சொன்னது போல
இது பாவத்தை
உண்டாக்கும் செயல்
என்பதை
நினைத்துக் கொண்டு
கிருஷ்ணனிடம்
கேட்டான்)

துரியோதனன் :
“இந்த பாவத்திலிருந்து
நான் தப்பிக்க
என்ன செய்ய
வேண்டும் என்று
சொல்லுங்கள்”

கிருஷ்ணன் :
“பாவம் உன்னை
அணுகாமல் இருக்க
வேண்டுமானால்
நான் சொல்பவைகளை
செய் துரியோதனா”

“இந்த தவறான
செயலை நீ
செய்யாமல் இருக்க
வேண்டுமானால் - நான்
சொல்பவைகளை
செய் துரியோதனா”

“உன்னுடைய
தாயின் முன்னால் நீ
பிறந்த மேனியாக
செல்லாமல்
இடுப்பிற்குக் கீழ்
உன் தொடையை
மறைக்கும் வண்ணம்
வாழை இலையை
கட்டிக் கொண்டு
உன்னுடைய தாயின்
முன்னால் போய்
நில் துரியோதனா “

“நீ அவ்வாறு
செய்தால் மட்டுமே
உன்னால்
பாவத்திலிருந்து
தப்பிக்க முடியும்”

“உன்னுடைய தாய்
சொன்னது போல்
பிறந்த
மேனியுடன் சென்று
உன்னுடைய தாயின்
முன்னால் நின்றால்
பாவத்திலிருந்து நீ
தப்பிக்க முடியாது”

“ஆகவே
வாழை இலையை
உன்னுடைய
இடுப்பிற்குக்
கீழ் தொடையை
மறைக்கும்
வகையில்
வாழை
இலையால்
மறைத்துக் கொண்டு
உன்னுடைய
தாயின் முன்னால்
சென்று நில்”

(கிருஷ்ணன் பேசிய
பேச்சைக் கேட்டு
மனம்
குழப்பமடைந்த
துரியோதனன்
அதில் உண்மை
இருக்கிறது என்று
நினைத்து விட்டு
வாழை இலையை
தன்னுடைய
இடுப்பிற்குக் கீ‘ழே
தொடையை
மறைக்கும் வகையில்
வாழை இலையைக்
கட்டிக் கொண்டு
சென்றான்
தன்னுடைய தாய்
காந்தாரி முன்னால்
போய் நின்றான்)

காந்தாரி :
“வந்து விட்டாயா
என் மகனே
என் முன்னால்
வந்து நில்”

(துரியோதனன்
காந்தாரியின் முன்னால்
வந்து நிற்கிறான்)

காந்தாரி :
“நான் என்னுடைய
கண்களை கட்டி
வைத்திருக்கும்
கட்டுக்களை
அவிழ்க்கப் போகிறேன்
என் மகனே”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-87


               ஜபம்-பதிவு-579
          (அறிய வேண்டியவை-87)

துரியோதனன் :
“மரணத்தைப் பார்த்தே
பயப்படாதவன்
இந்தத் துரியோதனன்
வரும் தோல்வியைப்
பார்த்தா பயந்து
விடுவான்”

“எனக்கு ஆதரவாக
இருந்தவர்கள்
அனைவரும் என்னை
விட்டு விட்டு
சென்றாலும்
நான் யாருடைய
ஆதரவும் இல்லாமல்
தனியாக நின்றாலும்
எனக்கு உதவி
செய்வதற்கு ஒருவர்
கூட இல்லை
என்றாலும்
நான் துவண்டு
போக மாட்டேன்
மன வேதனையால்
பித்தனாக மாட்டேன்
பைத்தியமாக சுற்றித்
திரிய மாட்டேன்”

“ஒன்று நான் இந்த
உலகத்தில் உயிரோடு
இருக்க வேண்டும்
அல்லது பாண்டவர்கள்
இந்த உலகத்தில்
உயிரோடு
இருக்க வேண்டும்”

கிருஷ்ணன் :
“இவ்வளவு தெளிவாக
பேசும் நீ ஏன்
பிறந்த மேனியாக
சுற்றிக் கொண்டு
இருக்கிறாய்”

துரியோதனன் :
“ஒரு விஷயமாக
போய்க்
கொண்டிருக்கிறேன்”

கிருஷ்ணன் :
“என்ன விஷயமாகப்
போய்க்
கொண்டிருக்கிறாய்?”

துரியோதனன் :
“என்னுடைய தாயைக்
காண சென்று
கொண்டிருக்கிறேன்”

கிருஷ்ணன் :
“தாயைப் பார்க்க
இப்படியா ஒரு
மகன் பிறந்த
மேனியாக செல்வது “

துரியோதனன் :
“என்னுடைய தாயின்
கட்டளையை
ஏற்றுத் தான்
இப்படி சென்று
கொண்டிருக்கிறேன்”

கிருஷ்ணன்  :
“உன்னுடைய தாய்
தான் உன்னை
இப்படி பிறந்த
மேனியாக
தன் முன்னால்
வரச் சொன்னார்களா?”

“கதாயுத போரில்
உன்னை வெல்வதற்கு
இந்த அவனியில்
யாரும் இல்லை
என்று சொல்லத்
தக்கவிதத்தில்
சிறப்புப் பெற்றவன் நீ!”

“இந்த உலகத்தில்
உள்ள மாபெரும்
வீரர்களில் ஒருவனாக
திகழ்பவன் நீ!”

“அஞ்சாத நெஞ்சுரம்
கொண்டவனாக
இருப்பவன் நீ!”

“எதையும்
சிந்தித்துப் பார்த்து
முடிவெப்பவன் நீ”

“அப்படிப்பட்ட நீயா
இப்படி சிந்திக்காமல்
முடிவு எடுப்பாய்”

துரியோதனன் :
“எதை நான்
சிந்திக்கவில்லை
என்கிறீர்கள்”

கிருஷ்ணன் :
“உன்னுடைய தாயின்
முன்னால் நீ
பிறந்த மேனியாக
செல்வதைத் தான்
நீ சிந்திக்காமல்
எடுத்த முடிவு
என்கிறேன் “

துரியோதனன் :
“தாய் ஒரு செயலைச்
செய்யச் சொல்லி விட்டு
நான் அதைச்
செய்யாமல் விட்டால்
தாய் சொல்லைத்
தட்டியவன்
ஆக மாட்டேனா?”

கிருஷ்ணன் :
“தாய் மகனுக்கு
இடும் கட்டளைகள்
அனைத்தையும் மகன்
செய்ய வேண்டும்
என்ற அவசியம் இல்லை”

“எதை செய்ய வேண்டும்
எதைச் செய்யக் கூடாது
என்ற ஒரு
நியதி இருக்கிறது “

“உன்னுடைய தாய்
உன்னுடைய
நிலையைக் கண்டு
மன வேதனையுற்று
ஏதோ சொல்ல
நினைத்து ஏதோ
சொல்லி இருக்கலாம்”

“மனக் குழப்பத்தில்
வார்த்தையில்
தடுமாற்றம்
ஏற்பட்டு இவ்வாறு
சொல்லி இருக்கலாம்”

“உன்னுடைய தாயின்
மன வேதனையில்
வெளிப்பட்ட
வார்த்தையின்
தடுமாற்றங்களாகக் கூட
இந்த வார்த்தைகள்
இருக்கலாம் “

“உன்னுடைய தாய்
அறியாமல் சொன்ன
வார்த்தைகளாகக் கூட
இந்த வார்த்தைகள்
இருக்கலாம் “

“உன்னுடைய தாய்
சொன்னதை நீ
அப்படியே செய்தால்
உனக்கு பாவம்
பிடிக்காதா?”

துரியோதனன் :
“எனக்கு பாவம்
பிடிக்குமா – எப்படி
பிடிக்கும்”

கிருஷ்ணன் :
“ஆமாம் உனக்கு
பாவம் தான் பிடிக்கும்
பாவம் தரக்கூடிய
செயலைத் தான் நீ
செய்யச் செல்கிறாய்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-86


              ஜபம்-பதிவு-578
        (அறிய வேண்டியவை-86)

“என் உடல் இந்த
பூமியில் பிணமாக
விழுந்த பின்பு தான்
குருஷேத்திரப்
போர் முடியும்”

காந்தாரி :
“அதர்மச் செயல்
புரிந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்
காந்தாரியின் மகன்கள்
என்று தான்
இந்த உலகம்
சொல்கிறதே தவிர
ஒரு நாளும்
இந்த உலகம் காந்தாரி
கோழைகளைப்
பெற்றெடுத்திருக்கிறாள்
என்று சொன்னதில்லை”

“நான் கோழைகளை
என்னுடைய மகன்களாக
பெற்றெடுக்கவில்லை
மகனே - நான்
வீரம் மிக்க
மகன்களைத் தான்
பெற்றிருக்கிறேன்
எதற்கும் அஞ்சாத
துணிவு மிக்க
மகன்களைத் தான்
பெற்றிருக்கிறேன்
மன தைரியத்தை
இழக்காத
அச்சமில்லாதவர்களைத்
தான் மகன்களாகப்
பெற்றிருக்கிறேன்”

“மகனே இந்தத் தாய்
உன்னைக் காண
வந்தது - உனக்கு
ஒரு உதவியை
செய்யலாம் என்ற
காரணத்தால் தான்
இந்தத் தாயால்
முடிந்த சிறு உதவியை
உனக்கு செய்து விட்டு
போகலாம் என்ற
காரணத்தால் தான்
உன்னைப் பார்ப்பதற்காக
நானே நீ இருக்கும்
இடத்தைத் தேடி நேரில்
வந்தேன் என் மகனே”

“நான் சொல்வதை
எந்த விதமான
மறுப்பும் சொல்லாமல்
தாயின் சொல்லுக்கு
மரியாதை கொடுத்து
நான் சொல்கிற
அனைத்தையும்
பின்பற்றி நான்
சொல்வதைச் செய்”

“நீ அவ்வாறு
செய்தாயானால் நான்
என்னுடைய சக்தியை
உனக்கு பாய்ச்சி
உன்னுடைய உடலை
வஜ்ரமாக மாற்றுவேன்
என்னுடைய சக்தியால்
யாரும் வீழ்த்த முடியாத
வஜ்ர தேகத்தை
உடையவனாக
உன்னை மாற்றுவேன்”

“நான் சொல்வதைக்
கவனமாகக் கேட்பாயாக
என் மகனே - நான்
சொல்வதைச் சிறிதும்
பிழையில்லாமல்
செய்வாயாக
என் மகனே”

துரியோதனன் :
“நான் என்ன
செய்ய வேண்டும்
சொல்லுங்கள் தாயே
தங்களின் உத்தரவிற்காகக்
காத்துக்
கொண்டிருக்கிறேன்”

காந்தாரி :
“முதலில் நீ பக்கத்தில்
உள்ள ஒரு ஆற்றில்
பிறந்த மேனியாக
சுத்தமாகக்
குளித்து விட்டு
அப்படியே உடலில்
எந்த ஒரு ஆடையும்
உடுத்தாமல்
பிறந்த மேனியாக
என் முன்னால்
வந்து நில் - நான்
உனக்கு என்னுடைய
கண்களின் வழியாக
என்னுடைய
புண்ணியப் பதிவுகளை
எல்லாம் ஒரே
சக்தியாக்கி
அந்த சக்தியை
உனக்குப் பாய்ச்சுவேன்
பிறந்த மேனியாக
குளித்து விட்டு
பிறந்த மேனியாகவே
என் முன்னால்
வந்து நில் மகனே “

“நான் சொல்வதைக்
கவனமாகக்
கேட்டாயல்லவா
என் மகனே
நான் சொன்னதைப்
பின்பற்றி எந்தப்
பிழையும் இல்லாமல்
சொன்னதை மட்டுமே
எந்தவிதிமான
மாற்றமும் இல்லாமல்
செய் என் மகனே “

“நாம் இருவரும்
சேர்ந்து செய்யப் போகும்
இந்த செயலின்
ரகசியத்தை யார்
கேட்டாலும்
சொல்லக் கூடாது
ரகசியம் காக்கப்பட
வேண்டும்”

“செல் நான்
உனக்காகக் காத்துக்
கொண்டிருப்பேன்”

(தன்னுடைய தாய்
காந்தாரி
சொன்னவைகளைக்
கேட்டுக் கொண்டு
அதை மனதில்
நிறுத்திய
துரியோதனன்
அருகில் உள்ள
ஒரு குளத்திற்குச்
சென்றான்
பிறந்த மேனியாக
அந்தக் குளத்தில்
சுத்தமாகக் குளித்தான்
பிறந்த மேனியாக
அந்த ஆற்றை
விட்டு எழுந்து வந்து
தன்னுடைய தாயைக்
காண சென்று
கொண்டிருந்தான்
அப்போது அவர்
எதிரே கிருஷ்ணன்
வந்தார்
இந்த காட்சியைக்
காண்டார்)

கிருஷ்ணன் :
“என்ன துரியோதனா
தோல்விக்கு அருகில்
வந்து விட்டோமே
என்ற வேதனை
உன்னை வாட்டியதால்
உன்னுடைய புத்தி
பேதலித்து விட்டதா?”

“தோல்வி பயம்
உன்னை ஆட்
கொண்டு விட்டதால்
பைத்தியமாகி
இப்படி பிறந்த
மேனியாக
சுற்றித் திரிந்து
கொண்டிருக்கிறாயா ?”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////