July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-83


                ஜபம்-பதிவு-575
         (அறிய வேண்டியவை-83)

“இந்த உலகத்தில்
உள்ள எந்த தாயும்
நினைப்பதைத் தான்
நானும் நினைக்கிறேன்
என்னுடைய
உயிரைக்
கொடுத்தாவது
என்னுடைய
மகனுடைய
உயிரைக் காப்பாற்ற
வேண்டும் என்று
நினைக்கிறேன்”

“என்னுடைய உயிரை
எடுத்துக்
கொள்ளுங்கள்
என்னுடைய
உயிரை அளித்து
துரியோதனனுடைய
உயிர்
அவனை விட்டு
போகாமல்
அவனைக்
காப்பாற்றுங்கள்”

வியாசர் :
“காந்தாரி நீ உன்
மகன் மேல்
வைத்த பாசம்
ஒரு தாய்
வைத்திருக்கும் பாசம்
ஒரு தாய் தன்
மகனிடம்
வைத்திருக்கும்
பாசத்தை உன்
மூலமாக
உணர்ந்து
கொண்டேன்”

“யார் உயிரையும்
கொடுத்து யார்
உயிரையும்
காப்பாற்ற முடியாது
உன்னுடைய
உயிரைக் கொடுத்து
உன்னுடைய
மகனுடைய
உயிரைக்
காப்பாற்ற முடியாது”

“வேண்டுமானால்
ஒன்று செய்யலாம்”

காந்தாரி  :
“சொல்லுங்கள் நான்
செய்வற்கு
தயாராக
இருக்கிறேன்
என் மகனுக்காக
என்னுடைய
உயிரையே
கொடுக்க
நான் தயாராக
இருக்கும் போது
எச்செயலையும்
செய்வதற்கு நான்
தயாராக
இருக்கிறேன்
சொல்லுங்கள்
முனிவரே”

வியாசர் :
“உன்னுடைய
புண்ணியங்கள்
அனைத்தையும்
ஒரே சக்தியாக்கி
உன் மூலமாக
உன்னுடைய
மகனுக்கு நீ
கொடுக்க வேண்டும்”

“உன் மூலமாக நீ
கொடுக்கும்
புண்ணியத்தின்
சக்தியானது
துரியோதனனை
காக்கும் கவசமாக
இருந்து அவனுடைய
உயிரைப் பாதுகாக்கும்”

காந்தாரி :
“நான் கொடுப்பதற்கு
தயாராக இருக்கிறேன்
சொல்லுங்கள்
முனிவரே
நான் என்ன
செய்ய வேண்டும்”

வியாசர் :
“உன்னுடைய அவசரம்
எனக்குப் புரிகிறது
காந்தாரி ஆனால்
சில விஷயங்களை
நீ தெரிந்து
கொள்ள வேண்டும்”

காந்தாரி :
“நான் என்ன
தெரிந்து கொள்ள
வேண்டும் என்று
நீங்கள்
நினைக்கிறீர்கள்”

வியாசர் :
“நீ செய்யப் போகும்
செயலால் உனக்கு
ஏற்படப்போகும்
பின் விளைவுகளைப்
பற்றி உனக்குத்
தெரியுமா”

காந்தாரி  :
“நான் என்னுடைய
மகனுக்காக
உயிரையே
கொடுக்கிறேன் என்று
சொல்லி விட்டேன்
அப்புறம் ஏன்
நான் பின்
விளைவுகளைப் பற்றி
நான் யோசிக்க
வேண்டும்”

வியாசர்  :
“இறப்பு என்பது
ஒரு நொடியில்
நிகழ்வது ஆனால்
பிறப்பு பல லட்சம்
ஆண்டுகளாகத்
தொடர்வது”

“உன்னுடைய
புண்ணியப் பதிவுகள்
அனைத்தையும்
உன்னுடைய மகனான
துரியோதனனுக்கு
கொடுத்து விட்டால்
நீ நரக வாழ்க்கை
தான் வாழ
வேண்டியிருக்கும்
என்பதை நினைவில்
கொள் காந்தாரி”

“உன்னுடைய
மகனுக்காக
நரக வாழ்க்கையை
அனுபவிக்க நீ
தயாராக
இருக்கிறாயா”

காந்தாரி :
“என்னுடைய மகன்
துரியோதனனுடைய
உயிர்
காப்பாற்றப்படும்
என்றால்
என்னுடைய
மகனுக்காக நான்
நரக வாழ்க்கையை
ஏற்றுக் கொள்ளவும்
தயாராக இருக்கிறேன்”

(என்று பேசிய
காந்தாரியின் ஆவேச
குரலைக் கேட்டு
அதிர்ந்தார் வியாசர் )

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment