July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-76


                ஜபம்-பதிவு-568
           (அறிய வேண்டியவை-76)

“இந்த உலகத்தில்
பிறந்தவர் யாராக
இருந்தாலும்
ஒரு செயலைச்
செய்து விட்டு
செய்த செயலுக்குரிய
விளைவை
அனுபவிக்காமல்
தப்பிக்கவே முடியாது “

“செய்த செயல்
பாவச் செயலாக
இருந்தால்
பாவத்திற்குரிய
விளைவையும்
புண்ணியச் செயலாக
இருந்தால்
புண்ணியத்திற்குரிய
விளைவையும்
கண்டிப்பாக
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும் “

“புண்ணியத்தைச் செய்யும்
புண்ணியவான்கள் செய்த
புண்ணியத்திற்குரிய
விளைவை
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும் ;
புண்ணியத்தைச்
செய்யும்
புண்ணியவான்கள் செய்த
புண்ணியத்திற்குரிய
விளைவிலிருந்து
தப்பிக்கவே முடியாது ;”

“அதைப்போல
பாவத்தைச் செய்யும்
பாவிகள் செய்த
பாவத்திற்குரிய
விளைவை
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும் ;”
பாவத்தைச் செய்யும்
பாவிகள் செய்த
பாவத்திற்குரிய
விளைவிலிருந்து
தப்பிக்கவே முடியாது “

“பாவத்தைச் செய்த
பாவிகள் செய்த
பாவத்திற்குரிய
விளைவிலிருந்து
தப்ப முடியாது
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும்
என்பதற்கு
இந்தக் கதை
மிகச் சிறந்த
உதாரணம் “

////////////////////////////////////////
(வியாசர்
திருதராஷ்டிரனை
சந்திக்கச் சென்றார்)

திருதராஷ்டிரன் :
“வாருங்கள் முனிவரே !
வாருங்கள்
தங்கள் வரவு
நல்வரவு ஆகுக
என்னையும்
என் மகன்
துரியோதனையும்
ஆசிர்வதியுங்கள் “

வியாசர் :
“அனைத்து
செல்வங்களையும் பெற்று
வளமுடன் வாழ்க”

திருதராஷ்டிரன் :
“ஏதேனும் முக்கியமான
விஷயம் இருந்தால்
மட்டும் தானே
நீங்கள் வருவீர்கள்  ;
நீங்கள் வந்தால்
ஏதேனும் முக்கியமான
விஷயமாகத் தான்
இருக்கும் - நீங்கள்
வந்திருப்பதின்
காரணத்தை நான்
அறிந்து கொள்ளலாமா
முனிவரே ! “

வியாசர்  :
“முனிவர்களில்
உயர்ந்தவரும்
முனிவர்களில்
தலை சிறந்தவரும்
முனிவர்களில்
தவ வலிமையில்
உச்சம் தொட்டவருமாகிய
மைத்ரேயர்
பாண்டவர்களைச்
சந்தித்து விட்டு
தங்களைக் காண
இங்கு வருகிறார் “

“அவருக்கு உரிய
மரியாதையை அளித்து
அவரை கௌரவப்
படுத்த வேண்டும் “

திருதராஷ்டிரன் :
“முனிவர்களுக்கு
நாங்கள் வழங்கும்
மரியாதையில்
என்றுமே குறை
வைத்ததில்லை.
மைத்ரேயர் முனிவருக்கு
உரிய மரியாதை
எந்தவிதமான
குறையும் இல்லாமல்
அவருக்கு முறைப்படி
வழங்கப்படும் முனிவரே!”

வியாசர் :
“மைத்ரேயர் முனிவருக்கு
உரிய மரியாதையை
அளித்தால்
மட்டும் போதாது
மைத்ரேயர் இங்கு
வந்து என்ன
அறிவுரைகளைச்
சொல்கிறாரோ  ?
அந்த அறிவுரைகளைக்
கேட்டு நடக்க வேண்டும் “

“அவர் உன்னுடைய
குலம் நன்றாக
இருக்க வேண்டும்
என்பதற்காக
உன்னுடைய மகனுக்கு
சில அறிவுரைகளைச்
சொல்லுவார் “

“அவர் சொல்லும்
அறிவுரைகள்
உண்மைகளை
வார்த்தைகளாக்கி
சொல்லப்படும் அறிவுரைகள்

அவர் சொல்லும்
அறிவுரையில்
உண்மை இருக்கிறது
என்பதை உணர்ந்து
பின்பற்றி வாழ்க்கையை
நடத்தினால் வாழ்க்கை
இன்பமயமானதாக
இருக்கும் “

“அவர் சொல்லும்
அறிவுரையில் உள்ள
உண்மைகளை உணராமல்
விட்டு விட்டு
அவருடைய அறிவுரையை
அலட்சியம் செய்து விட்டு
அவருடைய அறிவுரையை
ஏற்றுக் கொள்ளாமல்
விட்டு விட்டு
வாழ்க்கையை
நடத்தினால் வாழ்க்கை
துன்பமயமானதாக
இருக்கும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment