November 19, 2018

திருக்குறள்-பதிவு-52


                       திருக்குறள்-பதிவு-52

சமுதாயத்தில்
ஒரு செய்தியை
மறைமுகமாக
சொல்வதற்கு இரண்டு
விதமான முறைகள்
பின்பற்றப்படுகின்றன

ஒன்று :
ஒரு நல்ல
செயலின் மூலம்
ஒரு நல்ல செய்தி
மறைமுகமாக
சொல்லப்படுகிறது

இரண்டு:
ஒரு கெட்ட
செயலின் மூலம்
ஒரு கெட்ட செய்தி
மறைமுகமாக
சொல்லப்படுகிறது

இலங்கையில்
இருந்து ஒரு மந்திரி
தமிழ்நாட்டின்
தலைநகரமான
சென்னைக்கு ஒரு
விஷயமாக வருகிறார்
அவரை எதிர்த்து
தமிழ்நாட்டின் பல்வேறு
மாவட்டங்களில் அதாவது
மதுரை, தென்காசி
திருநெல்வேலி,
கன்னியாகுமரி போன்ற
மாவட்டங்களில்
இலங்கை மந்திரியை
எதிர்த்து போஸ்டர்கள்
அடித்து ஒட்டப் படுகிறது;
போராட்டங்கள்
நடத்தப் படுகிறது;

இந்த செயலைப்
பார்ப்பவர்கள் இந்த மந்திரி
சென்னைக்கு வருகிறார்
இவரை எதிர்ப்பவர்கள்
தென்காசியில் எதற்கு
போஸ்டர் ஒட்டுகிறார்கள்
தென்காசியில் எதற்கு
போராட்டம் நடத்துகிறார்கள்
சென்னைக்கும் தென்காசிக்கும்
என்ன சம்பந்தம்
இருக்கிறது என்று
கேள்வி கேட்கிறார்கள்

சென்னைக்கு வருபவருக்கு
இங்கே தென்காசியில்
நடப்பது எப்படி தெரியும்
இலங்கை மந்திரிக்கு
எதிராக தென்காசியில்
ஒட்டப்பட்ட போஸ்டரை
அவர் என்ன தென்காசியில்
வந்து படிக்கவா
போகிறார் அல்லது
தென்காசியில் அவருக்கு
எதிராக நடக்கும்
போராட்டத்தை நேரில்
வந்து பார்க்கவா போகிறார்
என்று கிண்டல்
செய்கிறார்கள்

இலங்கையில் இருந்து
சென்னைக்கு வரும்
இலங்கை மந்திரியை
எதிர்த்து
ஒட்டப்படும் போஸ்டர்
நடத்தப்படும் போராட்டம்
ஆகிய செயல்கள்
அனைத்தும் இலங்கை
மந்திரிக்கு ஒரு
செய்தியை சொல்வதற்காக
நடத்தப்பட்ட செயல் அல்ல

பல தவறுகள் செய்த
இலங்கை மந்திரியைப்
பற்றி மக்கள்
தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக
செய்யப்பட்ட
செயல்கள் தான்
போஸ்டர் ஒட்டியது
போராட்டம் நடத்தியது
ஆகிய செயல்கள்
அனைத்தும்
அதாவது தவறுகள்
பலவற்றைச் செய்த
இலங்கை மந்திரி
நம் நாட்டுக்குள்
வருகிறார் என்ற
செய்தியை மக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும்
என்பதற்காகவும் ;
இவரை நம் நாட்டிற்குள்
அனுமதிப்பதன் மூலம்
அவர் செய்த தவறுகள்
நம் நாட்டிலும்
நடப்பதற்கு வாய்ப்புகள்
இருக்கிறது என்பதை
தெரியப்படுத்த வேண்டும்
என்பதற்காகவும் ;
மக்கள் அனைவரும்
விழிப்புடன் இருந்து
தவறுகள் நடக்காத
வண்ணம் தங்களை
பாதுகாத்துக் கொள்ள
வேண்டும் என்பதை
தெரியப்படுத்த வேண்டும்
என்பதற்காகவும்
செய்யப்பட்ட செயல்கள்
தான் இலங்கை
மந்திரியை எதிர்த்து
போஸ்டர் ஒட்டியது
போராட்டம் நடத்தியது
ஆகியவை எல்லாம்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

அதாவது
ஒரு நல்ல
செயலின் மூலம்
ஒரு நல்ல செய்தி
மறைமுகமாக
சொல்லப்படுகிறது

கலிலியோவின்
புத்தகத்தை எரிக்க
உத்தரவிட்டது
கலிலியோவை வீட்டுக்
காவலில் வைக்க
உத்தரவிட்டது ஆகிய
இந்த செயல்கள்
அனைத்தும் கலிலியோ
தன்னை திருத்திக்
கொள்ள வேண்டும்
என்பதற்காக வழங்கப்
பட்ட தண்டனை இல்லை
கலிலியோவிற்கு
வழங்கப்பட்ட
தண்டனையைப்
பார்த்து இந்த உலகம்
ஒன்றை தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகத் தான்
வழங்கப்பட்டது

அதாவது பைபிளுக்கு
எதிராக யார் கருத்து
சொன்னாலும்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக யார் நடந்து
கொண்டாலும்
அவர்களுக்கும்
கலிலியோவிற்கு
ஏற்பட்ட இந்த கதிதான்
அனைவருக்கும் ஏற்படும்
என்பதை ஒரு கெட்ட
செயலின் மூலம்
ஒரு கெட்ட செய்தி
இந்த மக்களுக்கு
மறைமுகமாக
தெரிவிக்கப்பட்டது

ஒரு நல்ல செயலின்
மூலம் ஒரு நல்ல
செய்தி மறைமுகமாகவும்;
ஒரு கெட்ட செயலின்
மூலம் ஒரு கெட்ட
செய்தி மறைமுகமாகவும்;
இரு வேறுபட்ட
செயல்களின் மூலம்
இரு வேறுபட்ட செய்திகள்
இந்த சமுதாயத்தில் உள்ள
மக்கள் அனைவருக்கும்
தெரியப்படுத்தும் பொருட்டு
தெரியப்படுத்தப் பட்டு
வருகிறது என்பதை நாம்
நினைவில் கொள்ள
வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  19-11-2018
///////////////////////////////////////////////////////////