March 16, 2019

திருக்குறள்-பதிவு-126


                        திருக்குறள்-பதிவு-126

 " கிறிஸ்தவ
குடும்பத்தில் பிறந்து ;
கிறிஸ்தவராகவே வாழ்ந்து ;
கிறிஸ்தவ மதத்தின்
உயர்ந்த பதவிகளை
அடைந்த ஒருவரை ;
கிறிஸ்தவ உலகம் கண்டிராத
அறிவுலக மாமேதையை ;
கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த
ஜியார்டானோ புருனோவை ;
கிறிஸ்தவ மதத்தைச்
சேர்ந்தவர்களே உயிரோடு
எரித்து கொன்று
விட்டார்கள் ; - என்பது
தான் வேதனைப் பட
வேண்டிய விஷயம் ! "

" ஜியார்டானோ புருனோ
யாரையும் எதிரியாக
நினைத்ததில்லை ;
யாரையும் எதிரியாக
பார்த்ததில்லை ;
ஏனென்றால் அவருக்கு
எதிராக எதிரியாக நின்று
கொண்டு எதிர்க்கக் கூடிய
தகுதி யாருக்கும்
இருந்ததே இல்லை; "

" கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
நடைமுறைப்படுத்தி
வைத்திருக்கும்
பழக்க வழக்கங்களில்
சீர்திருத்தம்கொண்டு வர
வேண்டும் என்று சொன்ன
காரணத்திற்காக கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை அவரை
எதிரியாக நினைத்து
அவரை எதிர்த்தது ;"

" சர்ச்சுகளில்
கடைபிடிக்கப்பட்டு வரும்
மத நம்பிக்கைகளில்
மாற்றம் கொண்டு
வர வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காக
சர்ச்சுகள் அவரை
எதிரியாக நினைத்து
அவரை எதிர்த்தது ; "

" சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
கிறிஸ்தவர்கள் அனைவரும்
அவரை எதிரியாக நினைத்து
அவரை எதிர்த்தனர் ; "

" உலகில் உள்ள அனைத்து
கிறிஸ்தவ மக்களும் ஒன்றாக
சேர்ந்து அவரை எதிர்த்து
நின்ற போதிலும் தான்
கொண்ட கொள்கையில்
சற்றும் பிறழாமல்
வாழ்ந்த காரணத்தினால்
அவரை உயிரோடு எரித்து
கொன்று விட்டனர் ; "

" ஜியார்டானோ புருனோ
என்ற - புரட்சி நெருப்பை
வாத்திகன் நகரம்
தன்னுடைய மத நெருப்பால்
உயிரோடு எரித்து
கொன்று விட்டது "

" ஜியார்டானோ புருனோ
என்ற நெருப்பை
மத நெருப்பால்
எரித்த இடத்தில்
நிறுவப்பட்டுள்ள
ஜியார்டானோ புருனோவின்
சிலை வாத்திகன்
நகரத்தைப் பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ளது "

" தவறு செய்தவர்கள்
தாங்கள் செய்த தவறை
உணர்ந்து திருந்த வேண்டும்
என்ற காரணத்திற்காகவும் ;
இதைப் போன்ற தவறுகளை
இனி செய்யக் கூடாது
என்ற காரணத்திற்காகவும் ;
ஜியார்டானோ
புருனோவின் சிலையின்
பார்வையிலிருந்து
வெளிப்படும் நெருப்பானது
வாத்திகன் நகரை
ஒவ்வொரு கணமும்
எரித்துக் கொண்டு
அவர்களை எச்சரிக்கை
செய்யும் விதத்தில்
இருக்க வேண்டும்
என்ற காரணத்திற்காகவும் ;
ஜியார்டானோ புருனோவின்
சிலை வாத்திகன்
நகரத்தைப் பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ளது "

" கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்படுத்தி
வைத்திருக்கும்
பழக்க வழக்கங்களில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காக
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்படவில்லை ; "

" சர்ச்சுகளில் கடைபிடிக்கப்பட்டு
வரும் மத பழக்கங்களில்
மாற்றம் கொண்டுவர
வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காக
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்படவில்லை '

" காலம் காலமாக கிறிஸ்தவ
மதத்தில் கடைபிடித்து வரும்
பழக்க வழக்கங்களில்
மாற்றம் கொண்டுவர
வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காக
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்படவில்லை "

" ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்டதற்கு
இவைகள் அனைத்தும்
ஒரு காரணம் தானே
தவிர - இவைகள்
மட்டுமே காரணம் இல்லை "

" ஜியார்டானோ புருனோவின்
தொலைநோக்கு பார்வையின்
மூலம் கண்டறிந்த
உண்மையை சொன்ன
காரணமே அவர்
உயிரோடு எரிக்கப்பட்டதற்கு
முக்கிய காரணம் ; "

" அந்த காரணத்தை
நாமும் நம்முடைய
சந்ததிகளும் அந்த
உண்மைகளை அறிந்து
கொள்ளாமல் விட்டு
விட்டால் எதிர்காலத்தில்
நாமும் நம்முடைய
சந்ததிகளும் மட்டுமல்ல
உலகில் உள்ள மக்கள்
அனைவரும் அடிமைகளாக
இருக்க வேண்டிய
சூழ்நிலை தான் ஏற்படும் "

" ஜியார்டானோ புருனோ
தொலை நோக்கு
பார்வையின் மூலம்
கண்டறிந்த உண்மையை
நாம் முதலில் தெரிந்து
கொள்வோம் அப்பொழுது
தான் - நாம் வருங்கால
சந்ததிக்கும்
அந்த காரணத்தை
சொல்ல முடியும் "

" ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டதற்கு முக்கிய
காரணம் இது தான்……………………?"

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  16-03-2019
/////////////////////////////////////////////////////