December 14, 2018

தவறான கருத்திற்கு பதில் !!


              தவறான கருத்திற்கு பதில் !!

#பெண்களைப் பற்றி
வில்லியம் கோல்டிங்
என்னும் ஆங்கில
நாவலாசிரியர்
சொல்லுவது இதுதான்:-

பெண்கள் தங்களை
ஆண்களுக்கு சமம் என்று
முட்டாள்தனமாக எண்ணிக்
கொண்டிருக்கின்றனர்
என்றே நான் நினைக்கிறேன்…….

பெண்கள் ஆண்களுக்கு
நிகரானவர் இல்லை;

மாறாக, ஆண்களைவிட
பன்மடங்கு உயர்ந்தவர்கள்
பெண்கள்..

ஒரு பெண்ணிடம்
நீ எதையாவது கொடுத்தால்,
அவள் அதனை பெரிதாக்கி
சிறப்பு செய்துவிடுவாள்.

உன் உயிர்
அணுவைக் கொடு,
அவள் உனக்கு
ஒரு குழந்தையைத்
பெற்றுத் தருவாள்.

ஒரு வீட்டைக் கொடு
அதனை அவள்
குடும்பமாக
மாற்றிக்காட்டுவாள்……

நீ மளிகைப்
பொருட்களைக் கொடு
அவள் விருந்து படைப்பாள்..

நீ வெறும் புன்னகையை
செய்தால் போதும்

அவள் தன் இதயத்தையே
உனக்குக் பரிசளிப்பாள்……..

நீ கொடுப்பது எதுவாயினும்
அதனை பலமடங்கு
பெரிதாக்குவது
பெண்ணின் குணம்.

எனவே நீ அவளுக்கு
*சிறிய அளவில்
 துன்பம் தொல்லை*
கொடுத்தாயானால் அவள்
உடனே அதையே
டன் கணக்கில்
உனக்குத் திருப்பித்தருவாள்
என்பதைமட்டும்
எப்போதும் மறந்துவிடாதீர்.
///////////////////////////////////////////////////////////

ஒரு பெண்ணுக்கு நீ
கொடுப்பது எதுவாயினும்
அதை பலமடங்கு
பெரிதாக்குவது பெண்ணின்
குணம் அதாவது
நீ பெண்ணிற்கு
எதை கொடுத்தாலும்
அதை பெரிதாக்கி
டன் கணக்கில்
திருப்பித் தருவாள்
என்பது தான் இதில்
சொல்லப்பட்ட கருத்து
இந்த கருத்தே தவறானது

ஒரு பையன்
ஒரு பெண்ணை
காதலிக்கிறான்
அந்த பெண்ணிடம் சென்று
நான் உன்னை
காதலிக்கிறேன்
நீ இல்லை என்றால்
நான் செத்து
விடுவேன் என்கிறான்
இப்போது அந்த பையன்
அந்த பெண்ணிடம்
காதலை காட்டுகிறான்
எதை கொடுத்தாலும்
பன்மடங்கு பெரிதாக்கி
டன் கணக்கில்
திருப்பிக் கொடுக்கும்
அந்த பெண்
அந்த பையனிடம் என்ன
செய்து இருக்க வேண்டும்
காதலை பன்மடங்காக
பெருக்கி அந்த பையனிடம்
காதலை கொடுத்திருக்க
வேண்டும் ஆனால்
அந்த பெண்
காதலைக் காட்டாமல்
வெறுப்பைக் காட்டுகிறாள்
அப்படி இருக்கும்போது
இந்தக் கருத்து எப்படி
சரியானது என்று
சொல்ல முடியும்


இந்த உலகம்
ஒரு பெண்ணிற்கு
எதை கொடுத்தாலும்
அதை பன்மடங்காக
பெருக்கி இரண்டு
நிலைகளில் அந்த பெண்
திருப்பித் தருவாள்

ஒன்று
ஒரு செயலை
ஒரு பெண் விரும்பினால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்

இரண்டு
ஒரு செயலை
ஒரு பெண்
விரும்பவில்லை என்றால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்

ஒரு பையன்
ஒரு பெண்ணை
காதலிக்கிறான்
அந்த பெண்ணிடம் சென்று
நான் உன்னை
காதலிக்கிறேன்
நீ இல்லை என்றால்
நான் செத்து
விடுவேன் என்கிறான்
அந்த பெண்ணிற்கு
அந்த பையனை
பிடித்து இருந்த
காரணத்தினால்
அவள் அந்த
பையனுக்கு தன்
காதலை பன்மடங்கு
திருப்பித் தருகிறாள்

ஒரு பையன்
ஒரு பெண்ணை
காதலிக்கிறான்
அந்த பெண்ணிடம் சென்று
நான் உன்னை
காதலிக்கிறேன்
நீ இல்லை என்றால்
நான் செத்து
விடுவேன் என்கிறான்
அந்த பையனை
அந்த பெண்ணிற்கு
பிடிக்கவில்லை
என்ற காரணத்தினால்
இப்போது அந்த பெண்
அந்த பையன் மீது
வெறுப்பை பன்மடங்கு
காட்டுகிறாள்

இப்போது
யோசித்துப் பாருங்கள்
ஒரு பெண்
அன்பு என்றாலும்
கோபம் என்றாலும்
பன்மடங்கு திருப்பித்
தருவாள் என்பது
தவறான கருத்து

ஒரு செயலை
ஒரு பெண் விரும்பினால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்
ஒரு செயலை
ஒரு பெண்
விரும்பவில்லை என்றால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்
என்பது தான்
சரியான கருத்து
என்பதை நாம்  உணர்ந்து
கொள்ள வேண்டும்

மேலும்,
ஆங்கில நாவலாசிரியர்
வில்லியம் கோல்டிங்
என்பவர் அயல்
நாட்டைச் சேர்ந்தவர்
சொன்னார் என்பதற்காக
அவருடைய கருத்து
சரியான கருத்து
என்று ஆகி விடாது

கம்பர்
இளங்கோவடிகள்
கண்ணதாசன்
பட்டுக் கோட்டை
கல்யாணசுந்தரம்
போன்ற  கணக்கிலடங்காத
மாபெரும் அறிவாளிகளை
நாம் மறந்து விட்டால்
இந்த நிலை தான்
தமிழகத்திற்கு
ஏற்படும் என்பது
நன்றாகத் தெரிகிறது

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
14-12-2018
//////////////////////////////////////////////