January 01, 2022

பதிவு-7-கொக்கொக்க- திருக்குறள்

 பதிவு-7-கொக்கொக்க-

திருக்குறள்

 

துரியோதனனுக்கு

பட்ட

செஞ்சோற்றுக்

கடனைத்

தீர்ப்பதற்காகப்

போரிட்டு

மடியவில்லை

கர்ணன்

தன்னுடைய

மானத்தைக்

காத்த

துரியோதனனுக்காகப்

போரிட்டு

மடிந்தான்

கர்ணன்

துரியோதனனுக்குப்

பட்ட நன்றிக்

கடனை

அடைப்பதற்கு

தனக்குக்

கிடைத்த

குருஷேத்திரப் போர்

என்ற

வாய்ப்பைச்

சரியாகப்

பயன்படுத்திக்

கொண்டு

துரியோதனனுக்காக

உயிரை

விட்டான்

கர்ணன்

 

குருஷேத்திரப்

போரில்

துரியோதனனுக்காகப்

போரிட்டு

மடிந்தான்

கர்ணன்

 

வாய்ப்பு

என்பது

எவ்வளவு

முக்கியமானது

என்பதையும்

வாழ்க்கையில்

கிடைத்த

வாய்ப்பை

சரியாக

பயன்படுத்தினால்

மட்டுமே

நாம்

வாழ்க்கையில்

வெற்றி பெற

முடியும்

என்பதையும்

யார் உணர்ந்து

அந்த வாய்ப்பை

சரியான விதத்தில்

பயன்படுத்திக்

கொள்கிறாரோ

அவர்கள் தான்

காலத்தை

வென்று

சரித்திரத்தில்

நிற்க முடியும்

 

இது தான்

வாய்ப்பு என்று

புரிந்து

கொள்ளாதவர்கள்

வாய்ப்பை

சரியாகப்

பயன்படுத்திக்

கொள்ளாதவர்கள்

அனைவரும்

வாழ்க்கையில்

தோல்விதான்

அடைந்து

இருக்கிறார்கள்

 

"மீனுக்காக

வொறுமையாகக்

காத்திருந்து

வாய்ப்பு வந்தவுடன்

கொக்கு எப்படி

மீனை குறி

தவறாமல்

குத்தி பிடித்து

செல்கிறதோ

அதைப் போல

வாய்ப்பு

வரும் வரை

பொறுமையாகக்

காத்திருந்து

வாய்ப்பு

வந்தவுடன்

அதைச்

சரியாக

பயன்படுத்திக்

கொண்டு

நாம்

எந்த செயலை

செய்ய வேண்டும்

என்று

நினைத்து

இருந்தோமோ

அந்த

செயலைச்

சரியாகச்

செய்து

முடிக்க

வேண்டும்"

என்பதைத் தான்

 

திருவள்ளுவர்

 

"கொக்கொக்க

கூம்பும்

பருவத்து

மற்றதன்

குத்தொக்க

சீர்த்த

இடத்து"""""

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவுபடுத்துகிறார்.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////

பதிவு-6-கொக்கொக்க- திருக்குறள்

 பதிவு-6-கொக்கொக்க-

திருக்குறள்-

 

தனக்கு

இழைக்கப்பட்ட

அநியாயத்திற்கு

நியாயம் கிடைக்க

வேண்டும் அதனால்

பாண்டவர்களுக்கு

அஸ்தினாபுரத்தின்

ஒரு சிறு

பகுதியையும்

தரமாட்டேன் என்று

பாண்டவர்களுக்கு

எதிராக

துரியோதனன்

போரிட முடிவு

எடுத்து விட்ட

காரணத்தினாலும்,

 

பாண்டவர்களுக்கும்,

கௌரவர்களுக்கும்

இடையே

எந்தவிதமான

சமரசம் எதுவும்

ஏற்படாத

நிலையில்

அமைதி

பேச்சு வார்த்தை

அனைத்தும்

தோல்வியடைந்த

நிலையில்

குருஷேத்திரப் போர்

கௌரவர்களுக்கும்,

பாண்டவர்களுக்கும்

இடையே

ஆரம்பமானது

 

துரியோதனனுக்கு

தான் பட்ட

நன்றிக் கடனை

அடைப்பதற்காக

காத்துக்

கொண்டிருந்த

நேரத்தில்

வாய்ப்பிற்காகக்

காத்துக்

கொண்டிருந்த

நேரத்தில்

தனக்குக் கிடைத்த

குருஷேத்திரப் போர்

என்ற வாய்ப்பை

சரியாகப்

பயன்படுத்திக்

கொண்டான்

கர்ணன்

 

துரியோதனனுக்காக

குருஷேத்திரப்

போரில்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

தன் மேல் இருந்த

களங்கத்தை

துடைத்த

துரியோதனனுக்காகப்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

துரியோதனனுக்கு

தான் பட்ட

நன்றிக்

கடனை

தீர்ப்பதற்காகப்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

தாழ்த்தப்பட்டவன்

என்று தன்னை

அவமானப்படுத்தியதை

நீக்கி அங்கதேசத்து

மன்னனாக்கிய

துரியோதனனுக்காக

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

 

பாண்டவர்கள்

ஐவரும் தன்னுடைய

தம்பிகள் என்று

தெரிந்தும்

துரியோதனனுக்காகப்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

குந்தி தேவி

தன்னுடைய

தாய்

என்று தெரிந்தும்

துரியோதனனுக்காக

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

 

தான்

தாழ்த்தப்பட்டவன்

இல்லை

குந்தி தேவியின்

மூத்த மகன்,

பஞ்ச

பாண்டவர்களின்

மூத்த அண்ணன்

உயர்ந்த வகுப்பில்

பிறந்தவன்

சமுதாயத்தால்

தாழ்த்தப்பட்டவனாக

அடையாளம்

காட்டப்பட்டவன்

தான்

தாழ்த்தப்பட்டவன்

என்று

இந்த உலகம்

தன்னை அவமானப்

படுத்தியபோது

தன்னுடைய

மானத்தை

காப்பாற்றியது

துரியோதனன்

என்ற

காரணத்தினால்

துரியோதனனுக்காகப்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்.

தன்னுடைய

மானத்தைக்

காத்தவனுக்காகப்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////

பதிவு-5-கொக்கொக்க- திருக்குறள்

 பதிவு-5-கொக்கொக்க-

திருக்குறள்-

 

துரியோதனனின்

குரல் தொடர்ந்தது

துரியோதனனின்

குரல் அந்த

மைதானத்தில்

தொடர்ந்து

எதிரொலித்தது

ஒருவருடைய

திறமையை

வைத்துத் தான்

ஒருவரை மதிக்க

வேண்டுமேயொழிய

ஒருவருடைய

பிறப்பை வைத்து

ஒருவருடைய

திறமையை

மதிக்கக் கூடாது

தாழ்ந்த சாதி என்று

சொல்லப்படும் கர்ணன்

உயர்ந்த சாதி என்று

சொல்லப்படும்

அர்ஜுனனோடு

மோதக்கூடாதா

 

ஏன் அர்ஜுனன்

தோற்று விடுவான்

என்று பயமா

ஏன் இந்த அநீதி

இங்கு நடக்கிறது

ஒருவன் தன் திறமையை

நிரூபிக்கக் கூடாதா

அதை சாதி

என்ற பெயரால்

அதிகாரத்தில்

இருப்பவர்களும்

பதவியில்

இருப்பவர்களும்

பணபலம்

படைத்தவர்களும்

அதைத் தடுக்க

வேண்டுமா

கர்ணன் பிறப்பால்

தாழ்ந்தவன் என்றால்

பிறப்பால் தாழ்ந்தவன்

சமுதாயத்தால் ஒதுக்கி

வைக்கப்பட்டவன்

தேரோட்டியின் மகன்

தீண்டாத்தகாதவன் என்று

சொல்லப்படுபவன்

அர்ஜுனனோடு

மோதக் கூடாதா

தன்னுடைய திறமையை

நிரூபிக்கக் கூடாதா

 

கர்ணன் தன்னுடைய

திறமையை

நிரூபிக்க வேண்டும்

அர்ஜுனனோடு

சண்டையிட வேண்டும்

கர்ணன் அர்ஜுனனோடு

சண்டையிடுவதற்கு

கர்ணனுடைய ஜாதி

தான் தடுக்கிறது என்றால்

கர்ணனை இக்கணமே

அங்க தேசத்து

மன்னனாக்குகிறேன்

 

கர்ணன் எப்போது

பதவிக்கு வருகிறானோ

அதிகாரத்திற்கு

வருகிறானோ

பணபலம்

படைத்தவனாகிறோனோ

அப்போது அவன்

அனைத்தையும்

கடந்தவனாகிறான்

 

தாழ்த்தப்பட்டவன் என்று

இந்த சமுதாயத்தால்

அடையாளம்

படுத்தப்பட்ட கர்ணன்

பதவிக்கு வந்ததால்

உயர்ந்தவனாகிறான்

அதனால் மன்னனான

கர்ணன் அர்ஜுனனோடு

மோதுவதற்கு

தகுதியாகிறான்

எனவே கர்ணனை

அங்க தேசத்து

மன்னனாக்குகிறேன்

என்று துரியோதனன்

கர்ணனை

அங்க தேசத்து

மன்னனாக்குகிறான்

 

கர்ணன் மேல்

படிந்திருந்த

தேரோட்டியின் மகன்

தாழ்த்தப்பட்டவன்

இந்த சமுதாயத்தால்

ஒதுக்கப்பட்டவன்

என்ற அவச்

சொல்லை நீக்கினான்

 

மைதானத்தில்

பல்லாயிரக்

கணக்கானவர்கள்

கூடியிருந்த வேளையில்

பலபேர்கள் பார்த்துக்

கொண்டிருந்த

மைதானத்தில்

பலபேர்கள் கவனித்துக்

கொண்டிருந்த

மைதானத்தில்

கர்ணனுடைய

களங்கத்தை துடைத்து

கர்ணனுக்கு நேர்ந்த

அசிங்கத்தை துடைத்து

கர்ணனுடைய மானத்தை

காத்தான் துரியோதனன்

 

பலபேர் முன்னிலையில்

கர்ணனுடைய மானத்தைக்

காத்தான் துரியோதனன்

என்ற காரணத்தினால்

தான் கர்ணன்

தன்னுடைய உயிரை

துரியோதனனுக்காகக்

கொடுத்தான்

செஞ்சோற்றுக்

கடன் தீர்ப்பதற்காக

கொடுக்கவில்லை

 

கர்ணன்

தன்னுடைய கடனை

துரியோதனனுக்கு

பட்ட கடனை

துரியோதனனுக்கு

தான் பட்ட

நன்றிக் கடனை

அடைப்பதற்கு காலம்

பார்த்துக்

கொண்டிருந்தான்

நேரம் பார்த்துக்

கொண்டிருந்தான்

இடம் பார்த்துக்

கொண்டிருந்தான்

சூழ்நிலை பார்த்துக்

கொண்டிருந்தான்

அதற்கான

வாய்ப்பிற்காகக்

காத்துக் கொண்டிருந்தான்

 

பதவிக்கு

வர வேண்டும்

அதிகாரத்திற்கு

வர வேண்டும்

பணபலம் பெற்றவராக

மாற வேண்டும்

அதற்கு நாடு வேண்டும்

என்ற ஆசை

பாண்டவர்களுக்கு

ஏற்பட்ட

காரணத்தினாலும்

தன்னுடைய தந்தை

திருதராஷ்டின் குருடன்

என்ற காரணத்திற்காக

அவருக்கு மறுக்கப்பட்டு

அவருடைய தம்பி

பாண்டுவிற்கு

தரப்பட்ட அரச பதவி

பாண்டு இறந்தபின்

குருடனான

தன்னுடைய தந்தை

திருதராஷ்டிரன் மகன்

என்ற காரணத்தினால்

தனக்கும் அரசபதவி

மறுக்கப்படுவது

எந்த விதத்தில்

நியாயம்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////

பதிவு-4-கொக்கொக்க- திருக்குறள்

 பதிவு-4-கொக்கொக்க-

திருக்குறள்-

 

உன்னுடைய

தந்தை யார்

உன்னுடைய

தாய் யார்

உன்னுடைய

ஊர் என்ன

உன்னுடைய

சாதி என்ன

எங்கிருந்து வந்தாய்

ஏன் வந்தாய்

எதற்காக வந்தாய்

என்ன காரணத்திற்காக

வந்தாய்

என்ன நோக்கத்திற்காக

வந்தாய்

என்பவை

கர்ணனிடம்

கேட்கப்பட்ட

அடுத்தடுத்த

கேள்விகள்

 

அதனைத் தொடர்ந்து

நடந்த நிகழ்வுகளின்

தொடர்ச்சியாக

கர்ணன்

தேரோட்டியின்

மகன் என்று

தெரிந்ததும்

சதியின் இரண்டாம்

கட்டம்

ஆரம்பானது

சதித்திட்டம்

அரங்கேறியது

 

பல்லாயிரக்

கணக்கானவர்கள்

கூடியிருந்த அந்த

மைதானத்தில்

அதிகாரத்தில்

இருப்பவர்கள்

பதவியில்

இருப்பவர்கள்

பணபலம்

படைத்தவர்கள்

தங்கள் சதித்திட்டத்தை

அரங்கேற்றினர்

 

கர்ணனை

தேரோட்டியின்

மகன் என்றும்

பிறப்பால்

தாழ்த்தப்பட்டவன்

என்றும்

சமுதாயத்தால்

ஒதுக்கி

வைக்கப்பட்டவன்

என்றும்

சமுதாயத்தில் இருந்து

ஒதுங்கி இருக்க

வேண்டியவன் என்றும்

சொல்லி கர்ணனை

இழிவு படுத்தினர்

 

அரச பரம்பரையில்

பிறந்த

அர்ஜுனனுடன்

அதிகாரத்திற்கு

உரியவனான

அர்ஜுனனுடன்

அரச பதவி

வகிப்பதற்கு தகுதி

உடையவனான

அர்ஜுனனுடன்

சண்டையிடுவதற்கு

கர்ணனுக்கு

தகுதியில்லை

எனவே, அர்ஜுனன்

கர்ணனுடன்

சண்டையிட மாட்டான்

கர்ணன் அர்ஜுனனை

சண்டையிட

கூப்பிடக் கூடாது.

அர்ஜுனனை

சண்டையிடுவதற்கு

கூப்பிடும் தகுதி

கர்ணனுக்கு இல்லை

என்று கர்ணனை

அவமானப்படுத்தினர்

அசிங்கப் படுத்தினர்

 

அதிகார

வர்க்கத்தினரால்

அவமானப் படுத்தப்பட்டு

வெட்கி தலைகுனிந்து

யாரும் ஆதரவு

இல்லாத நிலையில்

தன்னந்தனியாக

நின்றான்

கர்ணன்

 

சமுதாயத்தால்  

ஒதுக்கப்பட்டவன்

தாழ்த்தப்பட்டவன்

என்று தள்ளி

வைக்கப்பட்டவன்

தேரோட்டியின்

மகன்  என்று

அவமானப்

படுத்தப்பட்டவன்

திறமையாக

இருக்கக் கூடாதா

தன்னுடைய

திறமையை

வெளிப்படுத்தக்கூடாதா

தன்னுடைய

திறமையை

வெளிப்படுத்த வாய்ப்பு

கொடுக்கக்கூடாதா

 

சட்டம் தடுக்கிறது

விதிமுறைகள்

தடுக்கிறது

என்று தடுப்பதா

இப்படி இருந்தால்

எப்படி

ஒதுக்கப்பட்டவன்

தள்ளி வைக்கப்பட்டவன்

தன்னுடைய

திறமையை

வெளிப்படுத்த முடியும்

 

சமுதாயத்தில்

உயர்ந்த நிலையில்

இருப்பவர்களால்

சமுதாயத்தில் தாழ்த்தி

வைக்கப்பட்டவர்கள்

தங்களுடைய

திறமையை

வெளிப்படுத்தக்கூடாதா

வெளிப்படுத்த

முடியாதா

இந்த இழி

நிலையைக்

கேட்பதற்கு

இங்கு யாரும்

இல்லையா

இந்த சமுதாயத்தில்

யாரும் இல்லையா

இதைக் கேட்பதற்கு

யாரும் இல்லையா

 

இந்த அநீதியை

எதிர்த்துக் குரல்

கொடுக்க ஒருவரும்

இல்லையா

அநீதிக்கு துணை

போகிறவர்கள்

இருக்கிறவரை

தாழ்த்தப்பட்டவன்

என்று ஒதுக்கி

வைக்கப்பட்டவன்

ஒதுங்கியே இருக்க

வேண்டுமா

அவர்களை தூக்கி விட

சமுதாயத்தில்

யாரும் இல்லையா

சமுதாயத்தில்

யாரும்

பிறக்க வில்லையா

நல்ல மனம்

படைத்தவர்கள்

யாரும் இல்லையா

அநீதியை

தட்டிக் கேட்க

யாரும் இல்லையா

என்று கர்ணன்

பலவாறாக மனம்

வேதனைப்பட்டு

நின்று

கொண்டிருந்த போது

அவமானப்பட்டு

நின்று

கொண்டிருந்த போது

மனவருத்தத்துடன்

நின்று

கொண்டிருந்த போது

ஒரு குரல் அந்த

மைதானத்தில்

அநீதி என்று

குரல் கொடுத்தது

அந்தக் குரல் அநீதிக்கு

எதிரான குரல்

அந்தக் குரலைக்

கொடுத்தது

துரியோதனன்

அநீதி என்று குரல்

கொடுத்தது

துரியோதனன்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////

பதிவு-3-கொக்கொக்க- திருக்குறள்

பதிவு-3-கொக்கொக்க-

திருக்குறள்-

 

எனக்கு ஒரு

வாய்ப்பு கொடுங்கள்

என்னுடைய திறமையை

வெளிக்காட்டுவதற்கு

எனக்கு ஒரு

வாய்ப்பு கொடுங்கள்

எனக்கு திறமை

இருக்கிறது என்பதை

நிரூபித்துக்

காட்டுவதற்கு

எனக்கு ஒரு

வாய்ப்பு கொடுங்கள்

 

எனக்கு வாய்ப்பு

கொடுத்தால்

இந்த கர்ணன் யார்

என்பதை காட்டுகிறேன்

என்னுடைய திறமை

என்ன என்பதை

காட்டுகிறேன்

 

என்னோடு அர்ஜுனனை

சண்டையிடச்

சொல்லுங்கள்

யார் பலசாலி

யார் திறமைசாலி

யார் உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளி என்பதை

இந்த மைதானத்தில்

உள்ளவர்கள் தெரிந்து

கொள்ளட்டும்

இந்த உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளி யார்

என்பதை

இந்த உலகம்

தெரிந்து கொள்ளட்டும்

அர்ஜுனன் இந்த

உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளி கிடையாது

என்பதை

இந்த உலகத்தில்

உள்ளவர்கள்

தெரிந்து கொள்ளட்டும்

இந்த கர்ணன்

தான் இந்த

உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளி

என்பதை

இந்த உலகம்

தெரிந்து கொள்ளட்டும்

 

கர்ணன் தான்

இந்த உலகத்திலேயே

மிகச்சிறந்த

வில்லாளி என்பதை

நிரூபித்துக் காட்டுகிறேன்

என்று யாரும்

எதிர்பாராத நேரத்தில்

மைதானத்திற்குள்

வெளிப்பட்டு

அழுத்தம் திருத்தமாக

கம்பீரமாக சொற்களை

வெளியிட்டு

அனைவரையும்

சிந்திக்க வைத்து

திகைப்பில் ஆழ்த்திய

கர்ணனின்

அறிவுக்கூர்மை

நிறைந்த

பேச்சைக் கேட்டு

அனைவரும்

செய்வதறியாது

திகைத்தனர்

 

கர்ணனின்

வார்த்தையில் உள்ள

தன்னம்பிக்கையையும்

சொற்களில் உள்ள

தைரியத்தையும்

உருவத்தில் உள்ள

கம்பீரத்தையும்

பேச்சில் உள்ள

வீரத்தையும் கண்டு

அதிகாரத்தில்

இருந்தவர்கள்

பதவியில்

இருந்தவர்கள்

பணபலம்

படைத்தவர்கள்

ஆகிய அனைவரும்

மிரண்டனர்.

 

கர்ணனை

அர்ஜுனனோ

சண்டையிடுவதற்கு

ஒரு வாய்ப்பு

கொடுத்து

அந்த வாய்ப்பைப்

பயன்படுத்தி

கர்ணன்

அர்ஜுனனோடு

சண்டையிட்டு

சண்டையில்

அர்ஜுனனை

தோற்கடித்து

கர்ணன் வெற்றி

பெற்று விட்டால்

அர்ஜுனனை

உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளியாக்குகிறேன்

என்று அர்ஜுனனுக்கு

தான் செய்து கொடுத்த

சத்தியம்

தவறானதாகி விடும்

 

அர்ஜுனனை இந்த

உலகத்திலேயே மிகச்

சிறந்த  வில்லாளியாக்க

வேண்டும் என்ற

காரணத்திற்காக சிறந்த

வில்லாளியான

ஏகலைவன்

கை கட்டை விரலை

தான் வாங்கியது

வீணாகி விடும்

என்று துரோணம்

யோசித்தார்

 

அரச பரம்பரையில்

பிறந்தவன்

அதிகாரத்திற்கு

உரியவன்

பதவிகள் பெறப்

போகிறவன்

பணபலம்

நிரம்பியவன் என்ற

சிறப்புகளைப் பெற்ற

அர்ஜுனனை

எங்கிருந்தோ வந்தவன்

தோற்கடித்து விட்டால்

யார் என்று

தெரியாதவன்

பெயர் தெரியாதன்

சாதி தெரியாதவன்

மதம் தெரியாதவன்

தோற்கடித்து விட்டால்

கர்ணனிடம் அர்ஜுனன்

தோற்று விட்டால்

அர்ஜுனனுக்கு மட்டும்

அல்ல அசிங்கம்

அதிகாரத்தில்

இருப்பவர்களுக்கு

அசிங்கம்

பதவியில்

இருப்பவர்களுக்கு

அசிங்கம்

அரச பரம்பரையினருக்கு

அசிங்கம்

என்ற காரணத்தினால்

கர்ணனை அர்ஜுனனோ

சண்டையிட

விடக்கூடாது

சண்டையிட அனுமதி

அளிக்கக் கூடாது

என்று திட்டமிட்டு

தீட்டிய சதித்திட்டத்தின்

முதல் படி தான்

நீ யார் என்று

கர்ணனைப் பார்த்து

கேட்கப்பட்ட

முதல் கேள்வி

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////