January 01, 2022

பதிவு-3-கொக்கொக்க- திருக்குறள்

பதிவு-3-கொக்கொக்க-

திருக்குறள்-

 

எனக்கு ஒரு

வாய்ப்பு கொடுங்கள்

என்னுடைய திறமையை

வெளிக்காட்டுவதற்கு

எனக்கு ஒரு

வாய்ப்பு கொடுங்கள்

எனக்கு திறமை

இருக்கிறது என்பதை

நிரூபித்துக்

காட்டுவதற்கு

எனக்கு ஒரு

வாய்ப்பு கொடுங்கள்

 

எனக்கு வாய்ப்பு

கொடுத்தால்

இந்த கர்ணன் யார்

என்பதை காட்டுகிறேன்

என்னுடைய திறமை

என்ன என்பதை

காட்டுகிறேன்

 

என்னோடு அர்ஜுனனை

சண்டையிடச்

சொல்லுங்கள்

யார் பலசாலி

யார் திறமைசாலி

யார் உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளி என்பதை

இந்த மைதானத்தில்

உள்ளவர்கள் தெரிந்து

கொள்ளட்டும்

இந்த உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளி யார்

என்பதை

இந்த உலகம்

தெரிந்து கொள்ளட்டும்

அர்ஜுனன் இந்த

உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளி கிடையாது

என்பதை

இந்த உலகத்தில்

உள்ளவர்கள்

தெரிந்து கொள்ளட்டும்

இந்த கர்ணன்

தான் இந்த

உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளி

என்பதை

இந்த உலகம்

தெரிந்து கொள்ளட்டும்

 

கர்ணன் தான்

இந்த உலகத்திலேயே

மிகச்சிறந்த

வில்லாளி என்பதை

நிரூபித்துக் காட்டுகிறேன்

என்று யாரும்

எதிர்பாராத நேரத்தில்

மைதானத்திற்குள்

வெளிப்பட்டு

அழுத்தம் திருத்தமாக

கம்பீரமாக சொற்களை

வெளியிட்டு

அனைவரையும்

சிந்திக்க வைத்து

திகைப்பில் ஆழ்த்திய

கர்ணனின்

அறிவுக்கூர்மை

நிறைந்த

பேச்சைக் கேட்டு

அனைவரும்

செய்வதறியாது

திகைத்தனர்

 

கர்ணனின்

வார்த்தையில் உள்ள

தன்னம்பிக்கையையும்

சொற்களில் உள்ள

தைரியத்தையும்

உருவத்தில் உள்ள

கம்பீரத்தையும்

பேச்சில் உள்ள

வீரத்தையும் கண்டு

அதிகாரத்தில்

இருந்தவர்கள்

பதவியில்

இருந்தவர்கள்

பணபலம்

படைத்தவர்கள்

ஆகிய அனைவரும்

மிரண்டனர்.

 

கர்ணனை

அர்ஜுனனோ

சண்டையிடுவதற்கு

ஒரு வாய்ப்பு

கொடுத்து

அந்த வாய்ப்பைப்

பயன்படுத்தி

கர்ணன்

அர்ஜுனனோடு

சண்டையிட்டு

சண்டையில்

அர்ஜுனனை

தோற்கடித்து

கர்ணன் வெற்றி

பெற்று விட்டால்

அர்ஜுனனை

உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளியாக்குகிறேன்

என்று அர்ஜுனனுக்கு

தான் செய்து கொடுத்த

சத்தியம்

தவறானதாகி விடும்

 

அர்ஜுனனை இந்த

உலகத்திலேயே மிகச்

சிறந்த  வில்லாளியாக்க

வேண்டும் என்ற

காரணத்திற்காக சிறந்த

வில்லாளியான

ஏகலைவன்

கை கட்டை விரலை

தான் வாங்கியது

வீணாகி விடும்

என்று துரோணம்

யோசித்தார்

 

அரச பரம்பரையில்

பிறந்தவன்

அதிகாரத்திற்கு

உரியவன்

பதவிகள் பெறப்

போகிறவன்

பணபலம்

நிரம்பியவன் என்ற

சிறப்புகளைப் பெற்ற

அர்ஜுனனை

எங்கிருந்தோ வந்தவன்

தோற்கடித்து விட்டால்

யார் என்று

தெரியாதவன்

பெயர் தெரியாதன்

சாதி தெரியாதவன்

மதம் தெரியாதவன்

தோற்கடித்து விட்டால்

கர்ணனிடம் அர்ஜுனன்

தோற்று விட்டால்

அர்ஜுனனுக்கு மட்டும்

அல்ல அசிங்கம்

அதிகாரத்தில்

இருப்பவர்களுக்கு

அசிங்கம்

பதவியில்

இருப்பவர்களுக்கு

அசிங்கம்

அரச பரம்பரையினருக்கு

அசிங்கம்

என்ற காரணத்தினால்

கர்ணனை அர்ஜுனனோ

சண்டையிட

விடக்கூடாது

சண்டையிட அனுமதி

அளிக்கக் கூடாது

என்று திட்டமிட்டு

தீட்டிய சதித்திட்டத்தின்

முதல் படி தான்

நீ யார் என்று

கர்ணனைப் பார்த்து

கேட்கப்பட்ட

முதல் கேள்வி

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment