January 01, 2022

பதிவு-1-கொக்கொக்க- திருக்குறள்-

 பதிவு-1-கொக்கொக்க-

திருக்குறள்-

 

"கொக்கொக்க

கூம்பும்

பருவத்து

மற்றதன்

குத்தொக்க

சீர்த்த

இடத்து"""""

 

-------திருக்குறள்-490

------திருவள்ளுவர்

 

"மீனுக்காக

வொறுமையாகக்

காத்திருந்து

வாய்ப்பு வந்தவுடன்

கொக்கு எப்படி

மீனை குறி

தவறாமல்

குத்தி பிடித்து

செல்கிறதோ

அதைப் போல

வாய்ப்பு

வரும் வரை

பொறுமையாகக்

காத்திருந்து

வாய்ப்பு

வந்தவுடன்

அதைச் சரியாக

பயன்படுத்திக்

கொண்டு நாம்

எந்த செயலை

செய்ய வேண்டும்

என்று நினைத்து

இருந்தோமோ

அந்த செயலைச்

சரியாகச் செய்து

முடிக்க வேண்டும்"

என்பது தான்

இந்தத்

திருக்குறளுக்கு

சொல்லப்படும்

கருத்து ஆகும்.

 

வாய்ப்பிற்காகக்

காத்துக்

கொண்டிருக்கக்

கூடாது

வாய்ப்பை நாமே

உருவாக்க வேண்டும்

என்று சிலர்

சொல்வார்கள்

இந்த கருத்து

தவறான கருத்தாகும்

 

வாழ்க்கையில்

எதிர்ப்படும் வாய்ப்பைப்

பயன்படுத்திக்

கொள்ளத் தான்

முடியுமே தவிர

எந்த ஒரு

வாய்ப்பையும்

யாராலும்

உருவாக்க முடியாது

 

நாம் அலுவலகத்தில்

வேலை நேரத்தில்

வேலை செய்து

கொண்டிருக்கிறோம்.

ஒரு சினிமாவை

பார்க்க வேண்டும்

என்ற ஆசை

நமக்கு ஏற்படுகிறது

சினிமா பார்க்க

வேண்டும் என்ற

ஆசை நமக்கு

ஏற்பட்டதால்

அலுவலகத்திற்கு

விடுப்பு போட்டு

விட்டு நாம்

சினிமா பார்க்க

செல்கிறோம்.

 

சினிமாவைப்

பார்ப்பதற்காக

அதாவது

ஒரு செயலை

செய்வதற்காக நாமே

ஒரு வழியைத்

தேர்ந்தெடுக்கிறோம்

அந்த வழியைப்

பின்பற்றுகிறோம்

அதை

செயல்படுத்துகிறோம்  

 

இந்தச் செயல்

எதைக் காட்டுகிறது

என்றால்

நாம் ஒரு செயலைச்

செய்வதற்காக

ஒரு சூழ்நிலையை

நாமே உருவாக்கிக்

கொள்கிறோம்

என்பதைக் காட்டுகிறது.

வாய்ப்பை

உருவாக்கிக்

கொள்வதைக்

காட்டவில்லை

ஏனென்றால்,

வாய்ப்பை நம்மால்

உருவாக்க முடியாது.

 

நாம்

CIVIL SERVICE

EXAM தேர்வு

எழுதி நேர்காணலில்

வெற்றி பெற்று

உயர்ந்த அதிகாரி

பதவி ஏற்று

அனைவருக்கும்

நல்லது செய்ய

வேண்டும் என்று

விருப்பப்பட்டு

டிவியில் தேவையற்ற

நிகழ்ச்சிகளை பார்க்காமல்

தரமற்ற சினிமாக்களில்

நேரங்களை

செலவிடாமல்

அவசியம் ஏற்பட்டால்

ஒழிய வெளி

இடங்களுக்கு செல்லாமல்

நண்பர்களுடன்

வீண் அரட்டை

அடிக்காமல்

நேரத்தை பயனற்ற

விஷயங்களில்

செலவிடாமல்

மற்றவர்களுக்கு

தேவையற்ற

அறிவுரைகளை

சொல்லிக் கொண்டு

இருக்காமல்

மொபைலில் அவசியமற்ற

கருத்துக்களை அனுப்பிக்

கொண்டு இருக்காமல்

மற்றவர்களுக்கு

தொல்லை கொடுக்காமல்

மற்றவர்களுடைய

மனதைக்

காயப்படுத்தாமல்

மற்றவர்களை

வருத்தப்பட வைக்காமல்

மற்றவர்களை

கவலைப்பட வைக்காமல்

நூலகம் சென்று

படிக்கிறோம்

காகிதத்தில் எழுதி

எழுதி படிக்கிறோம்

குறிப்புகள் எடுத்து

படிக்கிறோம்

பல்வேறுபட்ட

புத்தகங்களை வாங்கி

படிக்கிறோம்

இரவு பகல்

பார்க்காமல் படிக்கிறோம்

படிக்கிறோம்

படிக்கிறோம்

தொடர்ந்து படிக்கிறோம்

விடாமல் படிக்கிறோம்

படித்துக் கொண்டே

இருக்கிறோம்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment