January 01, 2022

பதிவு-2-கொக்கொக்க- திருக்குறள்

 பதிவு-2-கொக்கொக்க-

திருக்குறள்-

 

அப்போது CIVIL

SERVICE EXAM

அறிவிப்பு வருகிறது.

அந்த அறிவிப்பைப்

பார்த்து விண்ணப்பம்

செய்து தேர்வில்

வெற்றி பெற்று

நேர்காணலில் பங்கேற்று

தேர்ச்சி பெற்று

உயர்ந்த அதிகாரி

பதவி ஏற்று

மக்களுக்கு சேவைகள்

செய்கிறோம்

 

நாம் CIVIL

SERVICE EXAM

அறிவிப்பு எப்போது

வரும் அதைப்

பயன்படுத்திக் கொள்வோம்

என்று வாய்ப்புக்காகக்

காத்துக் கொண்டு

இருந்தோம்.

வாய்ப்பு வந்தது

அதைப் பயன்படுத்திக்

கொண்டோம்.

தேர்வு எழுதினோம்

வெற்றி பெற்றோம்

நேர்காணலில் கலந்து

கொண்டோம்

தேர்ச்சி பெற்றோம்

உயர்ந்த அதிகாரி

ஆனோம்,

மக்களுக்கு சேவைகள்

செய்து கொண்டு

இருக்கிறோம்

 

இந்தச் செயல்

எதைக் காட்டுகிறது

என்றால்

வாழ்க்கையில்

எதிர்ப்பட்ட

வாய்ப்பை நாம்

சரியாகப்

பயன்படுத்திக்

கொண்டதைக்

காட்டுகிறது

ஏனென்றால்

வாய்ப்பை

நம்மால்

உருவாக்க முடியாது

ஆனால்,

சூழ்நிலையை நம்மால்

உருவாக்க முடியும்

 

மகாபாரதக் கதையை

எடுத்துக் கொண்டால்

கர்ணன்

துரியோதனனுக்காக

உயிரை எதற்காகக்

கொடுத்தான்

என்பதற்கு விளக்கம்

சொல்லும் போது

செஞ்சோற்றுக் கடன்

தீர்க்க சேராத

இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தான்

என்று சொல்வார்கள்

இந்தக் கருத்து

தவறான கருத்தாகும்.

 

துரியோதனன்

போட்ட சாப்பாட்டின்

கடனைத் தீர்க்க

வேண்டும் என்பதற்காக

கர்ணன் உயிரைக்

கொடுக்கவில்லை.

ஒருவர் சாப்பாடு

போட்டார் என்ற

காரணத்திற்காக

யாரும் உயிரை

கொடுக்க மாட்டார்கள்

கர்ணன்

துரியோதனனுக்காக

உயிரைக் கொடுத்தது

துரியோதனன் போட்ட

சாப்பாட்டிற்காக அல்ல

அதன் பின்னால்

ஒரு முக்கியமான

விஷயம் இருக்கிறது

 

மிகப்பெரிய மைதானத்தில்

பல்லாயிரக்கணக்கான

மக்கள் கூடியிருந்த

இடத்தில்

கெளரவர்களும்,

பாண்டவர்களும்

கூடியிருந்த இடத்தில்

கௌரவர்களும்,

பாண்டவர்களும்

தங்களுடைய

திறமைகளை

காட்டிக் கொண்டிருந்த

இடத்தில்

இந்த உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளி

அர்ஜுனன் தான்

என்பதை

இந்த உலகத்திற்கு

உணர்த்த வேண்டும்

இந்த உலகத்திற்கு

நிரூபிக்க  வேண்டும்

என்பதற்காகவும்

இந்த உலகத்திலேயே

மிகச் சிறந்த வில்லாளி

அர்ஜுனன் தான்

என்பதை

இந்த உலகம்

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காகவும்,

அஸ்தினாபுரத்தின்

பதவியில்

இருந்தவர்களும்

அதிகாரத்தில்

இருந்தவர்களும்

பணபலம்

படைத்தவர்களும்

அதற்கான செயல்களைச்

செய்து கொண்டிருந்த

நேரத்தில்

யாரும்

எதிர்பாராதவிதமாக

கம்பீரமான குரலுடன்

வெளிப்பட்டான் கர்ணன்

 

உலகத்திலேயே

மிகச் சிறந்த

வில்லாளி அர்ஜுனன்

கிடையாது

உலகத்திலேயே

மிகச்சிறந்த

வில்லாளியாவதற்கு

அர்ஜுனனுக்கு

தகுதி கிடையாது

அர்ஜுனனை

உலகத்திலேயே

மிகச்சிறந்த

வில்லாளியாக்க

முயற்சி செய்யாதீர்கள்

அர்ஜுனனை

உலகத்திலேயே

மிகச்சிறந்த

வில்லாளி என்று

நிரூபிக்க முயற்சி

செய்யாதீர்கள்

அர்ஜுனனை

உலகத்திலேயே

மிகச்சிறந்த

வில்லாளி என

மக்களை ஏற்றுக்

கொள்ள வைப்பதற்கான

வேலைகளைச்

செய்யாதீர்கள்

 

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment