November 23, 2018

திருக்குறள்-பதிவு-56


                      திருக்குறள்-பதிவு-56

அறிவு வளர்ச்சி
அடைந்து வரும்போது
பைபிளில் உள்ள
முரண்பாடுகள்
திருத்தப்பட வேண்டும்
பைபிளில் உள்ள
கருத்துக்களை
ரோமன் கத்தோலிக்
நம்பிக்கையுடன்
இணைத்து எந்த
விஞ்ஞான
மெய்ப்பாட்டுக்கும்
மேற்கோளாகக் காட்டி
வாதிடக் கூடாது
என்று சொன்ன
கலிலியோ
தனது மூத்த மகள்
வெர்ஜீனியாவை
(Virginia Galieli)
பதிமூன்றாம் வயதில்
பிளாரென்ஸ் நகருக்கு
அருகே இருந்த
கிறிஸ்துவக்
கன்னி மாடத்தில்
(Christian Convent)
குடும்ப சூழ்நிலையின்
காரணமாக கன்னியாக
சேர்த்து விட நேர்ந்தது.

கன்னி மாடத்தில்
வெர்ஜீனியாவின்
ஞானப் பெயர்
மரியா ஸெலஸ்டி
(Maria Celeste)
என்று மாற்றப்பட்டு
அழைக்கப்பட்டு வந்தது

கலிலியோ தன் மகள்
வெர்ஜீனியாவின் மேல்
அளவற்ற அன்பு
வைத்து இருந்தார்.

வெர்ஜீனியா தன் தந்தை
கலிலியோவைப் போல்
கூர்ந்த அறிவும்
தெளிந்த சிந்தனையும்
நுணுக்கமான
ஆராயும் திறனும்
பெற்று அறிவில்
சிறந்து விளங்கினார்
என்று சொல்லலாம்

கலிலியோ
தொலை நோக்கியின்
மூலம் இப்பிரபஞ்சத்தில்
உள்ள கோள்களை
ஆராய்ச்சி செய்து
கொண்டிருந்த
சமயங்களில் எல்லாம்
வெர்ஜீனியாவும்
தன் தந்தையுடன்
சேர்ந்து அண்டக்
கோள்களை ஆராய்ச்சி
செய்து இருக்கிறார்

வெர்ஜீனியா தன்
தந்தை கலிலியோவை
கடவுளுக்கு இணையாக
மதித்து போற்றி
வாழ்ந்திருக்கிறாள்
என்பதையும் ;
கலிலியோ தான்
ஆராய்ச்சி செய்து
கண்ட பிரபஞ்சத்தின்
விந்தைகளை ;
கலிலியோ தன்
கண்களால் கண்ட
இப்பிரபஞ்சத்தின்
உண்மைகளை ;
கலிலியோ ஆராய்ச்சி
செய்து தான்
கண்ட முடிவுகளை ;
கலிலியோ
தான் ஆராய்ச்சி
செய்யும்போது
தனக்கு ஏற்பட்ட
கஷ்டங்களை ;
கலிலியோ
ஆராய்ச்சி செய்த
போது கலிலியோவிற்கு
ஏற்படுத்தப்பட்ட
இடையூறுகளை ;
கலிலியோ தன்
மகள் வெர்ஜீனியாவிற்கு
கூறி இருப்பதை ;
கன்னி மாடத்திலிருந்து
வெர்ஜீனியா
எழுதிய கடிதங்களில்
இருந்து தெரிந்து
கொள்ளலாம்


வெர்ஜீனியா
கலிலியோவிற்கு
21 ஆண்டுகளில்
124 கடிதங்கள்
எழுதி இருக்கிறாள்
வெர்ஜீனியாவின்
கடிதங்கள்
போற்றுதலுக்குரிய
அரிய கடிதங்களாக
மதிக்கப்படுகிறது ;
வரலாற்று ஆவணமாக
போற்றப்படுகிறது ;
வெர்ஜீனியாவின்
கடிதங்களில்
கலிலியோவின்
பல கண்டுபிடிப்புகள்
காணப்படுகின்றன
அவைகள் ஒன்றாக
தொகுக்கப்பட்டு
அத்தொகுப்பு அவரது
சரிதைக் காவியமாக
இன்றளவும்
பாதுகாக்கப்பட்டு
வருகிறது

கன்னிமாடத்தில்
தனித்து வாழ்ந்து
கொண்டிருந்த
கலிலியோவின்
அன்பு மகள்
செல்ல மகள்
வெர்ஜீனியா
1634-ஆம் ஆண்டு
மரணமடைந்தார்

வெர்ஜீனியா
மரணமடைந்து
விட்ட காரணத்தினால்
வெர்ஜீனியாவிற்கு
கலிலியோ எழுதிய
கடிதங்கள் அனைத்தும்
வெர்ஜீனியா இறந்த
பிறகு ரோமபுரிக்
கோயிலுக்கு பயந்து
கன்னிமாடத்தில்
எரிக்கப்பட்டது

வெர்ஜீனியா
மரணமடைந்த செய்தி
வீட்டுக்காவலில்
வைக்கப்பட்டு இருந்த
கலிலியோவிற்கு
தெரிவிக்கப் பட்டது
இச்செய்தியைக்
கேட்ட கலிலியோ
அதிர்ச்சி அடைந்தார்
சோகத்தில் வீழ்ந்தார்

தன்னுடைய
அன்பு மகள்
மரணமடைந்த செய்தி
கலிலியோவை
சோகத்தில்
ஆழ்த்திய போதிலும் ;
உலகத்தில் உள்ள
கிறிஸ்தவர்கள்
அனைவரும்
கலிலியோவுக்கு
எதிராக எதிர்த்து
நின்ற போதிலும் ;
வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டு இருந்த
கலிலியோ
தன்னுடைய
ஆராய்ச்சியை
தொடர்ந்து செய்து
கொண்டு இருந்தார்

---------  இன்னும் வரும்
---------  23-11-2018
///////////////////////////////////////////////////////////