October 15, 2018

திருக்குறள்-பதிவு-34


                     திருக்குறள்-பதிவு-34

(10)கல்கி அவதாரம்

தான் நலமாக வாழ
வேண்டும் என்பதற்காக
எச்செயலையும்
செய்யத் தயாராக
இருந்த மனிதர்கள்
வாழ்ந்து கொண்டிருந்த
சமயத்தில் அதாவது
அதர்மத்தின் உச்சத்தில்
மக்கள் வாழ்ந்து
கொண்டிருந்த நிலையில்
உண்டான
கல்கி அவதாரம்
இரண்டு விதமான
விஷயங்களை தெளிவு
படுத்துகிறது

ஒன்று :யாருக்கு
       மறுபிறவி
       உண்டு
       என்பதைத் தெளிவு
       படுத்துகிறது

இரண்டு: யாருக்கு
         மறுபிறவி
         இல்லை
         என்பதைத் தெளிவு
         படுத்துகிறது

கடவுள் எங்கே இருக்கிறார்
அவரை அடையக்கூடிய
வழி என்ன
அதற்கு பயன்படுத்தப்
படுவது எது
என்பதை உணர்ந்து
கர்மாவைக் கழித்து
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
இறைவனாகவே மாறி
விட்டவர்களுக்கு
மறுபிறவி என்பது
கிடையாது
அத்தகையவர்களுக்கு
கல்கி அவதாரம்
என்பது தான் கடைசி
அதற்கு மேல்
அவர்களுக்கு அவதாரம்
என்பது இல்லை

கல்கி அவதாரம்
படத்தை எடுத்துப்
பார்த்தால் குதிரையின்
பின்னங்கால்கள்
இரண்டும் தரையிலும்,
முன்னங்கால்கள்
இரண்டும் பூமியில்
படாமல் மேல்
நோக்கியும் தூக்கிக்
கொண்டு இருக்கும்
இது எதை குறிக்கிறது
என்றால் தன்னிலும்
மேல் நிலையில் உள்ள
சக்தியுடன் அதாவது
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
இறைவனாகவே
மாறி விட்டவர்களுக்கு
பிறவி என்பது கிடையாது
என்பதைக் குறிக்கிறது

நீரில் தோன்றிய உயிரினம்
விலங்காகி, மனிதனாகி
இறைவனாகும் போது
பரிணாமம் முடிவடைகிறது
என்பதால் கல்கி
அவதாரத்துடன்
அவதாரங்கள்
முடிந்து விடுகிறது

கடவுள் எங்கே
இருக்கிறார் அவரை
அடையக்கூடிய வழி என்ன
அதற்கு பயன்படுத்தப்
படுவது எது
என்பதை உணர்ந்து
கர்மாவைக் கழித்து
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
இறைவனாகவே
மாறாதவர்களுக்கு
மறுபிறவி என்பது உண்டு

அதனால் அவர்கள்
மீண்டும் இந்த
கர்மாவின் காரணமாக
பிறக்க வேண்டும்
அதாவது தாயின்
வயிற்றில் தண்ணீரில்
இருந்து ஆரம்பிக்க
வேண்டும்.

அதனைத் தொடர்ந்து
குழந்தை பூமியில்
விழுந்து தவழ்ந்து
நின்று ,ஓடி,
முழுமைத் தன்மை
பெற பல்வேறு
நிலைகளைக் கடக்க
வேண்டும் என்ற
நிலைகளைக் காட்டும்
தசாவதாரத்தின்
பத்து நிலைகளைத்
தொடர வேண்டும்

ஒவ்வொரு முறையும்
பிறந்து வரும்
மனிதன் தனது
கர்மாவைக் கழித்து
இறைவனை உணர்ந்து
இறைவனாக மாறவில்லை
எனில் மீண்டும் மீண்டும்
பிறக்க வேண்டும்

கல்கி அவதாரம்
படத்தில் குதிரையின்
பின்னங்கால்கள்
இரண்டும் தரையிலும்
இரண்டு கால்கள்
பூமியில் படாமல்
மேல்நோக்கியும் இருக்கும்
அந்தக் குதிரையின்
மேல் ஒருவன்
அமர்ந்தபடி கத்தியை
சுழற்றுவது போலவும்
படம் வரையப்பட்டிருக்கும்

அதாவது ஒருவன்
தன்னிலும் மேலான
சக்தியான இறைவனுடன்
தொடர்பு கொண்டு
இறைவனாக மாறாமல்
சிற்றின்பத்தில்
ஈடுபட்டு சண்டையிட்டுக்
கொண்டு வாழ்பவருக்கு
கர்மா என்பது
கூடிக்கொண்டே செல்லும்
அவருக்கு மறுபிறவி
உண்டு என்பதை
இப்படம் குறிக்கிறது

மறுபிறவி யாருக்கு
உண்டு என்பதையும்
மறுபிறவி யாருக்கு
இல்லை என்பதையும்
கல்கி அவதாரம்
விளக்குகிறது

குரங்கிலிருந்து
மனிதன் வந்தான் அதாவது
விலங்கிலிருந்து
மனிதன் வந்தான் என்றார்
சார்லஸ் டார்வின்

சார்லஸ் டார்வினுக்கு
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
தசாவதாரத்தின் மூலம்
நரசிம்ம அவதாரத்தில்
சிங்கம் முகமும்
மனித உடலும்
கொண்ட உயிரினத்திலிருந்து
மனிதன் வந்தான் என்று
நம் முன்னோர்கள்
சொன்னார்கள்

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு மனிதன்
வந்தான் என்பதையும்,

மனிதனிடம் ஏற்படும்
மாற்றத்தை கவனித்தாலே
உயிரினங்களின் பரிணாமக்
கோட்பாட்டைமனிதனே
வெளிப்படுத்துகிறான்
என்பதையும் நாம்
தெரிந்து கொண்டோம்
  
--------- இன்னும் வரும்
---------- 15-10-2018
////////////////////////////////////////////