November 11, 2020

ஐயப் படாஅது-திருக்குறள்-பதிவு-6

 

திருக்குறள்-

ஐயப் படாஅது-பதிவு-6

 

“யார் ஒருவர்

உணர்ந்து

வைத்திருக்கிறாரோ

அவர் தான்

கடவுளுக்கு

ஒப்பானவர்

கடவுளுக்கு சமமாக

மதிக்கப்பட

வேண்டியவர்

கடவுளாகவே

துதிக்கப்பட

வேண்டியவர்

ஏனென்றால்

அவர் அகத்திற்குள்

உள்ள அறிவாக

இருக்கும் கடவுளை

உணர்ந்து

கடவுளாகவே

மாறியவர்

அகத்திற்குள்

கடவுள் அறிவாக

இருக்கிறார்

அந்த கடவுளே

இந்த பிரபஞ்சம்

முழுவதும்

அறிவாக இருக்கிறது

அகத்திற்குள்

ஜீவாத்மாவாக

இருக்கும் கடவுள்

புறத்தில்

பரமாத்மாவாக

இருக்கிறார்

என்பதை

உணர்ந்தவர்

கடவுளாகவே

மதிக்கப்பட

வேண்டியவர் “

 

“ஐயப் படாஅது

என்றால்

சந்தேகத்திற்கு

சிறிதும் இடம்

இல்லாமல்

என்று பொருள்”

 

“அகத்தது

உணர்வானை

என்றால்

அகத்திற்குள்

கடவுள்

இருக்கிறார்

என்பதை

உணர்ந்தவன்

என்று பொருள்”

 

“தெய்வத்தோ

டொப்பக் கொளல்

என்றால்

அகத்திற்குள்

ஜீவாத்மாக

இருக்கும் கடவுள்

புறத்தில்

பரமாத்மாவாக

இருக்கிறார்

என்பதை

உணர்ந்து கொண்டு

அகத்திற்குள்

இருக்கும்

கடவுள் எங்கே

இருக்கிறார்,

கடவுளை

அடையக்கூடிய

வழி எது,

கடவுளை

அடைவதற்கு

பயன்படுத்தக் கூடிய

பொருள் எது

என்பதை

உணர்ந்து

இவைகளைக்

கடைபிடித்து  

பின்பற்றி

வழிநடந்து

இறைவனாகவே

மாறியவனை

இறைவனாக மதிக்க

வேண்டும்

என்று பொருள்”

 

“அதாவது

நம்முடைய

உடலில்

அகத்திற்குள்

ஜீவாத்மாக

இருக்கும் கடவுள்

புறத்தில்

பரமாத்மாவாக

இருக்கிறார்

என்பதை

சந்தேகத்திற்கு

இடமின்றி

உணர்ந்து

கொண்டு

அகத்திற்குள்

இருக்கும்

கடவுள் எங்கே

இருக்கிறார்,

கடவுளை

அடையக்கூடிய

வழி எது,

கடவுளை

அடைவதற்கு

பயன்படுத்தக்

கூடிய

பொருள் எது

என்பதை

உணர்ந்து

இவைகளைக்

கடைபிடித்து  

பின்பற்றி

வழிநடந்து

இறைவனாகவே

மாறியவனை

இறைவனாக மதிக்க

வேண்டும்

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

ஐயப் படாஅது

அகத்தது

உணர்வானைத்

தெய்வத்தோ

டொப்ப கொளல்

 

என்ற திருக்குறளின்

மூலம் தெளிவு

படுத்துகிறார்

 

----------என்றும் அன்புடன்

----------K.பாலகங்காதரன்

-----------11-11-2020

//////////////////////////////////////////

ஐயப் படாஅது-திருக்குறள்-பதிவு-5

 

திருக்குறள்-

ஐயப் படாஅது-பதிவு-5

 

“உயிரே

அறிவாக இருக்கிறது

அந்த அறிவே

கடவுளாக இருக்கிறது

அந்த கடவுளே

நமது சிரசில்

இருக்கிறது

என்பதை உணர்ந்து

கடவுள் நம்முடைய

உடலில் சிரசில்

எந்த இடத்தில்

இருக்கிறார்

கடவுளை

அடையக் கூடிய

வழி எது

கடவுளை

அடைவதற்கு

பயன்படுத்த

வேண்டியது எது

என்பதை அறிந்து

அதைப்

பயன்படுத்தி

ஞானம், சமாதி,

என்ற வரிசையில்

முக்தி என்ற

மோட்ச நிலையை

ஒருவன்

அடையும் போது

மனிதன்

கடவுளாகவே

மாறுகிறான்:

 

“கடவுள் நமக்குள்

இருக்கிறார்

கடவுள் நமக்குள்

அறிவாக

இருக்கிறார்

கடவுள்

அறிவாகவே

இருக்கிறார்

அறிவாக

கடவுளே

இருக்கிறார்

நம்முடைய

உடலில்

ஜீவாத்மாவாக

இருக்கும்

கடவுள்

தான்

இந்த பிரபஞ்சம்

முழுவதும்

பரமாத்மாவாக

இருக்கிறது

என்பதை

மனிதன்

உணர்ந்து

கொள்ளும் போது

மனிதன்

கடவுளாகவே

மாறுகிறான்”

 

“நமக்குள்

அறிவாக இருக்கும்

கடவுள் - இந்த

பிரபஞ்சம்

முழுவதும் இருக்கிறார்

இந்த பிரபஞ்சம்

முழுவதும்

இருக்கும்

கடவுள் தான்

நம்முடைய

உடலிலும் இருக்கிறது

என்பதையும்”

 

“இந்த பிரபஞ்சத்தின்

ரகசியங்கள்

அனைத்தும் எப்படி

இந்த பிரபஞ்சம்

முழுவதும் நிரம்பி

இருக்கிறதோ

அத்தனை ரகசியங்கள்

அனைத்தும்

நமக்குள் இருக்கிறது

என்பதையும்”

 

“பல கோடி

வருடங்கள்

இந்த பிரபஞ்சம்

எப்படி பரிணமித்து

வந்தது என்பது

பற்றிய ரகசியங்கள்

எப்படி இந்த

பிரபஞ்சத்தில்

இருக்கிறதோ

அப்படியே

நமக்குள்ளும்

அந்த ரகசியங்கள்

அனைத்தும் மறைந்து

இருக்கிறது

என்பதையும்”

 

“இந்த பிரபஞ்ச

ரகசியங்கள் எப்படி

இந்த பிரபஞ்சம்

முழுவதும் பரவிக்

கிடக்கிறதோ

அப்படியே

இந்த பிரபஞ்ச

ரகசியங்கள்

அனைத்தும்

நமக்குள்ளும்

இருக்கிறது

என்பதையும்”

 

“நமக்குள் இருக்கும்

ரகசியத்தை

யார் ஒருவர்

அறிந்து

கொள்கிறாரோ

அவரால் மட்டுமே

இந்த பிரபஞ்ச

ரகசியங்களை

உணர்ந்து கொள்ள

முடியும்

என்பதையும்,”

 

“நமக்குள் நடந்து

கொண்டிருக்கும்

ரகசியங்களை

அறிந்து கொள்ளாமல்

வெளியில் நடக்கும்

ரகசியங்களை

உணர்ந்து கொள்ள

முடியாது

என்பதையும்”

 

“அகத்திற்குள்

இருப்பதை யார்

ஒருவரால் உணர்ந்து

கொள்ள முடியுமோ

அவர்களால் மட்டுமே

புறத்தில் உள்ளதை

உணர்ந்து கொள்ள

முடியும்

என்பதையும்”

 

“அகத்திற்குள்

இருப்பதை உணர்ந்து

கொள்ளாமல்

புறத்தில் உள்ளதை

உணர்ந்து கொள்ள

முடியாது என்பதையும்”

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------11-11-2020

////////////////////////////////////////

ஐயப் படாஅது-திருக்குறள்-பதிவு-4

 

திருக்குறள்-

ஐயப் படாஅது-பதிவு-4

 

“ஆனால்

தேடுவதை

நிறுத்தி விட்டு

அமைதியாக

இருந்த போது

மனமானது

இயங்கவில்லை.

மனமானது

ஒடுங்கி உயிரே

அறிவாகிறது.

அறிவு நிலையில்

இருக்கும் போது

நம்முடைய

தொலைந்த பொருள்

எங்கே இருந்தது

என்பதை யோசித்து

எடுப்பதற்கு அறிவே

காரணமாக இருந்தது”

 

“மனமானது

இயங்கிக்

கொண்டிருக்கும் போது

தேடியது

கிடைக்கவில்லை

மனம் ஒடுங்கி

அறிவாகவே

மாறும் போது

தேடியது

கிடைத்தது”

 

“அதைப்போல

உயிரானது

மனமாக

இருக்கும் போது

இந்த பிரபஞ்சத்தில்

உள்ள எந்த

ஒன்றையும்

அறிந்து கொள்ள

முடியாது

ஆனால்

மனமானது

அறிவாகவே

மாற்றம்

அடையும் போது

இந்த பிரபஞ்சத்தில்

உள்ள எந்த

ஒரு ரகசியத்தையும்

அறிந்து

கொள்ள முடியும்”

 

“மனமானது

ஒருவரை

தவறாக

வழி நடத்தும்

அறிவானது

ஒருவரை

சரியாக

வழி நடத்தும்”

 

“மனிதன்

மனதின் வழி

நடக்கும் போது

சிற்றின்பத்தின்

வழி நடந்து

கர்மவினைகளை

உருவாக்கி

பிறவிச் சுழலில்

சிக்குகிறான்

ஆனால் மனிதன்

அறிவின் வழி

நடக்கும் போது

பேரின்பத்தின்

வழி நடந்து

கர்மவினைகளைக்

கழித்து

பிறவிச் சுழலை

அறுக்கிறான் “

 

“மனிதன்

ஐம்புலன்களின்

வழி நடக்கும்

போதும்

உயிரானது

மனமாக

மாற்றமடைந்து

இயங்கிக்

கொண்டிருக்கும்

போது - மனதின்

வழி நடக்கும்

போது

மனிதனுக்கு

கர்ம வினைகள்

உருவாகிறது

பிறவிச் சுழல்

உருவாகிறது

ஆனால் மனிதன்

அறிவின் வழி

நடக்கும் போது

மட்டும் தான்

மனிதனுடைய

கர்ம வினைகள்

கழிகிறது,

பிறவிச் சுழல்

அறுகிறது

கர்ம வினைகள்

பிறப்பதில்லை

பிறவிகள்

உருவாகுவதில்லை”

 

“அந்தக் காலம்

முதல்

இந்தக் காலம்

வரை

இந்த உலகத்தில்

உள்ள அனைத்து

விஷயங்களையும்

உணர்ந்து

கொள்வதற்கு

மனிதன்

பயன்படுத்தும்

ஐம்புலன்கள்

மற்றும்

மனம்

ஆகியவை

மனிதனை

சிற்றின்பச்

சேற்றில் தள்ளி

கர்மவினையில்

பிறவி பல

எடுக்க வைக்கிறது”

 

“ஆனால் மனிதன்

அறிவைப்

பயன்படுத்தும்

போது தான்

மனிதன்

பேரின்பத்தில்

திளைத்து

கர்ம வினையை

எரித்து

பிறவிச் சுழலை

அறுத்து

ஞானத்தை சுவைத்து

சமாதியை சந்தித்து

முக்தி என்னும்

மோட்ச நிலையை

அடைய முடியும்

 

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------11-11-2020

////////////////////////////////////////

ஐயப் படாஅது-திருக்குறள்-பதிவு-3

 

திருக்குறள்-

ஐயப் படாஅது-பதிவு-3

 

“மனதின்

முடிவில் தான்

அறிவானது

இயங்கத் தொடங்கும்

அறிவின்

முடிவில் தான்

மனமானது

இயங்கத் தொடங்கும்”

 

“மனம் எங்கே

முடிவு அடைகிறதோ

அங்கே தான்

அறிவானது

தொடங்குகிறது

அறிவானது

எங்கே

முடிவடைகிறதோ

அங்கே தான்

மனமானது

தொடங்குகிறது”

 

“மனதின்

இறப்பில் தான்

அறிவின்

பிறப்பானது

தொடங்குகிறது

அறிவின்

இறப்பில் தான்

மனதின்

பிறப்பானது

தொடங்குகிறது

அதாவது

ஒன்றின்

அழிவில் தான்

மற்றொன்று

பிறக்கிறது”

 

“மனம்

இறக்கும் போது

அறிவானது

பிறக்கிறது

அறிவு

இறக்கும் போது

மனமானது

பிறக்கிறது”

 

“உயிரானது

படர்க்கை நிலையில்

விரிவு அடையும்

போது மனமாகிறது

மனமானது

ஒடுக்க நிலையில்

ஒடுங்கும் போது

அறிவாகிறது”

 

“உயிரானது

படர்க்கை நிலை

எய்தி

விரிவடைந்து

மனமாக

இயங்கிக்

கொண்டிருக்கும்

போது அதன்

சுழற்சி நிலை

அதிகமாக இருக்கும்”

 

“உயிரானது

மனமாக

இயங்கும் போது

மனம் என்ற

நிலையில்

உயிரானது

சுழன்று கொண்டே

இருக்கிறது”

 

“உயிரானது

மனம் என்ற

நிலையில்

இயங்கிக்

கொண்டிருக்கும் போது

மனதிற்கு

கட்டுப்பட்டு

எடுக்கப்படும்

எந்த ஒரு

முடிவும்

தவறாகத்

தான் இருக்கும்”

 

“இயங்கிக்

கொண்டிருந்த

மனமானது

ஒடுங்கி

உயிருடன்

இணையும் போது

அறிவாகிறது

உயிரே

அறிவாக

இருக்கும் நிலையில்

எடுக்கப்படும்

எந்த ஒரு

முடிவும்

சரியானதாகத்

தான் இருக்கும்”

 

“உயிரானது

மனமாக

மாறும் போது

எடுக்கப்படும்

எந்த ஒரு

முடிவும்

தவறாக

இருக்கும் என்ற

காரணத்தினால்

தான் மனம்

இயங்கிக்

கொண்டிருக்கும்

போது எந்த

ஒரு முடிவும்

எடுக்கக் கூடாது”

 

“மனமானது

ஒடுங்கி

அறிவாகவே

மாறும் போது

எடுக்கப்படும்

எந்த ஒரு

முடிவும்

சரியாகத்

தான் இருக்கும்

இந்த

நிலையில்

தான் எந்த

ஒரு முடிவையும்

எடுக்க வேண்டும்”

 

“நாம் ஒரு

பொருளைத்

தொலைத்து விட்டு

மனமானது

இயங்கிக்

கொண்டிருக்கும் போது

தொலைந்த

பொருளைத்

தேடிய போது

கிடைக்கவில்லை “

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------11-11-2020

////////////////////////////////////////