October 10, 2014

இயேசுகிறிஸ்து-ஔவையார்- ஈசனெனக்-பதிவு-70


இயேசுகிறிஸ்து-ஔவையார்-ஈசனென-பதிவு-70

“””பதிவு எழுபதை விரித்துச் சொல்ல

                        ஈசர்பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””””

இயேசு கிறிஸ்து:                                  

“அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு,

அவருக்குப் பசியுண்டாயிற்று.”

-------மத்தேயு - 4 : 2

 

“அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர்

தேவனுடைய குமாரனேயானால்,  இந்தக் கல்லுகள்

அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.”

-------மத்தேயு - 4 : 3

 

“அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல,

தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு

வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே

என்றார்.”

-------மத்தேயு - 4 : 4

 

“அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக்

கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல்

அவரை நிறுத்தி:”

-------மத்தேயு - 4 : 5

 

“நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும் ;

ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக்

கட்டளையிடுவார்;  உமதுபாதம் கல்லில்  இடறாதபடிக்கு, 

அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்

என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.”

-------மத்தேயு - 4 : 6

 

“அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப்

பரீட்சை பாராதிருப்பாயாக என்றும்

எழுதியிருக்கிறதே என்றார்.”

-------மத்தேயு - 4 : 7

 

“மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல்

கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும்

அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:”

-------மத்தேயு - 4 : 8

 

“நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப்

பணிந்துகொண்டால்,  இவைகளையெல்லாம்

உமக்குத் தருவேன் என்று சொன்னான்.”

-------மத்தேயு - 4 : 9

 

““அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே;

உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு,

அவர் ஒருவருக்கே ஆராதனை

செய்வாயாக என்று  எழுதியிருக்கிறதே என்றார்.”

-------மத்தேயு - 4 : 10

 

“அப்பொழுது பிசாசானவன் அவரை

விட்டு விலகிப்போனான். உடனே தேவ தூதர்கள்

வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.”

-------மத்தேயு - 4 : 11

 

 
சமுதாயத்தில்

மனிதர்களால் செய்யப்படும் செயல்களைப் பொறுத்து

செயல்களின் தன்மையைப் பொறுத்து

இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்.

 

ஒன்று         :  தனி மனித அளவில் செய்யப்படும் செயல்கள்

மற்றொன்று :  சமுதாய அளவில் செய்யப்படும் செயல்கள்

தனி மனித அளவில் செய்யப்படும் செயலுக்கும்

சமுதாய அளவில் செய்யப்படும் செயலுக்கும்

வேறுபாடு இருக்கிறது.

 

தனி மனித அளவில் செய்யப்படும் செயல் என்பது

ஒரு குறிப்பிட்ட எல்லையை உடையது;

சமுதாய அளவில் செய்யப்படும் செயல் என்பது

ஒரு குறிப்பிட்ட எல்லையை உடையது அல்ல;

விரிந்த நிலையை உடையது.

 

தனி மனித அளவில் செய்யப்படும் செயல்

சமுதாய அளவில் விரியும் என்று சொல்ல முடியாது ;

ஆனால் சமுதாய அளவில் செய்யப்படும் செயல்

தனி மனித அளவு சென்று

பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லாம்.

 

தனி மனித அளவில் செய்யப்படும் செயல்

தனிப்பட்ட அளவில் செய்தாலும்

சமுதாய அளவில் விரிந்து சென்று

பரவும் தன்மையைப் பெறும் வாய்ப்பிருக்கிறது;

அதே போல சமுதாய அளவில் செய்யப்படும் செயல்

தனி மனித அளவில் சென்று

பாதிப்பை ஏற்படுத்தாத நிலையை

உண்டாக்கவும்  வாய்ப்பிருக்கிறது.

 

தனி மனித செயலை ஆற்றுக்கு ஒப்பிடுகிறோம்

ஆறு தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் ஓடி

இறுதியில் கடலில் கலக்கிறது.

எல்லா ஆறுகளும் கடலில் கலக்கும் என்று சொல்ல முடியாது

ஆறுகள் எவ்வாறு கடலில் கலந்தவுடன்

தன் தன்மையில் மாற்றம் பெறுகிறதோ

அதைப்போல

தனி மனித அளவில் செய்யப்படும் பல்வேறு செயல்கள்

சமுதாய அளவில்

பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்

என்று சொல்ல முடியாது.

 

சமுதாய அளவில் செய்யப்படும் செயலுக்கு

கடல் நீரை உவமையாகச் சொல்லலாம்.

 

கடலானது கரையை கடந்து வந்தால்

அனைத்து ஆறுகளும் அதனுள் அடங்கும்

அனைத்து ஆறுகளையும் அது தொட்டு விட்டும்

தன்னோடு இணைத்துக் கொண்டும் செல்லும்

அதைப்போல,

சமுதாய அளவில் செய்யப்படும் எந்த செயலும்

அது தனி மனித அளவில் சென்று தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

தனி மனித அளவில் செய்யப்படும் செயலை விட

சமுதாய அளவில் செய்யப்படும் செயல்

மிகவும் முக்கியத்துவம் கொண்டது.

 

சமுதாய அளவில் செய்யப்படும் செயல்

நல்ல செயலாக இருந்தால்

நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்;

சமுதாய அளவில் செய்யப்படும் செயல்

தவறாக இருந்தால்

சமுதாயத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்தும்.

 

சமுதாய அளவில் செய்யப்படும் செயல்

நல்ல  செயலா அல்லது கெட்ட செயலா என்பதை

சமுதாயமே தீர்மானிக்கிறது என்பதே

ஆச்சரியமான விஷயம்.

 

எந்த ஒரு செயல் எடுத்தாலும்

அதில் இரண்டு முனைகள் இருக்கும்

அதாவது

ஒரு நல்ல செயலுக்குள்,  ஒரு கெட்ட செயலும்

ஒரு கெட்ட செயலுக்குள்,  ஒரு நல்ல செயலும்

இருக்கும்

அதாவது

ஒரு செயலில் இரண்டு தன்மைகள் இருக்கும்.

 

முழுவதுமாக நல்ல செயலாகவோ

முழுவதுமாக கெட்ட செயலாகவோ

கொண்ட எந்த செயலும் கிடையாது.

 

ஒரு நல்ல செயலுக்குள் ஒரு கெட்ட செயலோ

அல்லது

ஒரு கெட்ட செயலுக்குள் ஒரு நல்ல செயலோ

இருக்கும்.

 

முழுவதுமாக நல்ல செயலோ

முழுவதுமாக கெட்ட செயலோ

சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட

செயலோ கிடையாது.

 

சமுதாய அளவில் செய்யப்படும் செயலானாலும்

தனி மனித அளவில் செய்யப்படும் செயலானாலும்

அதில்

முழுமையான நல்ல செயலோ

முழுமையான கெட்ட செயலோ

கிடையாது.

 

தனி மனித அளவில் செய்யப்படும் செயலானாலும்

சமுதாய அளவில் செய்யப்படும் செயலானாலும்

அந்த செயல்களை ஆராய்ந்து பார்ப்போமேயாகில்

அந்த செயல்களை உற்று நோக்குவோமேயாகில்

நல்ல செயலுக்குள் ஒரு கெட்ட செயலும்

ஒரு கெட்ட செயலுக்குள் ஒருநல்ல செயலும்

இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

 

எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டாலும்

அதை அளிப்பவர்

அதை பெறுபவர்

ஆகிய இருவரைப் பொறுத்தே

நல்லதும் கெட்டதும் தீர்மானிக்கப்படுகிறது.   

 

நிகழ்வு-1

(அ) தனி மனித அளவில் செய்யப்படும் செயலில்,

அளிப்பவர்

ஒரு கெட்ட செயலை அளித்தால்

அதை பெறுபவர்

அதை நல்ல செயலாக மாற்றி

ஏற்றுக் கொள்ளும் நிலையும் ;

 

(ஆ) தனி மனித அளவில் செய்யப்படும் செயலில்,

அளிப்பவர்

ஒரு நல்ல செயலை அளித்தால்

அதை பெறுபவர்

அதை கெட்ட தன்மையாக

எடுத்துக் கொள்ளும் நிலையும் உண்டு.

 

(அ)தனி மனித அளவில் செய்யப்படும் செயல்,

          அளிப்பவர்-----கெட்டதை நினைக்கிறார்

          பெறுபவர்------நல்லதை நினைக்கிறார்

 

 

(ஆ)தனி மனித அளவில் செய்யப்படும் செயல்,

          அளிப்பவர் ----நல்லதை நினைக்கிறார்

          பெறுபவர்------கெட்டதை நினைக்கிறார்

 

நிகழ்வு-2

(அ)சமுதாய அளவில் செய்யப்படும் செயலில்,

அளிப்பவர்

நல்ல செயலை அளிக்கும் போது

அதை பெறுபவர்

அதை கெட்ட செயலாக எடுத்துக் கொள்ளும்

நிலையும் உண்டு.

 

(ஆ)சமுதாய அளவில் செய்யப்படும் செயலில்,

அளிப்பவர்

கெட்ட செயலை அளிக்கும் போது

அதை பெறுபவர்

நல்ல செயலாக எடுத்துக் கொள்ளும்

நிலையும் உண்டு.

 

(அ) சமுதாய அளவில் செய்யப்படும் செயல்,

          அளிப்பவர் ----நல்லதை நினைக்கிறார்

          பெறுபவர்------கெட்டதை நினைக்கிறார்

 

(ஆ) சமுதாய அளவில் செய்யப்படும் செயல்,

          அளிப்பவர்-----கெட்டதை நினைக்கிறார்

          பெறுபவர்------நல்லதை நினைக்கிறார்

 

தனி மனித அளவில் செய்யப்படும் செயலானாலும்

சமுதாய அளவில் செய்யப்படும் செயலானாலும்

ஒரு செயலுக்குள் நல்ல தன்மையும்

கெட்ட தன்மையும் இருந்தாலும்

அளிப்பவர் , பெறுபவர்

ஆகிய இருவரைப் பொறுத்தே

நல்ல செயலா அல்லது கெட்ட செயலா

என்று தீர்மானிக்கப்படுகிறது .

 

அளிப்பவர் ஒரு நிலையிலும்

பெறுபவர் வேறொரு நிலையில்

செயலின் தன்மையை நல்லதாகவும் கெட்டதாகவும்

எடுத்துக் கொண்டாலும்,

சமுதாயம் அதை இரு வேறு கோணங்களில்

நின்று பார்த்து

தன் நிலையில் உற்று நோக்கி

சரி?  தவறு?  என்று

சமுதாயம் தன் நிலையில் முடிவெடுத்துக் கொள்கிறது.

 

சமுதாயம் உற்று நோக்கும் நிலையும்

அளிப்பவர் ; பெறுபவர் நிலையும்

உற்று நோக்கும் நிலையும்

மாறுபட்டு இருக்கலாம்,

 

சமுதாயம் உற்று நோக்கும் நிலையும்

அளிப்பவர் பெறுபவர் ஆகியோர்

 உற்று நோக்கும் நிலையும்

ஒன்று பட்டு ஒரே மாதிரியாக இருக்கும்

என்று  சொல்லமுடியாது

ஆனால் ,

ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருக்கும்

மாறுபட்டு இருக்கும் என்று சொல்லலாம்.

 

நிகழ்வு - 1 - (அ) - விளக்கம் :

ஒரு தாய் தன் மகளுக்கு

அறிவுரை சொல்வது தனி மனித அளவில் செய்யப்படும் செயல்

 

இங்கு தாய் என்பவர் அளிப்பவர் ;

மகள் என்பவர் பெறுபவர் ;

 

தாய் திருமணமான தன் மகளிடம்

கணவனை உன் கட்டளைப்படி ஏவல் செய்யும் நிலையிலும் ,

உன் கட்டளைக்கு கீழ்படிந்து

நடக்க வேண்டும் என்ற  நிலையிலும் ,

மாமியாரை மகனிடமிருந்து பிரித்து விடு ;

தங்கை மேல் உள்ள பாசத்தை அறுத்து விடு ;

அவருக்கு உள்ள உறவுகளை விலக்கி விட்டு ;

தனிமைப்படுத்தப்படும்

உன் கணவருடன் தனிக் குடித்தனம் வந்துவிடு;

அப்பொழுது தான் வாழ்க்கை இனிக்கும் என்று

அளிப்பவரான தாய்

பெறுபவரான திருமணமான மகளிடம்

தவறான செயலைச் செய்யச் சொல்லி

அறிவுரை வழங்கும் போது

மகள் அதனை ஏற்றுக் கொள்ளாமல்

நான் அனைவரையும் ஏற்றுத் தான் செல்வேன் ;

உறவுகளை அணைத்துத் தான் வாழ்வேன் ;

மகிழ்வுகளை உறவுகளுடன் பகிர்ந்து தான் வாழ்வேன்;

பிரிக்க மாட்டேன் ;

தனித்து செல்ல மாட்டேன் ;

தவறான பாதை போக மாட்டேன் ;

கொடும் வழியில் செல்ல மாட்டேன் ;

தவறுகளை துணிந்து செய்ய மாட்டேன் ;

பாவங்களை செய்து நரகத்தில் உழல மாட்டேன் ;

மற்றவர்களை மனம் வருத்தப்பட வைக்கும்

நிகழ்வுகளை அரங்கேற்ற மாட்டேன் ;

என்று சொல்லும் போது,

அளிப்பவர் கெட்ட செயலை நினைக்கிறார் ;

பெறுபவர் நல்ல செயலை நினைக்கிறார் ;

 

தனி மனித அளவில் செய்யப்படும் செயலில்

அளிப்பவர் தவறான செயலை நினைத்தாலும்

பெறுபவர் நல்ல செயலையே செய்வேன் என்பதன் மூலம்

தனி மனித அளவில் செய்யப்படும் செயலில்

ஒரு தவறான செயலை அளிப்பவர் அளித்தாலும்

பெறுபவர்

நல்ல செயலைத் தான்

நான் செய்வேன் என்று சொல்வதன் மூலம்

அளிப்பவர் கெட்ட செயலைச் செய்யச் சொல்லி

வற்புறுத்தினாலும்

அதைப் பெறுபவர் நல்ல செயலைச் செய்கிறார்.

 

(அ) தனி மனித அளவில் செய்யப்படும் செயல்,

          அளிப்பவர்-----கெட்டதை நினைக்கிறார்

          பெறுபவர்------நல்லதை நினைக்கிறார்

 

நிகழ்வு - 1 - (ஆ) - விளக்கம் :

தந்தை மகனுக்கு சொல்லும் அறிவுரை

தனி மனித அளவில் செய்யப்படும் செயல்

 

தந்தை அளிப்பவர் ;

மகன் பெறுபவர் ;

 

சிகரெட் பிடிப்பது  ;  மது அருந்துவது ;

உடல் நலத்திற்கு கேட்டை விளைவிக்கும்

ஆகவே இந்த தவறான பழக்கத்தை

தொடர்ந்து செய்யாதே

இது உடல் நலத்தை பாதிக்கும்

தவறான வழியிலிருந்து விலகி விடு

தவறான செயலை செய்யாதே

புகை பிடிப்பது  ; மது அருந்துவது

தொடர்ந்து செய்வோமேயாகில்

அந்த பழக்கம் வழக்கமாகி விடும்

ஆகவே அதை விட்டு விடு

என்று தந்தை

மகனுக்கு அறிவுரை சொல்கிறார்.

 

ஒரு செயலில் உள்ள

நல்லதை செய்யச் சொல்கிறார்

அளிப்பவரான தந்தை

மகன் அதை காதில் போட்டுக் கொள்ளாமல்

தனக்கு அது பிடித்திருக்கிறது ;

தனக்கு அது இன்பத்தைத் தருகிறது ;

கவலையைப் போக்கும் ஒரு மருந்தாக இருக்கிறது ;

சோகத்தை நீக்கும் ஒரு வடிகாலாக இருக்கிறது ;

ஆகவே என்னால்

புகை பிடிப்பதையும் ;

மது அருந்துவதையும் ;

விட முடியாது என்று கூறிக் கொண்டே ,

விடாமல் விடாப்பிடியாக

இந்த தவறுகளை

இந்த கெட்ட செயல்களை

தொடர்ந்து செய்தால்

விடாமல் விடாப்பிடியாக

அந்த செயலை தொடர்ந்து செய்தால்

தனி மனித அளவில் செய்யப்படும் செயலில்

அளிப்பவர் இந்த கெட்ட செயலை

செய்யாதே என்று சொன்னாலும்

பெறுபவர்

அந்த செயல்

தனக்கு பிடித்தமானதாக இருப்பதால்

அதனை விட முடியாத பழக்கமாக இருப்பதால்

அந்த பழக்கத்திற்கு அடிமையாக மாறிப் போனதால்

மனம் அந்த தவறான செயலுக்கு அடிமையாகிப் போனதால்

அந்த பழக்கத்தை விட முடியாமல் இருப்பதால்

அது தனக்கு இன்பத்தை தருவதாக எண்ணுவதால்

அது தனக்கு பிடித்திருக்கிறது என்று எண்ணுவதால்

நல்ல செயலாக எடுத்துக் கொள்கிறார்.

 

இது

தனி மனித அளவில் செய்யப்படும் செயலில்

ஒரு நல்ல செயலுக்குள்

ஒரு கெட்ட செயல் இருக்கிறது.

 

தனி மனித அளவில் செய்யப்படும் செயலில்

அளிப்பவர் நல்ல செயலை நினைத்தாலும்

பெறுபவர் கெட்ட செயலையே செய்வேன் என்பதன் மூலம்

தனி மனித அளவில் செய்யப்படும் செயலில்

ஒரு நல்ல செயலை அளிப்பவர் அளித்தாலும்

பெறுபவர் 

கெட்ட செயலைத் தான் நான் செய்வேன்

என்று சொல்வதன் மூலம்

அளிப்பவர் நல்ல செயலைச் செய்யச் சொல்லி

வற்புறுத்தினாலும்

அதைப் பெறுபவர் கெட்ட செயலைச் செய்கிறார்.

 

புகை பிடிப்பதும்

மது அருந்துவதும் ஒரு செயல்

அளிப்பவர் வேண்டாம் என்கிறார் ;

பெறுபவர் வேண்டும் என்கிறார் ;

 

(ஆ)தனி மனித அளவில் செய்யப்படும் செயல்,

          அளிப்பவர் ----நல்லதை நினைக்கிறார்

          பெறுபவர்------கெட்டதை நினைக்கிறார்

 

நிகழ்வு - 2- (அ) விளக்கம்

திரைப்படம் எடுத்து

மக்கள் பார்க்க வேண்டும் என்று

பெரிய திரையிலும்,

சிறிய திரையிலும்,

திரையிடுவது என்பது

சமுதாய அளவில் செய்யப்படும் செயல்

இங்கு        

திரைப்படம் எடுப்பவர் அளிப்பவர் ;

திரைப்படம் பார்ப்பவர் பெறுபவர் ;

 

ஒரு திரைப்படத்தில்

கதாநாயகன் படம் முழுவதும்

உண்மை, நேர்மை என்று பேசிக்கொண்டு

அனைத்தையும் இழந்து

கண்ணீர் விட்டு கஷ்டப்பட்டு

துன்பம் துயரங்களைத் தாங்கி

இறுதியில் வெற்றி பெற்று

ஆனந்தம் அடைகிறான்.

 

வில்லன் படம் முழுவதும்

அநியாயங்கள் , அட்டூழியங்கள், தகாத செயல்கள்

பலவற்றை செய்து விட்டு

இன்பமாகவும், சந்தோஷமாகவும்

வாழ்க்கையை கழித்து விட்டு

படம் முடிவுறும் தருவாயில் இருக்கிறான்.

 

இதன் மூலம்

கெட்டவன் என்ன தான் தவறு செய்தாலும்

செய்த தவறிலிருந்து தப்பிக்க முடியாது

இறுதியில் இறப்பான் என்று

என்ன தான் கஷ்டப்பட்டு இருந்தாலும்

கதாநாயகன் வாழ்ந்தாலும்

இறுதியில் வெல்வான்

உண்மை நியாயம் வெல்லும்

அநியாயம் தோற்கும்

என்ற கருத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்

என்ற நோக்கத்துடன்

திரைப்படம் எடுப்பவர்

திரைப்படம் எடுத்து

சமுதாயத்தில் திரையிடுவார்

ஒருநல்ல கருத்து சமுதாயத்தை சென்று

அடைய வேண்டும் என்று

மனதில் நினைத்துக் கொண்டு.

 

 

பெறுபவரான பார்ப்பவர்கள்

ஏன் நல்லவராக இருந்து

வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டும்

கெட்டவனாக இருந்து

கொஞ்ச நாளாகவாவது

சந்தோஷமாக இருந்து சாவோம்.

 

நல்லவனாக இருந்து கஷ்டப்பட்டு

பல ஆண்டுகள் வாழ்வதை விட

கெட்டவனாக இருந்து சந்தோஷமாக

ஒரு நாள் வாழ்ந்து உயிர் விட்டால் போதும்

என்று

ஒரு நல்ல கருத்தை தவறாக எடுத்துக் கொண்டால்

பார்ப்பவர்கள் தன் நிலைக்கு ஏற்ப

ஒரு நல்ல செயலை கெட்ட செயலாக எடுத்துக் கொண்டால்

சமுதாய அளவில் செய்யப்பட்ட

ஒரு செயலானது நல்ல செயலானது

கெட்ட செயலாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது

உணர்ந்து கொள்ளப்படுகிறது

என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இங்கு

திரைப்படம் எடுப்பவர் அளிப்பவர்

திரைப்படம் பார்ப்பவர் பெறுபவர்

 

அளிப்பவர் நல்லதை சொல்ல நினைத்தாலும்

பெறுபவர் கெட்டதாக எடுத்துக் கொள்கிறார்

 

(அ) சமுதாய அளவில் செய்யப்படும் செயல்,

          அளிப்பவர் ----நல்லதை நினைக்கிறார்

          பெறுபவர்------கெட்டதை நினைக்கிறார்

 

நிகழ்வு - 2- (ஆ) விளக்கம்

ஒடுக்கப்பட்ட தன் இனம்

ஓங்கி வாழ வேண்டும் என்று பாடுபட்ட

சாதித் தலைவர்கள் ;

சமுதாயம் விழிப்புற்று ஓங்கி

உயர்வடைய வேண்டும் என்று

போராடிய அரசியல் தலைவர்கள் ;

மக்களை மகிழ்விப்பதற்காக

சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள்

சிலை எங்கும் இருக்கக் கூடாது

என்று அரசாங்கம் நினைத்து

தெருவில் மக்களுக்கு ஊறு விளைவிக்கும்

வகையில் இருக்கும் சிலைகளை

அகற்றினால் அது கெட்ட செயல்

அதாவது

சமுதாய அளவில் செய்யப்படும்

ஒரு தவறான செயல்

 

சிலைகளை எடுப்பதன் மூலம்

சாதிக்குள் சண்டை ஏற்படாமலும்

அரசியல்வாதிகளுக்குள் மோதல் ஏற்படாமலும்

நடிகர்களுக்கும் அடுத்த 1-ம் இடம்

என்று போட்டி ஏற்படாமலும்

சண்டை குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க

சிலைகள் எடுக்கப்பட்டது

என்று உணர்வார்களேயானால்

சமுதாய அளவில் செய்யப்படும்

ஒரு கெட்ட செயலை

அரசாங்கம் செய்யும் போது

மக்கள் பெறுபவர்

அவர்கள்  அதை நல்லதாக நினைக்கும் போது

அளிப்பவர் தவறாக அளிப்பதாக நினைத்தாலும் ;

பெறுபவர் அதை சரி என்று ஏற்றுக்கொள்கிறார் ;

 

இது சமுதாய அளவில் செய்யப்படும்

ஒரு கெட்ட செயலுக்குள்

ஒரு நல்ல செயல் மறைந்து இருக்கிறது.

 

(ஆ) சமுதாய அளவில் செய்யப்படும் செயல்,

          அளிப்பவர்-----கெட்டதை நினைக்கிறார்

          பெறுபவர்------நல்லதை நினைக்கிறார்

 

தனி மனித அளவில் செய்யப்படும் செயலானாலும்

சமுதாய அளவில் செய்யப்படும் செயலானாலும்

ஒரு நல்ல செயலுக்குள் ஒரு கெட்ட செயலும்

ஒரு கெட்ட செயலுக்குள் ஒரு நல்ல செயலும்

அளிப்பவர் பெறுபவரைப்

பொறுத்து மறைந்திருக்கும்.

 

தனி மனித செயலானாலும்

சமுதாய அளவில் செய்யப்படும் செயலானாலும்

அளிப்பவராக இருந்தாலும்

அல்லது

பெறுபவராக இருந்தாலும்

தவறானவர்கள் எப்போதும்

தவறான செயல்களைத் தான் செய்வார்கள்.

 

தனி மனித அளவில் செய்யப்படும் தவறான செயல்

சமுதாய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்;

தனி மனித அளவில் செய்யப்படும் நல்ல செயல்

சமுதாய அளவில் நல்லதை உண்டாகும்;

 

தனி மனிதன் திருந்தினால் சமுதாயம் திருந்தும்

சமுதாயம் திருந்த வேண்டுமெனில்

தனி மனிதன் திருந்த வேண்டும்.

 

இயேசு இரவும், பகலும்

தொடர்ந்தாற்போல் இடைவெளி இல்லாமல்

40 நாள் உபவாசமிருந்த போது

அவருக்கு பசி உண்டாயிற்று,

 

உபவாசம் என்பதை

இறைவனை அடைவதற்கான

ஒரு நுழைவு வாயில்

என்று சொல்லலாம்.

 

இரண்டு தனிப்பட்டவைகள்

இரண்டு தனித்த நிலையிலிருப்பவைகள்

ஒன்று சேரும் போது

ஒன்று இயங்க வேண்டும்

ஒன்று ஓய்வு பெற வேண்டும்

இரண்டுமே இயங்கும் போதோ அல்லது

இரண்டுமே இயக்கமற்று இருக்கும்போதோ

அதை உணர முடியாது.

 

எந்த செயல் நடைபெறுகிறது என்பதை

நாம் உணர வேண்டுமானால்

ஒன்று இயங்கும் போது

ஒன்று ஓய்வு பெற வேண்டும்.

 

உடலுக்குள் ஆத்துமா இருக்கும்போது

ஆத்துமாவின் அசைவை

ஆத்துமாவின் வளர்ச்சியை

ஆத்துமாவின் செயல்பாடுகளை

நம்மால் உணர முடிவதில்லை

ஏனென்றால்,

உடலும் இயங்குகிறது ;

ஆத்துமாவும் இயங்குகிறது ;

உடலின் இயக்கத்தை மட்டுமே

அன்றாடம் நாம் உணர்வதால்

ஆத்துமாவின் இயக்கத்தை

நம்மால் உணர முடிவதில்லை.

 

உடல் இயக்கமற்ற நிலைக்கு போகும்போது

உடல் செயல் செய்யாமல்

அமைதியான நிலைக்கு செல்லும் போது

நம்மால் ஆத்துமாவின்

இயக்கத்தை உணர முடியும்.

அதன் சக்தியை நாம் அறிய முடியும்.

 

உடலும் ஆத்துமாவும் ஒன்றாக இயங்கும் போதும்

உடலும் ஆத்துமாவும் ஒன்றாக இயக்கமற்று இருக்கும் போதும்

நம்மால்

ஆத்துமாவை உணர முடியவில்லை.

 

இயக்கமுள்ள நிலையில்

உடலின் நிலையை அறிய முடியும் ;

ஆத்துமாவின் இயக்கத்தை அறிய முடியாது ;

இயக்கமற்ற நிலையில்

உடலின் இயக்கத்தை பற்றியும் ;

ஆத்துமாவின் இயக்கத்தைப் பற்றியும் ;

நம்மால் அறிய முடியாது.

 

உயிருடன் வாழும்போது

உடலைப் பயன்படுத்தும் விதம்,

உடலின் தன்மைகள் ,

ஆகியவை ஓரளவு தெரிந்திருப்பதால்

உடலின் இயக்கம்

ஓரளவு தெரிகிறது

ஆத்துமாவின் இயக்கம் தெரிவதில்லை.

 

ஆத்துமாவின் இயக்கத்தை அறிய

உடல் இயக்கத்தை நிறுத்த வேண்டும்

உடலை களைப்படையச் செய்ய வேண்டும்

களைப்படைந்த உடலால் தான் இயங்க முடியாது

உடலால் இயங்க முடியாத நிலை வரும் போது தான்

ஆத்துமாவின் இயக்கத்தை நாம் அறிய முடியும்.

 

உடலைக் களைப்படையச் செய்ய வேண்டுமென்றால்

உடலுக்கு சாப்பாடு போடக்கூடாது

உடலுக்கு சாப்பாடு போடாமல் இருக்கும் போது

அதாவது உபவாசம் இருக்கும் போது

உடல் களைப்படைகிறது

அமைதியான நிலையை நோக்கி நகர்கிறது

இப்போது ஆத்துமாவின் இயக்கம் நமக்கு தெரிகிறது

உடலும், ஆத்துமாவும் ஒன்றாக இருக்கும்போது

ஆத்துமாவின் இயக்கம் தெரிவதில்லை

உடல் இயக்கமற்ற நிலையை நோக்கி

நகரும்போது

ஆத்துமாவின் இயக்கம் புரிகிறது.

 

உபவாசம் என்பது

ஆத்துமாவின் இயக்கத்தை மட்டும் உணர்வதல்ல

ஆத்துமாவின் மூலம்

ஆண்டவரின் அருளைப் பெறுவதும் ஆகும்.

 

எனவே

உபவாசம் என்பது

ஆண்டவரின் அருளைப் பெறுவதற்கான

ஒரு நுழைவு வாயில் என்று சொல்லலாம்.

 

இத்தகைய ஒரு உபவாசத்தைத் தான்

இயேசு 40 நாட்கள் அல்லும், பகலும் இருந்ததால்

இயேசுவுக்கு பசி உண்டாயிற்று.

 

அவரை சோதிக்க வேண்டி சோதனைக்காரன் வந்தான்

நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால்

இந்தக் கல்லுகளை அப்பமாக்கி

அப்பளங்களாக மாறும்படி செய்துவிட்டு

உம் பசி ஆற அதனைச் சாப்பிடும் என்றான்.
 


தவறானவர்கள் எண்ணமும் செயலும்

தனிப்பட்ட முறையில் தவறானதாக இருக்கும்

அதனால் தான் சாத்தான்

தவறான செயல் செய்ய தூண்டுகிறான்;

உடலை வளர்க்க உணவிட சொல்கிறான்;

 

ஆத்துமாவை உணர்ந்து

ஆண்டவரின் அருளைப் பெற்றவர்களுக்கு

உடலுக்கு உணவிடத் தேவையில்லை

ஆத்துமாவை அறிந்து

ஆத்துமாவுக்கு உணவளிக்காதவர்களே

உடலுக்கு உணவளிக்க வேண்டும்.

 

சாதாரண மனிதர்கள்

உடலுக்கு உணவளிப்பார்கள்

ஆத்துமாவை அறிந்து

ஆண்டவரின் அருளைப் பெற்றவர்கள்

உடலுக்கு உணவளிக்க வேண்டிய அவசியமில்லை.

 

உடலுக்கு உணவளிப்பவர்கள்

ஆண்டவரின் அருளைப் பெறாதவர்களாக இருப்பார்கள்.

 

ஆத்துமாவுக்கு அளிக்கப்படும் உணவு

உடலைக் காப்பாற்றும்

ஆனால்

உடலுக்கு அளிக்கப்படும் உணவு

ஆத்துமாவைக் காப்பாற்றாது.

 

உடலைக் காப்பாற்ற

நாம் உடலுக்கு உணவு அளிக்க வேண்டும்

ஆத்துமாவைக் காப்பாற்ற ஆண்டவர்

உணவளிப்பார்.

 

ஆண்டவர் அருளைப் பெறும் போது தான்

ஆண்டவர் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்

ஆண்டவர் ஆருளைப் பெறாத போது

ஆண்டவர் எப்படி ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.

 

உடலை உணவு கொடுத்து

காப்பாற்றத் தெரிந்தவர்களால்

ஆத்துமாவைக் காப்பாற்ற

ஆண்டவர் அருள் பெற வேண்டும்

என்பதை அறியாமல் இருக்கின்றனர்.

 

அதனால் தான் பலர் ஆத்துமாவை அறியாமல்

ஆண்டவரின் அருளைப் பெற முடியாமல்

நரகத்தில் உழல்கின்றனர்.

 

ஆண்டவர் இடும் கட்டளை ஏற்று அதன் வழி நின்று

தவறுகளைச் செய்யாமல்

உண்மை வழி செல்பவர்களுக்கு

அவருடைய வார்த்தைகளை பின்பற்றி

செயல்களை செய்பவர்களுக்கு

ஆண்டவருக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு

ஆண்டவரிடம் விசுவாசம் கொண்டவர்களுக்கு

உடலை வளர்க்க வேண்டி உணவு

இடத் தேவையில்லை.

 

ஆண்டவரின் அருளால்

ஆத்துமா வளர்ச்சி அடைந்தவர்களுக்கு

உடல் வளர்க்க உணவு இடத் தேவையில்லை.

 

அதனால் தான் இயேசு

சொல்கிறார்

 

எனக்கு உடலை வளர்க்க அப்பம் தேவையில்லை

ஏனென்றால்

நான் ஆண்டவரின்

அருளைப் பெற்றதால்

ஆத்துமா வளர்ச்சி

அடைந்திருக்கிறது.

 

ஆத்துமா வளர்ச்சி அடைந்தவர்களுக்கு

உடலை வளர்க்க

உணவு படைக்கத் தேவையில்லை

என்ற காரணத்தினால் தான்

இயேசு

எனக்கு உடலை வளர்க்க உணவு தேவையில்லை

ஆண்டவரின் அருளைப் பெற்றதால்

ஆண்டவரின் அருளை உணர்ந்ததால்

என் ஆத்துமா வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றார்.

 

பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்கு கொண்டு போய்

தேவாலயத்தின் உப்பரிகையின் மேல் நிறுத்தி

நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால்

தாழக் குதியும்

ஏனென்றால்

தேவன் தன்னுடைய தூதர்களுக்கு கட்டளையிட்டு

உம்முடைய பாதம் கல்லில் இடறல் அடையாதபடிக்கு

அவர்கள் தங்கள் கைகளில்

உம்மைக் கொண்டு ஏந்திப் போவார்கள் என்று

எழுதியிருக்கிறதே என்று சொன்னான்.

 

மனிதன் கூப்பிடும் போது ஆண்டவர் எப்போது வருவார் என்றால்

மனிதனால் ஒரு செயலைச் செய்ய முடியாத போது

ஆண்டவரால் மட்டுமே

அந்த செயலைச் செய்ய முடியும்

என்ற நிலை வரும் போது மட்டுமே

கடவுள் வந்து நம்மைக் காப்பார்.

 

ஆண்டவரை எப்போதும் கூப்பிடக்கூடாது

எப்போதும் நினைக்க வேண்டும்;

எப்போதும் கூப்பிடக் கூடாது;

 

ஆண்டவரை நம்புகிறவர்களுக்கு மனிதன் கஷ்டத்தில்

இருக்கும் போது ஆண்டவரைக் கூப்பிட்டாலும் வருவார்

கூப்பிடாவிட்டாலும் வருவார்

 

தேவனுடைய குமாரன் கஷ்டத்தில் இருக்கும்போது

கூப்பிட்டால் எப்படி பிதா வராமல் இருப்பார்

         

இயேசு கஷ்டப்படும்போது

ஆண்டவரைக் கூப்பிட்டாலும்

ஆண்டவரைக் கூப்பிடாவிட்டாலும் வருவார்

என்ற உண்மை சாத்தானுக்குத் தெரியும்

 

அதனால் தான்

இயேசு சொல்கிறார்

பரீட்சை செய்யாதே

பரிட்சை என்பது

ஒருவர் ஒன்றைப் பற்றி

எவ்வளவு விவரங்கள்  அறிந்திருக்கிறார் என்பதைத்

தெரிந்துகொள்வதற்காக வைக்கப்படுவது பரீட்சை.

 

இது அறிவைக் கொண்டும் நடத்தப்படும்

உடலைக் கொண்டும் நடத்தப்படும்

 

ஒருவர் ஒன்றைப்பற்றி

எவ்வளவு விவரங்கள்  தெரிந்திருக்கிறார்

என்பதை அறிவதற்காக வைக்கப்பட்ட பரீட்சை

இப்போது

மதிப்பெண் அடிப்படையில் மாறிவிட்டதால்

பரீட்சை தன் உண்மைத் தன்மையை இழந்து விட்டது.

 

தவறானவர்களால் நடத்தப்படும் பரீட்சை எப்போதும்

எப்போதும் தவறானதாகத் தான் இருக்கும்.

 

ஒன்றை அறிவதற்காக வைக்கப்பட்ட பரீட்சையாக இருக்காது

ஒருவரை இழிவு படுத்துவதற்காக

வைக்கப்பட்ட பரீட்சையாகத் தான் இருக்கும்.

 

அதனால் தான் இயேசு,

தேவகுமாரனாகிய நான் துன்பப்படும்போது

தேவன் வந்து உதவுவார் என்று உனக்கு தெரிந்திருந்தும்

தேவனை இழிவு படுத்தும் நோக்கத்துடன்

நீ  கேட்ட கேள்வி தவறானது

அவரை பரீட்சித்துப் பார்க்காதே.

 

மனிதன் கஷ்டப்படும் போது

ஆண்டவரைக் கூப்பிட்டால் அவர் வருவாரா என்று

சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது

ஆண்டவரை விசுவாசிப்பவர்கள்

ஆண்டவர் மேல் நம்பிக்கை கொண்டவர்கள்

ஆண்டவரை அழைக்கும் போது வருவார்.

 

அப்படி இருக்கும் போது தேவகுமாரன் கஷ்டப்படும்போது

கூப்பிட்டால் தேவன் எப்படி வராமல் இருப்பார்

அவரை பரீட்சை செய்ய நினைக்காதே என்றார்.

 

மறுபடியும் பிசாசு அவரை

உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய்

உலகத்திலுள்ள சகல ராஜ்யங்களையும்

அவைகளின் மகிமைகளையும் அவருக்குக் காண்பித்து

நீர் என் கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து

என்னைப் பணிந்து கொண்டால்

இவைகளையெல்லாம் நான் உனக்குத் தருவேன்

என்று சொன்னான்.

 

வாழ்க்கையை இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்

ஒன்று            :  இல் வாழ்க்கை

மற்றொன்று  :  அருள் வாழ்க்கை

 

சிலருக்கு இல் வாழ்க்கை கிடைக்கும்

சிலருக்கு அருள் வாழ்க்கை கிடைக்கும்

 

இல் வாழ்க்கையும்

அருள் வாழ்க்கையும்

ஒன்றாகச் சேர்ந்து

ஒரு சிலருக்கே கிடைக்கும்.

 

அந்த ஒரு சிலரும்

ஆண்டவரின் அருளைப் பெற்றவர்களாக

மட்டுமே இருக்க முடியும்.

 

ஆண்டவரின் அருளைப் பெற்றவர்களால் மட்டுமே

இல் வாழ்க்கை ; அருள் வாழ்க்கை

சேர்ந்து நடத்த முடியும் ; வாழ முடியும்.

 

ஆண்டவரின் அருளைப் பெற முடியாதவர்களுக்கு

இல் வாழ்க்கையையும்

அருள் வாழ்க்கையையும்

ஒன்றாக இணைத்து

வாழ முடியாது.

 

இல்வாழ்க்கை என்பது

புறத் தேவைகள்

நிறைவடையும் போது கிடைப்பது ;

 

அருள் வாழ்க்கை என்பது

அகம் விழித்துக் கொள்ளும் போது கிடைப்பது ;

 

பணம், பதவி ,அதிகாரம், புகழ்

இவை சம்பந்தப்பட்டது

இல் வாழ்க்கை;

 

ஆண்டவர் சம்பந்தப்பட்டது

அருள் வாழ்க்கை;

 

இல் வாழ்க்கையில்

தேவைக்கு அதிகமாக துய்ப்பவனால்

தேவைக்கு அதிகமாக சேமித்து வைப்பவனால்

அருள் வாழ்க்கையில் நுழையமுடியாது.

 

இல் வாழ்க்கைக்கு தேவையான

தேவையை

தேவையான அளவு மட்டுமே

உபயோகிப்பவர்களுக்கே அருள் வாழ்க்கை கிட்டும்.

 

தேவைக்கு உட்பட்டு ஒன்றை கையாள நினைக்கும் போது

அதற்குப் பெயர் ஆசை ;

தேவைக்கு மேல் ஒன்றை கையாள நினைக்கும் போது

அதற்குப் பெயர் பேராசை ;

ஆசைக்கும் பேராசைக்கும் நூலிழை தான் வேறுபாடு உண்டு .

 

தன்னுடைய சொத்து தனக்கு

கிடைத்தால் போதும் என்று நினைப்பது ஆசை ;

 

மற்றவருடைய சொத்தும் தனக்கு கிடைக்க வேண்டும்

என்று நினைத்தால் அதற்குப் பெயர் பேராசை ;

 

ஆசைப் படுபவனுக்கு

இல் வாழ்க்கையுடன் , அருள் வாழ்க்கையும் கிடைக்கிறது .

 

பேராசை படுபவனுக்கு

இல் வாழ்க்கை மட்டுமே கிடைக்கிறது ;

அருள் வாழ்க்கை கிடைப்பதில்லை ;

 

ஒருவருக்கு பேராசை வந்து விட்டால்

அவரால் ஆண்டரின் அருளைப் பெற முடியாது

இல் வாழ்க்கையுடன், அருள் வாழ்க்கையையும்

சேர்த்து வாழ முடியாது.

 

அதனால் தான் சாத்தான்

பேராசைத் தீயை மூட்ட

சகல ராஜ்யங்களையும்

அதன் மகிமைகளையும்

நீர் என் கால்களில் விழுந்து

சாஷ்டாங்காமாய் பணிந்து கொண்டால்

இவைகளை உமக்குத் தருவேன் என்கிறான்.

 

அதனால் தான் இயேசு

அப்பாலே போ சாத்தானே என்கிறார்.

 

மேலும்,

ஆண்டவரை உண்மையாக விசுவாசித்து

ஆண்டவரின் மேல் நம்பிக்கை கொண்டு

ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே

ஆராதனை செய்வாயாக

ஆண்டவரை உண்மையாக

அறிந்து செயல்படுவாயாக

என்று எழுதியிருக்கிறதே என்றார்.

 

பேராசை பிடித்தாலே

ஒருவனை பிசாசு பிடித்து விடும்.

 

ஒருவன் பிசாசு பிடிக்காமல்

இருக்க வேண்டுமானால்

பேராசை அற்று இருக்க வேண்டும்.

 

பேராசை அற்றவனால் மட்டுமே

இல் வாழ்க்கையுடன் அருள் வாழ்க்கையையும்

இணைத்து வாழ முடியும்.

 

பேராசை அற்று

அன்பு கருணை நிரம்பியவர்களால் மட்டுமே

அருள் வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும்.

இத்தகைய நிலையில் இயேசு

இருந்த காரணத்தினால்

பிசாசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான்.

 

கெட்டது நம்மை விட்டு விலகிப் போனால்

நல்லது கிடைக்கும்.

 

ஒன்று போனால் ஒன்று வரும்

ஒன்று இருக்கும் போது மற்றொன்று வராது

ஒன்று வந்தால் ஒன்று போகும்.

 

ஒரு பக்கெட்டில் தண்ணீர் இருக்கிறது

தண்ணீர் ஒன்று

தண்ணீரை கொட்டி விட்டால்

வாளியில் காற்று நிரம்புகிறது

தண்ணீர் ஒன்று காற்று மற்றொன்று

தண்ணீர் போனது

காற்று வந்தது

 

பிசாசு இயேசுவை விட்டு விலகினான்

தேவதூதர்கள் வந்து அவருக்கு

பணி விடை செய்தார்கள்.

கெட்டது போனது நல்லது வந்தது

 

அனைவரும் சமம்

அனைத்து உயிர்களும் சமம்

என்று யார் ஒருவர்

அறிந்து கொள்கிறாரோ அல்லது

உணர்ந்து கொள்கிறாரோ

அவருடைய மனதில் தான்

அன்பும் கருணையும்

வழிந்தோடும்.     

 

அன்பும், கருணையும்

யார் மனதில் இருக்கிறதோ

அவர் தான்

உலகத்தில் உள்ள அனைத்து

உயிர்களும் சமம்

என்ற உணர்வு பெற்று

எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல்

வாழ்வதன் மூலம்

வாழ்க்கையில்

தீமை என்ற ஒன்று விலகி

நன்மை என்ற மற்றொன்றைப் பெற்று

வாழ்க்கையை

இன்பமுடன் வாழ முடியும்

என்கிறது பைபிள்.

 

 

ஒவையார்

“””””ஈசனெனக் கருதி யெல்லா வுயிர்களையும்

     நேசத்தால்நீ நினைந்து கொள்””””

------ஔவையார்-----ஔவைக்குறள்

 

மனித இனம் அனைவரும் சமம்

என்று கூறிக்கொண்டே

தங்களுக்குள்ளே பிரிவை ஏற்படுத்தி வைத்திருக்கிறது ;

ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி வைத்திருக்கிறது ;

வேறுபாடுகளை நிலை நிறுத்தி வைத்திருக்கிறது ;

சமுதாயம் இரண்டு விதமான வேறுபாடுகளை

தன்னுள் கொண்டிருக்கிறது

 

ஒன்று       :  செயற்கையாக உருவாக்கப்பட்டதில் வேறுபாடு

மற்றொன்று : இயற்கையாக உருவானதில் வேறுபாடு

 

செயற்கையாக உருவாக்கப்பட்டதில் வேறுபாடு என்பது

இரக்கமற்ற செயல்

 

இயற்கையாக உருவானதில் வேறுபாடு என்பது

மனிதத் தன்மையற்ற செயல்

 

செயற்கையாக உருவாக்கப்பட்டதில் வேறுபாடு என்பது

மனிதனால் உருவாக்கப்பட்டதில் வேறுபாடு

கடைபிடிப்பது ;

 

இயற்கையாக உருவானதில் வேறுபாடு என்பது

இறைவனால் படைக்கப் பட்டதில் மனிதன்

வேறுபாடு கடைபிடிப்பது ;

 

செயற்கையாக உருவாக்கப்பட்டாலும்

இயற்கையாக படைக்கப்பட்டாலும்

அதில் வேறுபாடு

கடைபிடிப்பது என்பது

தவறான செயலாகும் என்பதை உணர்ந்திருந்தும்

மனித இனம் வேறுபாட்டை கடை பிடித்து வருகிறது.

 

வேறுபாட்டினால் ஒருவர் பாதிக்கப்படாத வரை

எவரும்

மனித இனத்தில் உள்ள வேறுபாடு

நிலைகளைக் கண்டிப்பதுமில்லை

கண்டு கொள்வதுமில்லை.

 

உயர் எண்ணம் கொண்டோரும்

உண்மையாகவே நல்ல மன நிலையைக் கொண்டோரும்

சமுதாய அவல நிலையைக் கண்டு மனம் வெறுத்தோறும்

வேறுபாடுகளால் ஏற்படும்

பிரித்தாளும் சூழ்ச்சியினையும்

ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி

சுகம் காணும் போக்கினையும் ,

பிரிவினைகளை ஏற்படுத்தி

அடிமை நிலையினை உருவாக்கி

வைத்திருக்கும் நிலையினையும் ,

உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று ஏற்படுத்தி வைத்திருக்கும்

மறைமுக கொடூரத் தன்மையினையும் ,

கண்டு மனம் வெதும்பி

வேறுபாட்டை சுட்டி காட்டி கேள்வி கணை தொடுத்தால் ,

வேறுபாட்டை நீக்க வேண்டும்

என்று எதிர்த்து போராடினால் ,

அடிமை நிலையை உருவாக்கி

வைத்திருக்கும் வேறுபாட்டை

எதிர்த்துக் குரல் எழுப்பினால் ,

 

சுகத்தில் திளைக்கும் ஒரு கூட்டம்

தங்கள் ஆதிக்க நிலை

எங்கே அகன்று விடுமோ ?

தங்கள் சுகபோகநிலை

எங்கே சரிந்து விடுமோ ?

தங்கள் இன்பத்தின் எழில் நிலை

எங்கே மடிந்து விடுமோ ?

தங்கள் வாழ்க்கையின் வசந்தங்கள்

எங்கே கழன்று விடுமோ ?

தங்கள் மகிழ்ச்சியின் சாளரங்கள்

எங்கே மூடி விடுமோ ?

தங்கள் உயர்வுகளின் அரியணைகள்

எங்கே பறிக்கப்பட்டு விடுமோ?

தங்கள் ஏற்றத்தின் படிக்கட்டுக்கள்

எங்கே அடைக்கப்பட்டு விடுமோ?

என்ற அச்சத்தில் அவர்களை எதிர்க்கிறது.

 

போராடினால் போராட்டத்தை

களங்கப்படுத்துகிறது ;

பேசினால் எள்ளி நகையாடுகிறது ;

செயலில் இறங்கினால்

சேற்றை வாரி இறைக்கிறது ;

அத்தனையும் கடந்து உண்மைக்காகவும்

அடிமைகளின் உயர்வுக்காகவும் போராடினால்

மனித இனம் உண்மையானவர்களை அழித்து விடுகிறது ;

விஷம் வைத்து கொன்று விடுகிறது ;

 

இத்தகைய நிலையில் இருந்தால்

யார் மனித இனத்தில் மறைமுகமாக

அடிமை நிலையை உருவாக்கி

வேறுபாட்டை விதைத்து வைத்திருக்கும் இழிநிலையை

யார் எதிர்த்து போராடுவது ?

எதிர்த்து குரல் கொடுப்பது ?

 

உண்மையாக போராடுபவர்களை

இச்சமுதாயம் அழித்து விட்டதாலும் ;

உண்மையானவர்கள்

அழிந்து கொண்டே இருப்பதாலும் ;

உண்மையாக போராடியவர்களை

இச்சமுதாயம் அழித்ததாலும் ;

உண்மையாக போராடிக் கொண்டிருப்பவர்களை

இச்சமுதாயம் அழித்துக் கொண்டே இருப்பதாலும் ;

போலியானவர்கள் நிறைய எண்ணிக்கையில்

உருவாகி விட்டனர்.

இச்சமுதாயத்தில்

நல்லவனாக இருந்தாலும் வாழ முடியாது 

கெட்டவனாக இருந்தாலும் வாழ முடியாது

கெட்டவனாக இருந்து கொண்டே

நல்லவனாக நடிப்பவனால்

மட்டுமே வாழ முடியும் என்பதை உணர்ந்தவர்கள்

நிறைய எண்ணிக்கையில்

இத்தகைய தன்மைகள் கொண்டவர்கள்

நிறைய எண்ணிக்கையில் உருவாகி

கெட்டவனாக இருந்து கொண்டு

நல்லவர்கள் போல் நடிப்பவர்கள்

நிறைய எண்ணிக்கையில் உருவாகி 

இச்சமுதாயத்தில் வேற்றுமை நிலை

அழியாமல் பாதுகாத்து

வேறுபாடு நிலையை அழியாமல் பாதுகாத்து

வருகின்றனர் .

 

உயர் எண்ணம் கொண்டோர்

நல்மனம் பெற்றோர்

சமுத்துவ சமுதாயத்தில் நிலவ வேண்டும்

என்ற உண்மையான நோக்கம் கொண்டோர்

 

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் மனதில்

ஏற்றத் தாழ்வு நிலையினால் பாதிக்கப்படக்கூடாது

என்பதற்காகவும் ,

அனைவருக்கும் சமத்துவ சமதர்மக் கல்வி

கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ,

குழந்தைகளில் கல்வி ஏற்றத் தாழ்வு வேற்றுமையினால்

பாதிப்படையக் கூடாது என்பதற்காகவும் ,

அனைவருக்கும் ஒரே பள்ளிச் சீருடை என்ற

ஒன்றை கொண்டு வந்தனர் பெருந்தலைவர்கள்.

 

சிறிய வயதிலேயே பிஞ்சு மனதில்

ஏற்றத்தாழ்வு விதைக்கப்பட்டு விட்டால்

அது எதிர்காலத்தில் சமுதாயத்தையே

சீரழித்து விடும் என்ற நோக்கம் கொண்டதாலேயே

பள்ளியில் படிப்பவர் அனைவருக்கும்

ஒரே சீருடை என்று கொண்டு வந்தனர்

கர்ம வீரர்கள் ;

தன்னலத்தை விட நாட்டு நலனே முக்கியம்

என்ற நோக்கம் கொண்ட பெருந்தலைவர்கள் ;

கல்விக் கண் திறக்க பாடுபட்டவர்கள் ;

என்று உண்மையாக

சமுதாயத்திற்காக உழைத்தவர்கள்

இருந்தனர் அன்று.

 

ஆனால் இன்றோ ,

உயர்ந்தவர்கள் படிப்பதற்கான பள்ளியில்

உயர்ந்த விலையில் சீருடை

தாழ்ந்தவர்கள் படிப்பதற்கான பள்ளியில்

தாழ்ந்த விலையில் சீருடை

என்ற வேறுபாட்டை ஏற்படுத்தி விட்டனர்.

 

பணக்கார பள்ளி ; ஏழைபள்ளி

உயர்தோர்கள் படிக்கும் பள்ளி ;

தாழ்ந்தோர்கள் படிக்கும் பள்ளி ;

பணக்காரர்களுடைய பிள்ளைகள் படிக்கும் பள்ளி ;

ஏழைகளுடைய பிள்ளைகள் படிக்கும் பள்ளி ;

வசதி படைத்தவர்களுடைய பிள்ளைகள் படிக்கும் பள்ளி;

வசதி இல்லாதவர்களுடைய  பிள்ளைகள் படிக்கும் பள்ளி;

என்ற வேறுபட்ட நிலையை

மறைமுக அடிமை நிலையை

வேறுபாட்டு நிலையை

சமுதாயத்தில் ஏற்படுத்தி விட்டனர்.

 

மத ரீதியான பள்ளிகள்

சாதி ரீதியான பள்ளிகள்

மொழி ரீதியான பள்ளிகள்

என பல்வேறு நிலைகளில்

பள்ளிகள் தோன்றி

இன்று மறைமுகமாக

இளவயதிலேயே குழந்தைகளுடைய பிஞ்சு மனதில்

நஞ்சை கலந்து

சமுதாயத்தில் மறைமுக

உயர்வு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி

மனித இனத்தை வேறுபாடுத்தி வைத்து விட்டனர்.

 

பள்ளிச் சீருடை என்பது

எதற்காக கொண்டு வரப்பட்டதோ

அதன் உண்மைத் தன்மை மாறி விட்டது.

 

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட

பள்ளிச்சீருடை அதன் உண்மைத் தன்மை இழந்து

வேறுபாட்டின் அடையாளமாக மாறி விட்டது.

இதுதான் இது தான் செயற்கையாக

உருவாக்கப்பட்டதில் வேறுபாடு காண்பது.

 

மனித இனம் என்றாலே

ஆண் பெண் என்று தான் சொல்கிறோம்

ஏன் நாம் ஆண், பெண், திருநங்கை

என்று சொல்வதில்லை ;

ஏன் என்றால் திருநங்கைகளை நாம்

மனித இனமாக ஏற்றுக் கொள்ளவில்லை

என்று அர்த்தம்.

 

மனித இனமாக அவர்களை

மதித்து இருந்திருந்தால்

திருநங்கைகளை

நாம் மனித இனத்தில்

சேர்த்து இருப்போம் ;

அவர்களுக்குரிய அங்கீகாரத்தை

அளித்து இருப்போம் ;

அவர்களுக்குரிய அங்கீகாரத்தை

அளிக்காததற்கு காரணம்

நாம் அவர்களை

மனித இனத்தில் சேர்த்துக் கொள்ளாமல்

வேறுபாடு காட்டுவது தான்.

 

காலம் காலமாக ஆண், பெண்

என்ற இரு பாலினத்தை மட்டுமே

மனித இனமாக ஏற்றுக் கொண்டு

திருநங்கைகளை அடிமையாக வைத்திருக்கிறோம் ;

அவர்களை அடக்கி வைத்திருக்கிறோம் ;

அவர்களுக்கு வாழ

வழி வகை செய்யாமல் தவிக்க வைத்திருக்கிறோம் ;

அவர்களுக்குரிய இன்பங்களை அழித்திருக்கிறோம் ;

சந்தோஷங்களை களவாடி இருக்கிறோம் ;

துன்பங்களை இலவசமாக அளித்திருக்கிறோம் ;

கவலைகளை தாராளமாக அள்ளி வழங்கியிருக்கிறோம் ;

கண்ணீரை காணிக்கை ஆக்கியிருக்கிறோம் ;

அவர்கள் வாழ்க்கையை பறித்திருக்கிறோம் ;

வாழ விடாமல் தவிக்க வைத்திருக்கிறோம் ;

சமுதாயத்தில் ,

அவர்களுக்கென்று உள்ள அங்கீகாரத்தை

தராமல் நட்டாற்றில் விட்டிருக்கிறோம்.

தங்களுக்கென்று உள்ள உரிமைகளை

அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்திருக்கிறோம் ;

அன்றாடக் கடமைகளை

அவர்கள் முடிப்பதற்கு தேவையானவற்றை தராமல்

அவர்களை அழ வைத்து ரசித்திருக்கிறோம் ;

இழிவான சொற்களை கூறி அவர்களை

மனம் வேதனைப் பட வைத்திருக்கிறோம் ;

தகாத வார்த்தைகளால் அவர்களை

அர்ச்சனை  செய்திருக்கிறோம் ;

இழிவான செயல்களால்

அவர்களை காயப்படுத்தியிருக்கிறோம் ;

சமுதாயத்தில் அவர்களும்

மனிதர்களாக வாழ

வழி வகை செய்யாமல் ஏமாற்றியிருக்கிறோம்;

மனிதர்களாக அவர்களை

மதிக்காமல் அவமானப் படுத்தியிருக்கிறோம் ;

நாயை விட கேவலமாக

அவர்களை இழிவு படுத்தியிருக்கிறோம்;

இதற்கெல்லாம் வருத்தப்பட வேண்டிய மனித இனம்

அவமானப்பட வேண்டிய மனித இனம்

வெட்கப்பட வேண்டிய மனித இனம்

வேதனைப்பட வேண்டிய மனித இனம்

வெட்கப்பட்டதாக தெரியவில்லை ;

வேதனைப்பட்டதாக தெரியவில்லை ;

அவமானப்பட்டதாக தெரியவில்லை ;

வருத்தப்பட்டதாக தெரியவில்லை ;

எந்தத் தவறும் நடந்து விடாத மாதிரி

வேறுபாட்டை

மனித இனத்தில் உருவாக்கி வைத்து விட்டு

அடிமைத் தனத்தை சமுதாயத்தில் விதைத்து விட்டு

மனித இனம் என்றால்

ஆண், பெண் மட்டும் தான்

திருநங்கைகள் இல்லை என்பதை

உருவாக்கி வைத்து விட்டது.

 

தாங்கள் வாழ்ந்தால் போதும் என்று

தங்களுக்கான சட்ட திட்டங்கள்

வாழ்வதற்குத் தேவையான அமைப்புகள்

ஆகியவற்றை உருவாக்கி வைத்து விட்டது ;

சமுதாயத்தில் திருநங்கைகளை

ஒதுக்கி வைத்து விட்டது ;

மறைமுகமாக அவர்களை

அடிமைப்படுத்தி வைத்து விட்டது ;

சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு

தேவையானவற்றை தர அளிக்க மறுத்து விட்டது ;

மறந்து விட்டது ;

இத்தகைய அவல நிலைக்கு ,

இத்தகைய கொடுமையான நிலைக்கு ,

இத்தகைய இரக்கமற்ற நிலைக்கு ,

இத்தகைய மனிதத் தன்மையற்ற செயலுக்கு

மனித இனத்தில்

அதிகார போதையில் இருக்கும் ஒரு பிரிவு

ஒரு பிரிவை அடிமையாக வைத்து

மனித இனத்தில் பிரிவை ஏற்படுத்தி

பிளவை உண்டாக்கி

திருநங்கைகளை மறைமுகமாக

அடிமையாக வைத்து விட்டது.

 

கடவுள் தான்

மனித இனத்தை படைத்தார்

என்றால் ,

ஆண் இனத்தையும் ,

பெண் இனத்தையும் ,

படைத்தது கடவுள் தானே ;

திருநங்கைகளையும்

படைத்ததும் கடவுள் தானே ;

 

அப்படி என்றால்

கடவுள் படைப்பில் எப்படி

பிழை இருக்க முடியும்;

குற்றம் இருக்க முடியும் ;

குறை இருக்க முடியும் ;

களங்கம் இருக்க முடியும்;

 

ஆண், பெண் இனத்தை படைத்து

கடவுள் குற்றம் செய்யவில்லையெனில் ,

திருநங்கைகளை மட்டும் படைத்து

எப்படி கடவுள் குற்றம் செய்திருக்க முடியும் .

 

இப் பிரபஞ்சத்தை

இயற்கை நியதியுடனும் ,

கால ஒழுங்குக் கோட்பாட்டுடனும் ,

மாறாத அழகு நயத்துடனும் ,

இயற்கை ரகசியங்களுடனும் ,

படைத்த இறைவன்

திருநங்கைகளை மட்டும் தவறாக படைத்து

படைப்பில் எவ்வாறு

தவறு செய்திருக்க முடியும் ;

படைப்பில் எவ்வாறு

குற்றம் நிகழ்த்தியிருக்க முடியும் ;

படிப்பில் எவ்வாறு குறைகளை

ஏற்படுத்தியிருக்க முடியும் ;

ஆண் இனத்தையும்

பெண் இனத்தையும்

படைத்த இறைவன் தான்

திருநங்கைகளையும்

படைத்தான் என்ற எண்ணம்

என்ற சிந்தனை

அனைவருக்கும் வந்து விட்டால்

திருநங்கைகளும் மனித இனத்தில்

ஒரு பாகம் என்ற  உண்மை விளங்கி விடும்.

இந்த உண்மை விளங்கி விடும்

 

இந்த உண்மை விளங்காத காரணத்தினால் தான்

நாம் திருநங்கைகளை சமுதாயத்தில் இருந்து

பிரித்து வைத்திருக்கிறோம் ;

அடிமையாக ஒதுக்கி வைத்திருக்கிறோம் ;

மனித இனத்தில் ஒரு பாகமாக மதிக்காமல்

தள்ளி வைத்திருக்கிறோம் ;

 

ஒரு ஆண் குழந்தை பிறக்கும் போது

ஆணாக பிறக்கிறது

ஒரு பெண் குழந்தை பிறக்கும்

போது பெண்ணாக பிறக்கிறது

ஆனால் திருநங்கைகள் மட்டும் பிறப்பதில்லை

தோன்றுகிறார்கள்

பிறப்பதற்கும், தோன்றுவதற்கும்

வேறுபாடு இருக்கிறது.

 

பிறக்கிறது என்றால்,

ஒன்று உருவாவதைக் குறிக்கும் .

 

தோன்றுவது என்றால்,

ஒன்று உருவாவதைக் குறிக்காது

வெளிப்படுவதைக் குறிக்கும்.

 

பிறப்பது ஆரம்பத்தில் நடைபெறும் ;

தோன்றுவது இடையில் நடைபெறும் ;

 

ஆரம்பத்தில் நடைபெறுவது தான் சரி என்றும்

இடையில் நடைபெறுவது

தவறு என்றும்

நாமே ஒரு தவறான கோட்பாட்டை

சமுதாயத்தில் உருவாக்கி

வைத்திருக்கிறோம் .

 

ஆரம்பத்தில் பிறந்தாலும்

இடையில் தோன்றினாலும்

வெளிப்படுவது ஒன்று தானே .

 

ஆரம்பத்தில் பிறந்தாலும்

இடையில் தோன்றினாலும்

கடவுளின் சித்தத்தின்படி

வெளிப்பட வேண்டியது

வெளிப்பட வேண்டிய காலத்தில்

வெளிப்பட்டு இருக்கும் போது

ஆரம்பத்தில் பிறந்ததை உயர்வாகவும்

இடையில் தோன்றியதை தவறாகவும்

நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ள முடியும் .

 

ஆரம்பத்தில் பிறந்தாலும்,

இடையில் தோன்றினாலும் ,

வெளிப்பட வேண்டியது

இறைவனின் சித்தத்தின் படித்தானே

வெளிப்பட்டிருக்கிறது.

 

இறைவனின் சித்தத்தின்படி

இல்லாமல்

இது எவ்வாறு

நிகழ்ந்திருக்க முடியும்.

 

அவனன்றி ஒரு அணுவும்

அசையாது என்றால்

இது எப்படி நடந்திருக்க முடியும்.

 

ஆண், பெண் இனம் மட்டும்

உயர்வானது என்றால்

திருநங்கைகள்

மட்டும் எப்படி

தாழ்வானவர்களாக இருக்க முடியும் .

 

ஆண் , பெண் இனத்தை மட்டும்

உயர்வானவர்களாக படைத்துவிட்டு

திருநங்கைகளை மட்டும்

இறைவன் எப்படி தாழ்வானவர்களாக

படைத்திருக்க முடியும் .

 

ஆரம்பத்தில் பிறப்பதால் மட்டுமே

ஆண் , பெண் இனத்தை

உயர்வானவர்களாகவும் ,

திருநங்கைகள் இடையில்

தோன்றுவதால்

அவர்களை எவ்வாறு நாம்

தாழ்வானவர்களாகவும்

இழிவானவர்களாகவும் கருத முடியும்.

 

பிறப்பதற்கும்,  தோன்றுவதற்கும்

மற்றொரு வேறுபாடும் இருக்கிறது

பிறப்பதற்கு இருவர் தேவை

ஆனால் தோன்றுவதற்கு இருவர்

தேவை இல்லை.

 

இருவர் சேர்ந்து ஒன்றை பிறக்க வைப்பது பெருமையா?

ஒன்றே மற்றொன்றாக மாறுவது பெருமையா?

 

ஒருவர் பிறக்க

இருவர் தேவைப்படும்

ஆண் பெண் இனமே பெருமைப்படும்போது

ஒன்றே மற்றொன்றாக மாறி தோன்றும்

திருநங்கை

ஏன் இனம் ஏன் சிறுமைப்படுத்தப் பட வேண்டும்

 

சமுதாயத்தில் ஒரு தவறான கருத்தை

திரும்ப திரும்ப சொல்வதின் மூலம்

ஒரு பொய்யை திரும்ப திரும்ப ஒப்புவிப்பதன் மூலம்

அது உண்மையாகி விடுகிறது

அதைப் போலத் தான்

ஒரு தவறான கண்ணோட்டத்தை

ஒரு தவறான பார்வையை

திருநங்கைகள் மேல் சுமத்தி விட்டனர் ;

அவர்களை தவறானவர்களாக காட்டி விட்டனர் ;

அவர்களை இழிவானவர்களாக

தவறுகளை துணிந்து

செய்பவர்களாக காட்டி விட்டனர் ;

களங்கத்தை கற்பித்து விட்டனர் ;

இழிவுகளை சுமத்தி விட்டனர் ;

பொய்களை உலவ விட்டனர் ;

பழிகளை போட்டு விட்டனர் ;

 

அவர்களுக்கு செய்ய வேண்டியவை

எவை என்று ஆராய்ந்து செய்யாமல்

செய்யக் கூடாதவைகளை

எவை என்று  தெரிந்தே செய்கின்றனர் .

 

திருநங்கைகளுக்கு செய்ய வேண்டிய

வாழ்வாதாரங்களை செய்ய தவறிவிட்டனர்.

 

ஆண்களுக்கான கழிப்பறை

பெண்களுக்கான கழிப்பறை

என்று இருக்கும்போது

ஏன் திருநங்கைகளுக்கான

கழிப்பறை ஏற்படுத்தப்படுத்தப்படவில்லை.

 

பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் பள்ளிகளில்

ஆண், பெண் என்று இருக்கும் போது

சேர்க்கும் போது

விண்ணப்பப் படிவங்களில்  - ஏன்

திருநங்கை

என்ற இனம் இல்லை

சேர்க்கப்படவில்லை.

 

வேலை வாய்ப்புக்காக செல்லும்போது

அரசாங்க வேலை வாய்ப்பு பெற

நுழைவுத் தேர்வு

விண்ணப்பப்படிவங்களில் - ஏன்

திருநங்கைகள் இனம் இல்லை.

ஓட்டுப்போட தகுதி இல்லை என்று

ஏன் ஒதுக்கி வைத்திருக்கிறது.

 

திருநங்கைகள் தெருவில் சென்றால்

இழிவு படுத்தும் ஒரு சிலரை - ஏன்

இந்த சமுதாயம்  கண்டு கொள்ளாமல் இருக்கிறது

 

ஆண் இனமோ, பெண் இனமோ

தெருவில் சென்றால்

கண்டு கொள்ளாமல்

தங்கள் வேலைகளை கவனிக்கும் மனித இனம் - ஏன்

திருநங்கைகள்

மட்டும் தெருவில் சென்றால்

வித்தியாசமாகப் பார்க்கிறது.

புது உயிரினமாக

வேற்று கிரக உயிரினமாக  மாற்றி பார்க்கிறது

மனித இனமாக பார்ப்பதில்லை

 

திருநங்கைகளையும்

மனித இனமாக பார்க்காததே

அவர்களை சமுதாயத்தில்

இழிவாக

நடத்துவதற்குக் காரணம்.

 

சாதிச் சண்டைக்கும் ,

மத சண்டைக்கும் ,

கடுமையான குண்டர் சட்டம்

வன்கொடுமைச்  தடுப்பு சட்டம் போன்ற

சட்டங்கள் இருக்கும் போது  - ஏன்

திருநங்கைகளை

இழிவு படுத்துபவர்களுக்கு

புதிய விதமான ஒரு வன்கொடுமைச் சட்டத்தை

கொண்டு வரக்கூடாது,

 

இழிவுபடுத்துபவர்கள் மீது

இத்தகைய கடுமையான

வன்கொடுமைச் சட்டங்கள்

வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் பாயும் போது தான்

இழிவு படுத்துபவர்கள்

இழிவு படுத்த மாட்டார்கள்.

 

தேவையற்ற காரணங்களுக்காக

அவசியமற்ற தேவைகளுக்காக

நாம் அரசியல் சட்டத்தை திருத்தும் போது

நாம் ஏன்

சமுதாயத்தில் இழவுபடுத்தி

இழிவானவர்களாக ஒதுக்கி வைத்து ,

அடிமையாக ஆக்கி வைத்து ,

தாழ்வானவர்களாக மாற்றி வைத்து ,

வாழ்வாதாரங்களை பறித்து வைத்து ,

எள்ளி நகையாடி

அவர்கள் மனதை

வேதனை பட வைத்திருக்கும்

கல் நெஞ்சம் கொண்டோருக்கு எதிராக

இழிவு படுத்துவதற்கு தண்டனையாக

இழிவு படுத்தியத்ற்கு

மனம் தன் தவறை உணர்ந்து திருந்துவதற்காக - ஏன்

அரசியல் சட்டத்தை திருத்தக்கூடாது.

திருநங்கைகள்

வாழ்வில் ஒளி ஏற்றக்கூடாது ;

சுகங்களை புகுத்தக் கூடாது ;

இன்பங்களை விதைக்கக் கூடாது ;

கவலைகளை கழற்றக் கூடாது ;

துக்கங்களை தூர ஓட்டக் கூடாது ;

துயரங்களை அழிக்கக் கூடாது ;

கண்ணீரை துடைக்கக் கூடாது ;

மலர்ச்சிகளை உருவாக்கக் கூடாது ;

மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது ;

உரிமைகளை அளிக்கக் கூடாது ;

உணர்வுகளை மதிக்கக் கூடாது ;

நல்லவைகளை தரக் கூடாது;

உயர்வுகளை கொடுக்கக் கூடாது ;

 

இநத மாற்றங்களை ஏற்படுத்தினால்

திருநங்கைகளும்

மனித இனத்தில்

ஒரு இனமாக வாழ வழி ஏற்படுமே!

 

சாதி வாரியான அடிப்படையில்

கொடுக்கும் போது

திருநங்கைகளுக்கு என்று

தனிப்பட்ட முறையில்

இட ஒதுக்கீடு செய்யலாமே!

 

இதில் ஒரு சில மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று

சமுதாயம் செயல் செய்து

கொண்டிருக்கிறது.

 

அதுவும் ஏட்டளவிலும்

அறிவிப்பு வடிவிலும் தான் உள்ளது

எப்போது செயல் வடிவில் வரும்

திருநங்கைகள்

வாழ்வில் மறுமலர்ச்சி தோன்றும்.

 

இறைவன் படைத்த படைப்புகளில்

ஆண் , பெண் இனம் மட்டும் வாழ்வாதாரங்களை

தங்களுக்கு சாதகமாக 

பயன் படுத்திக் கொள்ளும் போது - ஏன்

ஆண் , பெண் , திருநங்கை

ஆகிய மூவரும் சேர்ந்தது தான்

மனித இனம் என்பதை

மனித இனம் உணர்ந்து கொண்டால்

இறைவன் படைத்த படைப்புகளில்

வாழ்வாதாரங்களை

மூன்று இனமும் பிரித்துக் கொள்ளும் நிலை ஏற்படும்.

 

இல்லை என்றால்

ஆண் பெண் இனம் மட்டும்

ஆண் பெண் என்ற இரண்டு இனம் மட்டுமே

ஆண்டவன் படைத்த படைப்புகளில் வாழ்வாதாரங்களை

தங்களுக்கு மட்டுமே

பயன் படுத்திக் கொள்ளும் நிலை உருவாகி விடும்.

 

திருநங்கைகள்

ஒவ்வொரு தொகுதியிலும்

குறைவாக இருக்கின்ற காரணத்தினாலும் ,

அவர்களால் தங்களுக்கு

வாக்கு பெருமளவில் கிடைக்க வாய்ப்பில்லை

என்ற காரணத்தினாலும் ,

அரசியல் கட்சிகள்

புறக்கணிக்கின்றனர்.

 

அவர்களால் தங்களுக்கு

ஆதாயம் இருக்கும் என்று தெரிந்திருந்தால்

அவர்களால் அரசியல்வாதிகளுக்கு

ஆதாயம் இருந்திருந்தால்

அரசியல் கட்சிகள்

அவர்களை புறக்கணிப்பு செய்திருக்க மாட்டார்கள் ;

அவர்களை ஒதுக்கி வைத்திருக்க மாட்டார்கள் ;

அவர்களுக்கு தேவையானவற்றை

செய்து கொடுத்திருப்பார்கள் ;

 

அவர்களுக்கு வேண்டியவற்றை

நிறைவேற்றி வைத்திருப்பார்கள் ;

எம். எல். ஏ

எம். பி

சி .எம்

பி .எம்

வரை புறக்கணிக்கக் காரணம்

அவர்களால் தங்களுக்கு

ஆதாயம் இல்லாததால் தான் ;

அவர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு

ஒரு காரணம்.

 

ஆதாயம் இருந்தால்

வாக்கு எண்ணிக்கை அதிகமாக  இருந்தால்

அவர்களை புறக்கணித்து இருக்க மாட்டார்கள்.

 

அரசியல் ரீதியான ஆதாயம்

அவர்களுக்கு கிடைக்கும் படியான வழிவகைகளை

நாம் செய்திருக்க வேண்டும்

அதை செய்ய வில்லை

பெரும்பான்மையானவர்கள்

இருப்பவர்கள் மத்தியில்

குறைவானவர்களுக்கு

தேவையான சலுகைககள்

செய்து தரும் போது

நாம் ஏன் குறைவான எண்ணிக்கையில் உள்ள

திருநங்கைகளுக்கு

கல்வி , வேலை வாய்ப்பு, அரசியல்

என்று பல்வேறு தரப்பட்டதுறைகளில்

அவர்களுக்கு சலுகைகள் கொடுத்து

உரிமைகளை கொடுத்து

மனித இனத்தில் ஒரு இனமாக

திருநங்கைகளை

தலை நிமிர்ந்து வாழ வழி

வகை செய்யக் கூடாது.

 

முறையாக திட்டங்களை வகுத்து

செயல்களை செய்யலாம் ;

நன்மைகளை நடைமுறைப்படுத்தலாம் ;

இன்பங்களை அளிக்கலாம் ;

ஏற்றத்தை கொடுக்கலாம் ;

அவ்வாறு அளித்தால்

திருநங்கைகளும்

வாழ்வில் இன்புற்று வாழலாமே!

அவ்வாறு செய்யாமல் விட்டது

ஆதிக்க வெறியர்களின் வேறுபாட்டினால்

விளைந்த அடிமைத்தனம்.

 

இறைவனால் படைக்கப் பட்டதில் வேறுபாடு

என்பது  இது தான்.

இறைவன் படைத்த

திருநங்கை இனத்தை

மனித இனத்தில்

ஒரு இனமாக பார்க்காமல்

ஒதுக்கி வைத்து அடிமை நிலையை

சமுதாயத்தில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்

என்று பொருள்.

 

செயற்கையாக உருவாக்கப்பட்டதில்

வேறுபாடு காண்பது

இயற்கையாக உருவானதில்

வேறுபாடு காண்பது

என்பது

மனித மனதில் தோன்ற காரணம்

மனித இனத்தில் அன்பும், கருணையும்

இல்லாததே காரணம்.

மனித இனத்தில்

அன்பும், கருணையும் இருந்திருந்தால்

திருநங்கைகளை

மனித இனத்திலிருந்து

ஒதுக்கி வைத்திருக்க மாட்டார்கள்

அவர்கள் தங்கள் உரிமைக்காக

தினம், தினம் போராடிக் கொண்டும்

மன வேதனையால் தவித்துக் கொண்டும்

இருக்க வேண்டிய

சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.

 

விலங்கு, மனிதன், இறைவன் - மூன்றிற்கும்

நூலிழை அளவில் தான் வேறுபாடு

மனிதனுக்குள் அன்பும், கருணையும்

இருக்கும் போது

அவன் தெய்வமாகிறான் ;

மனிதனுக்குள் அன்பும், கருணையும்

இறக்கும் போது அவன் விலங்காகிறான் ;

 

மனித இனத்தில்

ஒரு பிரிவு

இத்தகைய விலங்கு நிலைக்கு

தள்ளப்பட்ட காரணத்தினால் தான்

மனித இனம்

விலங்காக மாறிவிட்ட காரணத்தினால் தான்

மனித இனம்

திருநங்கைகளை

தள்ளி  வைத்திருக்கிறது.

 

மனித இனம் விலங்காக

மாறாது இருந்திருந்தால்

இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது .

 

அன்புக்கும் , கருணைக்கும்

சிறிதளவு வேறுபாடு உண்டு.

 

மரத்தில் ஒரு காய் கீழே விழாமல்

அந்தக் காயை பிடித்துக் கொண்டு

கீழே விழாமல் மரக்கிளை

அந்தக்காயை பிடித்துக் கொண்டு இருந்தால்

தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்தால்

அதற்குப் பெயர் அன்பு.

 

 

அந்த காய் உயிர் வாழ்வதற்கு

தேவையான தண்ணீர்

மற்றும் தேவையானவற்றை

அளித்தால் அதற்குப்

பெயர் கருணை.

 

திருநங்கைகளை

மனித இனத்தில்

ஒரு இனம் தான் என்று ஏற்றுக் கொண்டு

மனித இனத்தோடு

மனித இனமாக

ஆண்,  பெண் இனத்தோடு

ஒரு இனமாக ஏற்றுக் கொண்டு

சமுதாயத்தில் ஒன்றாக ஏற்றத்தாழ்வு பாராமல்

அடிமையாக நடத்தாமல்

வேறுபாடு காட்டாமல்

ஒன்றாக ஒரு இனமாக வாழ

அனுமதி அளித்தால் அதற்குப் பெயர் அன்பு.

 

அவர்களுக்கு தேவையான

உயிர் வாழ்வதற்கு தேவையான

அன்றாடக் கடமைகளை

நிறைவேற்றுவதற்குத் தேவையான

வழி வகைகள் செய்து

அவர்கள் உயிர் வாழ செய்தால்

அதற்குப் பெயர் கருணை .

 

இத்தகைய அன்பும் , கருணையும்

மனித இனத்தில்

செத்து விட்ட காரணத்தினால் தான் ;

மனித இனம்

விலங்கு நிலைக்கு தள்ளப்பட்ட காரணத்தினால் தான் ;

மனித இனத்தின் எண்ணம்

அழுக்கடைந்து விட்ட காரணத்தினால் தான் ;

அவர்களுடைய குணங்கள்

களங்கப்பட்டு விட்ட காரணத்தினால் தான் ;

அவர்களுடைய நடத்தை களங்கப்பட்டு

விட்ட காரணத்தினால் தான் ;

திருநங்கைகளை

மனித இனத்தில்

ஒரு இனமாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

தன்ளி நின்று நகைக்கின்றனர்.

 

இத்தகைய இழிநிலை

மாற வேண்டும் என்றால் ,

இத்தகைய கொடுமை நிலை

ஒழிக்கப்பட வேண்டும் என்றால்,

இத்தகைய தகாத செயல்

அழிக்கப்படவேண்டும் என்றால் ,

இறைவன் படைப்பில்

அனைவரும் சமம் என்ற எண்ணம் வர வேண்டும் .

 

நம்முள் இருக்கும் இறைவன் தான்

அனைத்து உயிருள்ளும்

இருக்கிறான் என்ற சிந்தனை உதயமாக வேண்டும் .

 

அனைத்துள்ளும் இறைவன் இருக்கிறான்

இறைவன் இருக்கிறான்

என்ற எண்ணம் தோன்றி விட்டால்,

திருநங்கை இனத்தை மனிதன்

தவறாக நினைக்க மாட்டான்;

அடிமையாக நடத்த மாட்டான் ;

வேறுபாடு காட்ட மாட்டான் ;

இழிவானவற்றை செய்ய மாட்டான் ;

தகாதவனவற்றை சொல்ல மாட்டான் ;

மனிதன் தன்னுள்ளே

இறைவன் இருக்கிறான்

என்பதை உணராதபோது

எப்படி அனைத்துள்ளும்

இறைவனைக் காண்பான்.

 

அனைத்து உயிர்களிலும்

இறைவன் இருக்கிறான்

என்பதை உணர்ந்து கொண்டால்

மனிதன் மற்ற உயிர்களை

அடிமைப்படுத்த மாட்டான்.

வேறுபாடு காட்ட மாட்டான்

என்கிறார்

ஔவையார்

 

இயேசுகிறிஸ்து - ஔவையார் :

அன்பும் கருணையும்

யார் மனதில் இருக்கிறதோ

அவரால் தான்

அனைத்து உயிர்களையும்

சமமாக பாவித்து

தீமை நீக்கி

இன்பம் பெற்று வாழ முடியும்

என்கிறது பைபிள்

 

அவ்வாறே ,

ஔவையாரும் ,

அன்பும் கருணையும்

உடையவரால் மட்டுமே

அனைத்து உயிர்களும் சமம்

என்ற எண்ணம் கொண்டு

வேறுபாடு காட்டாமல் வாழ்ந்து

உயர்நிலை அடைய முடியும்

என்கிறார்

         

””””போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்

              போற்றினேன் பதிவு எழுபது ந்தான்முற்றே”””