November 22, 2019

பரம்பொருள்-பதிவு-90


            பரம்பொருள்-பதிவு-90

உலூபி :
“12 மாதங்கள் வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும்
என்பது தானே சட்டம்:”

“இந்த சட்டத்தை நன்றாக
ஆராய்ந்து பார்த்தால்.
வனத்தில் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று தான் சட்டத்தில்
சொல்லப்பட்டு
இருக்கிறதே தவிர………….?
,நாட்டில் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று சட்டத்தில்
சொல்லப்படவேயில்லையே?”

“அதன்படி பார்த்தால்
நீங்கள் நாட்டில் வசிக்கும்
போது பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டிய
அவசியமே இல்லை
சம்சாரியாகவே வசிக்கலாம்”

“ வனத்தில் தான்
நீங்கள் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
நாட்டில் இல்லை என்று
அந்த சட்டத்திற்கு
அர்த்தத்தை எடுத்துக்
கொண்டால் - இப்போது
நீங்கள் இருப்பது
எங்களுடைய நாட்டில்
உள்ள அரண்மனையில் ;
எங்களுடைய நாட்டில்
நீங்கள் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டிய
அவசியம் இல்லை ;
எங்களுடைய நாட்டில் நீங்கள் 
சம்சாரியாகவே வசிக்கலாம்”

“அதாவது வனத்தில்
வசித்த போது
பிரம்மச்சாரியாக
இருந்த நீங்கள் ;
எங்களுடைய நாட்டில்
வசிக்கும் போது
சம்சாரியாக வசியுங்கள்”

அர்ஜுனன் :
“அப்படி என்றால்
12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக இருக்க
வேண்டும் என்று – அந்த
சட்டத்தில் சொல்லப்பட்டு
இருக்கிறதே !”

உலூபி :
“அது ஒன்றும் பெரிய
விஷயம் இல்லை”

 “12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று தான் சட்டத்தில்
சொல்லப்பட்டு
இருக்கிறதே தவிர ;
12 மாதங்களும்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று அந்த சட்டத்தில்
சொல்லப்படவில்லையே?”

“அதன்படி பார்த்தால்
12 மாதங்களில் தேவைப்படும்
சமயத்தில் பிரம்மச்சாரியாகவும்
இருக்கலாம் - தேவைப்படும்
சமயத்தில் சம்சாரியாகவும்
இருக்கலாம் என்று தான்
அந்த சட்டம் சொல்கிறது”

“12 மாதங்களும்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும் என்று
இருந்தால் மட்டுமே ;
12 மாதங்களும்
பிரம்மச்சாரியாக
இருகக வேண்டும் ;”

“12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும் என்றால்
தேவைப்படும் சமயத்தில்
பிரம்மச்சாரியாகவும் 
இருக்கலாம் - தேவைப்படும்
சமயத்தில் சம்சாரியாகவும்
இருக்கலாம் என்று
தான் அர்த்தம் ;

“மொத்தத்தில் உங்களுக்குள்
நீங்கள் வகுத்துக் கொண்ட
சட்டம் என்ன சொல்ல
வருகிறது என்றால்
12 மாதங்களில் தேவைப்படும்
சமயத்தில் வனத்தில்
பிரம்மச்சாரியாகவும்
இருக்கலாம் - தேவைப்படும்
சமயத்தில் நாட்டில்
சம்சாரியாகவும் இருக்கலாம்
என்று தான் சொல்கிறது;”

“தற்போது நீங்கள்
எங்களுடைய நாட்டில்
இருக்கிறீர்கள்-சட்டப்படி
பார்த்தால் நாட்டில் இருக்கும்
நீங்கள் சம்சாரியாக வாழலாம்”.

“சட்டத்தைப் பார்த்துத்
தானே நீங்கள் பயந்தீர்கள். ;
சட்டம் நமக்கு சாதகமாகத்
தானே இருக்கிறது ;
எனவே நீங்கள் என்னை
மணந்து என்னை தங்களுடைய
மனைவியாக ஏற்றுக்
கொண்டால் நான் மனம்
மகிழ்வேன்.- என்னை
தங்களுடைய மனைவியாக
ஏற்றுக் கொள்வீர்களா?”

அர்ஜுனன் :
(“அர்ஜுனன் உலூபியின்
அபாரமான அறிவுக்
கூர்மையைக் கண்டு
வியந்து போய் நின்றான்;
பேச நாக்கு எழவில்லை;
வாயிலிருந்து வார்த்தை
வரவில்லை;
தலை சுற்றுவது போல்
இருந்தது அர்ஜுனனுக்கு.;
இவ்வளவு அறிவுக்
கூர்மையைக் கொண்ட
ஒரு பெண்ணை அவன்
பார்த்ததே இல்லை ;
சிறிது நேரம் அமைதியாக
இருந்த அர்ஜுனன்
தன்னை சமாளித்துக் கொண்டு
பேசத் தொடங்கினான்;”)

“நீங்கள் அழகானவர் என்று
தான் நினைத்தேன்
என்னுடைய கணிப்பு தவறு
நீங்கள் வீரம் மிக்க
நங்கையாக இருக்கிறீர்கள் ;
அறிவுக்கூர்மை கொண்ட
மங்கையாக இருக்கிறீர்கள்;
அதுமட்டுமல்ல
அழகு ,வீரம், அறிவு,
இந்த மூன்றும் ஒருங்கே
கொண்ட பெண்ணை இதுவரை
நான் பார்த்ததேயில்லை;
முதன் முதலாக உங்களைத்
தான்  நான் பார்க்கிறேன்;” 

“மாதர்குல மாணிக்கம் நீங்கள் ;
பெண்களுக்குள் அதிசயம் நீங்கள் ;
உங்களைப் புகழ்வதற்கு
எந்த மொழியிலும்
வார்த்தைகளே இல்லை ;
என்பது மட்டும் உண்மை;”

உலூபி :
“அர்ஜுனனின் வார்த்தைகளைக்
கேட்ட உலூபி வெட்கத்தால்
தலை குனிந்தாள் ;
நாணத்தால் தலை சாய்ந்தாள்;” 

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------22-11-2019
//////////////////////////////////////////

November 21, 2019

பரம்பொருள்-பதிவு-89


          பரம்பொருள்-பதிவு-89

அர்ஜுனன்:
"நான் குந்தி
தேவியின் மகன் ;
இந்திரபிரஸ்தத்தை
அரசாளும்
தர்மரின் தம்பி ;.
பஞ்சபாண்டவர்களில்
நானும் ஒருவன் ;
என்னுடைய பெயர்
அர்ஜுனன் ; "
       
"பஞ்ச பாண்டவர்கள்
ஐவரும் திரௌபதியை
திருமணம் செய்து
கொண்டோம் - எங்கள்
வாழ்க்கையில்
எந்தவிதமான
பிரச்சினையும் ஏற்பட்டு
விடக் கூடாது
என்பதற்காக,……………………?

"திரௌபதியும் 
திரௌபதியுடன்
குடும்பம் நடத்திக்
கொண்டிருக்கும்
பஞ்ச பாண்டவர்களில்
ஒருவரும் தனித்து
ஒரு அறையில்
இருக்கும் போது
பஞ்ச பாண்டவர்களில்
மற்றவர்கள் அந்த
அறைக்குள்
நுழையக்கூடாது ;
அவ்வாறு நுழைந்தால்
அது குற்றச்
செயலாகக்
கருதப்படும் ;
அந்த குற்றச்
செயலுக்கு
தண்டனையாக
குற்றம் இழைத்தவர்
12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும் ;
என்ற சட்டத்தை
எங்களுக்குள்
உருவாக்கிக்
கொண்டோம் ; "

"அந்த சட்டத்தின் படி
நாங்கள் வாழ்ந்து
கொண்டிருக்கும்
சூழ்நிலையில்
கவர்ந்து
செல்லப்பட்ட
அந்தணரின்
பசுக்களை
மீட்டு வர
வேண்டும் என்ற
காரணத்திற்காக ; 
என்னுடையை
கடமையை
நிறைவேற்ற
வேண்டும் என்ற
காரணத்திற்காக ;
ஆயுத சாலையில்
தர்மரும்
திரௌபதியும்
தனித்து இருக்கும்
போது என்னுடைய
ஆயுதங்களை
எடுப்பதற்காக ;
ஆயுத சாலைக்குள்
செல்ல
வேண்டியதாயிற்று ; "
இதனால் ,
சட்டத்தை மீறிய
குற்றத்திற்காக
நான் 12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க 
வேண்டியதாயிற்று “

"அவ்வாறு நான்
12 மாதங்கள்
வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும்
என்ற காரணத்திற்காக
கங்கைக் கரையில்
தங்கி இருந்தேன் ;
அப்படி நான்
கங்கைக் கரையில்
தங்கி இருந்த
போது தான்
தாங்கள் என்னை
கடத்தி வந்தீர்கள் ; "

"உங்களுடைய
காதலை சொன்னீர்கள் ;
உங்களை என்னுடைய
மனைவியாக
ஏற்றுக் கொள்ளச்
சொன்னீர்கள் ; ""

"12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம்
மேற்கொண்டிருக்கும்
நான் எப்படி
உங்களுடைய
காதலை ஏற்று............!
உங்களை எவ்வாறு
என்னுடைய
மனைவியாக
ஏற்றுக் கொள்ள
முடியும்…………………………….?"

உலூபி :
"நீங்கள் உங்களுக்குள் 
வகுத்துக் கொண்ட
சட்டத்தின்படி
நீங்கள் என்னை
மனைவியாக
ஏற்றுக் கொள்வதற்கு
அந்த சட்டத்தில்
எந்தவிதமான
தடையும் இருப்பதாக
எனக்குத்
தெரியவில்லையே!
நீங்கள் ஏற்றுக் கொண்ட
சட்டத்தின்படி
என்னை தாராளமாக
மனைவியாக
ஏற்றுக் கொள்ளலாம்!
என்பதற்கு அந்த
சட்டத்திலேயே வழி
இருக்கிறது”

அர்ஜுனன் :
(உலூபியின்
வார்த்தைகள்
அர்ஜுனனுக்கு
அதிர்ச்சியை
உண்டாக்கியது
சிறிது நேரம்
மௌனமாக இருந்த
அர்ஜுனன் பேச
ஆரம்பித்தான்)

“என்ன வழி
இருக்கிறது……………?”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------21-11-2019
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-88


            பரம்பொருள்-பதிவு-88

உலூபி :
"தங்களை கங்கைக்
கரையில் நேரில் கண்ட
அக்கணமே! தங்கள்
மேல் காதல்
கொண்டேன் - காதல்
எங்கே ?
எப்போது ?
எப்படி ?
எந்த இடத்தில் ?
எந்த நேரத்தில் ?
எந்த சூழ்நிலையில் ?
எந்த காலத்தில் ?
பிறக்கும் என்பது
யாருக்கும் தெரியாது ?
என்று நம்முடைய
முன்னோர்கள்
அனுபவித்து சொல்லிச்
சென்ற அனுபவ
வார்த்தைகள்
உண்மை என்பதை
நான் தங்களைக் 
கண்ட போது
எனக்குள் உண்டான
காதலை வைத்துத் தான்
தெரிந்து கொண்டேன் !"

"நான் தங்கள் மேல்
கொண்ட காதலை
தங்களிடம் எப்படி
சொல்வது  என்ற
வழி தெரியாமல்
விழி பிதுங்கி நின்றேன்!
பய உணர்ச்சியின்
காரணமாக
பேசுவதற்கு வார்த்தையே
எழவில்லை !.
தாங்கள் என்னுடைய
காதலை புரிந்து
கொள்ளாமல்
என்னுடைய மனம்
வருத்தப்படும்படி
ஏதேனும் பேசி
விடுவீர்களோ என்ற
அச்சத்தில் பயந்து
நின்று கொண்டிருந்தேன் ?"

"என்னுடைய நாட்டிலும்
நான் வசிக்கும்
அரண்மனையிலும்
அனைவரிடமும் எந்த
ஒரு விஷயத்தைப்
பற்றி பேசினாலும்
எந்தவிதமான
பய உணர்ச்சியும்
இல்லாமல் சரளமாக
பேச முடிந்த என்னால்
தங்களிடம் என்னுடைய
காதலை சொல்ல
முடியாமல் எப்படி
சொல்வது என்று
தெரியாமல் தவித்தேன்."

"எனவே நான் தங்கள்
மீது கொண்ட காதலை
நீங்கள் இருக்கும்
இடத்தில் சொல்வதை விட
நான் வசிக்கும் இடத்திற்கு
உங்களை அழைத்துச்
சென்று - என்னுடைய
அரண்மனையில் வைத்து
என்னுடைய காதலை
சொல்ல முடிவெடுத்தேன்".

"என்ன தான் சிங்கம்
காட்டிற்கே ராஜாவாக
இருந்தாலும் ,
எலியின் வளைக்குள்
சிங்கம் சென்றால்
எலியின் வளைக்குள்
சிங்கமும் விருந்தாளி தான்;
எலியின் வளைக்குள்
எலி தான் ராஜா !
என்று ஆண்டாண்டு
காலமாக வழங்கப்பட்டு
வரும் அனுபவ
மொழிக்கேற்ப
ஒவ்வொருவரும் அவர்கள்
வசிக்கும் இடத்தில்
அவர்கள் ஏழையாக
இருந்தாலும்
அவர்களுடைய வீட்டில்
அவர்கள் தான்  ராஜா
என்று சொல்வார்கள் !"

"அதைப்போல
நான் வசிக்கும்
என்னுடைய நாட்டில்
என்னுடைய
அரண்மனையில்
நான் தான் அரசி
என்ற காரணத்தினாலும்;
உண்மையில் நானும்
ஒரு இளவரசி
என்ற காரணத்தினாலும்;
நான் வசிக்கும்
இடத்தில் என்னால்
பயமின்றி பேச
முடியும் என்ற
காரணத்தினாலும்;
என்னுடைய காதலை
தங்களுக்கு தெளிவாக
எடுத்துரைக்க முடியும்
என்ற காரணத்தினாலும்;
தங்களை கடத்தி 
கொண்டு வந்தேன்;”

“நான் தங்கள் மீது
கொண்ட காதலை
சொல்வதற்கு தேர்ந்தெடுத்த
முறை வேண்டுமானாலும்
தவறாக இருக்கலாம் ;
ஆனால் நான் தங்கள்
மேல் கொண்ட
காதல் உண்மையானது ;
களங்கமில்லாதது ;
என்பதைத் தாங்கள்
உணர்ந்து
கொள்ள வேண்டும் ;”

“என்னுடைய காதலை
தாங்கள் ஏற்றுக் கொண்டு
என்னை மணமுடித்து
தங்களுடைய இல்லறத்
துணைவியாக என்னை
நீங்கள் ஏற்றுக்
கொள்ள வேண்டும்”

அர்ஜுனன் :
“பெண்ணே நீ அழகி
என்று தான் நினைத்தேன்!
ஆனால் உன்னிடம்
வீரம் கொப்பளிக்கிறது ;
விவேகம் தாண்டவமாடுகிறது;
கோபக்கனல் பறக்கிறது;
காதல் கனிகிறது ;
தென்றல் வீசுகிறது ;
குழந்தை சிரிக்கிறது ;
தெய்வம் அருள் சுரக்கிறது;
அன்பு தழைக்கிறது ;
அரவணைப்பு வழிந்தோடுகிறது;
பாசம் விளையாடுகிறது;
நேசம் சிரிக்கிறது;
கருணை வழிகிறது;”
என்று உலூபியைப் பற்றி
அர்ஜுனன் சொன்ன
வார்த்தைகளைக் கேட்ட
உலூபி நாணத்தால்
தலை குனிந்தாள் ;
கால்களால் தரையில்
கோலம் போட்டாள்;
நாணம் உலூபியை
ஆக்ரமித்துக் கொண்டது;”.

அர்ஜுனன் :
“உலூபி நீ என் மேல்
வைத்த காதலை
உணர்ந்து கொண்டேன் ;
ஆனால் உன்னுடைய
காதலை தற்போது
என்னால் ஏற்றுக்
கொள்ள முடியாத
இக்கட்டான சூழ்நிலையில்
இருக்கிறேன் ;”

உலூபி :
ஏன் ?
என்ன காரணம் ?

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------20-11-2019
//////////////////////////////////////////