November 21, 2019

பரம்பொருள்-பதிவு-88


            பரம்பொருள்-பதிவு-88

உலூபி :
"தங்களை கங்கைக்
கரையில் நேரில் கண்ட
அக்கணமே! தங்கள்
மேல் காதல்
கொண்டேன் - காதல்
எங்கே ?
எப்போது ?
எப்படி ?
எந்த இடத்தில் ?
எந்த நேரத்தில் ?
எந்த சூழ்நிலையில் ?
எந்த காலத்தில் ?
பிறக்கும் என்பது
யாருக்கும் தெரியாது ?
என்று நம்முடைய
முன்னோர்கள்
அனுபவித்து சொல்லிச்
சென்ற அனுபவ
வார்த்தைகள்
உண்மை என்பதை
நான் தங்களைக் 
கண்ட போது
எனக்குள் உண்டான
காதலை வைத்துத் தான்
தெரிந்து கொண்டேன் !"

"நான் தங்கள் மேல்
கொண்ட காதலை
தங்களிடம் எப்படி
சொல்வது  என்ற
வழி தெரியாமல்
விழி பிதுங்கி நின்றேன்!
பய உணர்ச்சியின்
காரணமாக
பேசுவதற்கு வார்த்தையே
எழவில்லை !.
தாங்கள் என்னுடைய
காதலை புரிந்து
கொள்ளாமல்
என்னுடைய மனம்
வருத்தப்படும்படி
ஏதேனும் பேசி
விடுவீர்களோ என்ற
அச்சத்தில் பயந்து
நின்று கொண்டிருந்தேன் ?"

"என்னுடைய நாட்டிலும்
நான் வசிக்கும்
அரண்மனையிலும்
அனைவரிடமும் எந்த
ஒரு விஷயத்தைப்
பற்றி பேசினாலும்
எந்தவிதமான
பய உணர்ச்சியும்
இல்லாமல் சரளமாக
பேச முடிந்த என்னால்
தங்களிடம் என்னுடைய
காதலை சொல்ல
முடியாமல் எப்படி
சொல்வது என்று
தெரியாமல் தவித்தேன்."

"எனவே நான் தங்கள்
மீது கொண்ட காதலை
நீங்கள் இருக்கும்
இடத்தில் சொல்வதை விட
நான் வசிக்கும் இடத்திற்கு
உங்களை அழைத்துச்
சென்று - என்னுடைய
அரண்மனையில் வைத்து
என்னுடைய காதலை
சொல்ல முடிவெடுத்தேன்".

"என்ன தான் சிங்கம்
காட்டிற்கே ராஜாவாக
இருந்தாலும் ,
எலியின் வளைக்குள்
சிங்கம் சென்றால்
எலியின் வளைக்குள்
சிங்கமும் விருந்தாளி தான்;
எலியின் வளைக்குள்
எலி தான் ராஜா !
என்று ஆண்டாண்டு
காலமாக வழங்கப்பட்டு
வரும் அனுபவ
மொழிக்கேற்ப
ஒவ்வொருவரும் அவர்கள்
வசிக்கும் இடத்தில்
அவர்கள் ஏழையாக
இருந்தாலும்
அவர்களுடைய வீட்டில்
அவர்கள் தான்  ராஜா
என்று சொல்வார்கள் !"

"அதைப்போல
நான் வசிக்கும்
என்னுடைய நாட்டில்
என்னுடைய
அரண்மனையில்
நான் தான் அரசி
என்ற காரணத்தினாலும்;
உண்மையில் நானும்
ஒரு இளவரசி
என்ற காரணத்தினாலும்;
நான் வசிக்கும்
இடத்தில் என்னால்
பயமின்றி பேச
முடியும் என்ற
காரணத்தினாலும்;
என்னுடைய காதலை
தங்களுக்கு தெளிவாக
எடுத்துரைக்க முடியும்
என்ற காரணத்தினாலும்;
தங்களை கடத்தி 
கொண்டு வந்தேன்;”

“நான் தங்கள் மீது
கொண்ட காதலை
சொல்வதற்கு தேர்ந்தெடுத்த
முறை வேண்டுமானாலும்
தவறாக இருக்கலாம் ;
ஆனால் நான் தங்கள்
மேல் கொண்ட
காதல் உண்மையானது ;
களங்கமில்லாதது ;
என்பதைத் தாங்கள்
உணர்ந்து
கொள்ள வேண்டும் ;”

“என்னுடைய காதலை
தாங்கள் ஏற்றுக் கொண்டு
என்னை மணமுடித்து
தங்களுடைய இல்லறத்
துணைவியாக என்னை
நீங்கள் ஏற்றுக்
கொள்ள வேண்டும்”

அர்ஜுனன் :
“பெண்ணே நீ அழகி
என்று தான் நினைத்தேன்!
ஆனால் உன்னிடம்
வீரம் கொப்பளிக்கிறது ;
விவேகம் தாண்டவமாடுகிறது;
கோபக்கனல் பறக்கிறது;
காதல் கனிகிறது ;
தென்றல் வீசுகிறது ;
குழந்தை சிரிக்கிறது ;
தெய்வம் அருள் சுரக்கிறது;
அன்பு தழைக்கிறது ;
அரவணைப்பு வழிந்தோடுகிறது;
பாசம் விளையாடுகிறது;
நேசம் சிரிக்கிறது;
கருணை வழிகிறது;”
என்று உலூபியைப் பற்றி
அர்ஜுனன் சொன்ன
வார்த்தைகளைக் கேட்ட
உலூபி நாணத்தால்
தலை குனிந்தாள் ;
கால்களால் தரையில்
கோலம் போட்டாள்;
நாணம் உலூபியை
ஆக்ரமித்துக் கொண்டது;”.

அர்ஜுனன் :
“உலூபி நீ என் மேல்
வைத்த காதலை
உணர்ந்து கொண்டேன் ;
ஆனால் உன்னுடைய
காதலை தற்போது
என்னால் ஏற்றுக்
கொள்ள முடியாத
இக்கட்டான சூழ்நிலையில்
இருக்கிறேன் ;”

உலூபி :
ஏன் ?
என்ன காரணம் ?

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------20-11-2019
//////////////////////////////////////////

No comments:

Post a Comment